மதவாத கலவரத்திற்காக, முஸ்லீம்களை தேசதுரோகிகளாக்க அகழ்ந்தெடுக்கப்படும் ஒளரங்கசீப்
ஒளரங்கசீப் ஆட்ரே ட்ரஷ்கெ கிழக்கு பதிப்பகம் தமிழில் ஜனனி ரமேஷ் அமெரிக்க நாட்டில் நியூஜெர்சியில், வரலாற்றுத் துறையில் பணியாற்றி வரும் ஆட்ரே ட்ரஷ்கெ, எழுதியுள்ள நூல். ஆங்கிலத்தில் எழுதியுள்ள நூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். 2022ஆம் ஆண்டு வந்ததை, உடனே உரிமை வாங்கி மொழிபெயர்த்திருக்கிறார்கள். மதக்கலவரத்தை தூண்ட அந்தளவு ஆர்வமா என்று யோசிக்கலாம். இந்த நூல் ஆர்எஸ்எஸூக்கு எதிரான பல்வேறு வரலாற்று ஆய்வுத்தகவல்களை முன்வைக்கிறது. உண்மையில் நிறைய கட்டுக்கதைகளை, புனைசுருட்டுகளை பொய் எனக் கூறுகிறது. சிவாஜி என்பவர் பற்றி வரும் பகுதியைக் கூறலாம். மராட்டியத்தில் இந்துக்களுக்கான நாட்டை உருவாக்கியவர் என்று அவரைக் கூறுவார்கள். இந்த இந்துக்கள் யார் என்றால் ராஜபுத்திரர், மராட்டியர், பார்ப்பனர் ஆகியோர்தான். சூத்திரர்கள் மனிதர்கள் அல்லர், அவர்கள் விலங்குகள் வரிசையில் வருவதால் சேர்க்கப்பட மாட்டார்கள். சிவாஜி போன்ஸ்லேதான் மாவீரன் சிவாஜி என்று அழைக்கப்படுபவர். உண்மையில் ஒளரங்கசீப்போடு மாவீரத்தையெல்லாம் காட்டவில்லை. கெரில்லா முறையில் போர் செய்து முகலாய படைகளுக்கு சேதம் விளைவிக்கிறார். அதேசமயம், ஒளரங்கசீப் ர...