இடுகைகள்

நோய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆண்டவன் அளிப்பதல்ல; நாம் வாழும் மோசமான சூழலால் உருவாவதே நோய்!

படம்
  கிருமிகளின் ஆக்கிரமிப்பு உடலுக்குள் எப்போதும் நுண்ணுயிரிகள் உண்டு. இவற்றில் முக்கியமானது வைரஸ், பாக்டீரியா. இதில் வைரஸ் ஆபத்தானது. பாக்டீரியாவும் நோய்களை ஏற்படுத்துகிறது. ஆனால், வைரஸ் அளவுக்கு அல்ல.  உடல் நுண்ணுயிரிகளை எப்போதும் வெளியேற்றவே முனைகிறது. ஆனால், வைரஸ், பாக்டீரியா எப்படியேனும் உள்ளே வந்துவிடுகிறது.  உடலுக்கு நோய்க்கிருமி பற்றி பழக்கி, நோயைத் தடுக்க தடுப்பூசிகள் பயன்படுகின்றன. தடுப்பூசிகள் பல்லாண்டு காலம் பயன்படுத்தப்பட்டு நோய் அறிகுறிகள், மருந்தின் செயல்பாடு ஆகியவை குறித்து வைக்கப்பட்டு பக்க விளைவுகளைக் கட்டுப்படுத்த கற்கிறார்கள். ஆனால் அவசரச் சூழலில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள், அதைப் பயன்படுத்துபவர்களுககும் ஆபத்தாக மாறுகிறது.  சில போலி அறிவியல்வாதிகள் அரசியல் ஆதாயங்களுக்காக தடுப்பூசி போட்டுக்கொள்ள தேவையில்லை என்பார்கள். தடுப்பூசியின் தொடக்க காலத்தில் பக்கவிளைவுகளை பெரிதுபடுத்தி பேசுவார்கள். இப்போது கூட தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு அரசு செலுத்திய தடுப்பூசி காரணமாக பலருக்கும் நீரிழிவுநோய் வந்துவிட்டது என வதந்தி பரவி வருகிறது. ஆனால், அது உண்மையல்ல. நீங்கள...

என் ரத்தத்தின் ரத்தமே! தமிழே உயிர்மூச்சே!

படம்
 என் ரத்தத்தின் ரத்தமே! தமிழே உயிர்மூச்சே! இது அதிமுக பற்றிய கட்டுரையல்ல. நமது உடலில் ஓடும் ரத்தம் பற்றியது. ரத்தம் என்றால் என்ன? ரத்தம் சிவப்பு நிறத்தில் இருக்கும். அதற்கு காரணம், அதிலுள்ள சிவப்பு அணுக்கள் என பள்ளிகளில் படித்தறிந்திருப்போம். கூடவே, அதில் பிளாஸ்மா, வெள்ளை அணுக்கள், பிளாடேட்ஸ் ஆகியவை இருக்கும்.  உடலிலுள்ள ரத்தத்தை இதயம் பல்வேறு உறுப்புகளுக்கு பிரித்து அனுப்புகிறது. ஊரில் குடிநீரை நீருந்து நிலையம் வைத்து விநியோகம் செய்கிறார்களே அதுபோல... சிவப்பு அணுக்கள், ரத்தத்தை மட்டுமல்ல, அதனோடு உயிர்க்காற்றையும் (ஆக்சிஜனையும்) உடன் கொண்டு செல்கிறது. சிவப்பு அணுக்கள் ரத்தத்தில் உள்ள அளவு 44 சதவீதம். ஒருவரின் உடலில் காயமானால் அங்கு ரத்தம் தடைபடுகிறது. காயமான இடத்தில் ரத்தம் கூழ் போல மாறுகிறது. இதை பிளாடேட்ஸ் செய்வதால் ரத்தப்போக்கு நிற்கிறது. ரத்தம் உறைந்து போதல் என்று இதைக் குறிப்பிடலாம். இதில் ஃபிப்ரின் என்ற புரதத்தின் பங்கும் உள்ளது.  பிளாஸ்மா என்று மேலே குறிப்பிட்டோம் அல்லவா? அதை ரத்தத்தில் இருந்து பிரித்தெடுத்தால் மெல்லிய மஞ்சள் நிறம் கொண்ட நீர் போல இருக்கும்.  இ...

அழையாத விருந்தாளி! - ஒரு பக்க கதை

கேசவன், பிரமாண்டமான தனியார் மருத்துவமனைக்குள் நுழைந்தான். அறைக் கதவைத் தட்டியதும், கம் இன் என்ற கம்பீரக்குரல் கேட்டது. மருத்துவர் ஜீவா என பெயர் பலகை கூற, நெற்றியில் சுருக்கங்களோடு வெள்ளை உடை அணிந்த மனிதர் அமர்ந்திருந்தார். ''நீங்க, கேசவன்தானே?, ஐம் ரைட். உங்களுக்கு கை கால்ல இருக்கிற விறைப்புத் தன்மை, வலி, வீக்கம் பத்தி டெஸ்ட் பண்ணோம். முடிவு, ஒரே நோயைத்தான் குறிக்குது'’ ''என்ன நோய்ங்க சார்?’’ ''சுருக்கமா ஆர்ஏ. முடக்குவாதம். துரதிர்ஷ்டவசமா இதைக் குணப்படுத்த முடியாது. ஆனா, நோயோட தீவிரத்தைக் குறைக்க மருந்து இருக்கு. இது, மரபணு ரீதியாக வர்ற நோய்’’. அதிர்ந்த கேசவன், தழுதழுத்த குரலில் ''இந்த நோய், என்னோட குழந்தைக்கும் வருமா?’’ ''வாய்ப்பு இருக்கு. குழந்தைக்கும் உங்கள மாதிரியே 30 வயசுக்கும் மேல வரலாம். ட்ரீட்மென்டை எப்ப தொடங்கலாம்னு சொல்லுங்க’’, என்று தோளில் தட்டிக்கொடுத்துவிட்டு மருத்துவர்,மற்றொரு நோயாளியைப் பார்க்க விடைபெற்று சென்றார். மனைவி பூங்கொடிக்கு கருப்பை நீர்க்கட்டி காரணமாக கரு தங்கவில்லையே என்ற மனக்குறை மறைந்து நிம்மதியும் பரவ, தளர்வாக பை...

இயற்கை நோயைத் தீர்க்குமா, குணப்படுத்துமா?

படம்
  இயற்கை நோயைத் தீர்க்குமா, குணப்படுத்துமா? தூக்கத்திற்கு நேரம் முக்கியம் சூரியன் காலையில் எழுந்து மாலை மறைகிறது அல்லவா, அதே முறையில் தூக்கம் அமையவேண்டும். அதுபோல உங்கள் வேலை நேரத்தை திட்டமிட்டுக்கொள்ளவேண்டும்.  காலையில் எழுந்து சூரிய ஒளி மேலே படும்படி உலாவ வேண்டும். உணவு உண்டபிறகு சிறிது நேரம் நடக்கலாம். நாய் இருக்கிறதா, அதை அழைத்துக்கொண்டு வெளியே உலாவச் செல்லலாம்.  ஒருநாளுக்கு இருபது நிமிடங்களேனும் பசுமையான நிலப்பரப்பை பார்க்கவேண்டும். மரத்தில் அடியில் உட்கார்ந்து உணவை உண்ண முயலலாம்.  முட்கள் இல்லாத புற்கள் உள்ள இடத்தில் செருப்பை அணியாமல் வெற்று கால்களோடு சிறிது நடக்கலாம். அசுத்தமான இடங்களில் காலணி இன்றி நடப்பது நோய்களைக் கொண்டு வரும் என்பதை மறக்காதீர்கள்.  வெளியே மனதை நெகிழ்வாக வைத்துக்கொள்ளும் சமயங்களில் போன், வாட்ச் ஆகியவற்றை வீட்டிலேயே வைத்துவிடவேண்டும். அப்போதுதான் மேகத்தை, பறவைகளைப் பார்க்க முடியும். வீசும் குளிர்ந்த தென்றலின் இனிமையை உடலும் மனதும் உணரும்.  தோட்டத்தை பராமரிக்க முயலலாம். உங்களுக்கு சொந்தமாக நிலம் இருந்தால், அதில் பூக்கள், காய்கறிகளை...

நீண்டகால நோய்களுக்கு தீர்வு!

படம்
    மருந்து = நஞ்சு ஓமியோபதி மருத்துவமுறை ஓமியோபதியின் மருந்து வீரியமுறை சற்று சிக்கலானது. இதில் இடம்பெறும் மூலிகைகள் அனைத்தும் பச்சையாக இருக்கும்போது அரைத்து சாறு எடுக்கப்பட்டு அதை சர்க்கரை அல்லது சாராயத்தில் கலக்கிறார்கள். ஓமியோபதி மருந்துகள் பலவும் சர்க்கரை அல்லது சாராயத்தில் கரைக்கப்பட்டவையாகவே இருக்கும். சில மருந்துகளை கொடுக்கும்போது சாராயத்தில் நனைத்துக் கொடுப்பார்கள். மருந்தை வீரியமாக்கவே இந்த முயற்சி. சர்க்கரை, சாராயம் என இரண்டுமே மருந்துகள் வீரியமிழப்பதை கட்டுப்படுத்துகின்றன. பெரும்பாலான மூலிகைகள் பச்சையாக இருக்கும்போது சாறு எடுக்கப்படுவதற்கு, காரணம் அதில்தான் சாரம் இருக்கும். வலிமை இருக்கும் என்பதே. காய்ந்த மூலிகையில் வலிமை கிடையாது. அது பொடியாக இருந்தாலும் அல்லது வேறு வகையாக இருந்தாலும் சரி. மருந்துகளை நீர்த்துப்போன வடிவமாக்கி தாய் திராவகம் தயாரிக்கிறார்கள். சாராயத்தில் உள்ள மூலிகைச் சாறின் அளவு நீர்த்துப்போன அளவு கூடும்போது குறையும். 0 எனும்போது உள்ள மூலிகைச்சாறு மூலக்கூறு அளவு, 30சி, 200சி எனும்போது இருக்காது. இப்படி இருக்கும்போது கொடுக்கப்படும் மருந்து நோயைத் தீர...

ஓமியோபதி மருத்துவ முறையை உருவாக்கியவரான சாமுவேல் ஹானிமன் வரலாறு!

படம்
      மருந்து = நஞ்சு ஓமியோபதி மருத்துவமுறை 1755ஆம் ஆண்டு, ஓமியோபதியை உருவாக்கியவரான சாமுவேல் ஹானிமன் பிறந்தார். பிறந்த தேதி ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி. இவரது தந்தை பீங்கானில் பல்வேறு ஓவியங்களை தீட்டும் திறமை கொண்ட கலைஞர். புனித ஆஃப்ரா என்ற பள்ளியில் செவ்வியல், நவீன மொழிகளைக் கற்றார். ஆங்கில மருத்துவமுறையை உருவாக்கியவரான ஹிப்போகிரேடஸின் மருத்துவ விளக்க நூல்களை படித்தார். அவரின் மருத்துவ தத்துவத்தை வைத்தே ஓமியோபதியின் மருத்துவத்தை உருவாக்கினார். ஒத்தது ஒத்ததை குணமாக்கும் என்பதே கொள்கை, ஒத்தது அல்லது எதிரானது நோயைத் தீர்க்கும் என ஹிப்போகிரேடஸ் கூறினார். 1775ஆம் ஆண்டு சாமுவேல், மருத்துவப் படிப்பை படிக்கத் தொடங்கினார். அவருக்கு வியன்னாவைச் சேர்ந்த மருத்துவர் பிளென்சிஸ் ஆதர்சமாக இருந்தார். அந்த காலத்தில் பிளென்சிஸ், மருத்துவத்தில் பல்வேறு சாதனைகளை செய்தவர். 1779ஆம் ஆண்டு ஆகஸ்ட் பத்தாம்தேதி, சாமுவேல் மருத்துவப்பட்டம் வென்றார். எர்லாங்கன் பல்கலைக்கழகம் அவருக்கு பட்டத்தை வழங்கியது. 1781ஆம் ஆண்டு சாமுவேல் மாவட்ட மருத்துவ அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். ஹென்ரிட் என்ற பெண்ணை திருமணம...

ஓமியோபதி நோயைத் தீர்க்கும் முறையை நோயாளி அறிந்துகொள்வது அவசியம்!

படம்
  மருந்து = நஞ்சு ஓமியோபதி மருத்துவமுறை ஓமியோபதி ஒருவரின் நோயை தீர்ப்பது தீர்க்கவில்லை என்பது வேறுவகையான விவாதமாக வைத்துக்கொள்ளலாம். ஆனால், நோயை தீர்க்க செய்யும் செயல்முறை, நோயை விட கடினமான இயல்புடையது. ஒருவருக்கு வலிப்பு இருக்கிறது என்றால் ஓமியோபதியில் கொடுக்கும் மருந்து, வலிப்பை பல மடங்காக உருவாக்கி பிறகே குறைக்கும். அதுவரை நோயாளி வலியை தாங்கிக்கொண்டிருந்தால் அவருக்கு நோய் குணமாகலாம். மாரடைப்பு, தலைசுற்றல், உடல் எடை குறைப்பு என பல நோய்களும் இதே திசையில் இதே வழிமுறையில் குணமாக்கப்படுகிறது. உடலில் இயற்கையாக உருவாகியுள்ள நோயைத் தீர்க்க அதேபோன்ற ஆனால் சற்று வீரியமான நோயை செயற்கையாக உருவாக்குவதே ஓமியோபதி தத்துவம். ஒருவரின் நோய் அறிகுறிகளைப் பார்த்து அதற்கேற்ப, வீரியமான மருந்துகளைக் கொடுத்து நோயை உருவாக்குகிறார்கள். நோயை உருவாக்கினாலும் உடலில் வேறு ஏதாவது இடர்ப்பான அறிகுறிகள் தோன்றினால் அதை கவனித்து மருத்துவரிடம் தெரிவிக்கவேண்டும். உண்மையில் அக்கறையான நேர்மையான ஓமியோபதி மருத்துவர் உங்களுக்கு கிடைத்தால், விபரீதமாக ஏற்பட்ட அறிகுறிகளைப் பற்றி கூறி, அதை தீர்க்க உதவிசெய்வார். தனியாக மருத்த...

ஓமியோபதி மருந்துகளால் உருவாக்கப்படும் செயற்கையான வியாதி!

      மருந்து = நஞ்சு ஓமியோபதி ஓமியோபதி மருந்துகளை தோல் நோய்க்கு சாப்பிடும்போது, வெளியில் தடவுவதற்கு கொடுக்கும் மருந்து பொதுவாக சூழல்களால் ஏற்படும் எரிச்சலை, அரிப்பை தடுக்க மட்டுமே. மற்றபடி உள்ளுக்குள் கொடுக்கும் தாய் திராவகம், இனிப்பு உருண்டை மருந்துகள், சப்பி சாப்பிடும் இனிப்பு மாத்திரைகள் மட்டுமே நோயைத் தீர்க்கும். தொடக்கத்தில் ஓமியோபதிக்கு கொடுத்த மருந்துகள், இருக்கும் நோயை அதிகப்படுத்தின. காளான்படை என வைத்துக்கொள்வோம். இந்த ஒவ்வாமை நோய்க்கான உணவு பிரச்னையை நான் முன்னமே குறிப்பிட்டிருக்கிறேன். சித்த மருந்துகளை சாப்பிட்டபோது, உள்ளுக்கும் மருந்துகளை சாப்பிடவேண்டும். வெளியிலும் நெய் மருந்துகளை பூசவேண்டும். பூசி வைத்து ஒரு மணிநேரம் அல்லது அரைமணிநேரம் வைத்து கழுவ வேண்டும். தலைமுதல் பாதம் வரை எனக்கு கொப்புளங்கள் வெடித்து அதில் சீழும் ரத்தமும் வந்தது. மருந்துகள் விலை அதிகம், தங்கியிருந்த வீட்டில் குளிக்க, குடிக்க நீர் பிரச்னை என்றாலும் கூட வேறுவழியில்லை என்பதால், சித்த மருத்துவத்தை கடைபிடிக்க நேரிட்டது. சென்னையில், வழக்குரைஞர் தொடங்கிய ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனைய...

செயற்கையாக நோயை உருவாக்கி, இயற்கை நோயை விரட்டலாம்!

படம்
      மருந்து = நஞ்சு ஓமியோபதி மருத்துவ முறை வெறுமனே ஹோமியோபதி மருந்துகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன, அதன் மூலம் என்று படித்தால் அதில் எந்த அர்த்தமும் கிடையாது. வலைப்பூவில் ஓமியோபதி பற்றி எழுதப்படுவதற்கு முக்கியக் காரணம், அம்முறை வட இந்தியாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் பரவலாகி வருகிறது. மருத்துவர்கள் எளிதாக கிடைப்பது, மருந்துகள் விலை குறைவு என அரசு தரப்பில் நிறைய காரணங்கள் இருக்கலாம். அடிப்படையில் அரசு ஆங்கில மருத்துவமுறைக்கு மாற்றாக சித்தா, ஓமியோபதி, யுனானி, ஆயுர்வேதம் ஆகிய மருத்துவமுறைகளை பின்பற்றுவது நல்லது. இன்று மக்களுக்கு வரும் நோய்கள் அந்தளவு தீவிரமாக மாறிவிட்டன. கூட்டு மருத்துவ சிகிச்சையே இனி பயனளிக்க கூடியது. இப்போதைக்கு ஓமியோபதி பற்றிய தெளிவை பெறுவோம். ஓமியோபதி பற்றிய தகவல்களை ஆங்கிலம், தமிழ் நூல்களிலிருந்தும், என்னுடைய சொந்த அனுபவங்களிலிருந்தும் கூறுகிறேனே ஒழிய, நான் பட்டம் பெற்ற மருத்துவன் அல்ல. மருத்துவர்களுக்கு உதவியாளனும் அல்ல. உங்களுக்கு ஓமியோபதியில் சந்தேகம் வந்தால், மருத்துவரை அணுகலாம். நூல்கள் தேவை என்றால் தமிழக அரசின் மின்னூலகத்தை அணுகலாம். நூலகத்தில...

வழிபாட்டு உணர்வுக்கு பலியாகும் உண்மைகள்!

படம்
       வழிபாட்டு உணர்வுக்கு பலியாகும் உண்மைகள் அண்மையில் ஜெர்மனியைச் சேர்ந்த அரசு டிவி சேனலின் தமிழ்ப்பிரிவு, ஒரு வீடியோவில் மருத்துவமுறை பற்றி விவாதித்திருந்தது. ஹோமியோபதி, பற்றிய வீடியோதான் அது. அதில் கூறப்பட்ட விஷயங்கள் அனைத்துமே விவாதத்திற்கானவை. அவற்றை முற்றாக நம்ப அல்லது மறுக்க முடியாது. அந்த செய்தி வீடியோவில், ஹோமியோபதி அறிவியல் நிரூபணம் கொண்ட மருத்துவமுறை அல்ல. மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகள் நோயாளிக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக மாரடைப்பு என்பது போன்ற செய்திகளை ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதற்கான கமெண்டுகளில், செய்தியை ஏற்கிறோம், மறுக்கிறோம், விவாதிப்போம் என்றெல்லாம் எந்த பதிவுகளும் இல்லை. அலோபதியைப் பற்றி வீடியோ போடுங்கள்.ஏன் இந்த மருத்துவமுறையைப் பற்றி போடவில்லை என கேள்வி எழுப்பப்படுகிறது. இன்னும் சிலர், ஹோமியோபதி எங்களுக்கு பலன் கொடுத்து நோய் தீர்ந்தது. அதைப் பற்றி இப்படியொரு வீடியோ போட்டால் எப்படி என வம்புக்கு வந்தார்கள். மேற்கு நாடுகளில் மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்தாலும் கூட பிரதமரை அமைச்சர்களை அரசு ஊடகம் கேள...

அரிய நோய்களுக்கான மருந்துகள்!

படம்
    அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி ஆர்பன் ட்ரக் என்றால் என்ன? மக்கள்தொகையில் குறைவான எண்ணிக்கை கொண்டவர்களை தாக்கும் நோய்களுக்கான மருந்துகளை ஆர்பன் ட்ரக் என்று கூறுகிறார்கள். இந்த மருந்துகள் அதிக லாபத்தை மருந்து கம்பெனிகளுக்கு கொடுப்பதில்லை. ஆனால், அரிய நோய்களுக்கு மருந்துகள் அவசியம் தேவை. எனவே, அமெரிக்க அரசு ஆர்பன் ட்ரக் ஆக்ட் 1983 என தனிச்சட்டம் போட்டு மருந்து நிறுவனங்களுக்கு நிதி உதவியை அளிக்கிறது. மருந்துகளை தயாரிக்க வைத்து வெளியிட உதவுகிறது. ஆன்டிபயாடிக் என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர் யார்? செல்மன் வாக்ஸ்மன் என்பவர், நோய்க்கு பயன்படுத்தும் பாக்டீரிய நுண்ணுயிரிகளை ஆன்டி பயாடிக் என்று கூறினார்.கூறிய காலம் 1940களின் மத்தியில் என வைத்துக்கொள்ளலாம். இவருக்கு முன்னதாக ஆன்டிபயாசிஸ் என்பதை கூறியவர், பால் வுயில்மன். இவர் பாக்டீரியங்களின் வளர்ச்சிக்கு உதவும் ப்யோசைனின் என்ற வேதிப்பொருளைக் கண்டுபிடித்து தனியாக பிரித்தெடுத்தார். இந்த வேதிப்பொருள் ஆய்வகத்தில் சோதனைக்குழாயில் பாக்டீரியா வளர்வதை ஊக்கப்படுத்துகிறது. மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விஷம் இது.    

நவீன காலத்தில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகள்! - மிஸ்டர் ரோனி

படம்
              அறிவியலால் வெல்வோம் மிஸ்டர் ரோனி ஒருவரின் ஆரோக்கியத்தை என்னென்ன விஷயங்கள் பாதிக்கும்? ஒருவரின் வயது, பாலினம், வேலை, குடும்ப வரலாறு, குணம், உடலின் வளர்சிதை மாற்றம் ஆகிய அம்சங்கள் மாறுபாடாக அமைந்தால், குளறுபடியானால் உடல், மனம் என இரண்டுமே கெட்டுப்போகும். இதில் சில அம்சங்கள் மாறாதவை. மற்றவை மாறக்கூடியவையாக இருக்கும். எப்போதும் இன்பத்தை குடும்பத்தோடு பகிர்ந்துகொண்டு சோகமான துக்க கதைகளை பகிரும் நண்பர்களை விட்டு விலகுங்கள். சாதி, மதம், இனம் என பற்று கொண்ட ஆட்கள் இக்காலத்தில் மட்டுமல்ல எப்போதும் ஆபத்தானவர்கள். இவர்களோடு பேசுவது நேரத்திற்கு கேடு, உங்கள் மூளையிலும் பூஞ்சை படர வாய்ப்புள்ளது. குறிப்பாக மெட்டா நிறுவனத்தின் ஆப்களை பயன்படுத்தினால், அதிலிருந்து விலகுங்கள். நாய், பூனையை வளர்க்க முயலுங்கள், குடும்பத்தினரோடு கிடைக்கும் நேரங்களில் வாயாடுங்கள். உங்கள் தன்னம்பிக்கை, அறிவு என இரண்டுமே வளரும். மன அழுத்தத்தை ஏற்படுத்துவது எது? சுற்றியுள்ள சைக்கோ சாடிஸ்டுகள்தான் என இன்ஸ்டன்டாக காரணம் கூறலாம். இருந்தாலும் அறிவியலில் காரணம் தேடுவோம். அமெரிக்காவின் ...

ஸிசோபெரெனியா நோயாளியை சாமியார் என நினைத்து வணங்கி வந்த காஷ்மீர் கிராம மக்கள்!

படம்
          ஸிசோபெரெனியா சாமியார்! மனநிலை பாதித்து பித்து நிலையில் அழுக்கு உடையில் திரிபரவர்களைக் கூட மக்கள் விட்டுவைப்பதில்லை. அவர்களையும் போகிறபோக்கில் கும்பிட்டுவிட்டு செல்கிறார்கள். அவர்கள் தின்றுவிட்டு வீசி எறியும் குவளைகளைக்கூட தெய்வ பிரசாதமாக ஏற்கிறார்கள். உண்மையில் இங்கு யாருக்கு மனநிலை பிறழ்ந்துள்ளது என்பதை வேறுபடுத்திப் பார்ப்பதே கடினம். இந்த லட்சணத்தில் மதவாதிகள், தெலுங்கு ஆட்களை வைத்து நாத்திகர்கள், ஆத்திகர்களைக் கொல்கிறார்கள் என கருத்தூசி படங்களை வேறு எடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கஷ்டம்தான். இந்தியாவில் வாழ்வதும், மக்களைப் புரிந்துகொள்வதும் மிக கடினமான செயல்களில் ஒன்று. இப்போது ஒரு கதையைப் பார்ப்போம். இந்த பாபாவின் பெயர் லாசே பாப். இவர் காஷ்மீரில் உள்ள குப்வாரா சோகுல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். மரபான காஷ்மீரிகளின் வீடுகளைப் போலவே பெரிய முற்றம், வராண்டா கொண்ட வீட்டில் வசிக்கிறார். பாப் என அழைக்கப்படும் சொல்லுக்கு துறவி என்று பொருள். மேலே சொன்னது, அவரது பட்டப்பெயர். நிஜப்பெயர் குலாம் ரசூல். இந்த சாமியார் அவரது அக்கா வீட்டில் அமர்ந்து மக்களின் பிரச...

உறக்கத்தில் நடக்கும் நோயால் நேரும் பின்விளைவுகள்! - பிளாக் - ஆதி சாய்குமார், தர்சனா பானிக்

படம்
               பிளாக் ஆதி, தர்சனா பானிக் ஆதியின் அப்பா ரோந்துப் பணியின்போது கார் மோதி இறந்துபோகிறார். அவரது கான்ஸ்டபிள் வேலை கருணை அடிப்படையில் மகனுக்கு அதாவது நாயகனுக்கு வழங்கப்படுகிறது. அந்த வேலையைச் செய்ய அவருக்கு பெரிய இஷ்டமில்லை. ஆனாலும் அப்பாவின் ஆசை என்பதற்காக வேலையில் சேருகிறார். இரண்டாவது நாளே கொள்ளை, அதற்கடுத்த நாளில் கொலை என அவர் ரோந்து செல்லும் பகுதியில் நடக்கிறது. இறந்துபோனவர்கள் குறிப்பிட ரௌடி கேங்கைச் சேர்ந்தவர்கள். அந்த தரப்பும் கொன்றவர் யார் என தேடுகிறார்கள். காவல்துறையும் தேடுகிறது. உண்மையான கொலைகாரன் யார் என்பதே படத்தின் இறுதிக்காட்சி. படத்திற்கு அடுத்த பாகம் எடுக்க கூட இயக்குநர் தயாராக காட்சிகளை எடுத்து வைத்திருக்கிறார். நாயகனுக்கு தன் வேலையில் பெரிய ஆர்வமெல்லாம் இல்லை. ரோந்து செல்லும் பகுதியில் கொள்ளை, கொலை நடந்ததால் அவரது மேலதிகாரி என்ன வேலை பார்க்கிறாய் என திட்டுகிறார். இதனால் சங்கடம் கொள்பவர், கொலையாளியைக் கண்டுபிடிக்க மெனக்கெடுகிறார். இந்த மெனக்கெடல் அடுத்தடுத்த காட்சிகளில் தொடரவில்லை. ஒரு காட்சியில் இப்படி, அடுத்த காட்சிய...

தூக்கத்தைப் பாதிக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு! - என்ன செய்யலாம்?

படம்
        தூக்கத்தைக் குறைக்கும் ஸ்மார்ட்போன் போன்களை எந்த நேரத்தில் பயன்படுத்துவது என்பதை வரையறை செய்துகொள்ளலாம். இதற்கென ஆப்கள் சந்தையில் கிடைக்கின்றன. போனைப் பயன்படுத்தும் நேரம் போக மீதியுள்ள நேரத்தில உடற்பயிற்சிகளை செய்வதை வழக்கமாக்கிக்கொள்ளலாம். அளவுக்கு அதிகமாக நேரம் போனைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி ஏராளமான கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றை வாசித்து நிலைமையைப் புரிந்துகொள்ளலாம். ஸ்மார்ட்போன்களில் வெல்பீயிங் என்ற வசதியை கூகுள் வழங்குகிறது. அதை சோதித்தால் எவ்வளவு நேரம் எந்த ஆப்பை பயன்படுத்தினோம் என்ற தகவலைப் பெறலாம். போனை அணைத்துவைத்துவிட்டு குடும்பத்தோடு நேரத்தை செலவிடுங்கள் என டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழே விளம்பரம் செய்து வருகிறது. உங்களுக்கு பிடித்தவர்களுடன் பேசலாம். வீட்டு வேலைகளைச் செய்யலாம். இனி தூக்கம் பற்றி அறையை இருட்டாக்கி, அமைதியாக இருக்கும்படி பார்த்துக்கொண்டால் போதும். சற்று குளுமையாக இருப்பது கூடுதல் நன்மை தரும். அப்போது தூக்கம் வருவது எளிதாக இருக்கும். தூங்கும்போது, சற்று முன்னதாக படுக்கைக்கு வந்து உடலை நீட்டி நெகிழ்த்தி தி...

கண்களை மூடாமல் வாராது உறக்கம்? - ஸ்லீப் ஃபிட்னஸ் மோகம் பெருகுகிறது

படம்
            கண்களை மூடாமல் வாராது உறக்கம்? இந்தியாவில் இப்போது முக்கிய பிரச்னையாக உருவாகி இருப்பது, தூக்கமின்மை. வேலையின்மை அளவு கூடிக்கொண்டே செல்வது, வேலையில் உள்ளவர்களுக்கு பெரும் அழுத்தம் தருகிறது. குறைந்த சம்பளத்திற்கு அதிக நேரம் உழைக்கும் நெருக்கடி உருவாகியிருக்கிறது. இதன் நேரடி விளைவு, தூங்கும் நேரம் குறைவது. இதனால் தூங்கினாலே போதும். உடற்பயிற்சி கூட அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என மருத்துவர்கள் கூறத்தொடங்கியுள்ளனர். அந்த வகையில் ஸ்லீப் ஃபிட்னெஸ் என்ற வார்த்தை புழக்கத்திற்கு வந்திருக்கிறது. காலையில் எழுந்து அனடோலி(யூட்யூப் பிரபலம்) போல உடற்பயிற்சி செய்வதும் ஒன்றுதான். உழைத்து களைத்த உடலுக்கு, மனதுக்கு ஓய்வளிக்கும் தூக்கமும் ஒன்றுதான் என முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.  மார்க் ஷூக்கர்பர்க், ஜெஃப் பெசோஸ் ஆகியோர், தூங்கும் வசதிகளைக் கொண்ட நவீன தொழில்களுக்கு முதலீடுகளை வழங்க தொடங்கியிருக்கிறார்கள். தூக்கம்தான் இனி முக்கியம். அதுதான் எதிர்காலம் என உடற்பயிற்சியை கைவிடக்கூறுவது எமது நோக்கமல்ல. உறக்கமின்மை கொண்டவர்கள், ஏழு மணிநேரத்திற்கும் குறைவாக உறங்குப...

ஐரோப்பாவில், ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் அதிகரித்து வருகிறது!

படம்
  டெங்கு மலேரியா பரவலை காலநிலை மாற்றம் ஊக்கப்படுத்துகிறதா? நவீன மருத்துவத்தின் உதவியால் டெங்கு, மலேரியா இறப்புகள் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டன. அதைத் தாண்டி அவை பரவுகின்றன, உயிர்ப்பலி வாங்குகின்றன என்றால் அதற்கு காரணம் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் இருக்கும் பகுதிகளாக இருக்கலாம். ஆனால், ஐரோப்பாவில் ஏடிஸ்  மூலம் பரவும் டெங்கு வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் பரவுவதற்கு தட்பவெப்பநிலையும் முக்கியமான காரணம்.  ஒருவர் வெளியில் பயணித்து டெங்கு, மலேரியாவுடன் வந்தாலும் கூட ஐரோப்பாவில் உள்ளவர்களுக்கு நோய் பெரிய பாதிப்பை தருவதில்லை. வீட்டில் ஓய்வெடுத்தாலே அவர் நோயிலிருந்து மீண்டு வந்துவிட முடியும். கடந்த 2015 -19 காலகட்டத்தில் மூன்றாயிரம் டெங்கு நோயாளிகள் பற்றிய பதிவுகள் உள்ளன. இவை அனைத்துமே பயணம் சார்ந்து ஏற்பட்டவை. இதில் ஒன்பது நோயாளிகள் மட்டுமே உள்ளூர் அளவில் நோய் வந்து பாதிக்கப்பட்டவர்களாக இருந்தனர். ஆனால் நிலைமை அப்படியே இருக்கவில்லை. கடந்த 2022, 2023 ஆண்டுகளில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை கூடத் தொடங்கியது. 2022இல் மட்டும் பிரான்சில் 65 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இத...

உடற்பயிற்சியை ஊக்குவிக்க என்ன செய்யலாம்?

  சும்மா செய்யுங்க ப்ரோ இதயத்தசைக்கு நல்லது, மண்ணீரலுக்கு மிக நல்லது என்றெல்லாம் உடற்பயிற்சியை சிலர் கூறுவார்கள். அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாதீர்கள். எளிமையான உடற்பயிற்சியை செய்யத் தொடங்குங்கள்.அவ்வளவுதான். பலாபலன்களை ஆராய்ந்து படிப்பவர்கள், உடற்பயிற்சியை செய்ய மாட்டார்கள் என மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மிச்செல் சேகர் விளக்கி, நோ ஸ்வெட் ஹவ் சிம்பிள் சயின்ஸ் மோட்டிவேஷன் கேன் பிரிங் யூ எ லைஃப்டைம் ஃபிட்னெஸ் என்ற நூலைக்கூட எழுதியிருக்கிறார். நாளையைப் பற்றிய யோசனை வேண்டாம். இன்று உடற்பயிற்சி செய்யுங்கள். நாளைக்கு வேலையை நாளை பார்ப்போம்.  எளிய உடற்பயிற்சி போதும் இணையத்தில் அனடோலி என்ற உடற்பயிற்சி வல்லுநர் இருக்கிறார். ஜிம்களுக்கு போய் அங்கு போலியாக எடையைத் தூக்கி வீடியோபோடும் ஆட்களை கிண்டல் செய்வதே அவர் வாடிக்கை. அவர் அளவுக்கு பார்பெல் தூக்கி பயிற்சி செய்யவேண்டியதில்லை. புஷ் அப் எடுக்கவேண்டியதில்லை. உங்களால் முடிந்த பயிற்சிகளை செய்யலாம். உடற்பயிற்சியை நீங்கள் தண்டனையாக நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. அப்போதுதான் அதை தொடர்ந்து செய்யமுடியும்.  பழக்கமே சிறக்கும் கா...

ஏஐ மூலம் நோயாளிகளின் நோய்களைக் கண்டறிவது சிறப்பானதுதான்!

படம்
  எரிக் டோபல், இதயவியல் மருத்துவர். இவர், டீப் மெடிசின் - ஹவ் ஆர்டிஃபிசியல் இன்டலிஜன்ஸ் கேன் மேக் ஹெல்த்கேர் ஹியூமன் அகெய்ன் என்ற நூலை எழுதியிருக்கிறார். ஏஐ, மருத்துவர்களின் வேலையை மிச்சமாக்குவதோடு, நோயாளிகளுக்கு தேவையான தொடக்க கட்ட ஆலோசனைகளை கொடுக்கும் என நம்புகிறார். அவரிடம் பேசினோம்.  மருத்துவர், நோயாளி ஆகியோருக்கு இடையிலான உரையாடலை ஏஐ பதிவு செய்யத் தொடங்கிவிட்டது. உரையாடலை சிறு குறிப்பாக மாற்றி வருகிறது. மருத்துவ சிகிச்சையில் இது மாற்றத்தை ஏற்படுத்துமா? மருத்துவர்கள் இதற்கு முன்னர் நோயாளி கூறும் பல்வேறு தகவல்களை கணினியில் கீபோர்டு வழியாக தட்டச்சு செய்யவேண்டியிருந்தது. ஆனால், இப்போது அந்த வேலை இல்லை. இதனால் மருத்துவ சிகிச்சையின் தரம் உயர வாய்ப்புள்ளது. நோயாளிகள் கூறுவதை ஏஐ சிறப்பாக மாற்றி குறிப்பாக கொடுக்கிறது. இதை முன்னர் மருத்துவர்கள் எழுதியதோடு ஒப்பிட்டால் பரவாயில்லை என்று தோன்றுகிறது. அமெரிக்க மருத்துவமனைகளில் ஏஐயை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.  மருத்துவர், நோயாளியின் உரையாடலில் என்னென்ன விஷயங்கள் இடம்பெறும்? அனைத்து விதமான சிகிச்சை பற்றிய விஷயங்களும்தான். மருத்துவம்...

அரசாட்சியைப் பிடிக்க மனிதர்களை அதீத ஆற்றல் கொண்ட கொலைமிருகங்களாக மாற்றும் மர்ம மனிதர்கள்!

படம்
  டிரென்ஜி - ஃபயர் கிரின் சீன திரைப்படம் ஓன்றரை மணி நேர படம் ஐக்யூயி ஆப் டாங் மன்னர் கால ஆட்சியில் நீதித்துறையில் துணை இயக்குநராக பதவியேற்க வருகிறார் டி ரென்ஜி. துப்பறிவாளரான இவர், தலைநகரில் நடக்கும் ஃபயர் கிரின் வழக்கை தனது நண்பர்களுடன் சேர்ந்து எப்படி துப்புதுலக்கி அரச துரோகிகளைக் கண்டுபிடித்து தண்டித்தார் என்பதே கதை.  படத்தில் மெல்லிய காதல் ஒன்றுண்டு. அதுவும் இறுதியில் சில உண்மைகள் வெளியான பிறகு காணாமல் போகிறது. எனவே, பார்வையாளர்கள் வருந்த வேண்டாம். இங்கு ஷெர்லாக் ஹோம்ஸ் போல டி ரென்ஜி எப்படி துப்பறிகிறார், ஒரு மனிதனைப் பார்த்தால் எதையெல்லாம் கவனிக்கிறார் என்பதை பார்த்து வியக்கலாம். ஆச்சரியப்படலாம். படத்தில் அதற்கான நிறைய இடங்கள் உண்டு.  டி ரென்ஜி, தலைநகரில் நீதித்துறைக்கு புதிய துணைத்தலைவராக பணிபுரிய வருகிறார். அவரது பலம் முழுக்க மூளைதான். தற்காப்புக்கலையோ, வாள் பயிற்சியோ கிடையாது. தெருவில் நி்ற்கும்போது ஒரு தேர் வேகமாக வருகிறது. அதிலிருந்து பெட்டி கீழே விழ, அதில் இருந்து வினோத விலங்கு ஒன்று ஓடுகிறது. பார்க்க, உடல் முழுக்க நெருப்பு பற்றி எரிவது போன்று உள்ளது. குதிரை ப...