இடுகைகள்

மாணவர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உடற்பயிற்சியே ஒரு மருந்துதான்!

படம்
  உடற்பயிற்சியே ஒரு மருந்துதான்! உடற்பயிற்சி செய்யவே ஒருவர் சற்றேனும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். யோகா செய்ய பொறுமை தேவை. ஆனால் எடைகளை தூக்க, கயிறுகளை இழுக்க, பலம் தேவை. இப்படி செய்யும் உடற்பயிற்சி ஒருவருக்கு மருந்தாக செயல்படுகிறது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். உடற்பயிற்சி செய்பவர்கள், திண்ணென்ற மார்பை பிறருக்கு காட்ட முயல்வார்கள். ஆனால் அதை பயில்வதன் மூலம் நோயை விரட்ட முடியுமா? மார்க் டர்னோபோலோஸ்கி என்ற ஆராய்ச்சியாளர், முன்கூட்டியே வயதாகுவதை ஏற்படுத்தும் மரபணு பிரச்னை தொடர்பாக ஆராய்ந்தார். இதில், உடற்பயிற்சி செய்தவர்களுக்கு நோயின் பாதிப்பு சற்று குறைவாக இருந்தது. பொதுவாக உடல் ஆரோக்கியம் என்ற வகையில் உடற்பயிற்சி சரிதான் என்பவர்களும் கூட பயிற்சிகளை அடர்த்தியாக தீவிரமாக செய்யத் தொடங்குபவர்களை நேரத்தை வீணடிக்கிறான் என்பார்கள். உண்மையில், உடற்பயிற்சி முன்கூட்டியே நோய்களை தடுப்பதோடு, உடலில் உள்ள நோய்களின் பாதிப்பையும் குறைக்கிறது என்பதே உண்மை.  ஆராய்ச்சியாளர் மார்க், எலிகளை வைத்து செய்த சோதனையில் பல்வேறு உண்மைகளைக் கண்டறிந்தார். அதில், உடற்பயிற்சி செய்ய பயிற்றுவிக்கப்பட்ட எலிகளின் ரத்தத்தில

ஆய்வகத்தில் பாதுகாப்பாக ஆய்வுகளை செய்வதற்கான முன்னெச்சரிக்கை முறை!

படம்
  ஆய்வகத்தில் பாதுகாப்பு! மாணவர்கள் ஆய்வகத்தில் அறிவியல் சோதனைகளை செய்யும்போது எச்சரிக்கையுடன் இருக்க உதவும் முன்னெச்சரிக்கை குறிப்புகள்தான் இவை.  பாதுகாப்பு கண்ணாடிகள் (Safety Googles) திரவ வடிவில் உள்ள  வேதிப்பொருட்களைக் கையாளும்போது, அவை குழாய்களிலிருந்து வெளியே சிதறும் வாய்ப்புகள் அதிகம். இச்சூழலில், மாணவர் பாதுகாப்பு கண்ணாடிகளை அணிந்திருப்பது அவசியம்.  பன்சன் பர்னர்ஸ் (Bunsen burners) பன்சன் பர்னரைப் பயன்படுத்தும்போது, அருகில் நிறைய பொருட்களை வைக்கக் கூடாது. நெருப்பு சுடரில், மாணவரின்  தலைமுடி படாமல் கவனித்துக் கொள்வது முக்கியம். தீச்சுடரில் எத்தனால், ஆல்கஹாலை எப்போதும் சூடு செய்யக்கூடாது.  சோதனைக்குழாய் (Test tube) சோதனைக் குழாய்களை சூடுபடுத்தும்போது, அவற்றை கிளாம்ப் கருவி (Clamp) கொண்டு பிடிக்கவேண்டும். மேலும் சூடு தாங்கும் கையுறைகளையும் பயன்படுத்தலாம். கண்ணாடி குடுவைகளை எப்போதும் மேசையின் மையப்பகுதியில் வைத்திருப்பது அவசியம்.  கெமிக்கல் ஃப்யூம் ஹூட் (Chemical Fume Hood) ஆபத்தான வேதிப்பொருட்களை சோதனைக் குழாய்களில் வைத்து சோதிக்கும்போது, எழும் புகை வெளியே செல்ல கெமிக்கல் ஃப்யூம்

டிஎன்ஏவிலுள்ள மூலக்கூறுகளை அறிந்து உலகிற்கு சொன்னவர்! - ரோஸாலிண்ட் ஃபிராங்கிளின்

படம்
  ரோஸாலிண்ட் ஃபிராங்கிளின் (1920-1958) இங்கிலாந்தின், லண்டன் நகரில் பிறந்தார். பெற்றோர் எல்லிஸ் ஆர்தர் ஃபிராங்கிளின், முரியல் ஃபிரான்சஸ் வாலே.பள்ளியில் படிக்கும்போதே அறிவியல் படிப்பில் ஆர்வம் காட்டினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நியூன்காம் கல்லூரியில், இயற்கை அறிவியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்தவர், 1941ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். முனைவர் பட்டம் பெற்றவர்,  பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு சென்று எக்ஸ்ரே கதிர்கள்(xray diffraction) பற்றி படித்து வல்லுநரானார்.  1951ஆம் ஆண்டு லண்டனில் கிங் கல்லூரியில் இருந்த ஆராய்ச்சிக் குழுவோடு இணைந்து எக்ஸ்ரேவைப் பயன்படுத்தி டிஎன்ஏவை 3டி வடிவத்தில் உருவாக்க முயன்றார். இதற்கு ரோஸாவின் மாணவர் எடுத்த போட்டோகிராப் 51 முக்கியமான ஆதாரமாக உள்ளது. 1953ஆம் ஆண்டு புகையிலை மொசைக் வைரஸின் ஆர்என்ஏ அமைப்பை பற்றி ஆராயத் தொடங்கினார். இந்த செயல்பாடுதான், வைரஸ்களைப் பற்றிய அமைப்பு பற்றி அறிவதற்கு உதவியது. டிஎன்ஏவிலுள்ள மூலக்கூறுகளைப் பற்றி அறிவதற்கு ரோஸாலிண்ட் செய்த ஆராய்ச்சிகள் உதவின. https://en.wikipedia.org/wiki/Rosalind_Franklin

கோவை ஆராய்ச்சியாளரும், அவரது நம்பிக்கைக்குரிய குருதேவரும்! - மயிலாப்பூர் டைம்ஸ்

படம்
 மயிலாப்பூர் டைம்ஸ்  ஆராய்ச்சியாளரின் அவதி... நான் வேலை செய்யும் இதழில் எனது பணிக்காலம் முடிவுக்கு வரவிருக்கிறது. ஆனால், இப்போதுதான் இதுவரை எதிர்கொள்ளாத சிக்கல்களை அந்த மாதவப் பெருமாள் எனக்கு கொடுத்து வருகிறார். அவர் நல்லவை, அல்லவை என எது கொடுத்தாலும் மறுக்கவா முடியும். அப்படித்தான், காலை பதினொரு மணிக்கு போனில் அழைப்பு ஒன்று வந்தது. அதில், ஆராய்ச்சியாளர் பற்றி தவறாக எழுதியிருக்கிறீர்கள்.  பெயர் தவறு, தவறாக அவரை காட்டியிருக்கிறீர்கள் என ஒருவர் கொச்சையான தமிழில் பேசினார். எனக்கு அதிர்ச்சி என்னவென்றால், அவர் கூறும் கோவை ஆராய்ச்சியாளர் ****************** பற்றி இரண்டே பத்திகள்தான் எழுதப்பட்டன. அதுவும் அவர் யார், என்ன ஆராய்ச்சி செய்கிறார் என்பது மட்டுமே.  போனில் பேசிய பிரகஸ்பதி, நேபாள நாட்டு குகை ஆராய்ச்சியாளர் பற்றிய செய்தியை எதற்கு பிரசுரம் செய்தீர்கள்? டெய்லி புஷ்பம் எல்லோருடைய வீட்டுக்கும் வருகிறது. தவறாகிவிடுமே என நான் செய்த குற்றங்களின் பட்டியலை எக்ஸ்டென்ஷன் செய்துகொண்டே போனார்.  ஸாரி சார் இனி அவர் பற்றி எதுவும் எழுதவில்லை. எழுதியதற்கு சாரி என சொல்லி அழைப்பை துண்டித்தேன்.  இதற்குப் பிற

மாணவர்களுக்கு வழிகாட்டும் அரசுப்பள்ளி ஆசிரியர்!

படம்
  கல்வியறிவின்மையை தீர்க்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்! உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த டேராடூனில், கல்வியின்மையை எதிர்த்து போராடி வருகிறார்  அரசுப்பள்ளி ஆசிரியர், ராஜீவ் பந்திரி. மாணவர்களுக்கு நேரடி வகுப்பிலும், ஆன்லைனிலும் பாடங்களைக் கற்பித்து வருகிறார்.  பவுரி மாவட்டத்தில் உள்ள நௌகான்கல் கிராமத்தில் பிறந்தவர், ராஜீவ். அரசுப்பள்ளி ஆசிரியராக  30 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். பாடங்களில் குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு இலவசமாக வகுப்பெடுத்து வருகிறார். 2009ஆம் ஆண்டு முதல் டேராடூன் மாவட்டத்தில் கல்ஜ்வாடியில் உள்ள பள்ளியில் முதல்வராக பணியாற்றிவருகிறார்.  இன்றுவரையில் மாணவர்களுக்கு இலவசமாக வகுப்புகளை எடுத்து வருகிறார்.  பணிநேரம் முடிந்ததும், ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடங்களைக் கற்பிக்கிறார். சில மாணவர்களுக்கு வீடுகளுக்கு சென்றும் சிறப்பு வகுப்புகளை நடத்திவருகிறார். பொருளாதாரீதியாக கஷ்டப்படும் மாணவர்களுக்கு நிதியுதவி செய்தும் வருகிறார்.  “நான் சிறுவயதில் பள்ளியில் படிக்கும்போது, வீட்டில் பொருளாதாரப் பிரச்னை இருந்தது. என்னுடைய மாணவர்களின் பிரச்னைகளை என்னால் தீர்க்க முடிந்தால், அவர்கள்

உற்சாகத்தையும் ஊக்கத்தையும் ஒருங்கே தரும் நூல்! - சிறகுக்குள் வானம் - ஆர். பாலகிருஷ்ணன்

படம்
சிறகுக்குள் வானம் ஆர். பாலகிருஷ்ணன் பாரதி புத்தகாலயம். இந்த நூல் முழுக்க பள்ளி செல்லும் மாணவர்களுக்கானது என்று தனது இரண்டாம் சுற்று நூலில் கூறியுள்ளார் நூல் ஆசிரியரான ஆர். பாலகிருஷ்ணன். இவர் ஒடிசாவில் அரசு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் தேர்தல் ஆணைய பணிகளில் இவர் ஆற்றிய சாதனைகள் அதிகம். சிறகுக்குள் வானம் என்பது, முழுக்க ஆர். பாலகிருஷ்ணன் எப்படி அரசு அதிகாரி ஆனார். அவருக்கு உதவிய மனிதர்கள், ஏற்பட்ட சோதனைகள், அதனை அவர் எப்படி வென்றார் என்ற கதைகளை ஊக்கத்துடன் நமக்கு சொல்கிறது. கூடவே அவர் எழுதிய கவிதைகளும் அனைத்து பக்கங்களிலும் நமக்கு உற்சாகம் தருகின்றன. நூலில் தனக்கு பள்ளி கல்லூரிகளில் தமிழ் கற்பித்த ஆசிரியர்களை பின்னாளிலும் மறக்காமல் மரியாதை செய்வதை வாசிக்கும்போது ஆசிரியரின் எழுத்து மீது மரியாதை கூடுகிறது. பணியில் செய்யும் விஷயங்களைப் பொறுத்தவரை எப்படி வேலை செய்யவேண்டும் என்பதை தனிநபர்தான் தீர்மானிக்க வேண்டும். நூல் ஆசிரியர் கூடுதலாக நேர்மையாக உழைக்கவேண்டும் என்பதை வற்புறுத்துகிறார். தி எக்ஸ்ட்ரா மைல் என்பது முக்கியமான அத்தியாயம். ஒடிஷ