இடுகைகள்

தங்குமிடம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பேரிடர் காலத்தில் உயிர்பிழைக்க தங்குமிடத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்!- ஆலோசனைகள்

படம்
  இயற்கை பேரிடர்களால் அல்லது இனவெறி, நிறவெறி, மதவாதிகள் செய்யும் கொடூர தாக்குதலால் சொத்துக்கள் அழிந்துவிட்டதா? வீடு புல்டோசரால் இடித்து தள்ளப்பட்டுவிட்டதா, சிறுபான்மையினர் என்பதால் காவல்துறை அடித்து துன்புறுத்துகிறதா, தேசதுரோக வழக்கு போடப்படுகிறதா இவை அனைத்துமே பேரிடர்கள்தான். அரசு உருவாக்குகிற பேரிடர்கள். இயற்கை பேரிடர்களை விட அரசு உருவாக்கும் பேரிடர்களை சமாளிப்பது கடினம். ஆபத்து வரும் நேரத்தில் முன்னே உதவி பெற்றவர்கள் உங்களை மறந்துவிடுவார்கள். எதிர்க்கட்சிகளும் ஆதரவளிக்காது. சுற்றியுள்ளவர்களும் சால்ஜாப்பு சொல்வார்கள். இப்படியான நிலையும் பேரிடர்தான். இந்த சூழ்நிலையில் நீங்களும் உங்கள் குடும்பமும் தெருவில் நிற்காதபடி செல்ல பாதுகாப்பான்ன இடம் அவசியம். அதை குடும்பத்தினர் தவிர வேறு யாரும் அறிந்திருக்காமல் இருந்தால் நன்று. அனைத்து நாடுகளிலும் அவசர கால எச்சரிக்கை முறைகள் உண்டு. மூடநம்பிக்கை கொண்ட மாட்டை வழிபடும் இந்தியா போன்ற மதவாத நாட்டை விட்டுவிடுவோம். எப்போதும் போல அமெரிக்காவை கையில் எடுத்துக்கொள்வோம். அங்கு அவசரநிலையை நூறு நிமிடங்களில் அறிந்து மக்களுக்கு அதிபர் அறிவித்துவிட முடிய...

வித்தியாசமாக கட்டப்பட்ட டோக்கியோ கேப்சூல் டவர்!

படம்
  வினோதமான டோக்கியோ டவர் கட்டடம்! இந்த கட்டடத்தை முதலில் பார்ப்பவர்கள், தேவையில்லாமல் இருக்கும் கான்க்ரீட் கற்களை வரிசையாக அடுக்கி வைத்திருப்பார்கள் என்றே நினைப்பார்கள். கின்சா மாவட்டத்திலுள்ள டோக்கியோவில்  கேப்சூல் டவர் அமைக்கப்பட்டுள்ளது.  இதனை  1972ஆம் ஆண்டு கிஷோ குரோகாவா என்ற புகழ்பெற்ற கட்டடக் கலைஞர் உருவாக்கினார். நகரில் வேலை பார்ப்பவர்கள் வார இறுதிக்கு புறநகருக்கு அவசரமாக கிளம்புவதைத் தடுக்கும் வகையில் இந்த கட்டட அமைப்பை உருவாக்கினார். பார்க்க பெட்டி மாதிரி இருந்தாலும் இதில் பலர் தங்கலாம். ஒரு பெட்டியில் ஒருவர் என தங்கலாம். உலகப்போருக்கு கட்டப்பட்ட கட்டுமானது இது. ஒவ்வொரு கேப்சூலிலும் குளியலறை, டிவி, ரேடி, போன் ஆகியவை வைப்பதற்கான இடம் இருக்கும். கூடவே நகரை உள்ளிருந்து வெளியே பார்ப்பதற்கான ஜன்னலும் உண்டு. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் கேப்சூல் கட்டுமானம் மெல்ல சிதைவடைந்து வருகிறது.  இப்போது இங்கே தங்கி கேப்சூலை அலுவலகமாக வீடாக பயன்படுத்தி வருபவர்களுக்கும் நிலைமை புரிந்துவிட்டது. அடுத்த ஆண்டு இந்த கேப்சூல்கள் அழிக்கப்படும் என தெரிகிறது. ”...