தேநீர் தேசத்தில் மக்களை காபி குடிக்க வைக்க கஃபே திறக்கும் தொழிலதிபர்! - சிவம் சாகி

 



ப்ளூ டோகாய் கஃபே

சிவம் சாகி, நம்ரதா ஆஸ்தானா, மேட் சித்தரஞ்சன்

ப்ளூ டோகாய் காபி




சிவம் சாகி

32

துணை நிறுவனர், செயல் அதிகாரி, ப்ளூ டோகாய்

இந்தியாவில் டீ குடிப்பவர்களே அதிகம். குறிப்பிட்ட சதவீத ஆட்கள் மட்டுமே காபி என குரல் கொடுத்து காபி குடிப்பார்கள். இப்படியான சிக்கல் உள்ள தேசத்தில் காபிக்காக தனி கஃபேக்களை தொடங்கி நடத்துவதை யோசித்துப் பாருங்கள். அதை சிவம் சாகி தனது உழைப்பு மற்றும் நம்பிக்கை மூலம் சாதித்திருக்கிறார்.

டெல்லி, சண்டிகர், புனே, மும்பை ஆகிய நகரங்களில் அறுபது கஃபேக்களை தொடங்கி தனது காபியை விற்பதே சாகியின் லட்சியம். 2024ஆம் ஆண்டு, 130 கஃபக்ககளை திறக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு உழைத்து வருகிறார்.

பொறியியல் பட்டதாரியான சாகி, தனது நண்பர்கள் மேன் சித்தரஞ்சன், நம்ரதா ஆஸ்தானா ஆகியோருடன் இணைந்து 2015ஆம்ஆண்டு ப்ளூ டோகாய் நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனம், அமேஸான் வலைத்தளத்தில் ஊக்கமுடன் செயல்பட்டு வருகிறது. இன்ஸ்டன்ட் காபி அல்லாமல் செயல்படும் பெரிய நிறுவனம் ப்ளூ டோகாய்தான். இதை நமக்கு சொன்னது கூட சிவம் சாகிதான்.

இப்படி தனக்குத்தானே ஜெயிப்போம்டா என்று சொல்லி காபி விற்று வரும் நிறுவனம், கடந்த ஜனவரியில் 30 மில்லியன் டாலர்களை முதலீடாக பெற்றுள்ளது. ப்ளூடோகாயின் வருமானமும் மாதம்தோறும் இரண்டு மடங்காக உயர்ந்து வருகிறது. குர்கானில் உள்ள இந்த நிறுவனம், காபி கொட்டைகளை வாங்கி வறுத்து அடைத்து பேக்கேஜ் செய்து விற்று வருகிறது. இப்போதைக்கு வருமானம் என்பது செலவுடன் பெரிய வேறுபாடு இல்லாமல் இருந்தாலும் எதிர்காலத்தில் லாபம் பார்ப்பது நிச்சயம் என நம்புகிறார் சிவம் சாகி.

ஆர்னிகா தாகூர்

ஃபார்ச்சூன் இதழ்

கருத்துகள்