இடுகைகள்

கடன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீன வெளியுறவுக்கொள்கையின் அடையாளமாக மாறிய பாண்டா கரடி!

படம்
  பாண்டாவுக்கு பாதுகாப்பு அமெரிக்காவில் உள்ள இரண்டு வனவிலங்கு காட்சி சாலைகளில் பாண்டா பாதுகாப்புக்கென ஒப்பந்தங்களை சீனா செய்துள்ளது. கூடுதலாக ஸ்பெயின் நாட்டுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி, சீனாவின் கானுயிர் பாதுகாப்பு சங்கம், ஸ்பெயின் நாட்டின் ஜூ அக்வாரியம், அமெரிக்காவின் சாண்டியாகோ ஜூ வைல்ட்லைஃப் அலையன்ஸ் ஆகிய அமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. விரைவில் ஒரு ஜோடி பாண்டா, அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படவிருக்கிறது.  உலகில் பாண்டா கரடிகள் தற்போதைக்கும் சீனாவில் மட்டும்தான் இருக்கின்றன. உலக கானுயிர் நிதியகம் இதுபற்றி வெளியிட்ட அறிக்கையில், சீனா, வியட்நாம், மியான்மர் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்த பாண்டா கரடிகள், மனிதர்களின் செயல்பாடுகளால் பெருமளவுக்கு அழிந்துவிட்டன என்று கூறியுள்ளது.  பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் பியர் அர்மாண்ட் டேவிட், சீனாவில் சில காலம் வாழ்ந்தார். விலங்கியலில் ஆர்வம் கொண்டவரான அவரே மேற்குலகைச் சேர்ந்தவர்களில் பாண்டா கரடியைப் பற்றிய குறிப்புகளை எழுதிவைத்து மக்களுக்கு தெரிய வைத்தவர். டேவிட் 1869ஆம் ஆண்டு, சீனாவில் உள

கருப்பின மக்களின் உரிமைக்காக போராடும் போராளிகள் - ராமோகி ஹூமா, எரின் ஹார்ன் மெக்கின்னே

படம்
  ராமோகி ஹூமா ramogi huma 1995ஆம் ஆண்டு, டோனி எட்வர்ஸ் என்ற விளையாட்டு வீரரை, விளையாட்டு சங்கம் 150 டாலர் மதிப்புள்ள காய்கறிகளைப் பெற்றார் என்று புகார் சொல்லி விளையாட தடை விதித்தது. அதை எதிர்த்து போரிட்ட வழக்குரைஞர் ராமோகி ஹுமா. அப்போது அவர், இப்படியெல்லாம் புகார் கூறி தடைவிதிக்க தொடங்கினால், டோனி தன்னுடைய ஜெர்சியை விற்றால் கூட அதையும் விதியைக்காட்டி தவறு என்று சொல்லி தண்டனை விதிப்பார்கள் என்று கூறி விமர்சித்தார்.  இந்த வழக்குக்கு பிறகு ஹூமா, தேசிய கல்லூரி வீரர்கள் சங்கம் என்ற அமைப்பை 2001ஆம் ஆண்டு தொடங்கினார். விளையாட்டு வீரர்களுக்கு இழைக்கப்படும் இனவெறி, மதம், உதவித்தொகை சார்ந்த பிரச்னைகளை தீர்த்து வருகிறார். 2020ஆம் ஆண்டு, ஆப்பிரிக்க அமெரிக்க வீரர்களை எப்படி விளையாட்டு சங்கம் பயன்படுத்தி சம்பாதிக்கிறது என்ற அறிக்கையை கல்லூரி பேராசிரியர் எல்லன் ஜே ஸ்ட்ராவோஸ்கியுடன் சேர்ந்து வெளியிட்டார். ஹூமாவின் செயல்பாடு காரணமாக பேஸ்பால் விளையாட்டு சங்கம், மூன்றாவது தரப்பு நிதியுதவியை வீரர்கள் பெறலாம் என அனுமதித்துள்ளது. அவர்களுக்கு தகுதிக்குரிய கட்டணத்தையும் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. பள்ளியில் விள

காஸனோவா, ஒரு பெண் மீது கொள்ளும் காதல் வழியாக உறவுகளின் மதிப்பை அறிந்துகொள்ளும் கதை!

படம்
                கிரேக்க வீருடு நாகார்ஜூனா , நயன்தாரா பெண்கள் என்றாலே உடல் இன்பத்திற்கு மட்டும்தான் என நம்பும் ஒருவர் சூழல்களால் மனம்மாறி குடும்பத்தை நேசிப்பதோடு , காதலித்த பெண்ணை திருமணம் செய்வதுதான் கதை . வெளிநாட்டு தொழிலதிபர் நாகார்ஜூனா . அவரும் , உறவு முறையில் மாமாவும் , நெருங்கிய நண்பன் என இணைந்து நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்கள் . தனது செல்வாக்கு , அழகு ஆகியவற்றைப் பயன்படுத்தி ஏறத்தாழ 99 பெண்களை படுக்கையில் வீழ்த்துகிறார் கிங் நாகார்ஜூனா . பெண்களை போகப்பொருளாக பார்க்கிறார் . நெருக்கமான உறவை அவர் விரும்புவதில்லை . இதனால் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் . இந்த நேரத்தில் அவரால் செக்சுக்காக பயன்படுத்தப்பட்ட பெண் ஒருத்தி , அவருடைய சிஎஸ்ஆர் திட்டம் ஒன்றை வன்மத்தோடு உருக்குலைக்கிறாள் . இதனால் , அந்த பணியை ஒப்படைத்த நிறுவனம் நாகார்ஜூனா மீது வழக்கு போட்டு வெல்கிறார்கள் . அதிக அளவு தொகையில் அபராதம் கட்ட வேண்டும் என்பதே பெரிய பிரச்னை . இந்த நேரத்தில் கிங்கிற்கு இந்தியாவில் பூர்விகமான தாத்தாவிடமிருந்து போன் வருகிறது . அவர் , மகன் வயிற்று பேரனான கிங்க

கான்ட்ராக்ட் கல்யாணத்தால் களேபரமாகும் வினோத தம்பதியினரின் வாழ்க்கை!

படம்
  பிகஸ் திஸ் இஸ் மை ஃபர்ஸ்ட் லைஃப் - கே டிராமா பிகஸ் திஸ் இஸ் மை ஃபர்ஸ்ட் லைஃப் கே டிராமா   -16 எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி ஆப்   எல்லாவற்றையும் பொருளியலாக, பணமாக, பரிவரத்தனையாக மாற்றும் ஒருவருக்கும், கல்யாணம் செய்யவேண்டுமென்றால் காதல் வேண்டும் என அடம்பிடிக்கும் பெண்ணுக்கும் நடக்கும் கான்ட்ராக்ட் கல்யாணத்தின் களேபர விளைவுகள்தான் கதை. இந்த கே டிராமா, பிற தொடர்களைப் போல காதலை மட்டும் உயர்வாக பேசவில்லை. காதல் அதைச்சார்ந்த இருவரின் பிரச்னைகள், காதலை சமூகம் எப்படி பார்க்கிறது, பெற்றோர் அதைப்பற்றி என்ன நினைக்கிறார்கள், காதல் இருவருக்கும் போதுமானது. ஆனால், திருமணம் என்பது எப்படிப்பட்ட பொறுப்புகளைக் கொண்டது என தொடர் நெடுக விவாதிக்கிறார்கள்.   இந்த கே டிராமா இயக்குநர், இறுதிப்பகுதியை மனப்பூர்வமாக எடுக்கவில்லை. அதைத்தவிர மற்ற எபிசோடுகள் பதினைந்தையும் நன்றாக எடுத்திருக்கிறார். டேட்டிங் ஆப் நிறுவனத்தில் திட்டத் தலைவராக உள்ள நாம் சே கி, டிவி தொடர்களுக்கு எழுத்தாளராக முயலும் ஜி ஹோ , தனி நிறுவனத்தைத் தொடங்கி நடத்த நினைக்கும் சூ ஜி, திருமணம் செய்து குழந்தை பெற்றாலே சாதனை என நினைக்கும் உண

வாசிப்பது மனநிறைவைத் தருகிறது - காந்திராமன் கடிதங்கள்

படம்
  ஊக்கம் மின்னல் 23/10/2022 அன்பரசு சாருக்கு அன்பு வணக்கம். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது, இந்த இங்க் பென்னில் எழுத. புத்தக வாசிப்பு உங்களை நலமாக வாழ வைக்கும் என நம்புகிறேன். ஆத்ம தூய்மைக்காக நீங்கள் எழுதும் புத்தகங்களுக்கு எனது வாழ்த்துகள். முந்தைய நாள், சிவராமன் சாரிடம் பேசியதாக உங்களிடம் சொன்னேன். உங்களையும், அவரையும் தவிர என்னை யாரும் அதிகம் ஊக்கப்படுத்தியதில்லை. நான் மாணவர் இதழில் இத்தனை நாட்கள் வேலை செய்ய நீங்கள் இருவருமே காரணமாக இருப்பீர்கள் என உணர்கிறேன். அன்று பேசும்போது, சிவராமன் சார் தனது அனுபவக் கதைகளை சொன்னார். ‘’கல்லூரியில் யாரும் சரியாக இல்லை. ஹெச்ஓடி அதிகம் வேலை வாங்குகிறார். படிக்க நேரம் போதவில்லை. பிள்ளைகள் வளர்ந்திருந்தால் முன்னமே வேலையை விட்டிருப்பேன்’’ என புலம்பினார். இருப்பினும், உருப்படியாக செய்யும் ஒரே வேலை மாணவர் இதழில் கட்டுரை எழுதுவதுதான் என்றார். பிஹெச்டி பற்றி நான் கேட்டேன். ஹெச்ஓடி சரியில்லை. நானே உனக்கு சொல்லுறேன். வெயிட் பண்ணு என்றார். சரிங்க சார் என்றேன். வீட்டில் எனக்கு திருமணம் செய்ய நினைக்கிறார்கள். சென்னையில் இருந்து பணிபுரிந்துகொள்ளவே இந்த ப

நுண்கடன் நிறுவனங்களின் கடன் வலையில் சிக்கும் ஏழைப் பெண்கள்! - மகாராஷ்டிரா, பஞ்சாப், ஆந்திரத்தில் பெருகும் தற்கொலைகள்!

படம்
  கடன் நுண்கடன்  கடன்வலையில் மாட்டித் தவிக்கும் மகாராஷ்டிரா விவசாய கூலித் தொழிலாளர்கள் கிராமத்தில் உள்ள விவசாய தொழிலாளர்களுக்கு, குறைந்தளவிலான கடன் வழங்கும் முறைக்கு நுண்கடன் என்று பெயர். இதை தொடங்கி வைத்தவர் நோபல் பரிசு பெற்றவரான சமூக செயல்பாட்டாளர், முகமது யூனூஸ். இவர், 1983ஆம் ஆண்டு வங்கதேசத்தில் கிராம மக்களுக்கு நுண்கடன்களை வழங்கும் கிராமீன் வங்கியைத் தொடங்கி நடத்தினார். இந்த ஐடியாவை பின்பற்றி உலகமெங்கும் ஏராளமான நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் தோன்றின. இந்தியாவில் உருவான நுண்கடன் நிறுவனங்கள், கிராமத்தில் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கும், தினக்கூலி மக்களுக்கும் கடன்களை வழங்கினர். இப்படி வழங்கப்படும் தொகை முப்பது ஆயிரம் தொடங்கி 40 ஆயிரம் வரை கடன்   வழங்கப்படுகிறது. இதற்கான வட்டி 30 சதவீதமாக உள்ளது. வட்டியை வாரம், பதினைந்து நாட்கள், மாதம் என பிரித்து வசூலிக்கிறார்கள். நுண்கடன் விவகாரம், வங்கதேசம் போல இந்தியாவில் வெற்றிகரமாக அமையவில்லை. மகாராஷ்டிராவில் காலநிலை மாற்றத்தால் விவசாய தொழிலாளர்களுக்கு வேலை என்பது நிலையாக இல்லை.   இந்த முறையில் பெண்களுக்கு அதிகளவில் கடன்களைக் கொடுத்து கட

1980ஆம் ஆண்டில் முன்மாதிரி மாநிலம்... ஆனால் இப்போது? - பாதாளத்தில் பஞ்சாப்

படம்
  பஞ்சாப் மாநில வரைபடம் பஞ்சாப்பின் பிரச்னைகள் என்ன? பசுமை புரட்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டபோது அதன் பயனை பெருமளவில் பெற்ற மாநிலம், பஞ்சாப். 1960ஆம் ஆண்டு தொடங்கிய வேளாண்புரட்சி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி, உணவு தானியங்களின் உற்பத்தியில் உபரி காட்டிய சிறப்பான மாநிலம். வளர்ந்து வந்த விவசாய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பேரளவிலான உணவு தானியங்களை உற்பத்தி செய்தது. இதன் மூலம் கிராமம், நகரம் என   இரண்டு பகுதிகளிலும் விவசாயிகளின் வருமானம் உயர்ந்தது. விவசாயம் மட்டுமல்லாது தொழில்துறையிலும் முக்கியமான மாநிலமாக உருமாறியது. வளர்ச்சியான பக்கம் என்றால் அதன் மறுபக்கம் இருளான பக்கம் இருக்கவேண்டுமே? அரிசி, கோதுமையை அதிகம் விளைவித்தவர்கள் நிலத்தடி நீரை அதிகம் செலவழித்தனர். இதன் காரணமாக, நிலத்தடி நீர் அளவு குறைந்துகொண்டே வந்தது. நிலத்திற்கு செலவிடும் உரச்செலவு கூடி விவசாயிகள் பயிர்களை வளர்க்க கடன் பெற தொடங்கினர். அதேசமயம் போதைப்பொருட்கள் விற்பனையும் மாநிலத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளத் தொடங்கினர். அதை ஆட்சியில் இருந்த அரசுகள் கண்டுகொள்ளவே இல்லை.

பேராசை பூதம் 2 - ஹிண்டன்பர்க் அறிக்கையின் தமிழாக்கம் - மின்னூல் வெளியீடு

படம்
  இன்று இந்தியாவில் மத்திய அரசு எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை  பலம் வாய்ந்த தொழில் நிறுவனங்களே முடிவு செய்கின்றன. அரசின் கொள்கை மாற்றங்களை பெருநிறுவனங்கள் முடிவு செய்து அறிவிக்கச்செய்து பயன் பெறுகின்றன. நாட்டின் பிரதமர் தொழில்நிறுவனங்களோடு நெருக்கமாக இருப்பது, அணுக்க முதலாளித்துவம் என்று கூறப்படுகிறது. இப்படி இருப்பதால் அவருக்கும் அவர் சார்ந்த கட்சிக்கும் நன்மை உண்டு. வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் இருக்காது. தொழிலதிபரின் வாராக்கடன்களுக்கு, வரிச்சுமையை சுமக்க வேண்டியது மக்கள்தான்.  அதானி குழுமம், பல்லாண்டுகளாக திட்டமிட்டு செய்த மோசடிகளை பேராசை பூதம் 3 நூல் விவரிக்கிறது. இதைப் படிக்கும்போது இப்படியெல்லாம் யோசித்து நிதி மோசடிகளை செய்ய முடியுமா என பிரமித்து அதிர்ச்சியடைவீர்கள்.  அந்தளவு நேர்த்தியாக திட்டமிட்டு இந்தியாவை மட்டுமல்ல வரி கட்டும் அத்தனை குடிமக்களையும் ஏமாற்றியுள்ளது அதானி குழுமம். மோசடிக்கு கௌதம் அதானியின் மொத்த உறுப்பினர்களுமே காய்களாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர்.   பங்குச்சந்தை நிதியை மடைமாற்றி தனது இஷ்டம்போல நிறுவனத்தின் மதிப்பை மாற்றிக் காண்பித்து அதை அடையாளம் கண

இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை அதிகரிப்பதன் காரணம்.....

படம்
      இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை அதிகரிப்பது ஏன்? காலநிலை மாற்றம் மற்றும் மத்திய, மாநில அரசின் விவசாய கொள்கைகளால் வேளாண்மை பாதிக்கப்பட்டு, விவசாயிகளின் நிதிச்சுமை அதிகரித்து வருகிறது. இதைத் தாங்கிக்கொள்ள முடியாத பல நூறு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 2022ஆம் ஆண்டு, மகாராஷ்டிரா மாநிலத்தின், மராத்வாடா பகுதியில் மட்டும் அறுநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். இதுபற்றிய தகவலை மாநில அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. பல்லாயிரம் ஹெக்டேர் நிலங்களிலுள்ள பயிர்கள் அதீத மழைப்பொழிவால் அழிந்ததால், பெருமளவு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக காரணம் கூறப்படுகிறது. வேளாண்மை வல்லுநர்கள், தற்கொலையால் இறந்த விவசாயிகளின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்று மதிப்பிடுகிறார்கள். 2021ஆம் ஆண்டு வரையில் அடுத்தடுத்து ஆட்சியமைத்த மாநில அரசுகள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தன. ஆனாலும் கூட மராத்வாடாவின் எட்டு மாவட்டங்களில் தற்கொலை செய்து இறந்த விவசாயிகளின் எண்ணிக்கை 80

மரபணுமாற்ற பருத்தியால் விவசாயிகள் கற்றதும், பெற்றதும்!

படம்
  அதிக உற்பத்திச் செலவு, குறைந்த வருமானம் -பிடி பருத்தியால் பாதிக்கப்படும் விவசாயிகள் மரபணு மாற்ற பருத்தியை உற்பத்தி செய்யும் விவசாயிகள்,   குறைந்துவரும் விளைச்சல், அதிக உற்பத்திச் செலவுகளை சந்தித்து வருகிறார்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்னர், விவசாயிகளுக்கு பிடி பருத்திப் பயிர் அறிமுகமானது. புழுத்தாக்குதலிலிருந்து பாதுகாப்பு, அதிக விளைச்சல், சந்தையில் அதிக விலை கிடைக்கும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ‘’சில ஆண்டுகளுக்குப் பிறகு பிடி பருத்தியின் உற்பத்திச் செலவு அதிகரித்துவிட்டது. ஆனால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை. நாங்கள் பத்தாண்டுகளுக்கு மேலாக பருத்தியை பயிரிட்டு வருகிறோம். 1995-2005 காலகட்டத்தில் பருத்தி பயிரிடல் உச்சகட்டத்தில் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாகத்தான் பிடி பருத்தி பயிரிடல் அதிகரிக்கத் தொடங்கியது. பிடி பருத்தி, நிலங்களுக்கும் விவசாயிகளுக்கும் என்ன செய்கிறது என்பது புதிராக விடை தெரியாததாகவே இருக்கிறது ’’ என்றார் தார்வாட் மாவட்டத்தைச் சேர்ந்த உப்பின் பெடாகெரி கிராமத்து விவசாயி சன்னபசப்பா மசுடி. இவர், பத்து ஆண்டுகளுக்கு   முன்னரே தன் நிலத்தில் பிடி பருத்தியை