இடுகைகள்

கழிவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜோம்பி தனது கடந்தகாலத்தை தானே டிடெக்டிவ்வாகி கண்டறியும் கதை!

படம்
              ஜோம்பி டிடெக்டிவ் கொரிய தொடர் ராகுட்டன் விக்கி மருத்துவக் கழிவு கொட்டிக்கிடக்கும் இடத்தில் இருந்து ஒரு உருவம் எழுகிறது . அதுதான் நாயகன் காங் மின்கோ . எழுந்தவர் சிகரெட் பிடிக்கிறார் . வாயில் புகைவிட நினைத்தால் வயிற்றில் உள்ள ஓட்டை வழியாக புகை வெளியே செல்கிறது . அப்போதுதான் அவர் வயிற்றில் துப்பாக்கியால் சுடப்பட்டிருப்பதை உணர்கிறார் . அங்கிருந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்தால் அதிர்ந்துபோ கிறார் . இறந்து புதைக்கப்பட்டவர் மீண்டும் உயிர் வந்தால் உடல் சதைகள் எப்படி சிதைந்து கிடக்கும் . அப்படித்தான் அவர் உடல் முழுக்க பஞ்சர் ஒட்டியது போல சதைகள் கிழிந்து ஒ ட்டுப்போடப்பட்டது போல உள்ளன . சுருக்கமாக வாழும் பிணம் . அதாவது ஜோம்பி . அவருக்கு தான் யார் , பெயர் , ஆதார் எண் , வங்கியில் கொடுத்த பான் எண் , வீட்டு முகவரி என எதுவுமே நினைவில்லை . தான் யார் , எப்படி கொல்லப்பட்டோம் . ஏன் ஜோம்பி ஆனோம் என்ற உண்மையை மெல்ல கண்டுபிடிக்கிறார் . இந்த கதையை நகைச்சுவையாக கூறியிருக்கிறார்கள் . அடுத்த பாகம் தொடங்கி ஒளிபரப்பப்பட்டாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை . காங் சன்ஜ

குப்பையிலிருந்து மின்சாரம் - கேரளாவின் முயற்சி வெல்ல வாய்ப்புண்டா?

படம்
  திடக்கழிவு மேலாண்மை  குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பதில் லாபம், சவால்கள் என்னென்ன? கேரளா மாநில அரசு, கோழிக்கோட்டில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இது மாநிலத்திலேயே முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.   இரண்டு ஆண்டுகளில் ஆறு மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். நாட்டில் நூற்றுக்கும் மேலான குப்பையிலிருந்து மின்சாரம் திட்டங்கள் தொடங்கப்பட்டன. ஆனால் அவற்றில் இன்றும் செயல்பாட்டில் இருப்பவை மிகச்சிலதான். என்ன பயன்? மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம். இதன்மூலம் திடக்கழிவு மேலாண்மையைச் செய்வதோடு, மாநில மக்களுக்கு மின்சாரமும் கிடைக்கிறது. இந்தியாவில் உள்ள திடக்கழிவுகளில் 60 சதவீத கழிவுகள் உயிரியல் ரீதியாக சிதைவடையக்கூடியவை. அதாவது தானாகவே மட்க கூடியவை. 30 சதவீத கழிவுகள் உலர் கழிவுகளாக நிலத்தில் தேங்குகின்றன. 3 சதவீத கழிவுகளான கடினமான பிளாஸ்டிக், உலோகம், இ கழிவுகள் ஆகியவற்றை மறுசுழற்சி செய்யமுடியும். மீதமுள்ள பிளாஸ்டிக், துணிகள் எல்லாமே மறுசுழற்சி செய்ய முடியாத நிலையில் உள்ளவை. இந்த கழிவுகளைப் பயன்படுத்தி

விவசாய கழிவுப்பொருட்களிலிருந்து காகிதம் செய்யலாம்! - சுபாம் சிங், வேதியியல் பொறியாளர்

படம்
  விவசாய கழிவுகளிலிருந்து அற்புத பொருட்கள்! மகாராஷ்டிரத்தின் புனே நகரைச் சேர்ந்தவர், சுபாம் சிங். இவர் கிரேஸ்ட்(Craste) எனும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிறுவனம், விவசாயக் கழிவுகளைப் பெற்று அதை பேக்கேஜிங் பொருட்களாக, மேசைகளாக மாற்றி வருகின்றது.  இந்தியாவில் ஆண்டுதோறும் 80 டன்கள் விவசாயக் கழிவுகள் நெருப்பிட்டு எரிக்கப்படுகிறது. இதனால் காற்று மாசுபடுகிறது. இப்பிரச்னையைத் தீர்க்கவே கிரேஸ்ட் நிறுவனம் உருவாக்கப்பட்டது. வேதிப்பொறியியல் படித்தவரான சுபம் சிங், சில ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து விவசாய கழிவுகளில் இருந்து மேசை, நாற்காலிகளை செய்யத் தொடங்கினார். இவற்றில் மிஞ்சும் கழிவுகளை விவசாய நிலத்திற்கு உரமாகப் பயன்படுத்தலாம். இவரது ஆராய்ச்சியைப் பார்த்த புது டில்லியியைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பான பைராக் (BIRAC) கிரேஸ்ட் நிறுவனத்தைத் தொடங்க நிதியுதவியை அளித்தது.   ”சர்க்குலர் ஃபைபர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயக்கழிவுகளை பல்வேறு பொருட்களாக மாற்றுகிறோம். இந்தியா மரப்பொருட்களுக்கு சீனா, நியூசிலாந்து ஆகிய நாடுகளை நம்பியுள்ளது. ஆனால், விவசாய பொருட்களிலிருந்து மேசை,

கட்டுமானங்களுக்கு குப்பைகேள போதும்!

படம்
  கட்டுமானங்களுக்கு குப்பைகளே போதும்!  கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சூளகிரியில் சூழலுக்கு உகந்த வகையில் வீடு ஒன்றைக் கட்டி வருகிறார்கள். இந்த வீட்டை அங்குள்ள மக்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள். இதில் பயன்படுத்தும் பொருட்கள் , பலவும் குப்பைக்கிடங்கில் இருந்து பெறப்பட்டவை.  இந்த வீட்டுக்கு உரிமையாளர் அபிஷேக், பெங்களூருவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறார்.  இவருக்கு சூழலை மாசுபடுத்தாதபடி வீட்டைக் கட்டும் ஐடியாவைக் கூறியது பொறியாளர் வினு கோபால்.  அதனை வடிவமைத்தவர் கேரளத்தைச் சேர்ந்த பவாஸ் தென்கிலன். வினு கோபால், குப்பைச் சுவர் (Debris wall ) என்ற நுட்பத்தை காப்புரிமை செய்து வைத்துள்ளார். இதன்படி, 2007ஆம் ஆண்டு முதல் கட்டடங்களை வடிவமைத்து வருகிறார். இவர், உருவாக்கும் கட்டடங்கள் அனைத்துமே பிறர் தூக்கியெறிந்த குப்பைகளாலானவை.   கட்டுமானப் பொருட்களை 5 கி.மீ. தொலைவுக்குள் உள்ள குவாரி, கட்டுமான இடங்கள் ஆகியவற்றிலிருந்து கழிவுப்பொருட்களிலிருந்து பெறுகிறார்.  அதை சேகரித்து வீடுகளை கட்டிவருகிறது வினுவின் குழு. இந்த வகையில்  தூக்கியெறியப்பட்ட கம்பிகள், டயர்கள் என எதையும் விடுவதில்லை.  ”

அலுமினியம் எப்படி மறுசுழற்சி செய்யப்படுகிறது?

படம்
  அலுமினியத்தின் மறுசுழற்சி! தொழில்துறையில், அலுமினியம் மதிப்பு மிக்க பொருள். அதிகளவில் இதனை மறுசுழற்சி செய்து பயன்படுத்தி வருகின்றனர். இதனை எளிதாக பல்வேறு வடிவங்களுக்கு மாற்ற முடியும். இதனால், அலுமினிய பாயில், டின்கள், கார் பாகங்கள் ஆகியவற்றை மறுசுழற்சி செய்கிறார்கள். சுரங்கத்திலிருந்து பெறும் பாக்சைட்டிலிருந்து, அலுமினியத்தைப் பிரித்தெடுக்கின்றனர். இப்படி புதிதாக அலுமினியத்தை எடுப்பதை விட, அலுமினிய பொருட்களை மறுசுழற்சி செய்யும்போது குறைந்தளவு ஆற்றலே செலவாகிறது.  நாம் பயன்படுத்தும் மூன்றில் இருபங்கு குளிர்பான கேன்கள், மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியத்தால் உருவாக்கப்படுகின்றன. இவற்றை அமெரிக்கா மற்றும்  ஐரோப்பிய நாடுகள் பயன்படுத்துகின்றன. மேற்கு நாடுகளில் அலுமினிய கேன்களின் மறுசுழற்சி செயல்பாடும் அதிகம்.  அலுமினியம் பிற உலோகங்களைப் போலவே மின்சாரத்தையும் வெப்பத்தையும் கடத்துகிறது.  அவ்வளவு எளிதாக அரிக்கப்படாத காரணத்தால், அதிகளவு பயன்பாட்டில் உள்ளது.  அலுமினியத்தை எளிதாக வயர்களாக்க முடியும். இப்படி வடிவம் மாறினாலும் கூட அதன் வலிமை குறையாது. இதனை எளிதாக அறுக்க முடியாது.  அலுமினியத்தின் வடி

கோவையின் குப்பைகளை மாற்றி சுத்தம் செய்யும் செர்கிள் எக்ஸ் ஸ்டார்ட்அப் குழு!

படம்
  கோயம்புத்தூர் தொழில்நகரம். சென்னைக்கு அடுத்தபடியாக தொழில் வாய்ப்புகளை ஈர்க்கும் முக்கியமான நகரம் கூட. இங்கு தினசரி குவியும் கழிவுகளின் எண்ணிக்கை அதிகம். இதனை எப்படி மறுசுழற்சி செய்வது என பலரும் யோசித்து வந்தனர். தற்போது இதற்காகவே செர்கிள் எக்ஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாகியுள்ளது. இந்த நிறுவனம், கோவை கார்ப்பரேஷன் மற்றும் ரெசிடென்ஸ் அவர்னெஸ் அசோசியேஷன்  - ராக் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.  இவர்கள் குறிப்பிட்ட குப்பைகள் கொட்டப்பட்டுள்ள இடத்தை தேர்ந்தெடுத்து அதனை சுத்தம் செய்து அங்கு சுவரோவியங்களை வரைகிறார்கள். இப்படித்தான் ஆர்எஸ் புரத்தில் உள்ள ஜிஎஸ் லே அவுட்டில் சுப்பிரமணிய பாரதியாரின் கவிதைகளை எழுதி அழகிய படங்களை வரைந்திருந்தனர். இதற்கு ஸ்பாட் பியூட்டிஃபிகேஷன் என்று பெயர்.  cercle x team பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மாசுபட்ட இடத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதனை தன்னார்வலர்களுக்கு தெரிவித்து விடுகிறார்கள். பிறகு அவர்களை ஒருங்கிணைத்தால் பாதி வேலை முடிந்துவிடுகிறது. செர்கிள் எக்ஸ் என கழிவு மேலாண்மை நிறுவனம் கழிவுகளை மீண்டும் சுத்தப்படுத்திய இடத்தில் யாரும் போடா

நீர்நிலைகளில் எளிதாக கழிவுகளை அகற்ற உதவும் புதுமையான கருவி!

படம்
  பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் அஸூர்!  கடல், ஆறு, ஏரி, குளம் குட்டை என அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் நிரம்பியுள்ளன. நிலத்தில் பெருகிய பிளாஸ்டிக் குப்பைகள் நீர்நிலைகளிலும் பரவத் தொடங்கி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இவற்றை அகற்றுவதற்கு உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் முயன்று வருகின்றன. அப்படி ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம்தான் இச்தியோன்(Itchion). இந்த நிறுவனம் தயாரித்துள்ள புதிய தொழில்நுட்பம் கொண்ட கருவி மூலம் கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளை எளிதாக அகற்ற முடியும்.  இச்தியோன் என்ற நிறுவனத்தின் பிளாஸ்டிக் அகற்றும் கருவியின் பெயர் அஸூர் (azure). இக்கருவி நீர்நிலையில் அடிப்பரப்பில் சென்று பிளாஸ்டிக்குகளை மேலே தள்ளுகிறது. கூடவே பொருத்தப்பட்ட கேமரா மூலம் அங்குள்ள பிளாஸ்டிக் பொருட்களை புகைப்படம் எடுத்துக்கொள்கிறது. இதன் மூலம் தினசரி 80 டன் கழிவுகளை அகற்ற முடியும். இக்கழிவுகளை சரியான முறையில் பிரித்து மறுபடியும் பயன்படுத்தலாம் அல்லது மறுசுழற்சி ஆலைகளுக்கு அனுப்பலாம்.  இச்தியோன் நிறுவனத்தின் அஸூர் கருவி, விரைவில் ஈகுவடார் நாட்டின் காலபகோஸ் தீவில் நிறுவப்படவ

பெருந்தொற்று கால எழுத்தாளர்கள்! - குதிரை சவாரி, முன்னோர்களின் கதை, கலாசாரம் சார்ந்த கேள்வி, குறைந்த கழிவுகள்

படம்
  எழுத்தாளர் சஹர் மன்சூர் தரிபா லிண்டெம் எழுத்தாளர், நேம் பிளேஸ் அனிமல் திங் - ஜூபான் புக்ஸ் தரிபா, மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்தவர். தற்போது மும்பையில் சுங்கத்துறையில் கூடுதல் கமிஷனராக பணியாற்றுகிறார். தனது முன்னோர்களைப் பற்றிய கதை மனதில் சுனை நீராக பெருக எழுத தொடங்கியிருக்கிறார். இந்த வேலை தொடர்ச்சியாக நடைபெறவில்லை. ஆனாலும் கிடைத்த நேரத்தில் நூலை எழுதிக்கொண்டே வந்திருக்கிறார். அப்படித்தால் இவரது புதிய நூல் பிரசுரமாகியிருக்கிறது. 34 வயதாகும் தரிபா, எனக்கு நூல் பிரசுரமாவது பெரிய பிரச்னையாக இருக்கவில்லை. புதிய எழுத்தாளர்களுக்கு இப்போது பிரசுரங்கள் வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்கிறார்.  தரிபா லிண்டெம் இப்போது நம்மிடம் பேசும்போது கூட நான் தனியாக அமர்ந்து நூலை எழுதுவேன். அது நூலாக வெளியாகும் என்பதை யோசிக்கவே முடியவில்லை என்கிறார்.  யஷாஸ்வினி சந்திரா எழுத்தாளர், எ டேல்  ஆப் தி ஹார்சஸ் கலை வரலாற்று ஆய்வாளர், குதிரை சவாரிக்காரர் என்றுதான் சந்திராவைச் சொல்ல முடியும். இவர் தனது குதிரை தொடர்பான ஆர்வத்தை முன்வைத்து வரலாற்று பின்னணியில் நாவலை எழுதி பான் மெக்மில்லனில் வெளியிட்டிருக்கிறார். பெருந்தொற்று

தலைமுறைகளை காப்பாற்றும் கலை ஐடியா!- துணிக்கழிவுகளிலிருந்து கலைப்பொருட்கள் தயாரிக்கும் பெண்மணி!

படம்
  2017ஆம் ஆண்டு ஸ்ரீநிதி உமாநாதன் திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்திற்கு சுற்றுப்பயணமாக சென்றார். போகும் வழியில் மேல காலகண்டர் கோட்டை அருகே நிறைய கழிவுகள் கிடப்பதைப் பார்த்தார். அவற்றில் பெரும்பாலானவை துணிக்கழிவுகள்தான்.  அப்போது பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த 23 வயது பெண்தான் அவர். அப்போதே முடிவு செய்துவிட்டார். இனி பேஷன் டிசைனராக மாறினாலும் கூட கழிவுகளை முடிந்தளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என முடிவு செய்துகொண்டார். இப்போதுவரை துணிகளை மறுசுழற்சி செய்வது பற்றியும், சூழலுக்கு ஆபத்தில்லாமல் வாழ்வதும் பற்றியும் பிரசாரம் செய்.து வருகிறார்.  இரண்டாவது ஆண்டு படிப்பின்போது, ரீடெய்லர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அதில் பயன்படுத்திய துணிவகைகளைப் பயன்படுத்தி பைகள், தலையணை உறைகள், ஸ்க்ரீன்கள், சிறு பைகள், கால் மிதியடிகள் என நிறைய பொருட்களை தயாரிக்கத் தொடங்கினார். மாற்றுத்திறனாளியான தனது சகோதரரிடமிருந்து, துணிகளை எப்படி கலைப்பொருளாக மாற்றவேண்டும் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டார். பிறகு இப்படி தயாரித்த பொருட்களை திருச்சியில் உள்ள என்எஸ்பி சாலையில் உள்ள கடைகளில் விற்பனைக்கு

கரையான்புற்று எப்படி உருவாகிறது?

படம்
  கரையான்கள் மரம், செடிகளில் வெளிப்புற ஓட்டிலுள்ள செல்லுலோஸை (cellulose) உண்ணும் பூச்சி இனத்தைச் சேர்ந்தவை. எறும்பு, குளவிகள் ஏன் கரப்பான்பூச்சிகளுக்கும் நெருங்கிய உறவுகொண்டவை. உலகம் முழுவதும் 2,750 கரையான் பூச்சி இனங்கள் உள்ளன.  காடுகளில் இறந்துபோன மரங்களை அரித்து தின்று மண்ணுக்கு வளம் சேர்க்கின்றன. அதேவேளையில் கட்டுமானங்களிலுள்ள  மரப்பொருட்களையும் விட்டுவைப்பதில்லை. இதன் காரணமாக கட்டிடங்கள் பலவீனமடைகின்றன.  கரையான்கள் ஆப்பிரிக்காவின் சாவன்னா, பசிபிக் கடல் பகுதிகள், பருவமழைக்காடுகளில் புற்றைக் கட்டி வாழ்கின்றன. மரங்களை அரித்து நார்ச்சத்து பொருளான செல்லுலோஸை அதிகளவு உண்டாலும் அதனை எளிதில் செரிக்க ஒருவித பாக்டீரியாவை உடலில் கொண்டுள்ளன. கரையான் புற்றுகள் (termitarium) உருவாக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதில் 2 லட்சம் கரையான்கள் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.    கட்டுமானப் பொருட்கள் கரையான்கள், தூய்மையான மண் மற்றும் தம் கழிவுகளைக் கொண்டு புற்றுகளை எழுப்புகின்றன. இவை விரைவில் காய்ந்துவிடுவதால் உறுதியாக இருக்கும்.  இடம்  உயர்ந்த மலைப்பகுதி, மரங்களின் அடிப்பகுதி, நிலத்த

விவசாய கழிவுகளை மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தலாம்? பஞ்சாப் அரசு முன்னெடுக்கும் புதிய செயல்முறை

படம்
            வி்வசாயக்கழிவுகள் மூலம் மின் உற்பத்தி ! உலகம் முழுவதும் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலைகள் மெல்ல மூடப்பட்டு வருகின்றன . நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பது அதிகளவு கார்பன் வாயுக்களை வெளியிடுகிறது . எனவே , உலக நாடுகள் நிலக்கரியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலைகளை மெல்ல மூடி புதுப்பிக்கும் ஆற்றல் ஆதாரங்களை ஊக்குவித்து வருகின்றன . இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் பஞ்சாப் மாநிலத்தில் பதிந்தா நகரில் செயல்பட்டு வந்த குருநானக் தேவ் மின்னாலை மூடப்பட்டது . அந்த இடமும் கூட விற்கப்பட்டுவிட்ட செய்தி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது . இந்திய மின்சார ஆணையம் , ஜப்பானிய நிலக்கரி ஆற்றல் மையம் ஆகிய இரு நிறுவனங்களு்ம் இணைந்து இனி விவசாயக் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கவிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளன . இதன்மூலம் விவசாயிகளுக்கு வருமானம் கிடைப்பதோடு , கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் மாசுபாடும் தடுக்கப்படும் . 2018 ஆம் ஆண்டு மேற்சொன்ன இரு நிறுவனங்களும் செய்த ஆய்வு அடிப்படையில் , 440 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் ஆலையை புதுப்பிக்கும் ஆற்றல் கொண்டதாக

ஆட்டோ டிஸ்போஸபிள் சிரிஞ்சுகள் பயன்பாட்டுக்கு வரவேண்டும்!

படம்
            டாக்டர் ஹெ்ஸ் ராட்டி நோயியல் மருத்துவர் இந்தியாவில் பயன்படுத்தப்படும் சிரிஞ்சுகள் பாதுகாப்பானவையா ? சிரிஞ்சுகளை மீண்டும் பயன்படுத்துவது இந்தியாவின் பொதுவான விருப்பம் . பொதுவாக சிறு நகரங்கள் , கிராமங்களில் இப்படித்தான் சிரிஞ்சுகளை பயன்படுத்துகிறார்கள் . பயன்படுத்திய சிரிஞ்சுகளை மருத்துவக்கழிவுகளை சரியான முறையில் டிஸ்போஸ் செய்வதும் கிடையாது . இந்த சிரிஞ்சுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் சந்தையில் விற்கப்படுவது உண்டு . இதனால் ரத்தம் சார்ந்த நிறைய தொற்றுநோய்கள் ஏற்படுகின்றன . இதற்கு ஒரே தீர்வு மருத்துவக்கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றுவதற்கான சட்டங்களை உருவாக்கவேண்டும் . இப்படி இந்தியாவில் நடைமுறையில் உள்ள சட்டத்தை மருத்துவமனைகள் பின்பற்றி வருகின்றன . இப்படி என்னென்ன நோய்கள் ஏற்படும் ? எய்ட்ஸ் , மஞ்சள்காமாலை , ரத்தம் தொடர்பான பிற தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது . இதற்கு என்ன தீர்வு ? ஆட்டோ டிசேபிள் சிரிஞ்சுகளை பயன்படுத்தவேண்டும் . அனைத்து மாநில அரசுகளும் இதனை பயன்படுத்தவேண்டும் . உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாட்டு விதிமுறைப்பட