ஆராய்ச்சி இல்லாத ஆயுர்வேத முறையை நிதியளித்து ஊக்குவிக்கும் இந்திய அரசு!
போலி அறிவியலை ஊக்குவிக்கும் ஒன்றிய அரசு! பார்க்க குங்குமம் வார இதழின் கட்டுரைத் தலைப்பு போல அமைந்தாலும், அதை எழுதியதில் உண்மை இருக்கிறது. வலதுசாரி பார்ப்பன மதவாத கட்சி ஆட்சிக்கு வந்த பதினொரு ஆண்டுகாலம் இந்திய வரலாற்றில் இருண்டகாலம் என்றே கூறவேண்டும். அந்தளவு பல்வேறு அம்சங்களில் விவகாரங்களில் நாம் கற்காலத்திற்கே சென்றுவிட்டோம். அரசியலமைப்பை சடங்குக்கு வணங்கி பிறகு, அதை தூக்கி எறிந்துவிட்டு மனுஸ்மிருதியை கையில் எடுத்துக்கொண்டனர். ஒரே நாடு ஒரே கலாசாரம் என்ற பார்ப்பன தீவிரவாதத்தின் இன்னொரு அழிவுத்திட்டம்தான் ஆயுஷ். தமன்னா பாட்டியா வருவாரே அந்த சோப் பிராண்டு அல்ல. இது ஒரு துறை. பாரம்பரிய மருத்துவத்துறை. புதிய ஆராய்ச்சியெல்லாம் ஏதும் கிடையாது. பழைய கேள்வி ஞானத்தை வைத்து அப்படியே ஓட்ட வேண்டியதுதான். இதற்கு அண்மையில் 9வது முறையாக நிதிநிலை அறிக்கையை உருவாக்கி வாசித்த நி.சீ, ஆயுஷ் துறைக்கான பட்ஜெட்டை 66 சதவீதம் உயர்த்தி இருக்கிறார். 4,408 கோடி ரூபாயாக ஒன்றிய அரசின் தொகை உள்ளது. 2020ஆம் ஆண்டில் இருந்து இப்படி ஆயுஷ் துறைக்கு நிதியுதவி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் என்ன பயன் என்று யாரும...