இடுகைகள்

சுதந்திரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கருப்பினத்தவருக்கான புரட்சிப்பாடலை பாடியவர் - ஆந்த்ரா டே

படம்
  ஆந்த்ரா டே  andra day சூப்பர் பௌல் போடியத்தில் கருப்பினத்தவரின் தேசியகீதத்தை பாடவேண்டும் என்பதுதான் டேவின் கனவு. ஏற்கெனவே பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் பாடி புகழும், பெயரும் பெற்றவர், எதற்கு சூப்பர் பௌல் போடியத்தை முக்கியமாக நினைக்கவேண்டும்? 2015ஆம் ஆண்டு, டே ரைஸ் அப் என்ற பாடலைப் பாடி உலக மக்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த பாடல், இப்போதும் கருப்பினத்தவரின் போராட்டங்களில் ஒலித்து வருகிறது. யுனைடெட் ஸ்டேட்ஸ் வெர்சஸ் பில்லி ஹாலிடே என்ற படத்தில் நடித்தார். அதை இயக்கியவர், லீ டேனியல்ஸ். அதில் சிறப்பாக நடித்ததற்காக ஆஸ்கர், கோல்டன் குளோப்பிற்கு பரிந்துரைக்கப்பட்டார். பாடல்களுக்கு கிராமி விருது பெற்றார். தி டெலிவரன்ஸ், எக்ஸிபிட்டிங் ஃபார்கிவ்னஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவை விரைவில் வெளிவரவிருக்கின்றன.  ரசிகர்கள் ரைஸ் அப் என்ற புரட்சி பாடலைப் போலவே அடுத்தடுத்த பாடல் இருக்கவேண்டுமென நினைக்கின்றனர். ஆனால் டே சற்று வேறுவிதமாக யோசிக்கிறார். அப்படி ரசிகர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்வது தேவையில்லாத அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. நான் எனது பாடலை சுதந்திரமாக இருக்கவிரும்புகிறேன் என்றார். பாடகர் ஹாலி

சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு வயது 70! - அடுத்த சீன அதிபர் யார்?

படம்
  ஷி ஜின்பிங், சீன அதிபர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு வயது 70 சீன அதிபர் ஷி ஜின்பிங், மூன்றாவது முறையாக அதிபராக பொறுப்பேற்று ஆட்சியை நடத்திவருகிறார். இது அவருக்கு மூன்றாவது ஐந்தாண்டு. மார்ச 2023இல் ஆட்சியை தக்கவைத்துள்ளவர், வாழ்நாள் முழுக்க அதிகாரத்தில் இருப்பதற்கு ஏற்றபடி கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள தனது ஆதரவாளர்களை தனது அணியில் திரட்டியுள்ளார். தனக்கு எதிராக உள்ளவர்களை முற்றாக விலக்கியுள்ளார் என அசோசியேட் பிரஸ் தனது செய்தியில் கூறியுள்ளது. கடந்த ஜூன் பதினைந்தாம் தேதி அதிபர் ஷி ஜின்பிங் எழுபது வயதை எட்டினார். அமெரிக்கா, இங்கிலாந்து என பல்வேறு நாடுகளுடன பகை ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டில் பொருளாதாரம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. அந்த நேரத்தில் அழுத்தத்தை சமாளித்து அதிகாரத்திலும் இருக்கிறார் ஷி ஜின்பிங். ஷி ஜின்பிங்கிற்கு எழுபது வயதாகிவிட்டது. அடுத்த அதிபராக யார் வருவார் என்ற கோணத்தில் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையாளர்   சுன் ஹான் வாங் பார்டி ஆஃப் ஒன் என்ற நூலை எழுதியிருக்கிறார். அதில் அடுத்து அதிபராக வருபவரின் சாத்தியங்களை அலசியிருக்கிறார். உண்மையில், சீனாவில் அடுத்த அதிப

கண்டுபிடிப்புகளில் ஆய்வுகளில் இந்தியர்கள் பின்தங்குவதற்கான காரணங்கள் - சேட்டன் பகத்

படம்
  சாம் ஆல்ட்மேன், துணை நிறுவனர் ஓப்பன் ஏஐ இந்தியர்கள் தமக்குத்தாமே பெருமை பட்டுக்கொள்ளக்கூடியவர்கள். ஆனால். இந்த மனப்பான்மை நம்மில் பெரும்பாலானோர்க்கு பாதகத்தையே அதை நாம் தொடக்கத்திலேயே அறிவதில்லை. அண்மையில் ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் துணை நிறுவனர் சாம் ஆல்ட்மேன், இந்தியாவுக்கு வந்தார். அவரிடம் இந்திய ஸ்டார்ட்அப்கள் பத்து மில்லியன் டாலர் செலவில் சாட் ஜிபிடியைப் போல ஏஐ மாடலை உருவாக்க முடியுமா என்று கேள்வி கேட்கப்பட்டது. ‘’பத்து மில்லியன் டாலர் செலவில் அப்படி மாடலை இந்தியா உருவாக்க முடியாது. இன்றளவும் அப்படி உருவாக்கிவிடவில்லை. அப்படி உருவாக்கினால் கூட அது சாட் ஜிபிடியோடு போட்டியிடமுடியாது’’ என்று கூறினார். உடனே அவருக்கு சவால் விட்டு ட்விட்டர், லிங்க்டு இன் தளங்களில் பதிவுகள் இடப்பட்டன. ‘’சாமின் சவாலை ஏற்றுக்கொண்டோம்’’.’’ செய்துமுடிப்போம்’’ என பகிரங்க சவால்கள் விடப்பட்டன. பிறகு, நிலவரம் கலவரமாவதை உணர்ந்த சாம், பத்து மில்லியன் டாலர்கள் என்ற செலவில் சாட் ஜிபிடி உருவாக்க முடியாது என்ற கருத்தில் தான் பேசியதாக கூறினார். இந்தியாவில் பொருளாதார முன்னேற்றத்திற்காக சேவைத்துறையில் புகழ்பெற்ற நிறுவனங்

மனப்பூர்வமாகத் தேடினால் சுதந்திரத்தைப் பெறலாம்! - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி எப்படி தேர்ந்தெடுப்பது -2 உங்கள் வாழ்க்கை என்பது தேர்வுகளாக அமைந்துள்ளது. உங்களின் தேர்வு மகிழ்ச்சியையும், திருப்தியையும் தருவதால் அதை நீங்கள் விரும்புகிறீர்கள்.  இந்த தேர்வு, உங்களுக்குப் பிடித்திருக்கிறது. அடுத்த நாள் இந்த தேர்வு உங்களுக்கு பிடிக்காமல் போய்விடலாம். எனவே, நீங்கள் தேர்ந்தெடுத்த விஷயங்களை உடனே கைவிட்டுவிட்டு வேறு விஷயங்களுக்கு நகர்ந்துவிடலாம். ஆகவே,  உங்களது தேர்வு என்பது உணர்வுநிலையைச் சேர்ந்தது. நீங்கள் அதை சுயநினைவு சார்ந்தும் இருநிலைப்பாடுகள் சார்ந்தே எடுக்கிறீர்கள். ஆனால் எடுக்கும் தேர்வு நிலைப்பாடு, எதிர்மறையாக அமைகிறது. எதிர்மறையாகச் செல்லும் தேர்வுகள் பற்றி நீங்கள் கவனமுடன் இருந்தால்,  உண்மை எதுவென அடையாளம் கண்டுகொள்ளலாம். உண்மையை அடையாளம் காண்பதற்கான ஆர்வம், வேட்கை இல்லை என்பதால் உணர்வு நிலை சார்ந்து எதிர்மறையான தேர்வுகளே கிடைக்கின்றன. இந்த நிலையில் மனம் முழுக்க எதிர்மறை தேர்வுகளிலிருந்து எளிதாக விடுதலையாவதில்லை. இச்சூழலில், விழிப்புணர்வாக, செழிப்பான நிலையில் மனம் இருக்காது. ஒருவரின் எதிர்மறைத் தேர்வுகளில் சுதந்திரம் இருப்பது, சாதனை என்று க

காந்தியின் ராமன் - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  காந்தி காந்தி பிறந்து 150 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. வாழும்போதும், மறைந்த பிறகும் கூட அவரளவுக்கு சர்ச்சையான மனிதர் இந்தியாவில் குறைவுதான். ஆன்மிக குருக்களை மறந்துவிடுங்கள். வாழ்க்கை, த த்துவம், பொருளாதாரம், தொழில், இயற்கைச் சூழல் என பல்வேறு தளங்களிலும் காந்தியின் செல்வாக்கு இன்றும் உள்ளது.  இதற்கு முக்கியமான காரணம், காந்தி என்ற மனிதரின் மூலமாக ஒருவர் பெறும் ஊக்கம் பல்வேறு செயல்களாக மாறியுள்ளது. இதற்கு நிறைய இயக்கங்களை அடையாளமாக கூறலாம்.  காந்தியை எப்படி புரிந்துகொள்வது என்பது இன்று நமக்கிருக்கும் சிக்கல். ஏனெனில் காலந்தோறும் காந்தியை எப்படி பார்ப்பது, கொள்கைகளை புரிந்துகொள்வது பற்றி நூல்கள் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. காந்தியின் ராமன் நூல், பல்வேறு ஆங்கில நாளிதழ்களில் வெளியான கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு. நூலில் எழுத்தாளர் ராமச்சந்திர குஹாவின் நேர்காணலும் உள்ளது. இவர் தனது நூலில் வரலாற்றில் காந்தியின் இடத்தை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். காந்தியின் போராட்டம் எப்படிப்பட்டது, தென்னாப்பிரிக்காவில் அவரின் போராட்டம், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு எப்படி உதவியது என்பதை நூலில் வாசி

சமூகம் என்பது என்ன?

படம்
  அகம் புறம் ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள் கே. சமூகம் என்பது என்ன? ப. சமூகம் , குடும்பம் என்றால் என்ன என்று பார்ப்போம். இதை நாம் படிப்படியாக கண்டுபிடிக்க முயல்வோம். எப்படி சமூகம் உருவாக்கப்பட்டது, குடும்பம் என்றால் என்ன இதுதான் எனது குடும்பம் என்று நீங்கள் கூறுகிறீர்கள்.   இந்த அமைப்பில் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை ஆகியோர் உள்ளனர். இவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள், உடை, நகைகள் என தனியாக உள்ளன. இதைப்போலவே பிறரும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்கின்றனர். குடும்பம் என்பது ஒருவரின் பாதுகாப்பான வாழ்க்கைக்கானது. அப்பா, மகனைப் பாதுகாப்பார். அவரின் சொத்துக்களும் அப்படித்தான் குடும்பத்தினரால் பாதுகாக்கப்படும்.   இப்படித்தான் குடும்ப அமைப்பு செயல்படுகிறது. உங்களது குடும்பத்தைப் போலவே தான் பிறரது குடும்பமும் உள்ளது. ஒரு குடும்பத்திற்குள் இன்னொரு வெளி நபர் வரக்கூடாது என்பதற்காக சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதில் அதிக உறுப்பினர்கள் கொண்ட குடும்பம், அதிக சொத்து, அதிக வாகனங்கள்,   உடைகளை என வாழ்கின்றனர். இவர்கள் பிற குடும்பங்களை கட்டுப்படுத்தும் அதிகாரத்தைப் பெறுகின்றனர். மேலும், சட்டங்களை

பிரிவினை காயங்களை ஆற்ற முயன்ற காந்தி!

படம்
  காந்தி தென்னாப்பிரிக்காவில் நடத்திய சத்தியாகிரகத்தின் இந்திய முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்தினார் . ஆனால் வெளிநாட்டில் பெற்ற வெற்றபோல உடனே இங்கு வெற்றி கிடைக்கவில்லை . 1930 ஆம் ஆண்டு ரௌலட் சட்டத்தை எதிர்த்து போராடியபோது மக்கள் ஆங்கிலேயர்களை அடித்து வன்முறையை உருவாக்கிய சம்பவங்கள் நடந்தன . இயக்கத்தைத் தொடங்கிவிட்டோம் எனவே , அப்படியே நடத்தி சுதந்திரத்தைப் பெறுவோம் என காந்தி நினைக்கவில்லை . போராட்ட அமைப்பைத் தொடங்கி திடீரென இடையில் போராட்டத்தை நிறுத்துவது தனக்கு அவமானம் என காந்தி நினைக்கவில்லை . தான் நினைத்த வடிவில் போராட்டம் நடைபெறவேண்டும் என பிடிவாதமாக இருந்தார் . இதன் விளைவாக சிலமுறை தான் தான் நடத்த்திட்டமிட்ட போராட்டங்களை நோக்கம் நிறைவேறும் முன்னரே நிறுத்தியிருக்கிறார் . பிறரைப் புரிந்துகொண்டு மக்களின் நலன்களை முன்னிறுத்த காந்தி முயன்றார் . அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் . தோல்வியும் அடைந்திருக்கிறார் . நீதிமன்றத்தில் வாதிட முடியாமல் தனது சக வழக்குரைஞர்களிடம் வழக்காடுவதற்கு கோரியவர்தான் பின்னாளில் உலகப் புகழ்பெற்ற ஊடகவியலாளர்களிடம் இந்திய சுதந்திரம் பற்றி பேசினார் . அவர்களையும

காந்தியின் உருவத்தைப் பார்த்து நாம் பெறும் செய்தி!

படம்
  பொதுவாக காந்தியின் வழிமுறைகளாக கூறுவது என்ன ? அமைதி , அநீதிக்கு எதிரான உறுதியான நிலைப்பாடு , எதிர்ப்பது , போராடுவது ஆகியவைதான் . இதைத் தாண்டி உணவு , உடை , குடிநீர் , மின்சாரம் ஆகியவற்றை வீணாக்காமல் பயன்படுத்துவதை காந்தியின் பெயர் சொல்லித்தான் சொல்லுவார்கள் . உள்நாட்டு துணிவகைகளைப் பயன்படுத்துவது இதில் முக்கியமானது . காதியில் கிடைக்கும் காடாத்துணிகளை தைத்து உடைகளாக்கி போடுவது ஒரு காலத்தில் நாகரிகமாக இருந்தது . இன்று காதி , சர்வோதய சங்கத்தில் விற்கும் சட்டைகள் சற்று பெரிதாக வினோதமான வடிவமைப்பில் இருந்தாலும் , துணிகளை வாங்கி சாதுரியமாக தையல்காரரிடம் விருப்பம் போல தைத்துக்கொள்ளும் புத்திசாலிகளும் உண்டு . உடைகளை பழசாகிவிட்டால் தூக்கி எறிவதை காந்தி வெறுத்தார் . அதை கிழியும் வரையில் பயன்படுத்தலாம் . கிழிந்துவிட்டாலும் கூட அதை பயன்படுத்தும் வழிகள் உண்டு . இது நம்மை காசு செலவழிக்காத கருமியாக காட்டலாம் . ஆனால் அப்படி பயன்படுத்த கற்றால் உங்களுக்கு செலவுகள் குறையும் . பொருட்களால் வீட்டை நிறைக்க மாட்டீர்கள் . வாழ்க்கையும் எளிமையாக மாறும் . காந்தியின் சத்திய சோதனை நூலை ஒருவர் படிக்கும்போது அவர் பள

பெண்களுக்கு ஆடுகள் தரும் பொருளாதார சுதந்திரம்! - ஆகாகான் பௌண்டேஷனின் உதவி!

படம்
 ஆடுகள் தரும் பொருளாதார சுதந்திரம்! இந்தியா, டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தில் உச்சம் தொட்டுள்ளது.  இக்காலத்திலும் கிராமப்புற இந்தியாவை வேளாண்மையும், கால்நடைகளும்தான் தாங்கிப்பிடிக்கின்றன. கிராமங்களில் வீட்டில் வாழும் பெண்கள், கால்நடைகளை வளர்த்தே குடும்பச் செலவுகளைச் சமாளிக்கின்றனர்.   பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்கென, தன்னார்வ அமைப்பான  ஆகாகான் பௌண்டேஷன் திட்டங்களை உருவாக்கி வருகிறது. இந்த அமைப்பு, ஆடுகளுக்கான மருத்துவ உதவிகளை வழங்கும் வகையில்,  கிராம பெண்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கிறது. இதன்மூலம் பெண்கள், ஆடுகளுக்குத் தேவையான மருந்துகள், சிகிச்சையை வழங்கி அதற்கென குறிப்பிட்ட தொகையை சேவைக்கட்டணமாகப் பெறுகின்றனர். இது பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்குகிறது.  கிராமத்தில் ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கும் செவிலியர்களுக்கு, பாசு ஷகி (pashu sakhi) என்று பெயர். இதற்கு இந்தி மொழியில், ’விலங்குகளின் நண்பன் ’என்று பொருள். இந்தியாவில் வாழும் கால்நடைகளின் எண்ணிக்கை, 13 கோடியே 50 லட்சம் ஆகும். நோய்க்கு முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் இறக்கும் கால்நடைகளின் எண்ணிக்கை 40 சதவீதமாக உள்

உக்ரேன் பற்றி முழுமையாக அறிய உதவும் நூல்களின் வரிசை!

படம்
  உக்ரைன் பற்றித்தான் பேச்சு. பலரும் பெருந்தொற்று காலத்தில் போனை எப்படி நோண்டிக்கொண்டே பதற்றத்துடன் இருந்தார்களோ இப்போதும் அதேயளவு பழக்கம் அதிகரித்து வருகிறது என ஊடகங்கள் சர்வே எடுத்து சொல்லி வருகின்றன. போர் காட்சிகள், அழுகை, மரண ஓலம் என அனைத்தும் உடனுக்குடன் காட்சிகளாக சமூக வலைத்தளங்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ரஷ்ய இலக்கியத்தை நிறையப் பேர் படித்திருப்பார்கள். அதன் வழியாக ரஷ்ய நிலப்பரப்பு பற்றி அறிந்தவர்கள் பலர். ஆனால் சோவியத் யூனியன் உடைந்தபிறகு, தனியாக சுதந்திர நாடுகளான பல நாடுகளைப் பற்றி நமக்கு தெரிந்தது குறைவு. இப்போது நாம் பார்க்கப்போகும் நூல்கள் உக்ரைன் பற்றியதுதான்.  தி கேட்ஸ் ஆப் யூரோப் எ ஹிஸ்டரி ஆப் உக்ரைன் செர்கி புளோகி ஹார்வர்ட் உக்ரேனியன் ஆராய்ச்சி கழக தலைவர் புளோகி. இவர் உக்ரைன் நாடு சுதந்திர நாடாகவும் தனி அடையாளத்திற்காகவும் கி.மு.45,000 ஆண்டுகளாக முயன்று வந்துள்ளது என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் முன்வைக்கிறார். இந்த ஆதாரங்களும் சம்பவங்களும் கடந்தகாலத்தை நினைவுபடுத்துவதோடு நிகழ்காலத்தைப் பற்றியும் யோசிக்க வைக்கிறது.  கிரே பீஸ்  ஆண்ட்ரேய் குர்க

தென் ஆப்பிரிக்காவில் இனவெறி ஒழிக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது!

படம்
  சூயஸ் கால்வாய் கட்டப்பட்டபிறகு வணிகம் அதிகரித்ததை இங்கு முன்னமே எழுதியிருக்கிறோம். இதற்கு முன்னர், ஐரோப்பியர்கள் எப்படி வணிகம் செய்தார்கள்? தென் ஆப்பிரிக்கா வழியாக சென்று ஆசியாவை அடைந்து வணிகம் செய்தார்கள். வணிக உதவிகளுக்காக இங்கு பல்வேறு வணிக மையங்களை அமைத்து இருந்தனர். துறைமுகங்களையும் இந்த முறையில் அமைத்து வணிகம் கெடாதபடி பார்த்துக்கொண்டனர்.  தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஆப்பிரிக்க மக்களை இனவெறி கொண்டு பிரித்தனர். அவர்களை ஆப்பிரிக்கானர்ஸ் என்று அழைத்து வந்தனர். டேனியல் மாலன் என்பவர் அங்கு ஆட்சிக்கு வந்ததும் இனவெறிக் கொள்கையை உடனே நடைமுறைக்கு கொண்டு வந்தார்.  இதன் மூலம் அம்மக்களை எளிதாக சுரண்ட முடிந்தது கருப்பின மக்களை பொதுவெளியில் அரசு அனுமதிக்கவில்லை. பார்த்தால் அடி உதை அபராதம் என சென்றது. இவர்களால், நாடாளுமன்றத்திற்கு கூட வரமுடியாது. இதெல்லாம் தென் ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்த பூர்விக மக்களுக்குத்தான் என்றதும் அதிர்ச்சியாக இருக்கும்.  இவர்கள் உள்ள பகுதிகளுக்கு பந்துஸ்தான் என்று பெயர். இந்த மக்களுக்கு அடிப்படையான உரிமைகள் கிடைக்காத காரணத்தால் அமெரிக்கா, ஐ.நா அமைப்பு என இரண்டுமே த

எகிப்து சுதந்திரமான தன்னாட்சி நாடாக அறிவிக்கப்பட்டு 100 ஆண்டு! - எகிப்து

படம்
  எகிப்து தொன்மையான காலங்களில் எகிப்து நிறைய முன்னேற்றங்களைப் பெற்றிருந்தது. அதாவது, குடிமைச்சமூகமாக முன்னேறியிருந்தது. தகவல் தொடர்பு, வேளாண்மை, நகரம், மதம், அரசு நிர்வாகம் என அனைத்தையுமே சொல்லலாம்.  கிரேக்கர்கள், ரோமன்ஸ், பைஸான்டியர்கள், ஓட்டமான் என பலரின் கையில் எகிப்து சென்று வந்தபிறகுதான் அதற்கு விடுதலை கிடைத்தது.  1805ஆம் ஆண்டு ஒட்டமான் தலைவர் முகமது அலி, எகிப்தின் வைஸ்ராயாக இருந்தார். இவர்தான் ஒட்டமான் அரசின் மன்னர் சார்பாக எகிப்தை ஆட்சி செய்தார்.  1882ஆம் ஆண்டு எகிப்தை ஆங்கிலேயர் கைப்பற்றினர். இதற்கு காரணமாக அமைந்ததுதான் ஆங்கிலோ எகிப்திய போர். ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தை வெய்ல்டு புரோடெக்டரேட் என்று அழைக்கிறார்கள். அதாவது சட்டரீதியான ஆட்சி செய்யவில்லை என்று பொருளைப் புரிந்துகொள்ளலாம்.  1914ஆம் ஆண்டு ஒட்டமான் அரசர், முதல் உலகப்போரில் கலந்துகொண்டார். அதில் அதிகாரத்தின் பக்கம் நின்று போரிட்டார்.  பிறகுதான் ஆங்கிலேயர்கள், எகிப்தை சுதந்திர நாடாக அறிவித்தனர்.  1922ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று எகிப்துக்கு சுதந்திரம் அறிவிக்கப்பட்டது. இதனால், ஒட்டமான் அரசின் அதிகாரம் அங்கே இல்லாமல் ஆனது.

சுதந்திரமான பேச்சுரிமையை வலியுறுத்திய பத்திரிகையாளர்களுக்கு நோபல் விருது!

படம்
  பத்திரிகையாளர்கள் மரியா ரெஸா, டிமிட்ரி முரடோவ் ஆகியோருக்கு இந்த ஆண்டிற்கான நோபல் அமைதிப்பரிசு கிடைத்துள்ளது. இவர்கள் இருவரும் பிலிப்பைன்ஸ் மற்றும் ரஷ்யாவில் நடைபெற்ற ஆட்சி முறைகேடுகள், ஊழல்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தியுள்ளனர்.  சுதந்திரமான பேச்சுரிமைக்காக பாடுபட்டதற்காக மேற்சொன்ன பத்திரிகையாளர்களுக்கு அமைதிப் பரிசு வழங்கப்படுகிறது என நோபல் கமிட்டி கூறியுள்ளது. இந்த பத்திரிகையாளர்கள் பிற பத்திரிகையாளர்களுக்கு முன்னோடியானவர்கள். இவர்கள் ஜனநாயகத்தையும் அதன் மதிப்பையும் காக்க உழைத்துள்ளனர் என இந்த அமைப்பு இதுபற்றிய அறிவிப்பில் கூறியுள்ளது.   மரியா ரெஸா, 2012ஆம் ஆண்டு ராப்ளர் எனும் இணையதளத்தைத் தொடங்கினார். இதில் பிலிப்பைன்ஸ் அதிபர் டூடெர்டேவின் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக பல்வேறு செய்திகளை இணையத்தளத்தில் வெளியிட்டார். 2018ஆம் ஆண்டிற்கான மனிதராக இவரை அமெரிக்காவின் டைம் பத்திரிகை தேர்ந்தெடுத்தது.  முரடோவ், 1993ஆம் ஆண்டு ரஷ்யாவில் நோவாயா கெசட்டா எனும் சுதந்திரமான பத்திரிகை ஒன்றைத் தொடங்கினார். இந்த பத்திரிக்கை அதிகாரத்தை கேள்வி கேட்கும் வகையில் பல்வேறு கட்டுரைகளை எழுதி வர

இந்திய மண்ணில் ஜனநாயக சிந்தனைகளை ஊன்றியவர்! - நேருவின் போராட்டகால சிந்தனைகள்

படம்
  நேருவின் போராட்டகால சிந்தனைகள் தொகுப்பாசிரியர் அர்ஜூன் தேவ் நேஷனல் புக் டிரஸ்ட்  இந்த நூல் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தைப் பற்றி பேசுகிறது. அந்த காலகட்டத்தில் உலகளவில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் பற்றி நேரு தன் மனதில் தோன்றிய கருத்துகளை எழுதினார். பேசினார். அதன் ஒரு பகுதிதான் தொகுப்பாளர் அர்ஜூன் தேவால் தொகுக்கப்பட்டுள்ளது.  உலகளவில் நடைபெறும் போர், அரசியல் தந்திரங்கள், வல்லரசு தகராறுகள், பொருளாதார வளர்ச்சி என பல்வேறு விஷயங்களில் நேருவின் சிந்தனை ஆச்சரியம் தருகிறது. ஏறத்தாழ இந்தியாவின் முதல் பிரதமராக ஆன  உடனே இவரது சிந்தனைகள் அரசியல் கொள்கைகளாக வடிவம் பெற்றன. அதுவும் கூட நாட்டின் நலனை முன்வைத்துத்தான் . பொதுத்துறை நிறுவனங்கள் இன்று விற்கப்பட்டு வரும் நிலையில் அவர் அந்த நிறுவனங்களை தொடங்கியது மக்களை ஏழ்மையில் வீழ்த்த பிரதமர் மோடிக்கு பொருளாதார ஆலோசனை கூறிய அடிபொடிகள் கூக்குரலிடுகின்றனர்.  அன்று அரசு முழுப்பொறுப்பில் தனது நிதி முதலீட்டைக் கொண்டு அரசு நிறுவனங்களைத் தொடங்கியிருக்காவிட்டால் மக்களுக்கு பெரும்பாலான சேவைகள் சென்றே சேர்ந்திருக்கிறது. இன்று பொதுதுறை நிறுவனங்களிடமிருந்து