தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!

 













செக்ஸ் பிரச்னை பெண்களுக்கும் உண்டு!

எம்எக்ஸ் பிளேயரில் இந்தி வெப் சீரிஸ் ஒன்று வெளியானது. அதில் விந்து முந்தும் பிரச்னை கொண்ட இளைஞன் ஒருவன் இருப்பான். அவனுடன் உறவு கொண்ட பெண்தோழி,அவனை ஒடைஞ்ச குழாய் என கிண்டல் செய்வாள். இணையத்தில் அவளின் உடலுறவு பற்றிய கிண்டல் பதிவு பகிரப்பட்டு விந்து முந்துதல் பிரச்னை கொண்ட இளைஞனே, அதைப் பார்த்து பதறுவான். இந்த தொடரில் இளைஞனின் பிரச்னையை  காமெடியாக சொல்ல முயன்றாலும், இரண்டு விஷயங்களை நீங்கள் கவனிக்கலாம். உண்மையில் அது தீவிரமான பிரச்னை. உயிரியல் ரீதியாக ஆணும், பெண்ணும் இணைந்திருக்க உடலுறவு முக்கியமான காரணம்.

உடலுறவு கொண்ட பெண் எந்த மனநிலையில் ஒடைஞ்ச குழாய் என்று இளைஞனை பலரும் பார்க்கும் இணையத்தில் பதிவிட்டு திட்டியிருப்பாள்? உண்மையில், பரஸ்பர ஒத்துழைப்புடன் ஈடுபட்ட உடலுறவில் அவளுக்கு மகிழ்ச்சி கிடைக்கவில்லை. ‘’ஆணுக்கு உச்சம் எட்டும் நேரம் 5.5 நிமிடங்கள் என்றால் பெண்ணுக்கு 17 நிமிடங்கள் தேவையாக உள்ளது’’ என யூட்யூப்பில் ஆபாசப்பட நடிகர்  ஜானி சின்ஸ் கூறியிருக்கிறார்.

வெப் சீரிஸில் கூட ஆணை விந்து முந்துதலுக்கு கிண்டல் செய்பவர்கள்,அந்த பெண் இணையத்தில் தனது உடலுறவு அனுபவத்தை கிண்டலாக ஏன் எழுதினாள் என்று பேச மாட்டார்கள். கேலியான ஏளனப் புன்னகையோடு கடந்துவிடுவார்கள். இணையத் தொடருக்கு சில வரம்புகள் இருக்கலாம். ஆனால் சமூகத்தில் பரவி வரும் மாற்றங்களை டிவி தொடர்கள், வெப் தொடர்கள், சினிமா ஆகியவைதான் வெளிப்படுத்துகின்றன. ஒருவகையில் பதிவு செய்கின்றன.

அந்த வகையில் பெண்களுக்கு ஏற்படும் பாலுறுப்பு வலி, ரத்தப்போக்கு, உடலுறவின் போது தேவையான திரவங்கள் சுரக்காமல போவது, உடலுறவில் திருப்தியின்மை ஆகியவை பற்றி பொதுவெளியில் யாரும் பேசுவதில்லை. காரணம், அப்படி பேசும் பெண்களை தேவ******* என எளிதாக கலாசார காவலர்கள் முத்திரை குத்துவார்கள். அதே புனித தேசத்தில்தான் கருவறைக்குள் ஆபாசப்படம் பார்ப்பது, கோவிலுக்குள் முஸ்லீம் சிறுமியை அடைத்து வைத்து குழு வன்புணர்வு செய்வது நடைபெறுகிறது.

உண்மையில் காமம் என்பது மனிதனுக்குள் எப்போதும் ரத்தம் போல குறுக்கும் நெடுக்குமாக சென்று கொண்டே இருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் சிறுமி, முதியவள் என பார்ப்பதில்லை. இதே தேசத்தில்தான் சிறுநீர்துளை, யோனி என இரண்டும் வேறு வேறு என மீசை முறுக்கும் ஆணாதிக்க கனவான்களுக்கு பாடம் எடுக்க வேண்டியதிருக்கிறது.

இப்போது பெண்கள் பிரச்னையைப் பார்ப்போம்.

பாலியல் ரீதியான குறைபாடுகள் ஆண்களுக்கு இருப்பது போலவே உலகிலுள்ள பாதி பெண்களுக்கு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் இந்த பிரச்னை பற்றி இப்போதுதான் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.  உலகம் முழுக்க 45 சதவீத பெண்களுக்கு பாலியல் ரீதியான பிரச்னை உள்ளது. தோராயமாக எட்டில் ஒரு பெண்ணுக்கு பிரச்னை உள்ளது.

 இந்தியாவில் 35 சதவீத பெண்களுக்கு பாலியல் ரீதியான குறைபாடு உள்ளது. இதில் 23 சதவீத பெண்களுக்கு,  மன அழுத்தம் காரணமாக பாலியல் பிரச்னைகள் ஏற்படுகிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பொதுவாக பாலியல் ரீதியான பிரச்னைகள் என்றாலே லாட்ஜ் ரூம்களும், பாரம்பரிய வைத்தியர்களும்தான் நினைவுக்கு வருவார்கள். குறிப்பாக ஆண்களுக்குத்தான அனைத்தும் வரும். அவர்கள் வலுவாக இருக்கவேண்டும் என்று கூறி வந்தனர். இப்போது பெண்களுக்கும் பிரச்னை ஏற்பட்டு வருவது உறுதியாகியுள்ளது.

2020ஆம் ஆண்டு, இந்தியன் ஜர்னல் ஆஃப் கம்யூனல் மெடிசின்  ஆய்வு  வெளியானது. இதில்,  பங்கேற்றவர்களின் தகவல்படி 64 சதவீத பெண்கள் தங்கள் பிரச்னையை  கணவரிடம் கூறவில்லை. 18 சதவீதம் பேர் மட்டும் தங்கள் பாலியல் ரீதியான வாழ்க்கை நன்றாக திருப்தியாக உள்ளது என பதில் சொல்லியுள்ளனர். இதுவும் கூட அவர்கள் அப்படி நினைத்துக்கொண்டார்களா, உண்மையா என்று தெரியவில்லை.

இந்த அறிவியல் ஆய்வில், 78 சதவீதப் பெண்களுக்கு உடலுறவு திருமண வாழ்க்கைக்கு முக்கியம் என்று தெரிந்துள்ளது. ஆரோக்கிய குறைவு, தனிப்பட்ட அந்தரங்க நேரம் இல்லாமை, வேறு சமூக காரணங்கள், கர்ப்பமாகிவிடுவோம் என்ற பயம், காம உணர்வு உருவாகாமை ஆகிய பிரச்னைகள் பெண்களுக்கு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

பெண்களுக்கு வயதாகும்போது உடலுறவு கொள்ளும் எண்ணம் குறைந்து வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக, இருபது முதல் முப்பது வயது வரையிலான காலகட்டத்தில் இருக்கும் காம உணர்வு அதற்கு பிந்தைய ஆண்டுகளில் இருக்காது என்கின்றனர். ஆனால் இப்படி கூறுவதற்கு உறுதியாக அறிவியல் ஆதாரங்கள் இல்லை.

என்ன காரணம்

உடல், மனம் என இருவகையில் ஒருவர் பாதிக்கப்பட்டாலும் உடலுறவில் நாட்டம் குறைந்துபோகும். இதய நோய், நீரிழிவுநோய், நரம்பு நோய், ஹார்மோன் பிரச்னைகள், நோய்களுக்கு சாப்பிடும் மருந்துகளால் ஏற்படும் பாதிப்புகள். (புற்றுநோய் மருந்துகள், கீமோதெரபி, மன அழுத்த மருந்துகள்). இதெல்லாம் உடல் அளவில் ஏற்படும் நோய்களால் ஏற்படும் பின்னடைவுகள்.

உளவியல் ரீதியாக என்றால் அலுவலக வேலை நெருக்கடி, மன அழுத்தம், திருமண, காதல் உறவு அழுத்தம். கடந்த கால உடலுறவு சார்ந்த பிரச்னைகள் ஆகியவை உடலுறவு கொள்வதில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

தீர்வு என்ன?

பெண்கள் இடும்பெலும்பை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளை, யோக ஆசனங்களைச் செய்யலாம். மனதில் காம உணர்வு ஏற்பட கிளுகிளு வீடியோக்கள், காதல் நூல்கள்,  மஜா ஆடியோ, பாட்காஸ்ட் எல்லாம் கேட்கலாம். சுஜாதாவின் மெக்சிகோ சலவைக்காரி ஜோக்கை திரும்ப ரீமேக் செய்யலாம். வாசிக்கலாம்.

இதற்கென சந்தையில் நிறைய உடலுறவு சார்ந்த கருவிகள் விற்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். உறவு சார்ந்த சிக்கல் இருந்தால் அதை காதலர், அல்லது கணவரிடம் பேசி சரி செய்துகொள்ளலாம். உடலுறவு பற்றிய புரிதல் ஏற்பட பாலியல் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறலாம். பாலியலை அறிந்துகொள்வது  தவறு கிடையாது. ஆனால் அறியாமையில் நீந்தி ஆனந்தம் கொள்வது தவறு.  

உடல் ஒரு எந்திரம். ஆண்,பெண் என அதில் வேறுபாடு கிடையாது. தங்கள் பிரச்னைகள் பற்றி பெண்கள் பேசத் தொடங்கியிருப்பது நல்லவிஷயம். இதன் வழியாக அவர்களுக்கு தீர்வு கிடைக்கும். பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்து தங்கள் இணையரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது, முக்கியமான முன்னேற்றம். முட்டாள்தனமும், அறியாமையும், மூடநம்பிக்கையும் மலிந்த இந்தியா போன்ற நாட்டில் பெண்கள் தங்கள் பிரச்னைகளை வெளிப்படையாக பேசுவது வரவேற்கத்தக்கது.

 

குணால் டோலே

ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ்

ஆங்கில கட்டுரையைத் தழுவியது.

கருத்துகள்