இடுகைகள்

டென்னிஸ் ரேடார் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கருணையற்ற கொலைகாரன் - பிடிகே

படம்
பள்ளியில் படித்தபோது மிகச்சிறப்பான மாணவர் அல்ல. சுமாராக திரியும் கூட்டத்தில் ஓர் மாணவர் மட்டுமே. பின் கல்லூரியிலும் பெரியளவு பெயர் பெறவில்லை. நாம் எல்லோரும் அப்படித்தான் கடந்து வந்திருப்போம். டென்னிஸ் ரேடாரும் அப்படித்தான் வளர்ந்தார். படித்தார். அவர் 30 ஆண்டுகளாக மறைத்து வந்த ரகசியம் ஒன்று உண்டு. அதுதான் அவர் சீரியல் கொலைகாரன் என்பது. அதனை அவர் தன் மனைவியிடம் கூட வெளிப்படித்தியிருக்கவில்லை. அதற்கான அறிகுறிகளைக் கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை. மதிப்பான மனிதர்கள், குடும்பம் இருந்தது. பள்ளி ஸ்கவுட் குழுவில் இடம்பெற்றவர், பின்னர், தேவாலய பிரார்த்தனை குழுவின் தலைவராக இருந்தார். விபத்து, கொலை பற்றிய செய்திகளை கேட்டாலே பதறி வேறுபுறம் செல்பவர் பத்து பேர்களுக்கும் மேற்பட்டவர்களை கொன்று புதைத்தார் என்றால் நம்புவீர்களா? டென்னிஸ் ரேடார் பிடிபட்டபோது, அவரது குடும்பம் பதறியது. அவரது மகள் எனக்கு ஒழுக்கம் சொல்லிக் கொடுத்தவர் இப்படி செய்திருப்பாரா என்று கேட்டார். பின்னர் போலீஸ் எடுத்துச் சொல்லியதும்,  எனது தந்தை தவறான விஷயங்களிலிருந்து சரியான விஷயங்களுக்கு வழிகாட்டி உள்ளார் என்று கூறி பே