இடுகைகள்

சுப்பாராவ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிடித்திருக்கிறது என்பதற்கான உடனே நூலை வாங்கினால் கஷ்டம்! - கடிதங்கள்

படம்
  அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம்.  நலமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். லைபாக்லை ஆன்ட்டி வடகிழக்கு சிறுகதைகள் தொகுப்பு படித்தேன். மொழிபெயர்ப்பும் தொகுப்பும் சுப்பாராவ். நூலை வாங்கி படித்துக் கொண்டிருந்தபோது, அலுவலக நண்பர் பாலபாரதியிடம்  எழுத்தாளர் பற்றிக் கேட்டேன். அவர்,  சுப்பாராவ் சரியான மொழிபெயர்ப்பாளர் கிடையாது என்று சொன்னார். கூகுள் ட்ரான்ஸ்லேட் வழியாக அவர் மொழிபெயர்த்த நூல் ஒன்றை வாங்கி படாதபாடு பட்டதாக கூறினார்.  தொழில்நுட்பத்தை தனது வேலைக்காக பயன்படுத்திக்கொள்கிறார் போல என்று நினைத்துக்கொண்டேன். புதிய புத்தகம் பேசுது இதழில் நூல்களைப் பற்றி சுப்பாராவ் எழுதுவதை சில ஆண்டுகளாக நூலகத்தில் படித்திருக்கிறேன்.  வடகிழக்கு தொடர்பான கதைகளை படிக்கவேண்டும் என நினைத்து புத்தக கண்காட்சியில் சுப்பாராவின் நூலை வாங்கினேன். மொத்தம் பதினான்கு கதைகள் இருந்தது. அதில் நான்கு கதைகள் மட்டுமே மாநிலத்திலுள்ள மக்களின் தன்மையை, பிரச்னையை, அரசியல் சிக்கல்களை பேசும்படி இருந்தது.  பிடித்திருக்கிறது என்ற காரணத்திற்காக உடனே நூலை வாங்கக் கூடாது என்பதற்கு லைபாக்லை ஆன்ட்டி சரியான உதாரணம்.  எலிஸா பே எழுதிய இந்தி

வாழும் அலாரமாக மாறிய கதையை கேட்க ஆசையா? கடிதங்கள்

  வாழும் அலாரமாக மாறினேன்! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? உங்களது நாளிதழ் பணிகள் இப்போது எளிமையாகி இருக்கும் என நம்புகிறேன் . எங்கள் பத்திரிகையிலும் வேலைகள் எப்போதும்போல வேகம் பிடித்து நடந்து வருகின்றன . தினசரி நானும் அலுவலக சகாவுமான பாலபாரதி சாரும் ரயில்வே ஸ்டேஷன் வரை நடந்து வருவோம் . அவர் ரயில் ஏறி மடிப்பாக்கம் வரை செல்கிறார் . குங்குமத்தில் வேலை செய்தபோது பொறுப்பாசிரியராக இருந்தவர் என்னை அதிகாலை எழுந்து அவருக்கு போன் செய்யச் சொல்லி வற்புறுத்தியதை சொன்னேன் . உடனே பாரதி சார் , இது சாதிக்கொடுமை தானே என்று சொல்லி டிவியில் வேலை செய்தபோது அவர் பார்த்த விஷயங்களை பேசத் தொடங்கிவிட்டார் . இந்த விஷயத்தை உங்களிடமும் சொல்லி இருக்கிறேன் என்று நினைக்கிறேன் . அப்போது இருந்த சூழலில் இதுபோல பொறுப்பாசிரியர் பேசுவார் என்று நினைக்கவில்லை . பாரதி சார் சொன்னது உண்மையாகவும் இருக்கலாம் . நான் அந்த சமயத்தில் அந்த கோரிக்கை வினோதமாக இருந்ததை ஒப்புக்கொள்கிறேன் . ஆனால் அதன் பின்னணி இப்படி இருக்கும் என நினைக்கவில்லை . நான் அவர் அப்படி கூறியதும் , என்னடா சீனியர் இப்படி சொன்னார் எ

நாம் போராடினால்தான் பிழைக்க முடியும்! - லைபாக்லை ஆன்ட்டி- ச.சுப்பாராவ்

படம்
  சென்னை புத்தக காட்சி 2021 நந்தனம் ஒய்எம்சிஏ லைபாக்லை ஆன்ட்டி  க.சுப்பாராவ் பாரதி புத்தகாலயம் ரூ. 100 வடகிழக்கு கலாசாரம் பண்பாட்டை பிரதிபலிக்கும் கதைகள் என்று கூறுகிறார்கள். உண்மையில் இத்தொகுப்பில் அதற்கு ஏற்றாற்போல இருப்பது நான்கு கதைகள் மட்டுமே. மொத்தம் பதினான்கு கதைகள் தொகுப்பில் உள்ளன.  மற்றொரு மோதி என்ற சிறுகதை, ஏழ்மை ஒரு பெண்ணை எந்தளவுக்கு மனத்தை கரைத்து அவளது நிலையை தாழ்த்துகிறது என்பதை கூறுகிறது. எளிமையாக சொன்னால் பசிதான். அரிசி கிடங்கு அருகே ஏழைகளின் குடியிருப்பு அமைந்துள்ளது. அங்கு வரும் லாரிகள் எப்போதும் போக்குவரத்து பிரச்னைகளால் அடிக்கு நின்று கொண்டிருக்கும். அப்படி நிற்கும் லாரிகளிலிருந்து அரிசி, பருப்பை ஊசி வைத்து குத்தி திருடுவது அங்கு வாழும் சிறுவர்களின் வேலை.  அப்படி செய்யும்போது, மோதி என்ற சிறுவன் பலியாகிறான். அவன் இறந்துபோனதற்கு அவன் அம்மா முதலில் அழுதாலும் பின்னர் மனம் தேறி இயல்பு வாழ்க்கைக்கு வர பசிதான் காரணமாக உள்ளது. அதன் காரணமாக அவள் எடுக்கும் முடிவுதான் சிறுகதையின் இறுதிப்பகுதி. உணர்வுப்பூர்வமான கதை.  பாசனின் பாட்டி, சிறுகதை வங்காளி குடும்பத்திற்கும் பழங்குடி