பிணத்துடன் திருப்தியான தூக்கம் - டென்னிஸ் நீல்சன் விளையாட்டு
அசுரகுலம் - இன்டர்நேஷனல் டென்னிஸ் நீல்சன் 1945ஆம்ஆண்டு நவ.23 அன்று, ஸ்காட்லாந்தில் ஃபிராசர்பர்க்கில் பிறந்த சீரியல் கொலைகாரர். 1970 முதல் 80 வரை தீவிரமாக செயல்பட்டு நிறைய பேரை வைகுண்ட பிராப்தி அடைய வைத்தார். ஓரினச்சேர்க்கை மீது ஆர்வம் கொண்டவர். 1978ஆம் ஆண்டில் முதல் ஆளை போட்டுத்தள்ளி எலுமிச்சம்பழத்தை வண்டிச்சக்கரத்தில் நசுக்கி கணக்கைத் தொடங்கினார். அதன்பின்னர் போலீஸ் கணக்கெடுத்தபோது, பன்னிரண்டு பேர்களை விசா வழங்காமல் மேலே அனுப்பி இருந்தார். பெரும்பாலான சீரியல் கொலைகார ர்களின் வாழ்க்கையில் என்ன நடந்ததோ, அதுதான் இவருக்கும் நடந்தது. குடும்ப வாழ்க்கை பெரியளவு இவருக்கு உதவ வில்லை. அம்மா, தனியாக பிரிந்து வாழ்ந்தார். அப்போது அவருடன் தங்கி பாட்டியுடன் வாழ்ந்தார். பின் அம்மா மற்றொரு திருமணம் செய்தபோது, நீல்சன் தனிமரமானார். அவரின் தாத்தா இறந்தபோது நீல்சனின் மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டது. அவரின் இறந்த உடல் அவரின் மனநிலையில் உறுத்தலாக இருந்தது. பின்னர், படிப்பு முடிந்த தும், ராணுவத்தில் சேர்ந்தார். அங்கு போரிடவெல்லாம் செல்லவில்லை. சமையல்கார ராக இருந்தார். பின்னர் அங்கிருந்து வெ