இடுகைகள்

சேட்டன் பகத் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கண்டுபிடிப்புகளில் ஆய்வுகளில் இந்தியர்கள் பின்தங்குவதற்கான காரணங்கள் - சேட்டன் பகத்

படம்
  சாம் ஆல்ட்மேன், துணை நிறுவனர் ஓப்பன் ஏஐ இந்தியர்கள் தமக்குத்தாமே பெருமை பட்டுக்கொள்ளக்கூடியவர்கள். ஆனால். இந்த மனப்பான்மை நம்மில் பெரும்பாலானோர்க்கு பாதகத்தையே அதை நாம் தொடக்கத்திலேயே அறிவதில்லை. அண்மையில் ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் துணை நிறுவனர் சாம் ஆல்ட்மேன், இந்தியாவுக்கு வந்தார். அவரிடம் இந்திய ஸ்டார்ட்அப்கள் பத்து மில்லியன் டாலர் செலவில் சாட் ஜிபிடியைப் போல ஏஐ மாடலை உருவாக்க முடியுமா என்று கேள்வி கேட்கப்பட்டது. ‘’பத்து மில்லியன் டாலர் செலவில் அப்படி மாடலை இந்தியா உருவாக்க முடியாது. இன்றளவும் அப்படி உருவாக்கிவிடவில்லை. அப்படி உருவாக்கினால் கூட அது சாட் ஜிபிடியோடு போட்டியிடமுடியாது’’ என்று கூறினார். உடனே அவருக்கு சவால் விட்டு ட்விட்டர், லிங்க்டு இன் தளங்களில் பதிவுகள் இடப்பட்டன. ‘’சாமின் சவாலை ஏற்றுக்கொண்டோம்’’.’’ செய்துமுடிப்போம்’’ என பகிரங்க சவால்கள் விடப்பட்டன. பிறகு, நிலவரம் கலவரமாவதை உணர்ந்த சாம், பத்து மில்லியன் டாலர்கள் என்ற செலவில் சாட் ஜிபிடி உருவாக்க முடியாது என்ற கருத்தில் தான் பேசியதாக கூறினார். இந்தியாவில் பொருளாதார முன்னேற்றத்திற்காக சேவைத்துறையில் புகழ்பெற்ற நிறுவனங்

இரண்டு பேர் இரண்டு பேருடனும் காதல்! - கடிதங்கள்

படம்
  பிரிய முருகுவிற்கு.... நலமுடன் திகழ வேண்டுகிறேன். சேட்டன் பகத்தின் நாவல் ஒன்றைப் படித்தேன். அதுபற்றித்தான் இந்த மடல்.  கோபால் மிஷ்ரா, ராகவ் காஷ்யப், ஆர்த்தி பிரதான் என இரண்டு ஆண், ஒரு பெண் என மூவருக்கு இடையிலான உறவுச்சிக்கல்களும், வாரணாசியின் வளர்ச்சி மாற்றங்களும்தான் கதை. இந்த மூவரில் ஒருவர் இதில் நடக்கும் அநீதியைத் தட்டிக் கேட்க எழுகிறார். அவர் வெற்றி பெற்றாரா, எப்படி வென்றார் என்பதை சேட்டன் பகத்தின் ரிவல்யூஷன் 2020 என்ற நாவல் பேசுகிறது.  நாவலை நீங்கள் வாசிக்கவேண்டியது அவசியம்.  ஒருவரின் புரட்சி குறித்த அறைகூவல் மற்றவரை விழித்தெழச் செய்யலாம. ஒவ்வொருவரும் அவரவர் பங்கை சமூகத்திற்கு தரவேண்டும். அப்படி பங்களித்தால்தான் சமூகத்திற்கு பல  மாற்றங்களைக் கொண்டு வரமுடியும்.  இந்த நாவலில் காதல் என்பது முழுக்க ஆர்த்தி என்ற பாத்திரத்தைச் சேர்ந்தது. ஆர்த்திக்கு, ராகவுடன் காதல் இருக்கும்போது கூட விரக்தியடையும் நேரத்தில் கோபாலுடன் உடலுறவு கொள்கிறாள். மில்லினிய கால வாசகர்களுக்கான நாவல் இது.  தற்போது வீட்டில் படிக்க கிடைத்த புத்தகம் பூவுலகுதான். வடக்குப்புதுப்பாளையும் ஊர்ப்புற நூலகத்திற்கு படிக்க சென

கடந்த காலத்தில் இந்தியாவின் பெருமையைத் தேடிக்கொண்டிருந்தால் வருங்காலம் என்பதே நமக்கு இருக்காது! - சேட்டன் பகத்

படம்
                  போலித்தனமான அறிவியலே இந்தியாவின் வீழ்ச்சிக்கு காரணம் சேட்டன் பகத் நவராத்திரிக்கான ஏழுநாட்கள் விரதத்தை நான் கடைப்பிடித்து வருகிறேன் . கடந்த முப்பது ஆண்டுகளாக விழா காலங்களில் உண்ணாநோன்பை கடைபிடித்து வருகிறேன் . இப்போது இந்த கட்டுரையைக் கூட விரதத்தை முடித்தபிறகு எழுதிக்கொண்டிருக்கிறேன் . நான் கடைபிடிக்கும் மதத்தை நான் விரும்புகிறேன் . ஆனால் இந்த நேசம் சிலசமயம் புதிய மாற்றங்களை நிராகரித்து விடும் என்பது உண்மையே . பெருந்தொற்றுகாலம் இதுபோல நம்பிக்கை கொண்ட அறிவியலை நம்பாத இந்துகள் ஏராளமானோர் இங்கு உள்ளனர் . இவர்களைப் போன்ற அவ நம்பிக்கைவாதிகள் இருப்பதால்தான் நம்மை வெளியிலிருந்து வந்தவர்கள் பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்தனர் . அமெரிக்கா , சீனா ஆகிய நாடுகளில் கூட இறப்புகளை தடுத்தபிறகும் இந்தியாவில் கொரானோவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது . அங்கு நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து பொருளாதார வளர்ச்சி மீண்டு வருகிறது . இதனை பலரும் ட்வீட் செய்வதற்குள் நான் சில விஷயங்களை கூறிவிடுகிறேன் . 1. நான் அனைத்து இந்துக்களையும் அறிவியல் மீது அவநம்ப

உற்பத்தி துறையை மேம்படுத்த மேக் இன் இந்தியா, ஆத்மாநிர்பார் போதாது! சேட்டன் பகத்

படம்
                இந்தியாவின் உற்பத்திதுறையை மேம்படுத்த மசோதா தேவை ! சேட்டன் பகத் சில சமயங்களில் நமக்கு மக்கள் எதிர்க்கும் விஷயங்களில் கூட நல்ல விஷயங்கள் கிடைக்கும் . வகுப்பறையில் மாணவர்களுக்கு பாஸ்தா , பீட்ஸா கொடுப்பதை விட காய்ச்சலைக் குணப்படுத்த கசப்பு மாத்திரை கொடுக்கும் மருத்துவர் முக்கியமானவர் . அதேபோலத்தான் அரசு மக்களுக்கு ஏராளமான இலவச சலுகைகளை வழங்கி பின்னர் வரி ஏற்றி மக்களை வருத்துவதை விட கடினமான முடிவுகளை முன்னமே எடுத்து மக்களை காப்பது சிறப்பானது . பொதுவாக மக்கள் உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி என்பதை விரும்புவதில்லை . ஆனால் , அதனை அவர்கள் செய்யும்போது கிடைக்கும் பலன்கள் அபாரமானவைதானே ! நாம் பல்லாண்டுகளாக காத்திருந்துவிட்டோம் . உற்பத்தித்துறை சார்ந்த துறையில் இந்தியா முன்னேறுவதற்கான திட்டங்கள் உருவாகவில்லை . ஆனால் இப்போது இந்திய அரசு அந்த திசையில் தனது காலடிகளை மெல்ல எடுத்து வைக்கத் தொடங்கியுள்ளது . மேக் இன் இந்தியா , ஆத்மாநிர்பார் ஆகிய திட்டங்களை இந்த வகையில் நாம் கூறலாம் . அரசு இத்திட்டங்களுக்காக லட்சம் கோடிகளில் நிதியை ஒதுக்கி வருகிறது . இப்படி

இரக்கம் வேண்டாம் வருமானம் வேண்டும் ! சேட்டன் பகத்!

படம்
        rediff     இரக்கம் வேண்டாம் வருமானம் வேண்டும் ! சேட்டன் பகத்! அண்மையில்தான் விவசாய மசோதாக்கள் மூன்று மக்களவையில் தாக்கலாகி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அவை சட்டமாக்க குடியரசுத்தலைவரும் கூட ஒப்புதல் வழங்கி்விட்டார். இம்மசோதாக்கள் விவசாயத்துறையில் சீர்திருத்தத்தை முன்மொழிகின்றன. இதனால் மசோதாக்கள் பற்றிய விமர்சனங்கள், எதிர்ப்புகள் உருவாகியுள்ளன. தற்போதைய முறையில் அரசு குறைந்தபட்ச விலையை விவசாயிகளுக்கு அளிக்கிறது. அவர்கள் தங்கள் பொருட்களை தனியாருக்கு அல்லது மாநில அரசுகளின் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு விற்று வருகின்றனர். இனிமேல் அப்படி உள்ளூரில், மாநிலத்தில் விற்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. நல்ல விலை கிடைத்தால் பொருட்களை கிடங்கில் வைத்து நிதானமாக பொருட்களை விற்கலாம், மேலும் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு விவசாயம் செய்யமுடியும். சிலர் இம்மசோதாவை குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயிக்கும் முறையை ஒழிக்கிறது எனலாம். அதுதானே விவசாயிகளின் பொருட்களுக்கு விளைபொருட்களின் விலை தாழ்ந்தாலே ஏறினாலோ நஷ்டம் ஏற்படாமல் காக்கிறது என வாதிடலாம். இன்னொருவகையில் அரசிடம்

இந்தியர்களுக்கு எப்போதுமே சாதி பிடிக்கும்! சேட்டன் பகத்

படம்
                                       சேட்டன் பகத்   சேட்டன் பகத் உங்களுடைய தி கேர்ள் இன் ரூம் நெ.105 என்ற நாவலில் கொலை செய்வதற்கான பகுதிகள் வருகின்றன. அதே போல அடுத்த நாவலான அரேஞ்சுடு மர்டரும் அப்படியே தொடர்கிறதே ஏன்? ஒரு இளைஞன் ஒரு பெண்ணை காதலிப்பதை விட அவளை கொல்ல திட்டமிடுவது இன்னும் சுவாரசியமாக இருக்கும் என நினைக்கிறேன். அதனால்தான் காதலை கடந்து க்ரைமுக்கு செல்கிறேன். சேட்டன் பகத்தின் நாவலில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் காமெடி, காதல், இந்திய சமாச்சாரங்கள் அனைத்துமே இருக்கும். நீங்கள் ஒருமுறை என்ஆர்சி மசோதாவை, பெற்றோர் பார்த்து நிச்சயிக்கும் திருமணங்களோடு ஒப்பிட்டிருந்தீர்கள். நீங்கள் இப்படி அரசியல் நிலை எடுத்து பேசுவது உங்கள் ரசிகர்களை பாதிக்குமா? நான் என்னை எழுத்தாளராக நிரூபித்துவிட்டேன். இப்போது எனக்கு சில விஷயங்களை ரசிகர்களோடு பகிர்ந்துகொள்ள தோன்றுகிறது. எனவே, நான் அதனை அவர்களுக்கு நூல் வழியாக சொல்லுகிறேன். அவர்கள் என் எழுத்தைப் புரிந்துகொண்டால் இதனை ரசிப்பார்கள் என்றே நினைக்கிறேன். இன்று பரபரப்பாக இந்தியாவில் பேசப்படும் நெபோடிசம் பற்றி முன்னமே நீங்கள் பேசியிருந்தீர்கள். அதைப்பற்றி

இந்தியர்கள் ஏழையாக வாழ்ந்தே சுகம் கண்டுவிட்டார்கள் - சேட்டன் பகத்

படம்
dte இந்தியர்கள் ஏழையாக இருப்பதிலேயே சுகம் கண்டுவிட்டனர் சேட்டன் பகத் உலகில் வேறு நாடுகளைவிட ஊரடங்கு காலம் இந்தியர்களை கடுமையாக பாதித்துள்ளது. உலகப்போர் கால புகைப்படங்கள் என்றால் உங்களுக்கு சில அடையாளமான புகைப்படங்கள் நினைவுக்கு வரும். இனி கொரோனா கால பாதிப்பு என்றால் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் ஆதரவற்று நடந்துசெல்லும் புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும்தான் அனைவருக்கும் ஞாபகத்துக்கு வரும். இந்திய அரசு இக்காலகட்டத்தில் அறிவித்த இழப்பீட்டுத்தொகை உள்நாட்டு உற்பத்தியில் குறைவான தொகையாகும். பிறநாடுகளை விட இது குறைவான தொகை என்பது உண்மை. இந்த நிலைக்கு என்ன காரணம் என்று யோசித்திருக்கிறீர்களா? பசியில் வீடு சொல்ல காத்திருக்கும், போராடும் மக்களை காவல்துறை கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், லத்தியால் அடித்தும் விரட்டி வருகிறது. ஏன் அரசு இந்த நிலையை சமாளிக்க முடியவில்லை. இதற்கு பதிலாக கொரோனா பாதிப்பிற்கு முஸ்லீம்கள்தான் காரணம் என செய்தியை அரசுக்கு ஆதரவான குழுக்கள் பரப்பி வருகின்றன. இவை அனைத்திற்கும் அடிப்படைக் காரணம், நாம் ஏழை நாடு என்பதுதான். நாம் கேட்க விரும்பாத நிஜம் இ

லைட்டாக பிரச்னைகளை அணுகினால் - மேக்கிங் இந்தியா ஆசம்!

படம்
மேக்கிங் இந்தியா ஆசம் சேட்டன் பகத் ரூபா ரூ.160 இந்தியாவில் இல்லாத பிரச்னைகளே இல்லை. சாதி, மதம், இருக்கிறவன், இல்லாதவன், ரூபாய் சரிவு, விலைவாசி உயர்வு, சாலைவசதி, பெண்களின் கல்வியின்மை, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாமை, ஊர்களுக்கு இடையே தீண்டாமைச்சுவர் என பேசிக்கொண்டே போகலாம். சேட்டன் பகத் இந்த நூலில் எடுத்துக்கொண்டு பேசுவது அனைத்துமே ஆங்கில ஊடகங்களில் டேபிளைச் சுற்றி உட்கார்ந்து விவாதிப்பார்களே அந்த ரக மேட்டர்கள்தான். அதனால் மனம் பதறி பிபி எகிறி, வாசிக்க வேண்டியதில்லை. லைட்டாக வாசியுங்கள். அவ்வளவுதான். இதில் எப்போதும்போல அவர் இளைஞர்களுக்கு முக்கிய பிரச்னைகளாக முன்வைக்கும் ஊழல், லஞ்சம், வாக்குரிமை, அரசியல்வாதிகளின் போலி முகமூடித்தனம் ஆகியவற்றைப் பற்றிப் பேசுகிறார். இதில் இஸ்லாமியர்கள், மத அடிப்படை வாதம் பற்றி சேட்டன் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேநேரம் பாஜகவை புகழ்பாடும் கட்டுரைகளும் உண்டு. அதில் ஒன்றுதான், மோடி எப்படி தேர்தலில் வென்றார் என்ற கட்டுரை. அனைத்து கட்சிக்காரர்களுக்கும் உதவும்படி பாஜக, காங்கிரஸ் என பாரபட்சமின்றி சில கட்டுரைகளை எழுதியுள்ளார். மொ

உண்மையை விசுவாசியுங்கள் இந்தியர்களே! - சேட்டன் பகத்

படம்
எங்களைக் காப்பாற்றுவதாக கூறும் அரசியல்வாதிகளே, சமூக ஆர்வலர்களே உங்கள் அனைவரின் நோக்கத்திற்காக உங்களை வணங்குகிறேன். நாங்கள் அணிந்துள்ள தொப்பி உங்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் நாங்கள் கலவரத்தில் பட்ட காயங்கள், அதில் எங்களை ஈடுபடுத்திய உங்களது குற்றவுணர்வு நழுவாமல் பார்த்துக்கொள்கிறது. இந்தியா ஜனநாயகப்பூர்வ குடியரசு என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் நாட்டில் பெரும்பான்மையினருக்கு அதே நம்பிக்கை இருக்கிறதா என்று தெரியவில்லை. வாக்குவங்கிக்காக பல்வேறு இனக்குழுக்களை நாட்டின் விரோதிகளாக முன்னே நிறுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனை துணிச்சலாக எதிர்த்துப் பேசியவர்களின் வாட்ஸ் அப் கூட இன்று உளவு பார்க்கப்படுகிறது. நல்லரசு நினைத்தால் எதுவும் செய்யலாம்தானே?  கல்வி, தொழில் என அனைத்திலும் நாங்கள் இன்று பின்தங்கவில்லை. பெரும்பான்மை மதங்களைச் சார்ந்தவர்களுக்கு நிகராக நாங்களும் வளர்ந்துள்ளோம். இதற்கு அரசு ஒத்துழைப்பு, நண்பர்களின் ஆதரவு ஆகியவை பின்னணியாக உள்ளன. என்னை நீங்கள் இப்போது அடையாளம் கண்டிருப்பீர்கள். பாஷா, அப்துல்லா, சாதிக் அலி, சித்திக் அலி, நிஜாமுதீன் என ஏதாவொரு பெய

தூய இந்தி மொழி சாத்தியமில்லை! - சேட்டன் பகத்

படம்
டில்லியில் புதிய அரசு எப்போது ஆட்சி அமைத்தாலும் இந்தி சார்பான ஆதரவை எப்போதும் காட்டுவார்கள். காங்கிரஸ் முதல் பாஜக வரை இந்தி பிரசார சபையில் நின்று மொழி வீரம் பேசுவது வாடிக்கையாகி விட்டது. இதனால் இவர்கள் என்ன சாதிக்கிறார்கள் என்று இதுவரையிலும் புரியவில்லை. இந்தியா பன்மைத்துவமான தேசம். அரசு கூறும் புள்ளிவிவரங்களில் இந்தி எப்போதும் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்து, தெலுங்கு, மராத்தி, தமிழ் என இடம்பெறுவது மாறவே இல்லை. பின் எதற்கு இந்தி படி என்று காட்டுக்கத்தல் வட இந்தியாவிலிருந்து எழுகிறது. காரணம், ஆட்சியில் உள்ளவர்கள் பிராமணர்கள் என்ற காரணம்தான் தேடினால் தட்டுப்படுகிறது. பாஜக நேரடியாக சமஸ்கிருதத்தை நோக்கி பயணித்துவருகிறது. இந்தி என்பது சமஸ்கிருதம் எனும் லட்சியத்தை அடைய உதவும் படகுதான். பிறகு இந்தியை கைவிட்டு விடுவார்கள். இன்றைய இந்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா முதற்கொண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் வரை இந்தி விசுவாசத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இப்போதும் இந்தி பேசுகிறார்கள் என்பதை அவர்கள் வெளியிடும் புள்ளிவிவரங்களே சொல்லுகின்றன. பின் என்ன? எதற்கிந்த

ஆபத்தான உணவுக் கலாசாரம்! - நூடுல்ஸ் கலவரம்!

படம்
ஆம். படத்தில் இருப்பது உண்மை. என்ன உடனே நாம் ஒத்துக்கொள்ள மாட்டோம். இந்தியர்கள் பொதுவாக தின்பண்டப் பிரியர்கள். தின்பதில் வஞ்சனை இல்லாத ஆட்கள். நான் 2 ஸ்டேட்ஸ் நூலில் தமிழர்களின் அரசியலோடு பஞ்சாபியர்களின் பால் பொருட்களின் மீதான  பாசத்தையும் எழுதியிருப்பேன். காரணம், உணவுதானே நம் உடலாகிறது. அதனை எப்படி பேசாமல் இருப்பது எழுதாமல் இருப்பது? 2015 ஆம் ஆண்டு மே மாதம் சுவிட்சர்லாந்து நிறுவனமான மேகி நூடுல்ஸ் மீது கடும் குற்றச்சாட்டு ஏவப்பட்டது. அதில் நூடுல்ஸில் காரீயம் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டது. அப்புறம் என்ன? அதைப் பயன்படுத்திக்கொண்டது பதஞ்சலி நிறுவனம்.  இந்த நேரத்தில் ராம்தேவ் தொடங்கிய பதஞ்சலி நிறுவனம் பூதாகரமாக சுதேசி வியாபாரத்தை தொடங்கியது. தேசிய உணர்ச்சி பொங்கியவர்கள் பதஞ்சலியைப் பின்தொடர்ந்தனர். பின் அதன் தரத்தைப் பார்த்து திகைத்தவர்கள் தானாகவே பன்னாட்டு நிறுவனத்திற்கு திரும்பினர். பேச்சுலர்களின் முக்கியமான உணவான மேகி நூடுல்ஸ் இந்த இடைப்பட்ட காலத்தில் நிறைய வாடிக்கையாளர்களை இழந்தது.  சுதேசி நிறுவனமான பதஞ்சலி,  கோமாதா சோப் என பசுவின் கோமியத்தில்  சோப்பு தயாரித

மதுத்தடை வளர்ச்சியை குலைக்கும் - சேட்டன் பகத்!

படம்
giphy.com நான் மதுத்தடை தவறு என்று சொல்வதற்காக வருத்தப்படவில்லை. முக்கியமான குறிப்பு, நான் மது அருந்துபவனல்ல. குஜராத்தில் இன்றும் மதுவுக்கு தடை உள்ளது. காந்தி போர்பந்தரில் பிறந்ததால் அரசு அவருக்கு மரியாதை செய்வதற்காக இத்தடையை நீக்காமல் அப்படியே பெயரளவுக்கு காப்பாற்றி வருகிறது. மணிப்பூர், மிசோரம், ஏன் கேரளத்தில் கூட மது தடை அமலாகி பின் கைவிடப்பட்டது. இந்தியர்கள் பொதுவாக சிக்கலான பிரச்னைகளைப் பற்றி பேச மறுக்கின்றனர். யாருக்கும் எந்த பாதிப்பும் வராத சினிமாவை கையில் எடுத்துக்கொண்டு நட்பை வளர்க்கிறார்கள். நான் அதைக் குறையாக கூறவில்லை. முக்கிய விவகாரங்களில்  அவர்கள் சரியான அதிரடி முடிவுகளை எடுத்தே ஆகவேண்டும். மது தடை என்ற முடிவை நான் எதிர்க்கிறேன். அது இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரானது என்று உறுதியாக நம்புகிறேன். உண்பது, உடுப்பது, வணங்குவது போன்ற விவகாரங்களில் அரசு தலையிடக்கூடாது என்பது என் கருத்து. மது தடையால் குஜராத் அரசு கோடிக்கணக்கான ரூபாய்களை இழக்கிறது. இதற்காக மக்களின் தினசரி பயன்பாட்டுப் பொருட்களின் விலையை உயர்த்தி வருகிறது. இது தவறான முறைதானே? மது விற்பது என்பதும், அதன

செக்ஸைப் பற்றிப் பேசுவது தவறு கிடையாது! - சேட்டன் பகத்

படம்
pixabay.com செக்ஸைப் பற்றி பேசுவது தவறு அல்ல! நன்றாக நினைவுபடுத்திப் பாருங்கள். உங்களில் எத்தனைபேர் பகிரங்கமாக செக்ஸைப் பற்றி பேசியிருக்கிறீர்கள். அல்லது அதன் பிரச்னைகளைப் பற்றிய ஆலோசனைகளைக் கேட்டிருக்கிறீர்கள். எனக்கு தெரிந்து இந்தியாவில் அதுபோன்ற நிகழ்வுகள் நடக்கவேயில்லை. நான் அண்மையில் நூல் ஒன்றில் ஒரு சம்பவத்தை படித்தேன். திருமணமான தம்பதிகளின் முதலிரவு அது. அன்று ஆண் சொர்க்க கதவை எவ்வளவோ முட்டிப் பார்த்ததும் திறக்கவில்லை. பெண்ணுக்கும் ஒன்றும் புரியவில்லை. அடுத்த வாரம் செக்ஸாலஜிஸ்டை அணுகுகிறார்கள். அவரிடம் பேசியபோதுதான் கணவருக்கு தெரிந்திருக்கிறது. தான் சாவி போட்டு திறக்கவேண்டிய பூட்டு தான் முயற்சித்த கதவுக்கு கீழிறக்கிறது என்று. அவர் பெண்ணின் சிறுநீர் துவாரத்தில் தன் ஆண்குறியை திணிக்க முயல, பெண் வலியில் அலறி துயரமான தேனிலவாக முடிந்திருக்கிறது அவர்களின் கல்யாண ராத்திரி. pixabay.com பெண்களைத் திரும்பி பார்க்காமல் மண்ணைப் பார்த்து நடந்து கற்பை காப்பாற்றி, கல்யாண பந்தத்தில் நுழைந்தால் இப்படித்தான். காரணம், வன்முறையை வெளிப்படையாக காட்டத்தெரிந்த நமக்கு காதலை, அன்பை, க

அசாமும் நம்மில் ஒரு பகுதிதான்- இனவெறி வேண்டாம் - சேட்டன் பகத்!

படம்
தேசிய குடிமக்கள் பதிவேட்டில் ஆவணங்களை பதிவு செய்ய கந்துவட்டிக்கு கடன் வாங்கி அசாமியர்கள் அலைந்துகொண்டு இருக்கிறார்கள். டெல்லி முதன்முறையாக கிழக்கிந்தியர்களை இப்படி செய்கிறது என நினைக்க முடியவில்லை. அசாமில் தீவிரவாதிகளின் போராட்டம், கலவரம், நிடோ டானியா  என்ற இளைஞரின் கொலை போன்ற விஷயங்கள் நம்மை நாமே வெறுக்க வைப்பன. கிழந்திந்தியாவின் வாசலான அசாமில் உள்ள மக்களை வெறுப்பது இந்தியாவில் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. அங்குள்ளவர்களுக்கு சரியான வேலைவாய்ப்புகளை பொருளாதார மண்டலம் அமைத்து உருவாக்கலாம். பல்வேறு இசை, கலாசார நிகழ்வுகளை அங்கு நடத்தலாம். இந்திய எல்லையை ஒட்டி உள்ள மக்கள் என்பதால் எளிதாக அவர்கள் சீனாவின் பக்கம் சாய வாய்ப்புள்ளது. இந்திய அரசு தன்னுடைய மக்களாக அசாமியர்களைப் பார்ப்பது பன்மைத்துவத்திற்கு நல்லது. இனிமேலும் அசாம் மக்கள் நாம் பாகுபாட்டுடன் கேலி, கிண்டல் செய்தால் அவர்கள் இந்திய மக்களாக இருப்பது கஷ்டம். விரைவில் இதனை இதை இந்திய அரசு உணரும் வாய்ப்பு வரும். அசாமியர்களை தங்களுடன் தக்கவைத்துக்கொள்ள இந்தியா, தாய்மொழி, மண் என பிராந்திய அரசியலை கையகப்படுத்த முயற்சிக்கிறது