நேர்கோட்டில் செல்லும் ஆணவக்கொலை படம் - தொரசானி படம் எப்படி?
தொரசானி - தெலுங்கு இயக்குநர் கேவிஆர் மகேந்திரா இசை - பிரசாந்த் விகாரி நிலக்கிழாரின் பெண்ணை, அவரின் நிலத்தில் வேலை செய்யும் ஏழை விவசாயி மகன் காதலித்தால்.... அதுதான் படத்தின் கதை. படத்தின் இடத்தை எண்பதுக்கு நகர்த்தி தெலுங்கானாவுக்கு கேமராவை நகர்த்தி விளக்குகளை செட் செய்தால் சூப்பரான விருது கிடைக்கும் ஆணவக்கொலை படம் ரெடி. அப்படித்தான் நினைத்திருக்கிறார் இயக்குநர். இந்த கதை லைனை சொன்னதும் உங்கள் தலைக்கு மேல் விளக்கு எரிந்து மணிச்சத்தம் கேட்டால் படத்தின் முடிவு உங்களுக்கு தெரிந்துவிட்டது என்று அர்த்தம். பிளஸ் பாய்ன்ட் ஜாதிவெறி, ஆணவக்கொலைக்கு எதிரான படம் என்று இயக்குநர் சொல்லியிருக்கிறார். ஆனால் படம் முழுக்க முதலாளி, எஜமான் என ஊர் மக்கள் காட்டும் விசுவாசத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடித்த வினய் வர்மாவுக்கு நாமும் வணக்கும் வைக்கும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறோம். தேவகி பாத்திரத்தில் நடித்த சிவாத்மிகா மட்டுமே படத்தில் தேறும் ஒரே ஆள். எதைப் பற்றியும் கவலைப்படாமல் காதலித்து காதலின் உயிரைக் காப்பாற்ற அவர் போலீஸ் ஸ்டேஷனில் பதறும் பதற்றம்.. கைதட்ட வைக்கிறது. பிரசாந்த் விகாரியி