இடுகைகள்

நெருப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

35 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்ட அப்பாவித் தொழிலாளிக்காக, குற்றவாளிகளை நெருப்பால் கொல்லும் சீரியல் கொலைகாரன்!

படம்
  chimera k drama  16 episodes Chimera (Korean: 키마이라; RR: Kimaira) is a South Korean television series directed by Kim Do-hoon and written by Lee Jin-mae. Starring Park Hae-soo, Lee Hee-joon and Claudia Kim, the series tells the story of three leading characters who dig through secrets of the past 30 years to find ...   Wikipedia கிமேரா என்றுதான் தொடரில் உச்சரிக்கிறார்கள். எனவே அப்படியே தொடருவோம்.  1984ஆம் ஆண்டு கிமேரா என்ற கிரேக்க புராணக்கதையில் வரும் மிருகத்தின் அடையாளத்தை வைத்துக்கொண்டு கொலைகாரர், மூன்று பேர்களைக் கொல்கிறார். அந்த மூன்று பேருமே ஹான்மியாங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். ஐந்து ஆராய்ச்சியாளர்களில் ஒரு பெண் ஆராய்ச்சியாளர் காணாமல் போகிறார். உயிர்தப்பும் மற்றொருவர் சியோரன் என்ற பெருநிறுவனத்தின் குடும்பத்தில் பெண் எடுத்து மருமகனாகிறார். எளிமையாக முதலாளி ஆகிறார்.  35 ஆண்டுகள் கழித்து ஆராய்ச்சியாளர்கள் கொல்லப்பட்ட வழக்கில் செய்தியை பத்திரிகையில் எழுதிய  முன்னாள் ஊழல் பத்திரிக்கைகாரர் திடீரென காரில் வைத்து எரிக்கப்படுகிறார். காரில் லைட்டர் ஒன்று கண்டெடுக்கப்படுகிறது. அதில் கி

தீயணைப்புப்படை கேப்டனுக்கும், மருத்துவருக்கும் இடையே எரியும் காதல் நெருப்பு !

படம்
    யாங் யாங் - வாங் சுரான் (ஃபயர்வொர்க்ஸ் ஆப் மை ஹார்ட்) ஃபயர்வொர்க்ஸ் ஆப் மை ஹார்ட் சீன டிவி தொடர் ராக்குட்டன் விக்கி ஆப் சீனர்கள் எதையும் சுருக்கமாக சொல்லாமல் இழுப்பதில் வல்லவர்கள் என்பதால், தொடர் நாற்பது எபிசோடுகள் நீள்கிறது. ஆனால் பெரிதாக சலிக்காமல் இருக்க ஏராளமான கதைகளை உள்ளே சேர்த்தியிருக்கிறார்கள். ஏழை, பணக்காரன் காதல் கதை. அதை இருவரின் பின்னணியாக தீயணப்புத்துறை, மருத்துவம் என மாற்றி கம்யூனிஸ்ட் கட்சி விசுவாசம், தேசப்பற்று ஆகியவற்றை மழைச்சாரல் போல சேர்த்து பரிமாறினால் டிவி தொடர் அமோகமாக ரெடி. தொடரைப் பார்க்க வைக்க நாயகன்,, நாயகியின் அழகுதான் பெருமளவு உதவுகிறது. நாயகன் வெளிவயமானவன், நாயகி அகவயமானவள். அவளுக்கு வரும் பிரச்னைகள் அனைத்துமே அவளது குண இயல்பு சார்ந்த அதை புரிந்துகொள்ளாத அம்மா, மருத்துவமனை சார்ந்த ஊழியர்களால் வருகிறது.   நாயகன், சோன் யான். நேர்மையானவன். சிறுவயதில் குடும்பத்தை தொலைத்தவன். அவனது அப்பா, நல்லவர். அதனால் பிழைக்கத் தெரியாதவராக இருக்கிறார். காசு இல்லாத காரணத்தால் மனைவி அவரை பிரிந்து சென்று இன்னொருவரை மணந்தது, கட்டுமான வேலை பறிபோனது காரணமாக மனம் ந

பூமியின் அடித்தட்டு மர்மம்!

படம்
  பூமியின் அடித்தட்டு மர்மம்! பூமியின் கீழ்ப்புறபகுதியில் நிறைய மர்மங்கள் உள்ளன. இதுபற்றிய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டாலும் நாம் அறிந்தது, குறைவான தகவல்களைத்தான். புவியோடு பகுதி, மூடகப் பகுதியைக் (Mantle) கடந்து கண்டத்தட்டுகள், வெளிப்புற, உட்புற கருவப் பகுதிகளில் (Outer, inner core ) அழுத்தமும் வெப்பமும் அதிகம். பூமியின் கீழே 5 ஆயிரம் கி.மீ. ஆழத்திற்கு செல்லும்போது, அங்குள்ள உட்கருவத்தில்  இரும்பு, நிக்கல் உருண்டையான வடிவத்தில் உள்ளது என்பதே ஆய்வாளர்களின் எண்ணமாக இருந்தது.  நேச்சர் இதழில் வெளியாகியுள்ள அறிவியல் அறிக்கையில், உட்கருவத்தில் திட, திரவம் என இரண்டு நிலைகளுக்கு இடைப்பட்ட நிலையில் (Super ionic state) பொருட்கள் உள்ளன என்று கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றிய ஆய்வுக்காக, நிலநடுக்க அலைகளைப் (Seismic waves) பயன்படுத்தியுள்ளனர்.  புவி அடுக்குகளுக்கு இடையில் நிலநடுக்க அலைகள் வெவ்வேறு அலைநீளத்தில் செலுத்தப்பட்டு, அதில் உள்ள வேதியியல் பொருட்களை அறிய முயன்றனர். இதற்கு முன்னர் செய்த ஆய்வில், ஷியர் அலைகளை (Shear waves)  பயன்படுத்தினர். இதில் கிடைத்த  தகவல்களை வைத்து, புவியின் உள் கருவத்த

வாழ்க்கையை அழித்த வசை! - இனவெறி, கருப்பினத்தவர்களின் குற்றங்கள், பெண் கொலைகாரர்கள், சிறுவயது சைக்கோ கொலைகாரன் ...

படம்
                  மனதைக் கொல்லும் வார்த்தை ! உணர்ச்சிகளை பகிரங்கமாக வெளிப்படுத்துவது , கோபத்தை , பொறாமையை , விரோதத்தை , வன்மத்தை , பகையை நேரடியாக வெளிப்படுத்துவது அதற்கான விளைவுகளை கூடவே எடுத்துவரும் . அதற்கான உதாரணம் எட்மண்ட் கெம்பர் . இவரைப் பற்றி அசுரகுலம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது . இப்போது அவரது வாழ்க்கையை சுருக்கமாக பார்க்கலாம் . அப்பாவின் வழிகாட்டுதல் இல்லாத குழந்தை . ஆறடி ஒன்பது அங்குல ஆளுமை . ஆனால் மனதளவில் அன்பும் அங்கீகாரமும் கிடைக்காத காரணத்தால் புறக்கணிப்பை எதிர்கொள்ள முடியாமல் பெண்களை கொல்வதே அவர்கள் தன்னை மறுக்காமலிருக்கும் வழி என முடிவுக்கு வந்தவர் . இதற்கு ஒரே காரணம் , அவரது அம்மா . தினந்தோறும் சித்திரவதையான வார்த்தைகள் , தண்டனைகள் என அம்மாவிடம் இருந்து கிடைத்த அத்தனையும் மனதில் வன்முறையாக மாறத் தொடங்க , விலங்குகளை துன்புறுத்தி மகிழத் தொடங்கினார் . கொன்று புதைப்பது , உயிரோடு புதைப்பது என தொடங்கிய பழக்கம் மெல்ல முன்னேறி இறந்த உடல்களில் அருகில் சுய இன்பம் அனுபவிப்பது வரை வளர்ந்தது . பள்ளியில் பலரும் சூப்பர்மேன்களாக மாறி மக்களைக் கா