இடுகைகள்

லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொலைகாரர்களை பின்தொடரும் உளவியல் சக்தி! -ரீலா? ரியலா?

படம்
  சாட்சிகளின் பிழை சீரியல் கொலைகாரர்களைப் பொறுத்தவரை சாட்சிகள் அதிகளவு பயன்பாடு கொண்டவர்கள் கிடையாது. யாராவது இதுபோன்ற லாரியைப் பார்த்தீர்களா என போலீசார் கொலைகார ர் ஒட்டி வந்த வண்டியைப் பற்றி கேட்பார்கள். அதற்கு நூறுக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தாலும் அத்தனையும் ஒன்றுபோல பார்த்தேன் சார். ரிவார்டு எப்போ கொடுப்பீங்க என்றுதான் இருக்கும். எப்படி ஒரே நேரத்தில் இத்தனை பேர் லாரியைப் பார்த்திருப்பார்கள் என்ற லாஜிக் கேள்வியைக் கேட்டால் அனைத்து விஷயங்களும் அடிபட்டு போய்விடும்.  மேலும் கொலைகாரர்களைப் பற்றிய தகவல்களைக் கொடுக்க சொன்னால், இதுபோல இப்படித்தான் இருந்திருக்கும் என குத்துமதிப்பான விஷயங்களை சொல்லுவார்கள். இதை வைத்து என்ன செய்வது? தந்தியில் செய்தியாளர்களை விட்டு குறிப்புகளை கொடுத்து கட்டுரை எழுத வைக்கலாம். அவ்வளவுதான்.  உளவியல் சக்தி தம்மண்ண செட்டியார் எழுதிய புத்தகத்தை கண்கள் சிவக்க படித்தவர் வேண்டுமானால் கீழ் வரும் விஷயத்தை நம்பலாம். வேறு யாரும் நம்ப மாட்டார்கள். உளவியல் சக்தி கொண்டவர்களை காவல்துறை சில சமயங்களில் பயன்படுத்துகிறது. இவர்கள் கொலை நடந்த இடத்தைப் பார்த்து அமிதா பா  என மந்திர

சுதந்திரமான விலை நிர்ணய முறையால் தனியார் மருத்துவமனைகள் சாதித்தது என்ன?

படம்
  தடுப்பூசிகளை செலுத்துவதில் தனியார் மருத்துவமனைகள்  என்ன செய்தார்கள்? கோவிட் 19 பிரச்னையைப் பொறுத்தவரை அரசு, அனைத்து பொறுப்புகளையும் தனியார் நிறுவனங்களுக்கு கையளித்துவிட்டது என்றே கூறலாம். மக்கள் இப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள  அரசை விட தனியாரையே நம்பலாம் என்றளவு தடுப்பூசி தட்டுப்பாடு அரசு வட்டாரங்களில் உள்ளது. மொத்த தடுப்பூசி திட்டத்தில் 25 சதவீதம் தனியார்  துறையினரை நம்பியே உள்ளது. இந்தியாவில் தொற்றுநோய் பரவலை அரசு மருத்துவமனைகள் பல்வேறுசவால்கள் இருந்தாலும் கூட சிறப்பாக சமாளித்து வருகின்றன. நோய் பரவி வரும்போபோது தடாலடியாக மருத்துவமனைகளை அடைத்த தனியார் நிர்வாகத்தினர், தடுப்பூசிகளை போடும் திட்டங்களை தங்களது வணிக லாபத்திற்காக அறிவித்து வருகின்றனர்.  தடுப்பூசிகளை மத்திய அரசு வாங்கி மாநில அரசுகளுக்கு மாறுபட்ட விலைகளில் விற்கிறது. இதற்கான விலை நிர்ணயம் என்பது மாறுபட்டுக்கொண்டே உள்ளது. இந்தியாவில் நாற்பது ஆண்டுகளாக தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தும் திட்டம் அமலில் உள்ளது. இதில் கூட தனியாரின் பங்களிப்பு பெரிதாக அதிகரிக்கவில்லை. பத்து முதல் பதினைந்து சதவீதத்தை இன்னும் தாண்டவில்லை. மூளைக்காய

தமிழ்நாடு தினத்தின் வரலாறு!

படம்
  ஓவியர் ஜீவா(வள்ளுவர் வள்ளலார் வட்டம் ) தமிழ்நாடு நாள் நவம்பர் 1,1956 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று, மொழிவாரி மாநிலங்கள் கோரிக்கைப்படி மெட்ராஸ் ராஜதானி பிரிக்கப்பட்டது. இதில் இணைந்திருந்த ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகியவை தனி மாநிலங்களாக உருவாக்கப்பட்டன. மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயர், பின்னாளில் மாநில முதல்வரான சி.அண்ணாத்துரையால், 1968ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று மெட்ராஸ் ஸ்டேட், தமிழ்நாடு என பெயர்மாற்றம் பெற்றது. நவம்பர் 1ஆம் தேதியை கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றன. இந்தவழியில் தமிழ்நாடு அரசு,  இனி வரும் ஆண்டுகளில் தமிழ்நாடு நாளை கொண்டாட உள்ளதாக கடந்த 25ஆம்தேதி அரசாணை வெளியிடப்பட்டது.  மொழிவாரி மாநிலங்கள் சிந்தனை, வங்கப்பிரிவினை காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு இருந்தது. மொழிவாரி மாநிலமாக 1908 இல் பீகார் மாநிலம் உருவானது. பல்வேறு மாநிலங்களை மொழிவாரியாக  பிரிக்கும் யோசனையை அன்றைய காங்கிரஸ் கட்சி முன் வைத்தது. ஆனால் மக்களை பிரித்தாளும் முயற்சி என தேசியவாதிகள் கூறி இம்முயற்சிக்கு முட்டுக்கட்டை போட முயன்றனர். ஆனால் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கான பிர