வடகொரியாவில் காணாமல் போன அமெரிக்கர்கள்!
காணாமல் போன அமெரிக்கர்கள் ! அமெரிக்க அரசின் செயலாளர் மைக் பாம்பியோ , கொரியா போரில் காணாமல் போன 5 ஆயிரத்து 300 வீரர்களை விரைவில் வடகொரியா அரசுடன் இணைந்து தேடவிருக்கிறது . 1996 ஆம் ஆண்டு வீரர்களை தேடும் திட்டம் செயல்படத்தொடங்கி 2005 ஆம் ஆண்டு அணுஆயுத பிரச்னையால் கைவிடப்பட்டது . " இருநாட்டு அரசுகளின் ஒப்பந்தப்படி கூட்டுறவு முறையில் தேடுதல் நடைபெறும் " என செயலர் பாம்பியோ கூறியுள்ளார் . " ஏறத்தாழ வடகொரியாவில் ஒன்பது மாதங்களாக எந்த ஏவுகணை சோதனைகளும் நடைபெறவில்லை . இது போலிச்செய்தியல்ல " என ட்விட்டரில் எழுதியுள்ளார் அதிபர் ட்ரம்ப் . சிங்கப்பூரில் நடந்த சந்திப்பு குறித்து இருதலைவர்களும் நல்லவிதமாகவே கருத்து தெரிவித்துள்ளனர் . வீரர்கள் உயிரோடு கிடைப்பது சந்தேகம் என்றாலும் எவ்வகையிலேனும் இருநாடுகளும் ஒற்றுமையாவது உலகிற்கு நல்லது .