பயணிக்கும் வீரர்கள் அத்தியாயத்தின் நிறைவுப்பகுதி
தொடர்ச்சியான காட்சிகள் மரபான தொகுக்கும் எளிய தன்மையை தருகிறதா? இது என்னுடைய தனிப்பட்ட கருத்துதான். மிகவும் அந்தரங்கமானது என்றுகூட சொல்லலாம். தொடர்ச்சியான காட்சியினை படமாக்குவது என்பது என்னைப் பொறுத்தவரை பெரும் சுதந்திரத்தைத் தருகிறது. ஆனால் பார்வையாளர்கள் அதில் ஆழ்ந்து கவனம் கொண்டு இணைந்திருக்க வேண்டியது அவசியம் என்பது உண்மைதான். மரபான தொகுக்கும் முறையில் தொடர்ச்சியான காட்சிகளை தொகுப்பது சிரமம்தான். காலியாக இருக்கும் திரையில் இயக்கம் எங்கு வேண்டுமானாலும் நிகழலாம். தொடர்ச்சியான காட்சி என்பது மான்டேஜ் எனும் கருத்தினை உள்ளே கொண்டதாக உள்ளது. ஆனால் அதற்கு பதிலாக மரபான தொகுக்கும் முறை என்பது பல்வேறு விஷயங்களை ஒரு காட்சியில் சொல்ல உதவுகிறது. கேமராவின் இயக்கத்தினோடு பார்வையாளர்களிடம் வேறு இடத்தை காணக்கூறுவது போல. நடுவில் உள்ள காட்சியினை வெட்ட மறுப்பது, அக்காட்சியினை பார்வையாளர்களை ஆழமாக கவனிக்க வைத்து அவர்களது கண்ணில் படும் விஷயங்களை குறிப்பிடத் தகுந்ததாக மாற்றிவிட முடியும். படத்தின் தயாரிப்பின் போது எதிர்கொண்ட சிக்கல்கள் என்ன? முதல் சிக்கலாக நான் நினைப்ப