1980ஆம் ஆண்டில் முன்மாதிரி மாநிலம்... ஆனால் இப்போது? - பாதாளத்தில் பஞ்சாப்

 



பஞ்சாப் மாநில வரைபடம்







பஞ்சாப்பின் பிரச்னைகள் என்ன?



பசுமை புரட்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டபோது அதன் பயனை பெருமளவில் பெற்ற மாநிலம், பஞ்சாப். 1960ஆம் ஆண்டு தொடங்கிய வேளாண்புரட்சி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி, உணவு தானியங்களின் உற்பத்தியில் உபரி காட்டிய சிறப்பான மாநிலம். வளர்ந்து வந்த விவசாய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பேரளவிலான உணவு தானியங்களை உற்பத்தி செய்தது. இதன் மூலம் கிராமம், நகரம் என  இரண்டு பகுதிகளிலும் விவசாயிகளின் வருமானம் உயர்ந்தது. விவசாயம் மட்டுமல்லாது தொழில்துறையிலும் முக்கியமான மாநிலமாக உருமாறியது.

வளர்ச்சியான பக்கம் என்றால் அதன் மறுபக்கம் இருளான பக்கம் இருக்கவேண்டுமே? அரிசி, கோதுமையை அதிகம் விளைவித்தவர்கள் நிலத்தடி நீரை அதிகம் செலவழித்தனர். இதன் காரணமாக, நிலத்தடி நீர் அளவு குறைந்துகொண்டே வந்தது.

நிலத்திற்கு செலவிடும் உரச்செலவு கூடி விவசாயிகள் பயிர்களை வளர்க்க கடன் பெற தொடங்கினர். அதேசமயம் போதைப்பொருட்கள் விற்பனையும் மாநிலத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளத் தொடங்கினர். அதை ஆட்சியில் இருந்த அரசுகள் கண்டுகொள்ளவே இல்லை. 

2000-2018 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 9 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதில் 88 சதவீதம் பேர் கடன்சுமை தாங்கமுடியாமல் இறந்துபோயுள்ளனர்.

வேலைவாய்ப்பின்மை சதவீதம் 6.8 சதவீதமாக உள்ளது.

வேலை இல்லாமல் தடுமாறும் பெண்களின் அளவு 34 சதவீதமாக உள்ளது.

நிலத்திற்கு உரத்தைப் பயன்படுத்தும் தேசிய சராசரி ஹெக்டேருக்கு 90 கிலோ. பஞ்சாப்பில் ஹெக்டேருக்கு 223.46 கி.கி அளவுக்கு பயன்படுத்துகிறார்கள்.

நிலத்தடி நீர் ஆண்டுதோறும் 0.49 மீட்டர் அளவுக்கு குறைந்துகொண்டே செல்கிறது. தற்போதைய அளவுக்கு குடிநீர் தீர்ந்தால், 2029ஆம் ஆண்டு 100 மீட்டரும், 2039ஆம் ஆண்டு 300 மீட்டர் அளவுக்கும் தீரும் வாய்ப்புள்ளது.

2022ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் அளவு 647 கி.கி. 2021ஆம் ஆண்டில் 568 கி.கி. பறிமுதல் செய்யப்பட்டது. 2021ஆம் ஆண்டை விட பதினான்கு சதவீத ஹெராயின் புழக்க அளவு உயர்ந்துள்ளது.

2022ஆம் ஆண்டில், பாகிஸ்தானிலிருந்து 240 ட்ரோன்கள் மூலம் போதைப்பொருட்கள் பஞ்சாப் மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்டன.

2022ஆம் ஆண்டு மட்டும் போதைப்பொருட்கள் தடுப்பு சட்டப்படி, 12, 421 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது, 25 சதவீதம். இந்த வழக்குகளில் கைதாகுபவர்களின் எண்ணிக்கை 30 சதவீதமாக அதிகரித்துள்ளது. 18,282 நபர்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகியுள்ளனர்.



ஃபிரன்ட்லைன்

ரமேஷ் சக்ரபாணி


கருத்துகள்