இடுகைகள்

பயன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தாவரத்தில் இருந்து பெறும் ஆபத்தான நஞ்சு எது?

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி தாவரத்தில் இருந்து பெறும் ஆபத்தான நஞ்சு எது? கானியம் மெக்குலாடம் என்ற தாவரமே நஞ்சு என்ற வகையில் ஆபத்தானது. தென் அமெரிக்காவில் உள்ள லானா மரம், நஞ்சில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பழங்குடிகள் இதன் நஞ்சை, தங்களின் அம்புகளில் பயன்படுத்துகிறார்கள். தாவரங்கள், மரம், செடிகள் எதனால் முக்கியத்துவம் பெறுகின்றன? காகிதம், ஜவுளி, கட்டுமானம், உணவு ஆகியவற்றுக்கு மூலப்பொருட்களை மரங்களே தருகின்றன. சாக்லெட்டுகளை உருவாக்க கோக்கோ விதைகள் தேவை. குறிப்பாக தியாபுரோமா காகோவ் என்ற மர இனம் தேவைப்படுகிறது. ஃபாக்ஸ் குளோவ் என்ற தாவரத்தில் இருந்து இதய செயலிழப்புக்கான மருந்து பெறப்படுகிறது. காமெலியா சினென்சிஸ் என்பதை அறிவீர்களா, அதுதான் தினந்தோறும் பருகும் தேநீரில் பயன்படுத்தும் தேயிலை. மரக்கன்று இனப்பெருக்கத்தில் மாற்றத்தை உருவாக்கியவர் யார்? லூதர் பர்பேங்க் என்பவர், மரக்கன்றுகளை வீரியம் மிக்கதாக கலப்பு முறையில் உருவாக்கினார். பல்வேறு காய்கறி செடிகளை பார்த்து அடையாளம் கண்டு அதை கலப்பு முறைக்கு ஏற்றதாக மாற்றினார். இந்த வகையில் உருளைக்கிழங்கு, பிளம் ஆகிய செடிகள் உள்ளடங்கும்....

உலகமயமாக்கலின் பிரச்னைகள், பயன்கள்!

படம்
      பாயும் பொருளாதாரம் உலகமயமாக்கலின் பிரச்னைகள், பயன்கள்! இந்தியாவில் அறிவிக்கப்பட்ட நிதி அறிக்கையில் வருமானம் இருந்தால் பனிரெண்டு லட்சம் வரையில் சம்பாதிப்பவர்களுக்கு வரி சலுகை வழங்கப்பட்டுள்ளது. கேட்க நன்றாக இருப்பதெல்லாம் நடைமுறையில் பெரிய பயனைத் தருவதில்லை. உலகமயமாக்கம் பற்றி நிறைய நூல்கள் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக ஆக்ஸ்போர்ட் பதிப்பகத்தின் நூல்களை படித்து முழுமையாக புரிந்துகொள்ளலாம். நாம் இங்கு அதைப்பற்றி சுருக்கமாக குறிப்பிடுகிறோம். உலகமயம் என்பது அனைத்து நாடுகளையும் இணைத்து செய்யும் பெரிய வணிக சங்கிலி என்றுகூறலாம். உலகமயத்திற்கு பெரிய பயன்பாடாக கன்டெய்னர் அமைந்தது. நிலம், நீர் என இரண்டிலும் கன்டெய்னர்களை கொண்டு செல்ல முடியும். கப்பல் மூலம் கன்டெய்னர்களை கடலில் கொண்டு செல்கிறார்கள். நிலத்தில் வாகனங்கள், ரயில் மூலம் கன்டெய்னர்களைக் கொண்டு செல்லலாம். இந்த வகையில்தான் 1954ஆம் ஆண்டு 57 பில்லியன் டாலர்களாக இருந்த கன்டெய்னர் வணிகம், 2018ஆம் ஆண்டில் 18 டிரில்லியன் டாலர்களைக் கடந்துவிட்டது. இதில் வணிகம் சார்ந்த ஆதரவு தொழில்நுட்பமாக இணையம், மின்னஞ்சல், குறுஞ்செய்தி ஆப்கள்...

தலையில் எத்தனை மயிர்க்கற்றைகள் உள்ளன?

படம்
      தலையில் எத்தனை மயிர்க்கற்றைகள் உள்ளன? 10 ஆயிரம் மயிர்க்கற்றைகள். குரங்குகளுக்கு உடல் முழுக்க உரோமங்கள் உண்டு. இப்படி இருப்பது தோலுக்கு பாதுகாப்பு. வெப்பம், குளிர் ஆகிய பருவகால மாறுதல்களையும் எதிர்கொள்ள உதவியது. பரிணாம வளர்ச்சிப்படி, மனிதர்கள் ஆதிகாலத்தில் உடல் முழுக்க முடிகளைக் கொண்டிருந்தாலும் அதற்கான தேவை குறைந்துவிட்டது. வெற்று உடலாக இருந்தால் முடி தேவை. உடைகளை உடுத்தியபோது உடலிலுள்ள உரோமங்கள் மெல்ல குறையத் தொடங்கின. பிறகு அவை காலப்போக்கில் உருவாகவில்லை. உருவான உரோமங்கள் கூட குறிப்பிட்ட நீளத்தில் வளர்ச்சி நின்றுவிட்டது. ஆனால் தலைமுடி அப்படியில்லை. தலைமுடி என்பது இறந்த செல் போன்றது. அது வளருகிறது என ஷாம்பூ விற்பவர்கள் நடிகைகளை பேன் காற்றில் முடியை பறக்கவிட்டு விளம்பரம் எடுப்பார்கள். அது உடான்ஸ். உண்மையல்ல. பொய்களை திரும்ப திரும்ப சொல்லும்போது நூறில் பத்து பேராவது நம்புவார்கள். ஆனால், இப்படியான பொய்களை இ்ந்தியா போன்ற மூடநம்பிக்கை கொண்ட பகுத்தறிவு குறைந்த சமூகத்தில் நூற்றுக்கு தொண்ணூறு பேர்களும் நம்புவதுதான் வேதனை. அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. முடி வளருவது அழகு என்று ...

சாட் ஜிபிடி மூலம் பாடம் கற்கலாமா கூடாதா?

படம்
 சாட் ஜிபிடி மூலம் பாடம் கற்கலாமா கூடாதா? கணினி, இணையம் ஆகிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நம் வாழ்க்கையில் நுழைந்தபோது நிறைய மாற்றங்கள் நடந்தன. வேலையிழப்பு, பழைய தொழில்கள் அழிவு இதெல்லாம் நடந்தது. பழையன கழிதல் புதிது கிடையாது. இப்போது அந்த இடத்தை ஓப்பன் ஏஐயின் சாட்ஜிபிடி பிடித்திருக்கிறது.  கலிபோர்னியாவில் உள்ள சமூக அறிவியல் ஆசிரியர், பீட்டர் பேக்கன், வகுப்பறையில் சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி பாடங்களை நேர்த்தியாக நடத்தி வருகிறார். அதை அனுகூலமான வகையில் பயன்படுத்துவதோடு, அதைப்பற்றி ஜூம் மீட்டிங் கூட ஏற்பாடு செய்து பேசியுள்ளார். அனைத்து பாடங்களையும் ஆசிரியரே நடத்தாமல், சில எளிய விஷயங்களை சாட்ஜிபிடியிடம் ஒப்படைத்துவிடலாம் என்பது அவரது கருத்து. பாடங்களை முற்று முழுதாக ஆசிரியர் கற்றுத்தருவது அழுத்தங்கள் நிறைந்த பாடத்திட்டத்தில் இயலாத ஒன்று. அதை சாட்ஜிபிடி மூலம் சாத்தியப்படுத்திக்கொள்கிறார் பீட்டர்.  தான் நடத்திய ஜூம் சந்திப்பில் கல்வியில் சாட்ஜிபிடி ஏற்படுத்தும் சாத்தியம், அதை எப்படி பயன்படுத்துவது என நாற்பது சக ஆசிரியர்களிடம் விவாதித்திருக்கிறார் பீட்டர். மருத்துவம் தொடங்கி ராணுவ...

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் மக்களின் அனுபவம்தான் முக்கியம் - சாம் ஆல்ட்மேன்

படம்
  சாம் ஆல்ட்மேன், ஓப்பன் ஏஐயின் இயக்குநர். இவர் தலைமையிலான குழுதான் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சாட்ஜிபிடி எனும் செயற்கை நுண்ணறிவு மாடலை வெளியிட்டது. ஓப்பன் ஏஐ தொடங்கி ஆறு ஆண்டுகள்தான் ஆகிறது. பணியாளர்கள் 500பேர். இவர்கள் செய்துள்ள பணி இணையத்தையே இன்று மாற்றிவிட்டது.  தமிழில் வரும் நாளிதழ்கள் கூட சாட்ஜிபிடி மாடலை தனது நிருபர்களுக்கு வழங்கி அதைப் பயன்படுத்தி கட்டுரைகளை எழுதுங்கள் என ஊக்கப்படுத்தி வருகின்றன. அந்தளவுக்கு ஜோக் முதல் பாட்டு, ரெஸ்யூம், பள்ளி மாணவனுக்கான கட்டுரை என அனைத்தையும் எழுதி வருகிறது சாட்ஜிபிடி. கேள்விகளை சரியாக கேட்க தெரிந்தால் உங்களுக்கு பதிலும் சிறப்பாக தெளிவாக துல்லியமாக கிடைக்கும்.  சாம் ஆல்ட்மனிடம் பேசினோம்.  சாட்ஜிபிடியை நீங்கள் எதற்கு பயன்படுத்துகிறீர்கள்? எனது மின்னஞ்சலில் உள்ள அறிமுகமில்லாதவர்கள் அனுப்பும் கடிதங்களை எடுத்து குறிப்புகளாக்கி பார்ப்பேன். முக்கியமானவர்களின் மின்னஞ்சலை தனியாக எடுத்து வைப்பேன். அடுத்து, சந்திக்கவிருக்கும் நபர்கள் பற்றிய தகவல்களை மொழிபெயர்த்து வைத்து படிப்பேன். பிறகு அதன் வழியே சந்திப்புக்கு தயாராவேன். இப்போதைக்க...

அறிவுசார்ந்த ஜனநாயகத்தன்மையை அளிக்கும் இணையம்- சர்வன்ட்ஸ் ஆஃப் நாலேஜ் திட்டம் - இன்டர்நெட் ஆர்ச்சீவ்

படம்
  அரசு பொது நூலகங்களுக்கு உள்ளே சென்று படிப்பது என்பது கடினமான செயலாகிவிட்டது. இன்று அப்படி செல்பவர்கள் அரசு தேர்வுகளுக்கு படிப்பவர்களாக மட்டுமே இருக்கிறார்கள். பொதுவான அறிவுத்தேடலுக்காக செல்பவர்களுக்கு அங்கு இருக்கைகள் கூட இருப்பதில்லை. எல்லாவற்றையும் நாளைய ஊழல்வாதிகளாக உருவாகவிருக்கும் அரசு அதிகாரிகளே நிரப்பியிருக்கிறார்கள். அதையும் மீறி சென்று ஆங்கில வார இதழ்களை படித்தால் நீ யார், அப்பா என்ன செய்கிறார் என்று கேள்வி கேட்கிற  நூலகர்களே கிராமப்புறங்களில் அதிகம். ஆனால் இணையத்தில் இந்த பாகுபாடுகள், வேறுபாடுகள் கிடையாது. அமைதியாக நூல்களை தேடிப்பார்த்து தரவிறக்கிக் கொள்ளலாம். அதிலும் இன்டர்நெட் ஆர்ச்சீவ் வந்தபிறகு நிலைமை மாறிவிட்டது. அதில் ஏராளமான அரிய நூல்கள், வார இதழ்கள், கட்டுரைகள் பதிவேற்றப்பட்டு வருகின்றன. இதை நூலகரிடம் சாதி சொல்லாமல் எளிதாக இணையத்தில் இருந்து எடுத்து பயன்படுத்திக்கொள்ள முடியும். இன்டர்நெட் ஆர்ச்சீவ் தளத்திற்கு எதிராக நூல் பதிப்பாளர்கள் வன்மம் கொண்டு வழக்குகளை தொடுத்து வருகிறார்கள்.  பெங்களூருவில் உள்ள காந்தி பவனில் உள்ள காந்தி பற்றிய நூல்களை ஸ்கேன் செய்...

பொருட்களின் தேவை அதிகரிப்பதால் ஏற்படும் விளைவுகள் - ஜே கிருஷ்ணமூர்த்தி - கேள்வி பதில்கள்

படம்
  அகம்புறம் ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள் கே. அன்பு அதன் தன்மையில் எத்தகையது? ப. அன்பு என்பது என்ன? அன்புக்கு உள்நோக்கம், அதன் பயன்கள் இல்லாமல் என்ன என்று கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். கவனமாக கேளுங்கள். அதிலிருந்து பதிலைப் பெறலாம். நாம் கேள்வியை ஆராயப் போகிறோம். பதிலைக் கண்டுபிடிக்க போவதில்லை. கணிதம் சார்ந்த கேள்வியை ஒருவருக்கு கொடுத்தால் அவர் உடனே பதிலைக் கண்டுபிடிக்க முயல்வார். கேள்வியை சரியாக புரிந்துகொள்வதே முக்கியம். அதன் போக்கில் நாம் பதிலைப் பெறலாம். பகவத் கீதை, திருக்குரான், பைபிள் அல்லது பேராசிரியர் என எதிலும் உங்களுக்கு விடை கிடைக்காது. கேள்வியைப் புரிந்துகொள்வதே அடிப்படையானது. அதில்தான் பதில் அடங்கியுள்ளது. அது பிரச்னையிலிருந்து வெளியே இல்லை.   இப்போது பிரச்னையைப் பார்ப்போம். அன்பு செலுத்துகிறீர்கள். ஆனால் அதற்கு எந்த நோக்கமும் இல்லை. அன்பு செலுத்தி அதற்கு பதிலாக அன்பையோ வேறு பயன்களையோ எதிர்பார்க்காமல் இருக்க முடியுமா? தான் கொடுத்த அன்பு திரும்ப கிடைக்கவில்லை என ஒருவர் காயம்படுகிறார். இப்போது நான் உங்களை நண்பராக ஏற்றுக்கொள்ள நினைத்து அழைப்பு விடுக்கி...

இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் திட்டங்கள், அதன் பயன்கள்!

படம்
  மத்திய அரசு டிஜிட்டல் முறையில் பல்வேறு திட்டங்களை உருவாக்கி அதன் வழியாக செயல்படத்தொடங்கியிருக்கிறது. அரசு சேவைகள் பலவும் இன்று இணையம் வழியாக கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன. அவை தொடர்பான புள்ளிவிவர டேட்டா ஒன்றைப் பார்ப்போம்.  மொத்தமுள்ள 130 கோடி மக்களில் ஆதார் கார்டு பெற்ற மக்களின் எண்ணிக்கை  123 கோடி இணையம் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை  56 கோடி  ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை  44.6 கோடி  புதிய தொழில்நுட்ப திறன்களைப் பெற்றுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை  2,80,000 2021ஆம் ஆண்டு பல்வேறு டிஜிட்டல் சேவைகளை வழங்கிய வகையில் கிடைத்த வருமானம் 5 மடங்கு அதிகம். வளர்ச்சி வேகம் 28-30 சதவீதம்.  இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் ஐ.டி, பிபிஓ பகுதி ஊழியர்களின் பங்கு 8 சதவீதம் 2019 - 2021 ஆம் ஆண்டு டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ள அளவு 37 சதவீதம் தற்போதைய நிதித்துறை மதிப்பு 31 பில்லியன். 2025ஆம் ஆண்டு நிதித்துறை வளரும் என மதிப்பிடப்பட்டுள்ள அளவு 150 பில்லியன். அடுத்த ஆண்டு உயரவிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள மதிப்பு 138...

பிரேசில் நேரடி பணப்பரிமாற்ற திட்டத்தில் இந்தியா கற்கவேண்டியது என்ன?

படம்
                நேரடி பணப்பரிமாற்றத்தில் இந்தியா கற்கவேண்டியவை ! இந்திய அரசு கடந்த ஆகஸ்ட் முதல் 52 அமைச்சகங்களை ஒன்றாக இணைத்து , 384 நலத்திட்டங்களை மக்களுக்கு சென்றுசேர்வதற்கான முயற்சிகளை செய்து வந்த்து . நேரடி வங்கிக்கணக்கு பரிமாற்றம் மூலம் நலத்திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்திவருகிறது . பிரதான் மந்திரி காரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டம் மக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்குவதோடு வறுமை ஒழிப்பு மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை வளர்க்கவும் உதவுகிறது . நீண்டகால நோக்கில் இதனை விரிவுபடுத்தி , குறைகளைக் களைந்தால் மட்டுமே நலத்திட்ட உதவிகள் அனைத்து தரப்பு மக்களிடமும் சென்றுசேரும் . இந்திய அரசின் சிந்தனைகள் சரியாக இருந்தாலும் அனைத்து திட்டங்களிலும் ஒருங்கிணைப்பு முறையாக இல்லாததால் மகாத்மா காந்தி கிராம வேலைவாய்ப்பு திட்டம் , பிரதான் மந்திரி மாட்ரி வந்தனா யோஜனா ஆகிய திட்டங்களில் ஆயிரக்கணக்கான பயனர்கள் தங்களுக்கான பயன்களைப் பெற முடியவில்லை . 2015 ஆம் ஆண்டு டில்லியில் நிதி அமைச்சகம் ஒருங்கிணைத்த பொருளாதார மாநாட்டில் , ஜன்தன் ஆதார் திட்...