இடுகைகள்

மாக்கியவெல்லி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிந்தனையாளர் மாக்கியவெல்லி படைப்புகள்!

படம்
  சிந்தனையாளர் மாக்கியவெல்லி நாரா நாச்சியப்பன் இந்த நூலில், மாக்கியவெல்லி எழுதிய அரச நீதிகள், அவரின் நூல் ஆராய்ச்சி, நாடகம் கடிதங்கள், மணிமொழிகள் ஆகியன ஒன்று இடம்பெற்றுள்ளது. ஓரளவுக்கு இந்த நூல் மாக்கியவெல்லியின் பல்வேறு வித எழுத்துகளை ஒன்றாக தொகுத்து நமக்கு அளிக்கிறது. ஏற்கெனவே நாம் பிரின்ஸ் என்ற நூலை ராஜதந்திரம் என்ற மொழிபெயர்ப்பு நூல் வழியாக வாசித்துவிட்டோம். எனவே, அவற்றை தவிர்த்துவிட்டாலும் கூட வாசிக்க சுவாரசியமான பகுதிகள் உள்ளன. அதை மறுக்க முடியாது. குறிப்பாக, கடிதங்கள். அதில், அவர் தனக்கு பதவியில் நேரும் நெருக்கடிகளை, வறுமை நிலையை வெளிப்படையாக எழுதியுள்ளார். பொதுவாக கவிஞராக அறியப்பட விரும்பியவர். ஆனால், அவரை உலகம் சிந்தனையாளராகவே பார்த்தது. அரசியல் நூல்களையே முக்கியமானதாக பார்த்தது சற்று வினோதமானதுதான். தமிழ் மொழிபெயர்ப்பு நூல் முழுக்க இடர்ப்பாடு இல்லாமல் உள்ளது. ராஜதந்திரம் நூலை விட இந்த நூல் இன்னுமே தெளிவாக தனது அரச நீதிகளை முன்வைக்கிறது என கூறலாம். மாக்கியவெல்லியின் படைப்புகள் சிலவற்றை மொழிபெயர்ப்பதன் வழியாக, அவரது சிந்தனை, வாழ்க்கை நிலை, முடியாட்சியின் அவரது நிலை, குடும்ப...

ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள உதவ வழிகாட்டும் அறிவுரைகளின் தொகுப்பு! - ராஜதந்திரம் - நிக்காலோ மாக்கியவெல்லி

    ராஜதந்திரம் நிக்கோலோ மாக்கியவெல்லி தமிழில் துளசி தினமணி நாளிதழ் வெளியீடு தமிழில் வெளிவந்துள்ள ராஜதந்திர நூல். இந்த நூலை எழுதியுள்ள நிக்கோலோ மாக்கியவெல்லி, இத்தாலியைச் சேர்ந்தவர். முடியரசில் இயங்கியவர். பின்னாளில் அரசு பதவியில் இருந்து நீக்கப்பட்டு, வறுமையில் உழன்று இறந்துபோனார். அவரைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமான தகவல் இதுதான். எழுத்தாளரின் வறுமை, மகிழ்ச்சி, வலி, வேதனை பற்றி தெரிந்துகொள்வது அவர் எழுதிய நூலின் அடிப்படையை புரிந்துகொள்ள கொஞ்சமேனும் உதவும். நூற்றி எழுபது பக்கங்களைக் கொண்டுள்ள இந்த நூல், இத்தாலி நாட்டின் நலனை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. மாக்கியவெல்லி அரசு நிர்வாகம், ராணுவம் ஆகியவற்றில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். அதன் அடிப்படையில், இத்தாலி நாடு எப்படி இருந்தால் பிழைக்கும் என்பதை ஊகித்து பல்வேறு நீதிகளை எழுதினார். பிரின்ஸ் என்று பெயரிட்டுள்ள இந்த நூல் கூட முடியாட்சியில் இருந்த அரசர் ஒருவருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார். அரசநீதி, ஆராய்ச்சி நூல்கள், கவிதைகள், நாடகங்கள் என பல துறை நூல்களை எழுதியிருக்கிறார். அரசியல் தொடர்பான நூல்களுக்கே மா...