இடுகைகள்

காஷ்மீர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒற்றை மனிதராக சென்று காஷ்மீர் பிரிவினைவாத தீவிரவாதிகளுடன் மோதி பணயக்கைதிகளை மீட்கும் நாயகன்!

படம்
                தாயகம் விஜயகாந்த், ரஞ்சிதா இயக்கம் ஏ ஆர் ரமேஷ் இசை தேவா பாடல்கள் பிறைசூடன் காயமானால் வெளிவரும் ரத்தம் நொடியில் நின்றுபோகும் வகையில் மருந்து ஒன்றை இந்திய ஆராய்ச்சியாளர் கண்டுபிடிக்கிறார். இதைப்பற்றி அவரிடம் உள்ள உதவியாளர் தகவலை பாக். தீவிரவாதிக்கு கசியவிடுகிறார். இதனால் விஞ்ஞானி செல்லும் விமானம் கடத்தப்படுகிறது. காஷ்மீரில் தனி காஷ்மீர் கேட்கும் சிறு தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொள்கிறார்கள் பயணிகள். அவர்களை சக்திவேல் என்ற மீனவர், விஞ்ஞானியின் மகளோடு சென்று தனிமனிதராக மீட்டு வருவதுதான் படத்தின் கதை. படத்தில் முப்பது நிமிடம் கழித்துத்தான் விஜயகாந்த் வருகிறார். அதுவரைக்குமான படத்தின் காட்சிகளை அருண் பாண்டியன் பார்த்துக்கொள்கிறார். அவருக்கு பக்க துணையாக விமான பைலட் பாத்திரத்தில் நெப்போலியன் நடித்திருக்கிறார். இன்று ஜாக்கி ஷெராஃபின் மகன் டைகர் நடித்து வரும் ஒன்மேன் ஆர்மி பாத்திரத்தில் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் வருகிறார். இது சண்டைப்படம் என்பதால் லாஜிக் பார்க்காதீர்கள். மேஜிக் மிஸ் ஆகிவிடும். படத்தில் வரும் எம்ஏ படித்த பெண் பாத்திரத்தில் வரும் ரஞ்சிதா, ஒன்பதாம் கிளாஸ் படித்த மீனவ

ஒரே இந்தியா என்ற கூக்குரலால், பன்மைத்தன்மை வாய்ந்த பஞ்சாபி கலாசாரம் அழிக்கப்படுகிறது! - அம்ரித்பால் சிங்

படம்
  அம்ரித்பால் சிங் - காலிஸ்தான் போராளி அம்ரித்பால் சிங் - காலிஸ்தான் போராட்டத் தலைவர் அம்ரித்பால் சிங் சந்து, துபாயில் குடும்பத் தொழிலான சரக்கு போக்குவரத்தை கவனித்துக்கொண்டிருந்தனர். மழுங்கச் சிரைத்த கன்னம், குறைவான தலைமுடி, டீ ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட் என வாழ்ந்தவர். இப்போது தோற்றத்தில் நிறைய மாறிவிட்டார். கடந்த செப்டம்பரில் இந்தியாவுக்கு வந்தவர், சீக்கிய மதகுரு கோபிந்த் சிங் தொடங்கிய அம்ரித் சன்சார் என்ற விழாவில் பங்கேற்றார். காலிஸ்தான் கோரிக்கையை எழுப்பிய ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலேவின் அடிச்சுவட்டை பின்பற்றத் தொடங்கிவிட்டார். அம்ரித்பாலைச் சுற்றி எப்போதும் பாதுகாவலர்கள் உண்டு. இவர்களின் கையில் துப்பாக்கி, வாள் என இருவகை ஆயுதங்கள் உள்ளன. சொகுசு காரில் பல்வேறு இடங்களுக்குச் சென்று சீக்கியர்களின் பல்வேறு பிரச்னைகளைப் பற்றி பேசி வருகிறார். சீக்கியத்தை தனி மதமாக இந்திய அரசியலமைப்பு அங்கீகரிக்கவில்லை என்பதால், அம்ரித்பால் அதன் மீது பெரிய மதிப்பை வெளிப்படுத்தவில்லை. இந்தச் செய்தியை எழுதும்போது தனது கன்னத்தில் தேசியக்கொடியை வரைந்த சீக்கிய சிறுமி தங்க கோவிலுக்குள் நுழையக்கூடாது என தடுக்கப்பட்டு

பேட்ஸ்மேன்களை பயப்படுத்துவேன்! - உம்ரான் மாலிக், பந்துவீச்சாளர்

படம்
  உம்ரான் மாலிக், பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் பந்துவீச்சாளர், சன்ரைஸர்ஸ் அணி உங்களால் வேகமாக பந்துவீச முடியும் என எப்போது அடையாளம் கண்டு கொண்டீர்கள்? 2018ஆம் ஆண்டு டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடும்போதுதான் எனக்கு பந்துவீச்சு வேகமாக வருவது தெரிந்தது. எப்போது பஞ்சாப் அணி, காஷ்மீருக்கு வந்தாலும் என்னை பந்துவீச அழைப்பார்கள். நான் உள்ளூர் அணியில் விளையாடுவேன். இந்த நிலையில்தான் ஜம்மு காஷ்மீரில் 19 வயதுக்கு உட்பட்டோர் அணியில் சோதனை முறையில் இடம் கிடைத்தது.  நான் அப்துல் சமாத் என்ற அண்ணாவுடன் பந்துவீசி வந்தேன். அவர் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளார். அவர்தான் எனது பந்துவீச்சு வீடியோக்களை சன்ரைஸர் அணி நிர்வாகத்துக்கு அனுப்பிவைத்தார். இதனால் நெட் பௌலராக வேலை கிடைத்தது. அதில் சிறப்பாக செயல்பட்டதால் அணியில் இடம் கிடைத்தது.  வேகமாக பந்து வீசுவது உங்களை ஊக்கப்படுத்துகிறதா? நான் பந்துவீசும்போது ஒருவர் மெதுவாக பந்து வீசுகிறார் என்று  விமர்சனம் எழுந்தது. அதற்குப் பிறகுதான் நான் வேகமாக பந்துவீச முயன்றேன். இந்த ஐபிஎல்லில் பேட்ஸ்மேன்களை ஸ்டம்புகளை சிதறடித்து ஆட்டமிழக்கச்செய்திருக்கிறீர்கள். அந்த

காஷ்மீரில் உருவாகும் தொழில்முனைவோர்கள்!- சுயதொழிலில் ஆர்வம் காட்டும் பெண்கள்!

படம்
  பெண் தொழில்முனைவோர் காஷ்மீரில் தொழிலை நடத்துவது கடினமானது. தீவிரவாதிகள் தொல்லை, அரசின் இணையத்தடை ஆகியவை அங்கு தொழில் நடத்தலாம் என்று நினைத்தவர்களைக் கூட எண்ணத்தை மாற்றும்படி செய்திருக்கிறது. இதில் தப்பி பிழைத்து விடாமுயற்சிய செய்தவர்கள் மட்டுமே இப்போது காஷ்மீரில் வெற்றி பெற்றுள்ளனர்.  சாடியா முஃப்டி அப்படிப்பட்டவர்தான். அறிவியல் பட்டப்படிப்பு படித்தவருக்கு ஸ்ரீநகரில் இரண்டு டிசைனர் பொட்டிக் கடைகள் உள்ளன. இவற்றை உருவாக்குவதற்கு அவர் மிகவும் போராடியிருக்கிறார். இதற்கு ஐந்து ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. ஜெகாங்கீர் சௌக், ஹஸ்ராத்பால் எனும் இரு இடங்களில் ஹேங்கர்ஸ் தி குளோஸெட் என்ற பெயரில் கடைகள் செயல்பட்டு வருகின்றன.  முஃப்டி தான் வெற்றி பெற்றதே போதும் என்று இருக்காமல், ஏராளமான பயிற்சி வகுப்புகளை எடுத்து வருகிறார். இவரை முன்னுதாரணமாக கொண்டு பல்வேறு பெண்கள் இத்தொழிலை செய்வதற்கு தயாராகி வருகின்றனர். பெண்கள் பெரும்பாலும் அரசு வேலைக்கு போகாதநிலையில் ஆடை வடிவமைப்பு தொழில் அவர்களை ஈர்த்து வருகிறது.  கொரோனா கால பொதுமுடக்கம், வேலைவாய்ப்பின்மை, இணைய முடக்கம், அரசியல் பிரச்னைகள் என அங்குள்ள தொழில்

பாஸ்போர்ட்டை அரசு மறுக்க முடியுமா? அதற்கு என்ன காரணங்கள் இருக்கும்?

படம்
  ஜம்மு காஷ்மீரில் பாஸ்போர்டுக்கு விண்ணப்பிப்பவர்களை கண்காணிக்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அரசுக்கு எதிரான போராட்டங்கள், கல்வீச்சு ஆகியவற்றில் பங்கேற்றவர்களுக்கு பாஸ்போர்ட் கிடைப்பதை தடை செய்ய அரசு முயன்று வருகிறது என பலரும் விமர்சித்து வருகின்றன. ஒருவருக்கு பாஸ்போர்ட வழங்க முக்கியமான ஆவணம், அந்த நாட்டின் குடிமகனாக இருப்பதுதான். அடுத்துதான் பிற விஷயங்கள் முக்கியத்துவம் பெறும். நாட்டின் இறையாண்மை, சுதந்திரம் ஆகியவற்றை கெடுக்கும் வகையில் செயல்பட்டவர்களுக்கு அரசு பாஸ்போர்டுகளை வழங்குவதில்லை. மேலும், பாஸ்போர்டுக்கு விண்ணப்பிக்கும்போது ஒருவர்  எந்த குற்ற வழக்கிலும் இருக்க கூடாது. கோர்ட்டில் விசாரணைக்கு அழைப்பு வந்திருந்த சமயம் என்றாலும் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரிக்கலாம்.  இந்திய பாஸ்போர்ட் சட்டம் 1967படி,  பாஸ்போர்ட்டை  அதனை வழங்கும் அதிகாரி  ஒருவர் சில காரணங்களுக்காக நிறுத்தி வைக்க முடியும். இதற்கு விதிவிலக்குகளும் உண்டு. சட்டப்பிரிவு 22 படி, குறிப்பிட்ட காலம் அதாவது, ஓராண்டு வரையில் ஒருவர் பயன்படுத்தும் வகையில் பாஸ்போர்டுகளை  வழங்கலாம். குற்றவழக்கில் ஒருவர் பெயர் இரு

ஒரு நாட்டில் எதற்கு இருவிதமான விதிகளை மத்திய அரசு கடைபிடிக்கிறது? - ஓமர் அப்துல்லா

படம்
                  ஓமர் அப்துல்லா அரசியல் கட்சி தலைவர் காஷ்மீரில் அண்மையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது . அதில் மத்திய அரசை எதிர்க்கும் ஓமர் அப்துல்லாவும் இடம்பெற்றார் . இதுபற்றி அ வரிடம் பேசினோம் . உங்களையும் , உங்களது அப்பாவையும் சிறையில் அடைத்தது இதே அரசு . இப்போது அவர் நடத்தும் கூட்டத்தில் எப்படி பங்கேற்றீர்கள் ? மத்திய அரசுதான் எங்களை சிறையில் அடைத்தது . இப்போது அவர்களேதான் எங்களை வரவேற்பு பேசுகிறார்கள் . நீங்கள் கேட்கும் கேள்விக்கு அவர்கள்தான் பதில் சொல்லவேண்டும் . அனைத்து கட்சி கூட்டத்தில் பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் சொல்லியிருக்கிறார் . இதயத்திலிருந்து தொலைவாக , டெல்லியிலிருந்து தொலைவாக என்று அவர் கூறினார் . இதற்கு என்ன அர்த்தம் ? இப்படி நம்பிக்கை குறைந்துபோக என்ன காரணம் என்று அவர்தான் கூறவேண்டும் இந்த சந்திப்பில் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லையா ? இது தொடக்கம்தான் . ஒரு கலந்துரையாடல் அனைத்து பிரச்னைகளையும் தீர்த்துவிடும் என்று நினைக்க முடியாது . பெரிய செயல்முறையின் சிறிய பகுதிதான் இது . 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம

காஷ்மீரில் அனைவரும் நிலம் வாங்க முடியுமா? புதிய சட்டங்கள் என்னென்ன சொல்லுகின்றன?

படம்
                காஷ்மீரில் மத்திய அரசு 12 விதிகளை மாற்றியுள்ளது . புதிதாக 14 திருத்தங்களை விதிகளில் கொண்டுவந்துள்ளது . இதெல்லாம் எதற்கு காஷ்மீரை விற்பதற்குத்தான் . அதாவது அங்குள்ள நிலங்களை தொழிற்சாலைகளுக்கும் , விவசாயம் செய்யவேண்டி விரும்புபவர்களும் இந்த சட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம் . இது உண்மையா ? காஷ்மீரில் உள்ள விவசாய நிலங்களை விவசாயிகள் தவிர பிறர் வாங்க முடியாது . விவசாய நிலங்களை வாங்குபவர்கள் விவசாயம் செய்வதற்குத்தான் பயன்படுத்த வேண்டும் . காஷ்மீர் இப்போது யூனியன் பிரதேசம் என்பதால் புதிய விதிகளை கவனித்துத்தான் ஒருவர் நிலங்களை வாங்க முடியும் . ஆனால் இந்த விதியை அரசு தூக்கியெறிந்து தேவைப்படுபவர்களுக்கு நிலங்களை வழங்க முடியும் . எது விவசாய நிலம் , விவசாய நிலமல்லாதது எது என மாவட்ட ஆட்சியர் முடிவு செய்து அறிக்கை கொடுக்கலாம் . நிலங்களை வாங்குவதற்கான வரம்பு ஏதாவது இருக்கிறதா ? முன்னர் ஒருவர் ஒன்பது ஹெக்டேர்களுக்கு அதிகமாக நிலங்களை வைத்திருக்கக்கூடாது என்று கூறப்பட்டது . 1950 ஆம்ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டம்தான் இப்படி சொல்கிறது . மோடி அரசு இதனை மாற்றிவிட்டத

எம்மி விருதுக்கு சென்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான படம்!

படம்
        எம்மி விருதுக்கு சென்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான படம்! இந்தியா பர்னிங் என்ற படம்தான் 2020ஆம் ஆண்டிற்கான செய்திப்பட தொகுப்பாக சிறப்பு பிரிவில் இடம்பெற்றது. பத்திரிகையாளர் இசோபெல் இயுங் என்பவர் இச்செய்திப்படத்திற்காக இந்தியாவில் காஷ்மீர், அசாம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று அதனை பதிவு செய்துள்ளார். முக்கியமாக பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமியிடமும் நேர்காணல் பெற்றுள்ளார். இந்த படம் எம்மி விழாவில் விருது பெறவில்லைதான். ஆனால் இதில் இடம்பெற்றது என்பதே பெருமைக்குரியது என்கிறார் இதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான காஷ்மீரைச் சேர்ந்த அஹ்மத் கான். நாங்கள் விருது பெறவில்லையென்றாலும் இந்த படம் இதயப்பூர்வமாக எடுத்தபடம் என்பதில் சந்தேகமில்லை. இப்பணிகளை நாங்கள் தொடர்வோம் என்று கூறுகிறார்.   இப்படத்தில் இவர் அசாம் பகுதி போராட்டங்களை எடுக்க உதவியுள்ளார். அகதிகள் முகாம் அமைக்கும் பணி, அஹ்மத் கானின் அம்மா குடியுரிமை பட்டியலில் விடுபட்டுள்ள சிக்கலை பதினாறு நிமிட படம் பதிவு செய்துள்ளது. சட்டம் அங்கீகார

இந்தியாவில் உருவாகிறது பெருஞ்சுவர்!

படம்
ஜனநாயக நாடுகளிலேயே அதிக நாட்கள் இணையம் தடைசெய்யப்பட்ட நாடாக இந்தியா உள்ளது. ஏறத்தாழ ஐந்து மாதங்கள் முற்றாக இணையம் துண்டிக்கப்பட்டு காஷ்மீரிலுள்ள தொழில்கள் அனைத்தும் துடைத்து அழிக்கப்பட்டன. இப்போதும் நீதிமன்ற உத்தரவுப்படி சில பகுதிகளில் மட்டும் இணைய வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட இணையதளங்களை மட்டுமே இணையத்தில் காஷ்மீர் பயனர்கள் பார்க்க முடியும். மேலும் இம்முறையில் 301 வலைத்தளங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 4, 2019 அன்று இணைய இணைப்பு காஷ்மீரில் தடைசெய்யப்பட்டது. பின்னர், கார்கில் பகுதிகளில் டிசம்பர் 27, 2019 அன்று இணைய இணைப்பு வழங்கப்பட்டது. பிரச்னை ஏற்படுத்தாத பயனர்களுக்கு மட்டும் ஜன.25, 2020 அன்று 2ஜி இணைய இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இவர்கள் அரசு அனுமதிக்கும் இணையதளங்களை மட்டுமே காண முடியும். மேலும் தகவல் அனுப்புவதற்கு என்கிரிப்ஷன் வசதியுள்ள வாட்ஸ் அப் போன்ற செயலிகளை தடை செய்துள்ளது மத்திய அரசு. அதற்கு பதிலாக அரசுக்கு ஆதரவான ஜியோ சாட் செயலியைப் பயன்படுத்தலாம். இதில் தகவல்களை அரசு இடைமறித்துப் படிக்க முடியும். அரசு நிறுவனமான பிஎஸ்என்எல், தனியார் நிறு

வேலை இழப்பால தவிக்கும் காஷ்மீர்!

படம்
விடுதி மேலாளர் குலாம் ஜிலானி ஆகஸ்ட், 5, 2019 அன்று இந்திய அரசு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. சட்டத்திற்கு எதிரான போராட்டம் மாநிலமெங்கும் நடத்தப்பட்டது. இதனைக் கட்டுப்படுத்த 135 நாட்கள் இணையம் தடை செய்யப்பட்டது. இதன் விளைவாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பலரும் தம் பயணத்தை ரத்து செய்தனர். மாநிலம் முழுவதம் ராணுவம் சூழ்ந்து நிற்க, திறந்தவெளி சிறைச்சாலை போன்ற சூழலை அரசு வலிந்து உருவாக்கியது. இதன் விளைவாக அங்கு 1 லட்சத்து 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் இழக்கப்பட உள்ளன. தற்போது நீதிமன்ற தலையீட்டால 2ஜி இணைப்புகள் மட்டும் வேலை செய்யத் தொடங்கியுள்ளன. இணையதளங்கள் முழுக்க செயல்படத்தொடங்கவில்லை. குறிப்பிட்ட அரசு ஏற்ற பட்டியலில் உள்ள வலைத்தளங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. தால் ஏரி அருகில் உள்ள விடுதியில் குலாம் ஜீலானி என்பவர் மேலாளராக உள்ளார். இங்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட தினத்தில் இருந்து அங்கு புக் செய்யப்பட்ட அனைத்து பயணிகளும் தம் இடங்களை ரத்து செய்துவிட்டனர். தற்போது மூன்று பேர் மட்டுமே அறை எடுத்து உள்ளனர். அதற்கு முன்பு 88 பேர் இங்கு தங்கியிருந்

காஷ்மீரில் இணையம் நிறுத்தம்!

படம்
சிறப்பு அந்தஸ்து விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு, ஏறத்தாழ 60 நாட்களுக்கு மேலாக அங்கு இணையம் செயல்படவில்லை. அனைத்து சமூக வலைத்தளங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. காரணம் கிளர்ச்சியாளர்கள் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டு வன்முறை ஏற்படும் பயம்தான். இனி பியூட்டிஃபுல் காஷ்மீர் என நிச்சயம் பாட முடியாது. மாநிலமே கொந்தளிப்பில் கிடக்கிறது. எனவே அங்கு செயல்பட்டு வந்த இணைய இணைப்பு பற்றிய டேட்டா இதோ..... அக்டோபர் 3 ஆம் தேதியோடு அறுபது நாட்கள் காஷ்மீரில் இணையம் தடைசெய்யப்பட்டு இருக்கிறது. 2012 ஆம் ஆண்டு 180 முறை இணையம் தடை செய்யப்பட்டு உள்ளது. 2019 இல் இதுவரை 55 முறையும், கடந்த ஆண்டில் 68 முறையும் இணையம் தடை செய்யப்பட்டுள்ளதாக மென்பொருள் சுதந்திர சட்ட மையம் தகவல் கூறுகிறது. கடந்த ஆண்டு உலகம் முழுவதும் இணைய இணைப்பு துண்டிப்பு 196 முறை நடைபெற்றிருக்கிறது.இதில் இந்தியாவில் மட்டும் 134 முறை நடந்திருக்கிறது. பாகிஸ்தான் என்று கேள்வி வருமே? ஆம் அங்கு 12 முறை இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. புர்கான் வானி படுகொலையான பின்னர் மொபைல் இணையம் 133 முறை காஷ்மீரில் தடை செய்யப்பட்டுள்ளது. - இந

காஷ்மீரில் வல்லுறவும் கொலைகளும் அதிகரிக்கும்! - எழுத்தாளர் மிர்சா வகீத்

படம்
நேர்காணல் மிர்சா வகீத் இந்தியாவில் சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பாக காஷ்மீரில் கடுமையான போராட்டம் வெடித்துள்ளது. அதனை ஒடுக்கும் முயற்சியில் ராணுவம் காவல்துறை உறுதியாக உள்ளன. அங்குள்ள பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மாநில கட்சித்தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.இதற்கு முன்னோட்டமாக காஷ்மீர் வந்த சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.  தற்போது அங்கு நிலைமை எப்படி உள்ளது என நேர்மையாக காட்டும் ஊடகங்கள் இந்தியாவில் கிடையாது. பிபிசி, அல்ஜசீரா, ராய்ட்டர்ஸ் மட்டுமே இதுதொடர்பான செய்திகளை சரியாக வெளியிட்டு வருகின்றனர். இரண்டு நாவல்களை வெளியிட்டுள்ள நாவலாசிரியர் மிர்சா, லண்டனில் வசித்து வருகிறார். இவரது பெற்றோர் காஷ்மீரில் வாழ்கின்றனர். அவரிடம் காஷ்மீரிலுள்ள நிலை குறித்துப் பேசினோம். நீங்கள் உங்களது பெற்றோரைச் சந்தித்தீர்களா? இல்லை. போன் வழியே தொடர்பு கொள்ள முடியவில்லை. இணைப்பு முடக்கப்பட்டுள்ளது. நெருங்கிய நண்பர் மூலம் தொடர்புகொண்டு பெற்றோரின் நலனை விசாரித்தேன். அவர் நலமாக இருக்கிறார் என்று கூறினார். அதன்பிறகுதான் நிம்மதியானேன். காஷ்மீரில் என்னதான்

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கான போராட்டம் நடந்ததா?

படம்
ஜம்மு காஷ்மீர் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசங்களாக செயல்படவிருக்கிறது. சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்டு, இந்திய நாடாளுமன்றத்தால் கட்டுப்படுத்தப்படும்படி மாநிலம் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புகள் வரவில்லையா? ஊடகங்கள் எதிலும் இத்தகைய காட்சிகளைப் பார்த்திருக்க முடியாது.  அரசு விசுவாசம்தான் இதற்குக் காரணம். ஆனால் பிபிசி, அல்ஜசீரா ஆகிய டிவி நிறுவனங்கள் உண்மையை வெளிக்காட்டி விட்டன. பத்தாயிரம் பேர்களுக்கு மேல் பங்கேற்ற பேரணியைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைகுண்டு, ரப்பர் மூடி கொண்ட தோட்டாக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளனர். மேற்சொன்ன வீடியோக்கள் பொய் தேசபக்தி டிவி சேனலான ரிப ப்ளிக் டிவி கூறியது. கூடவே ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் இதற்கு சமூக வலைத்தளத்தில் போலிச்செய்தி என சப்பைக் கட்டு கட்டினர்.  உள்துறை அமைச்சகம் நடந்த போராட்டம் உண்மை. அதில் 20 பேர்தான் இருந்தனர் என விநோதமான காரணத்தைக் கூறியது. ஆனால் உண்மை என்ன என ஆல்ட் நியூஸ் வலைத்தளம் களமிறங்கி விளக்கியது. வீடியோவில் காணப்படும்  அங்கிருந்த விளம்பரப்பலகை, ஜீனப் சாயிப் பசூதி,  பேனரிலுள்ள போராட்ட வாச

ஜெய்ஸ் இ முகமது அமைப்பு மிகப்பெரிய வெற்றியை ருசித்திருக்கிறது

படம்
Scroll.in நேர்காணல் பத்திரிகையாளர் அனடோல் லீவன் தமிழில்: ச.அன்பரசு இந்தியா பாகிஸ்தானுடன் போர் தொடுப்பது இறுதியான தீர்வைத் தருமா? ராணுவ நடவடிக்கை சிறிய அளவில் தீர்வுகளைத் தரலாம். பாகிஸ்தானுக்கு பெரிய அளவு முதலீடு கிடையாது. அந்நாட்டிற்கு சீனா, சவுதி அரேபியா ஆகியோர் உதவுகின்றனர். ராணுவத்தாக்குதல் தொடங்கினால் இருநாடுகளுக்கும் இடையே அணு ஆயுதப் போர் நடப்பது நிச்சயம். அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முயல்வதே இதற்கு தீர்வு. இந்தியாவுக்கு வேறு என்ன வாய்ப்புகள் உள்ளன?  இந்தியா அமெரிக்காவை அணுகி, பொருளாதார ரீதியில் பாகிஸ்தானுக்கு நெருக்கடிகளை அளிக்கலாம். ஆப்கன் பிரச்னையில் ட்ரம்ப் அரசுக்கு பாகிஸ்தானின் உதவி தேவைப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்கா இந்தியா சொன்னவுடன் அதற்கு உடனே சம்மதம் தெரிவித்து விடாது. மோடி பேச்சுவார்த்தைக்கான நேரம் கடந்துவிட்டது என்று கூறியிருக்கிறாரே? மோடி பேசுவது அனைத்தும் வெற்றுப் பேச்சு. இந்தியா பாகிஸ்தானுடன் போர் தொடுத்தால் அது பேரழிவாகவே இருக்கும். போரின் பின்னணியில் உருவாகும் தீவிரவாதம், அகதிகள் பிரச்னைகளை சமாளிப்பது சாதாரண காரியம் அல்ல. தாமதமாகவேனு

பாகிஸ்தான் செய்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது

படம்
scroll.in புல்வாமாவில் 43 இந்திய ராணுவ வீரர்கள் தற்கொலைத் தாக்குதலில் பலியாகியுள்ளனர். இதற்கு நாடெங்கும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி முன்னாள் வீரர் லியோடெனன்ட் ஜெனரல் டிஎஎஸ் ஹூடா கூறுகிறார். ஐஎஸ் தீவிரவாதக்குழு காஷ்மீரில் வளர்ந்து வருகிறதா? நான் அப்படி யோசிக்கவில்லை. அவர்களிடம் அவ்வளவு வலுவான கட்டமைப்பு கிடையாது. தாக்குதலுக்கு ஜெய்ஸ் இ முகமது, லஷ்கர் இ தாலிபா, ஹிஸ்புல் முஜாகிதின் ஆகிய அமைப்புகளே காரணம். ஐஎஸ் அல்லது அல் கொய்தா தீவிரவாத அமைப்புகள் இத்தாக்குதலில் இருக்கும் என்று என்னால் நினைக்க முடியவில்லை. கடந்த ஆண்டு காஷ்மீரில் வளர்ந்து வரும் பிரச்னைகளைப் பற்றி எழுதியிருந்தீர்கள். அதனைக் கொஞ்சம் விளக்குங்களேன். நீங்கள் இன்னும் காஷ்மீர் பிரச்னையில் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது. கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாத இயக்கங்களில் இளைஞர்கள் சேரும் அளவு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மட்டுமல்ல, கடந்த ஆண்டும் அதிகளவிலான பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இதை இந்தியா இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில