சோற்றின் கதை!
சோற்றின் கதை! 'வீட்டு முறை உணவகம்' மேற்கண்ட வாசகத்தை மிகவும் கவனத்துடன் அணுகவேண்டும். இல்லையெனில் நாலு இட்லியை சாப்பிட்டு இலையை எடுத்துப்போட்டு தட்டை கழுவிக் கொடுத்துவிட்டு வந்த தோழர் அன்பரசின் நிலை ஏற்பட்டுவிடும். அன்பரசை பொறுத்தவரையில் உர்ரென மூஞ்சியை வைத்திருந்தாலும் எதையும் மென்மையாக குரலில் பேசுவதில் எந்த டீலிலும் ஏமாந்து போவது அவர்தான் என நிச்சயமாக அன்பரசின் பாக்கெட் காசைப்போட்டு கற்பூரம் அணைத்தே சத்தியம் செய்து சொல்வேன். திருவண்ணாமலையில் அண்ணல் அன்பரசு, நம்மாழ்வார் வித்வான்களுடன் ஜால்ரா போட்டுக்கொண்டிருந்த காலமது. அங்கு அவரின் அழைப்பின் பேரில் ஒருமுறைதான் சென்றிருக்கிறேன். வேட்டி கட்டிக்கொண்டு அண்ணாமலையாரின் நெருப்பு தலத்தில் கருகிப்போன பீட்ருட்போல தெரிந்தார். அங்கு மீட்டர் குமார் என்பவரின் வீட்டுக்கு அருகில் உணவகம் ஒன்று பட்ஜெட்டில் நன்றாக இருக்கும் என அழுக்குவேட்டி சித்தர் சொல்லியதை இவரும் அப்படியே நம்பிவிட்டார். கையிலும் இரண்டு மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் என்றுதான் காசு இருந்திருக்கிறது. கூட்டிக்கழித்து கணக்கு பார்த்த அண்ணல், மூணு இட்லி போதாதா இந