இடுகைகள்

நியூராலிங்க் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நியூராலிங்க் சிப் மூலம் கணினியையும் மூளையையும் இணைக்க முடியுமா?

படம்
              நியூராலிங்க் ' சிப் ' ! நவீன தொழிலதிபர் எலன் மஸ்க்கின் நிறுவனம் , நியூராலிங்க் . இந்த நிறுவனம் , ஒருவரின் தலையில் சிப் பொருத்தி அவரின் மூளையிலுள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து தீர்க்க முயலுகிறது . சிப் மூலம் மூளையில் நடக்கும் பல்வேறு தகவல் தொடர்புகளை கண்காணித்து அவற்றை முழுமையாக அறிவது , இந்த நிறுவனத்தின் முக்கியமான நோக்கம் ஆகும் . ஐடியா , ஆங்கில அறிவியல் திரைப்படம் போல இருந்தாலும் சாத்தியம் என அடித்துச் சொல்கிறார் நிறுவனத்தின் இயக்குநர் எலன் மஸ்க் . மூளையில் 3,072 மின்முனைகளை தலைமுடியை விட மெல்லிய வயர்களில் பிணைத்து மூளையில் நியூரான்களில் நடக்கும் தகவல்தொடர்புகளை நாம் பெறுவதுதான் இதில் முக்கியமான கட்டம் . இதனை லிங்க் என்று குறிப்பிடுகின்றனர் . மூளையில் நடைபெறும் தகவல்தொடர்பை அறி்வதன் மூலம் , மூளையின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பணிகளை துல்லியமாக அறியமுடியும் . தற்போது வயர்கள் இருந்தாலும் , எதிர்காலத்தில் வயர்லெஸ் முறையில் இந்த அமைப்பு செயல்படும் என நியூராலிங்க் நிறுவனம் நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறது . மூளையில் மிக சிக்கலான அறுவை

மூளையை அப்கிரேட் செய்ய முடியுமா?

படம்
pixabay மூளையின் திறன்களைப் பற்றி நாம் நிறைய பெருமை கொள்கிறோம். ஆனால் சிறு சிப்களில் அதிக தகவல்களை அடக்கி வைக்கத் தொடங்கிவிட்டோம். மேலும் கணினி அளவுக்கு கணக்குகளைப் போட்டு நம்மால் செயல்பட முடியவில்லை. அதுவே மனித மூளையின் முதல் தோல்வி. இனிமேலும் பல்வேறு டெக் நிறுவனங்களின் ஆராய்ச்சி மனித மூளையை பல்வேறு துறை சார்ந்து வெல்வதாகவே இருக்கும். மூளையிலுள்ள தகவல்களை கணினியில் இணைப்பது பற்றிய ஆராய்ச்சிகள் உலகமெங்கும் நடந்து வருகின்றன. அவற்றில் புதுவரவு எலன் மஸ்கின், நியூராலிங்க். 1973 ஆம் ஆண்டு உலகில் முதன்முதலாக மனிதர்களின் மூளை -கணினி  இடைமுகம் உருவாக்கப்பட்டது. கலிஃபோர்னியா பல்கலையைச் சேர்ந்த ஜாக்யூஸ் விடல் என்பவர் இதனை உருவாக்கினார். மூளையின் மின் துடிப்புகளை எலக்ட்ரோபாலோகிராம் கருவி மூலம் அறிந்து கணினியில் பதிவு செய்தார். அதனை இயங்க வைத்தார். 1988 ஆம் ஆண்டு யூகோஸ்லேவியா ஆராய்ச்சியாளர்கள், இசிஜி சிக்னல்களை மூளையிடமிருந்து பெற்று, கணினியின் இணைப்பிலுள்ள ரோபோ ஒன்றை இயங்க வைத்தனர். கண்களை மூடவும் திறக்கவும் வைத்தனர். அவ்வளவேதான். 1991 ஆம் ஆண்டு நூறு எலக்ட்ரோடுகளைக் கொண்ட

மனிதர்களை மூளையைச் சுரண்டுகிறாரா எலன் மஸ்க்?

படம்
மூளையைக் கட்டுப்படுத்தும் கேட்ஜெட்ஸ்! மூளையைக் கணினியுடன் இணைத்து ஆராயும் முயற்சிகளை தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. கனடாவைச் சேர்ந்த எலன் மஸ்கின்  நிறுவனமான நியூரா லிங்க் (Neuralink) எனும் நிறுவனம், 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் நோக்கம், மனிதர்களின் மூளையைக் கணினியுடன் இணைப்பதுதான். தன் திட்டங்களை ரகசியமாக வைத்திருந்த இந்நிறுவனம், தற்போது தன் ஆராய்ச்சிச் செய்தியை வெளியிட்டுள்ளது. மனிதர்களின் எண்ணங்களை இயந்திரங்கள் படிப்பதுதான் திட்டத்தின் நோக்கம். இம்முறையில் நம் தலைமுடியை விட மெல்லியதாக உள்ள எலக்ட்ரோட்ஸ் (மின்கடத்தி), மூளையிலுள்ள நியூரான்களை கண்காணித்து செயற்படுகிறது. 3000 எலக்ட்ரோட்ஸ் இம்முறையில் மனிதரின் தலையில் இணைக்கப்படுகிறது. ஒரு எலக்ட்ரோட்ஸ் ஆயிரம் நியூரான்களைக் கண்காணிக்கிறது. இதனைக் காதுக்கு அருகில் பொருத்தும் கருவி ஒருங்கிணைத்து ஸ்மார்ட்போனின் ஆப்புக்கு தகவல் அனுப்புகிறது. இம்முறையில் கை, கால்கள் செயலிழந்த மனிதர்களுக்கு உதவிகளை வழங்க முடியும் என்கிறது நியூராலிங்க் நிறுவனம். இந்நிறுவனம் மட்டுமல்ல; மூட்டுகள் செயல்படாதவர்களுக்கென பிர