இடுகைகள்

தோல்வி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கிரியேட்டிவிட்டி பற்றி சாதனையாளர்கள் கூறும் கருத்துகள்!

படம்
  கிரியேட்டிவிட்டி பற்றி பிரபலங்கள் கூறிய கருத்துகள்… உங்களின் உள்ளுணர்வை நம்புங்கள். நான் பிறர் கூறுவதை கவனமாக கேட்பேன். ஆனால் நாளின் இறுதியில், என்னுடைய   முடிவை   நானே தீர்மானிப்பேன். இப்படி செயல்படுவது, பின்னாளில் நீங்கள் உருவாக்காத முடிவுக்காக வருத்தப்படுவதை விட சிறந்ததுதான். -உடை வடிவமைப்பாளர் பீட்டர் டூ சில சமயங்களில் நமக்குள்ளிருந்து இயற்கையாக, வேகமாக வெளியே வரும் விஷயங்களை சிறந்த படைப்பு என கொள்ளலாம். அதுதான் உங்களுக்கு கிடைத்த பரிசு. அதை நம்புங்கள். -பத்திரிகையாளர் ஜோ ஹோல்டர் உங்களின் உள்ளுணர்வை நம்பி சவால்களை எதிர்கொள்ளுங்கள். அது அன்றைய சூழலுக்கு எதிராக கூட இருக்கலாம்.   பரவாயில்லை. நீங்கள் வேலை செய்யும் முறையைக் கவனியுங்கள். அங்குதான் உண்மையான மாயம் நடக்கிறது. வேலையின் முடிவை விட அதன் செயல்முறையில் கவனம் வைத்தால் நாம் இலக்கை நோக்கிய பயணத்தை விரைவில் அடையும் வழிகள் கிடைக்கும். -யூரி சோய், துணை நிறுவனர், சவில் ரோ டெய்லர் யூரி அண்ட் யூரி உங்கள் உள்ளுணர்வை ஓட்டியிருங்கள். நான் ஆராய்ச்சி செய்யும்போது சுதந்திரமாக அதை செய்யும்போதுதான் சிறப்பாக இயங்கியிருக்கிறேன்.

கிரியேட்டிவிட்டியை அடையாளம் காண்பது எப்படி? - சில அறிவுறுத்தல்கள்....

படம்
  புதுமைத்திறன் உலகம் கிரியேட்டிவிட்டியை உருவாக்கிட பிறருக்கு தெரியாத கலை வடிவம் ஏதும் கிடையாது என எழுத்தாளர் ரிக் ரூபின் கூறுகிறார். இவர் இதுபற்றி, தி கிரியேட்டிவ் ஆக்ட் – எ வே ஆஃப் பீயிங் என்ற நூலை எழுதியிருக்கிறார்.’’ நீங்கள் கிரியேட்டிவிட்டியை நாடகம் போல எடுத்துக்கொண்டு முன்னேறி செல்லுங்கள். நிஜ உலகைப் போலவே அனைத்து விஷயங்களையும் உருவாக்குங்கள். அது சிறியதாக அல்லது   வினோதமாக கூட இருக்கலாம். புதிய பரிசோதனை முயற்சிகளை செய்து பாருங்கள். உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் உருவாக்கியதை காட்ட நினைத்தால் உலகில் அதை வெளியிடலாம்.’’ என்பது இவரது கருத்து. தனி பார்வை ‘’உங்களுக்கென தனி பார்வையை உருவாக்கிக்கொள்ளுங்கள்’’ என ஒளிப்பதிவாளர் ரோஜர் டீக்கின்ஸ் கூறுகிறார். இவர் 50 திரைப்படங்களைப் பார்த்து அதன் வழியாக தனக்கான கிரியேட்டிவிட்டி பாதையை உருவாக்கிக்கொண்டார். தன்னை வழிநடத்திய திரைப்படங்களாக எ பியூட்டிஃபுல் மைண்ட் தொடங்கி 1917 என்ற திரைப்படங்கள் வரை குறிப்பிடுகிறார்.’’யாரையும் நகல் செய்யாதீர்கள்’’ என்றும் குறிப்பிட மறக்கவில்லை. ஆற்றலின் பிரதிபலிப்பு ‘’நான் திரைப்படங்களுக்கான நடிகர்களை அடைய

குப்பையிலிருந்து மின்சாரம் - கேரளாவின் முயற்சி வெல்ல வாய்ப்புண்டா?

படம்
  திடக்கழிவு மேலாண்மை  குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பதில் லாபம், சவால்கள் என்னென்ன? கேரளா மாநில அரசு, கோழிக்கோட்டில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இது மாநிலத்திலேயே முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.   இரண்டு ஆண்டுகளில் ஆறு மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். நாட்டில் நூற்றுக்கும் மேலான குப்பையிலிருந்து மின்சாரம் திட்டங்கள் தொடங்கப்பட்டன. ஆனால் அவற்றில் இன்றும் செயல்பாட்டில் இருப்பவை மிகச்சிலதான். என்ன பயன்? மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம். இதன்மூலம் திடக்கழிவு மேலாண்மையைச் செய்வதோடு, மாநில மக்களுக்கு மின்சாரமும் கிடைக்கிறது. இந்தியாவில் உள்ள திடக்கழிவுகளில் 60 சதவீத கழிவுகள் உயிரியல் ரீதியாக சிதைவடையக்கூடியவை. அதாவது தானாகவே மட்க கூடியவை. 30 சதவீத கழிவுகள் உலர் கழிவுகளாக நிலத்தில் தேங்குகின்றன. 3 சதவீத கழிவுகளான கடினமான பிளாஸ்டிக், உலோகம், இ கழிவுகள் ஆகியவற்றை மறுசுழற்சி செய்யமுடியும். மீதமுள்ள பிளாஸ்டிக், துணிகள் எல்லாமே மறுசுழற்சி செய்ய முடியாத நிலையில் உள்ளவை. இந்த கழிவுகளைப் பயன்படுத்தி

இந்தியா எதிர்காலத்தில் அணு ஆயுத சோதனைகளை செய்ய வாய்ப்புள்ளது! - ஆஸ்லே டெல்லிஸ்

படம்
  ஆஸ்லே டெல்லிஸ்  ஆஸ்லே டெல்லிஸ், டாடா ஸ்ட்ரேட்டஜிக் அஃபேர்ஸ் பிரிவு தலைவராக இருக்கிறார். இவர் முன்னதாக கார்னெகி உலக அமைதி நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். தற்போது அசிட்ரிமிக்ஸ் – நியூக்ளியர் ட்ரான்ஸ்மிஷன் இன் சதர்ன் ஆசியா நூலை எழுதி வெளியிட்டுள்ளார். உங்கள் நூலில் நீங்கள் கூறியுள்ள அடிப்படையான விஷயம் என்ன? 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு நான் அணு ஆயுதங்கள் பற்றி நூல் எழுத நினைத்தேன். அதனால் அமெரிக்காவில் அதிபர் புஷ் நிர்வாகத்தில் எனக்கு வேலை கிடைத்தது. இதனால் நூலை எழுத முடியவில்லை. மீண்டும் திரும்ப நூலை எழுதியபோது சில விஷயங்களை நான் கவனத்தில் கொண்டேன். அமெரிக்க –இந்திய அணு ஒப்பந்தம் நடந்தபோது நான் அமெரிக்காவில்தான் வேலை செய்துகொண்டிருந்தேன். தெற்காசியாவில் சீனாவுக்கு முக்கியமான இடம் உண்டு. இதற்கு இடையில் சீனாவுக்கும் ரஷ்யாவிற்கும் விரோதம் உருவானது. சீனா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய மூன்று நாடுகளும்   1998ஆம் ஆண்டு முதலே அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து முக்கியமான தெற்காசிய நாடுகளாக மாறிவிட்டன. மேற்சொன்ன நாடுகளின் விவகாரங்கள்தான் நூலின் அடிப்படையான மையம். 1998ஆம் ஆண்டு முதலாக அது ஆயுதங்கள் தய

பொதுமுடக்கத்தில் மனதிற்கு நம்பிக்கையூட்டும் சில நூல்கள்... உங்களுக்காக....

படம்
                  பொதுமுடக்கத்தில் படிப்பதற்கான சில நூல்கள் தி ஹேப்பியஸ்ட் மேன் ஆப் தி எர்த் எடி ஜாகு எப்படி யூத இனத்தில் பிறந்து வதை முகாம்களிடையே தப்பித்து ஏழு ஆண்டு கள் வாழ்ந்தார் , இந்த நரகமான காலத்தில் வாழும் நம்பிக்கையை கைவிடாமல் இருக்கச் செய்தது எது , எப்படி தனது எண்ணத்தில் உறுதியாக இருந்தார் என்பதை புன்னகையுடன் நீங்கள் படித்து ஆறுதல் பெறலாம் . டீம் கைண்ட்னெஸ் - எ ரிவல்யூஷனரில் கைட் பார் தி வே பார் வீ திங்க் , டாக் அண்ட் ஆக்ட் இன் கைண்ட்னெஸ் உலகம் பல்வேறு சுயநலனுக்காக அரசியலுக்காக பிளவுபட்டு வருகிறது . இந்த இடைவெளியை எப்படி கருணை கொண்டு நிரப்புவது என ஆராய்கிறது இந்த நூல் . கருணையை தினசரி நாம் செய்யும் செயல்கள் மூலம் எப்படி நடைமுறைப்படுத்துவது , அன்பை பிறருக்கு வழங்குவது எப்படி என நூல் வழிகாட்டுகிறது . தி பாய் தி மோல் , தி பாக்ஸ் அண்ட் தி பாக்ஸ் நான்கு நண்பர்களின் வாழ்க்கை வழியாக நம்பிக்கையையும் , நட்பையும் பரப்பும் நூல் இது . 2019 இல் வெளியான நூல் இதுவரை பத்து லட்சம் பிரதிகள் விற்றுள்ளது . நூல் எளிமையாக படிக்கும்படியும் , இதிலுள்ள வசனங்

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக வாய்ப்புள்ளவர் யார்?

படம்
                  அடுத்த தலைவர் ? காங்கிரஸ் கட்சி தலைவர் இல்லாமல் தடுமாறி வருகிறது . உட்கட்சியில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு பொறுப்பேற்க யாரும் தயாராக இல்லை என்பதையே இந்த சூழ்நிலை காட்டுகிறது . சோனியா காந்தி உடல்நிலை சிக்கலால் அவதிப்பட , அடுத்த முழுநேர தலைவர் யார் என்று பலரும் அவரா இவரா என யோசித்து வருகின்றனர் . வாய்ப்புள்ள சிலரை பார்ப்போம் . பவன் பன்சால் இடைக்கால நிர்வாகி , பொருளாளர் . தலைவராக வாய்ப்புள்ளவர் . எளிமையான மனிதர் . அதுவேதான் பலவீனமும் கூட . அனைவரையும் இணைக்கும் திறமை போதாது . திக்விஜய் சிங் மேலவை உறுப்பினர் , காங்கிரஸ் கமிட்டி அழைப்பாளர் மூத்த தலைவர் . மூத்த அரசியல்வாதி என்பதால் இளைஞர்களால் ஏற்கப்படாமல் போக அதிக வாய்ப்புள்ளது . ஆதிர் ரஞ்சன் சௌத்ரி மக்களவை தலைவர் , மேற்கு வங்க காங்கிரஸ் கட்சி தலைவர் மேற்கு வங்க அரசியலில் வேர்பிடித்து வளர்ந்து வந்தவர் . மற்ற அரசியல் சமாச்சாரங்களை அதிகம் அறிந்தவர் அல்ல . முகுல் வாஸ்னிக் சோனியாகாந்திக்கு நெருக்கமான ஆறு உறுப்பினர்களில் இவரும் ஒருவர் . மத்திய

தேர்வால் சோகத்திற்குள்ளாகும் மாணவர்கள்!

படம்
தேர்வு வரும் காலங்களில் மாணவர்கள் கடுமையான மனச்சோர்வுக்கு உட்படுகின்றனர். இந்தியாவிலுள்ள 72 நகரங்களில் செய்த ஆய்வில் 82 சதவீத மாணவர்கள் கடுமையான சோர்வையும் அழுத்தத்தையும் உணர்வதாக கூறியிருக்கிறார்கள். ஃபோர்டிஸ் மனநல திட்டம் சார்பில் பல்வேறு தன்னார்வலர்கள் இந்திய மாநிலங்களில் இதுபற்றி சோதனைகளை நடத்தினர். இதில் 25 சதவீதப் பேர் கடுமையான பதற்றத்தை தேர்வுக்காலங்களில் மனதளவில் சந்திக்கின்றனர். இவர்களில் அதிகளவு பதற்றத்தை சந்திப்பவர்களுக்கு ஐந்து எனும் ரேட்டிங்கை ஆய்வாளர்கள் கொடுத்துள்ளனர். இதில் 13 சதவீத மாணவர்கள் மட்டும் குறைந்தளவு பதற்றம் கொண்டிருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளனர்.  “நாம் மாணவர்களுக்கு தேர்வு கால பதற்றம் பற்றி குறைவாகவே விவாதித்துள்ளோம். ஆனால் இந்த ஆய்வில் குறைந்தளவேனும் தேர்வு பற்றிய பதற்றத்தை மாணவர்கள் உணருகின்றனர் என்பது உறுதியாகியுள்ளது” என்கிறார் ஆய்வுக்குழுவின் தலைவரான மருத்துவர் சஞ்சய் பாரிக். மாணவர்களிடம் நெருங்கிப் பேசினால்தானே அவர்களின் மன அழுத்தம் வெளியே தெரியவரும். இதற்காக 24 பேர் கொண்ட தன்னார்வக்குழுவை பயிற்சி கொடுத்து உருவாக்கி உள்ளனர். இதனால் மாணவர

காதல் படங்களை பார்த்துவிட்டீர்களா? - காதலர் தின ஸ்பெஷல்

படம்
pixabay காதல் திரைப்படங்கள் – இந்த வாரம் பார்க்கவேண்டிய படங்கள் காதலர் தினம் வந்துவிட்டது. இந்த நேரத்தில் காதலர், காதலி இருவரம் காதலைச் சொல்ல பரிசுகளைத் தேடிக்கொண்டு இருப்பார்கள். நாம் நம் பங்குக்கு இந்த வாரம் பார்க்கவேண்டிய காதல் படங்களை மட்டும வரிசைப்படுத்துவோமே! இன் தி மூட் ஃபார் லவ்   - 2000 காதல் இரு வேறுபட்ட பாலினத்தவர்களுக்குள்தான் வரவேண்டுமா என கேட்டு திகைப்பை ஏற்படுத்திய படம். 1960ஆம் ஆண்டு ஹாங்காங்கில் நடப்பதாக படம் காட்சிபடுத்தப்பட்டது. சாய்ரட் -2016 சினிமாவின் எவர்க்ரீன் கதை. பணக்கார காதலி. ஏழையான தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த காதலன். என்னாகும்? அதேதான். வாழ நினைக்கிறார்கள். ஆனால் சாதி சமூகம் அவர்களுக்கு குழந்தை இருக்கிறது. அது அனாதையாகிவிடும் என்று கூட தயங்காமல் திருமணத் தம்பதிகளை வெட்டி சாய்க்கிறது. இதையும் நீங்கள் பார்க்கலாம். பலரும் காதல், கல்யாணத்தோடு படத்தை முடிப்பார்கள். ஆனால் உண்மையான வாழ்க்கை அதற்குப் பிறகே தொடங்குகிறது. ப்ரோக்பேக் மவுண்டைன் – 2005 இரண்டு கௌபாய்களுக்குள் ஏற்படும் காதல் உணர்வைப் பேசிய வகையில் கவனிக்க வைத

நிறுவனங்களில் பெண்கள் தோற்பது ஏன்?

படம்
தெரிஞ்சுக்கோ! பொதுவாகவே பெண்களிடம் ஒரு நிறுவனத்தைக் கொடுத்தால் அதனை தங்களது குழந்தை போலவே பார்த்துக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் அங்கு நட்புறவாக நடந்துகொள்கிறார்களா என்று பார்த்தால் கஷ்டம். அதுவே ஆண்கள் இருந்தால் சகஜ மனநிலையை எளிதில் உருவாக்கிவிட முடிகிறது. இதற்கு அர்த்தம் இருபாலினத்தவரிடமும் சில பலம், பலவீனம் இருக்கிறது என்பதுதான். பெண்களை நம்பி நிறுவனத்தை ஒப்படைப்பது மிஷினரி, கோவில் என்று மட்டுமே நடக்கிறது. இதனை ஆங்கிலத்தில் கிளாஸ் கிளிஃப் என்கிறார்கள். அதற்கான டேட்டாவைப் பார்த்துவிடுவோம். ஒரு கம்பெனி சிறப்பாக நடந்து வருகிறது என்றால், ஆண், பெண் இரு பாலினத்தவரில் யாரை தேர்வு செய்வீர்கள் என்று ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஆண்களைத்தான் இயக்குநர் பதவிக்கு பலரும் தேர்ந்தெடுத்தனர். 62 சதவீதம் பேர் ஆண்களே தகுதியானவர்கள் என்று நினைத்தனர். கம்பெனி இன்னைக்கோ நாளைக்கோ என கோமாவில் கிடக்கிறது. இப்போது ஆண், பெண் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்றால் உடனே பெண் என கைதூக்கினார்கள். இம்முறை 69 சதவீதம் பேர் பெண்களுக்கு ஓட்டு குத்தினார்கள். யாஹூவின் கரோல் பர்ட்ஸ் வேலையை விட்டு நீங்கியபோது,

தேர்தலின் கதை!

படம்
Wishesh தேர்தலின் கதை! 1951 - 52 காங்கிரசின் காலம். இடதுசாரி, சோசலிச கட்சிகள் இணைந்து  போட்டியிட்டன.  சோசலிச கட்சியை முன்னிலைப்படுத்திய தேவ் ஆச்சார்ய நரேந்திர தேவ், பனிரெண்டு சீட்டுகளை வென்றார். கிசான் மஸ்தூர் பிரஜா பார்ட்டியின் கிருபாளினி 9 சீட்டுகளை வென்றார். தேர்தலில் ஜனதா கட்சியின் சியாம பிரசாத் முகர்ஜி 3 சீட்டுகளை வென்றார். 1957 இம்முறையும் கைக்கட்சியே வென்றது. பிளவுபடாத இடதுசாரி கட்சி 33 சீட்டுகளை வென்றது. ஜனதா கட்சி முன்னர் பெற்றதை விட இருமடங்கு வாக்குகளைப் பெற்றாலும் மைனர் கட்சியாகவே இருந்தது. அம்பேத்கரின் அனைத்திந்திய பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு(SCF) தேர்தலில் ஆறு சீட்டுகளை வென்றது குறிப்பிடத்தக்க நிகழ்வு. 1962   இந்தியாவின் மூன்றாவது தேர்தலில் கட்சிகளிடையே பிளவுகள் தோன்றின. ராம் மனோகர் லோகியா, பிஎஸ்பி கட்சியை விட்டு விலகி சோசலிச கட்சி சார்பில் நின்றார். சுதந்திர வணிகம் உள்ளிட்ட கோரிக்கைகளோடு காங்கிரஸ் கட்சியினர் சிலர் ராஜாஜியின் சுதந்திரா கட்சியை ஆதரித்தனர். 1967 நேரு இறந்தபின் நடந்த தேர்தல். காங்கிரஸ் இக்காலத்தில் செல்வாக்கில் பெரும் சரிவைச் ச