இடுகைகள்

பிராமணர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காதலில் ஜெயிக்க சொல்லும் இரு பொய்கள் உண்மையானால்... அன்டே சுந்தரானிக்கி - நானி, நஸ்ரியா - விவேக் ஆத்ரேயா

படம்
  அன்டே சுந்தரானிக்கி நானி, நஸ்ரியா இயக்கம் விவேக் ஆத்ரேயா இசை  விவேக் சாகர் சிறுவயதில் நாடகம் நடிக்கும் சுந்தர், அதேபோல ஒரு நாடகத்தை பொய்களை மட்டுமே வைத்து நிஜவாழ்க்கையில் நடத்தினால்.... அதுதான் கதை.  விவேக் ஆத்ரேயாவின் சுவாரசியமான வசனங்களும், படம் நெடுக நீளும் ஆச்சரியமான குட்டி குட்டி விஷயங்களும் மகிழ்ச்சி தருகின்றன. படத்தை உணர்ச்சிகளின் தோராணமாக கட்ட இருக்கிறதே விவேக் சாகரின் இசை.  சுந்தர், பிராமணர். இவரது குடும்பம் பெரியது. எட்டு அண்ணன் தம்பிகள் உள்ளனர். ஆனால் ஆண்பிள்ளை என்றால் சுந்தர் மட்டுமே. இதனால், அவனை காப்பாற்றுவதே முக்கியப் பணி என சுந்தரின் அப்பா நினைக்கிறார் தனது மகனை பாதுகாக்க, அவர் ஜோசியரை நாடுகிறார். அவர் போடும் கண்டிஷன்களால் சுந்தரின் வாழ்க்கை  எந்த விஷயத்தையும் அனுபவிக்க முடியாமல் ஆகிறது. சைக்கிள் கூட லேடி பேர்ட் தான் கிடைக்கிறது. உபநயனப்படி குடுமி வைத்துக்கொண்டு பள்ளிக்கு போகிறான். அனைத்தும் ஜாதகம் தான் காரணம் என சொல்கிறார் சுந்தரின் அப்பா. இதில் உச்சமாக, காலையில் எழும்போது ததாசு தேவர் என்ற தெய்வத்தின் படம் சுந்தரின் அறையில் மாட்டப்படுகிறது.  இதையும் படத்தில் கிண்டல்

தமிழ் பிராமணர்களுக்கு வட இந்தியாவின் மணப்பெண்! - என்ன பிரச்னை?

படம்
  தமிழ்நாட்டிலுள்ள பிராமணர்கள் சங்கத்தினர், தமிழ்நாட்டில்  பெண்கள் கிடைக்காததால், பீகார். உ.பியில் பெண்களை தேடிவருகின்றனர். இந்த வகையில் 40 ஆயிரம் ஆண்களுக்கு பெண்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த தகவல்கள் சங்கம் வெளியிடும் இதழ் கூறியுள்ளது. இந்த நிலை இப்போது செய்தியானாலும் கூட பத்தாண்டுகளாக நிலை இப்படித்தான் போகிறதாம்.  முப்பது முதல் நாற்பது வரையிலான மாப்பிள்ளைகள் தங்களுக்கு ஏற்ற பிராமண பெண் கிடைக்காமல் திருமணம் நடக்காமல் உள்ளனர் என்று பிராமணர் சங்க தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.  இதற்கு என்ன காரணம் , பெண், ஆண்களின் பாலின விகிதம்தான் காரணம் என அறியவந்துள்ளது. பத்து பிராமண ஆண்களுக்கு, ஆறு பெண்கள்தான் உள்ளனர்.  குடும்பக்கட்டுப்பாட்டை பிராமணர்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டு கடைபிடித்துள்ளனர். இதனை அவர்களின் ஆச்சாரியர்கள் எதிர்த்தாலும் கூட அவர்கள் கேட்கவில்லை. இதனால்தான் பெண்கள், ஆண்களின் விகிதம் மாற்றம் பெற்றுள்ளது.வட இந்திய மாநிலங்களில் இந்தி பேச தெரிந்த ஒருங்கிணைப்பாளர்களை பிராமண சங்கங்கள் உருவாக்கியுள்ளன. இப்படி நிலைமை மாறுவதற்கு ஆண்மைய கருத்தாக்கம் பிராமணர்களின் ஜாதியில் இருப்பதுதான் கார

பிராமணராக பிறந்ததுதான் வளர்ச்சிக்கு காரணம்! - இந்திரா நூயி முன்னாள் இயக்குநர், பெப்சி

படம்
  இந்திரா நூயி  இந்திரா நூயி முன்னாள் இயக்குநர், பெப்சிகோ மை லைஃப் இன் ஃபுல் - வொர்க் ஃபேமிலி அண்ட அவர் ஃப்யூச்சர் என்ற சுயசரிதை நூலை எழுதியுள்ளார். இதில் பணி சார்ந்தும்,. சொந்த வாழ்க்கை சார்ந்தும் எடுத்த முடிவுகளை எழுதியுள்ளார்.  உங்கள் நூலில் மகளுக்கும் அம்மாவுக்கும் உள்ள சிக்கலான உறவை எழுதியிருக்கிறீர்களே? அம்மாக்களைப் பொறுத்தவரை தான் பெற்ற மகள்தான் அவர்களுக்கு குத்துச்சண்டைக்கான மணல் நிரம்பிய மூட்டை. அதில்தான் குத்தி பயிற்சி செய்வார்கள். எனது அம்மாவும் அப்படித்தான். நாம் வேலை செய்துகொண்டிருக்கிறோம். பல்வேறு விஷயங்களை நாம் சமாளித்து வாழ வேண்டியிருக்கிறது. நீரில் வாத்து நீந்துவதைப் பார்த்திருப்பீர்கள். மேலே அழகாக நகர்ந்து போனாலும் நீருக்கு அடியில் கால்களால் நீரை உதைத்துத் தள்ளியே நகரும். வாழ்க்கையிலும் உறவுகள் இப்படித்தான் இருக்கும். நாம் சந்திக்கும் அத்தனை சவால்களையும் வெளியே கூறிவிட முடியாது.  டோரிடோஸ் சிப்ஸ், கென்டல் ஜென்னர் விளம்பர சர்ச்சை பற்றி நூலிக் கூறப்படவில்லையே? நீங்கள் சொன்ன விளம்பரத்தை எடுத்தது ஆப்ரோ அமெரிக்கர்தான். பெண்கள் பொதுவாக சிப்ஸ்களை சத்தம் போட்டு சாப்பிட மாட்டார

மனிதர்களின் உதவியின்றி பூத்துக்குலுங்கும் காகித மலர்கள்! - ஆதவன்

படம்
pinterest காகித மலர்கள் ஆதவன் உயிர்மை ரூ.190  தாராளமய உலகிலும் பொருந்தும் கதை என்பது ஆதவனின் எழுத்துச் சிறப்பு. நிறையப்பேருக்கு இந்த நாவல் பிடிக்காமல் போகலாம். காரணம், இது இன்றைய நான்லீனியர் சினிமா போல கட் செய்து ஜம்ப்பாகி கதை செல்கிறது. குறிப்பாக இறுதிப்பகுதியை எட்டும்போது. பக்கம் 300க்கும் மேல் கதை சொல்லும் வடிவமே, ஒருவர் பேசி முடிக்கும் வார்த்தைக்கு,  மற்றொரு கதாபாத்திரத்தின் பதில் கூறுவதாக அடுத்த கதை தொடங்கும். இரண்டும் வேறுவேறு என்பதால் கவனமாக நீங்கள் படிக்கவேண்டியிருக்கும். ரைட். காகித மலர்கள் என்று அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என எழுதப்பட்டபோதே பஞ்சாயத்து நடந்திருக்கிறது. நாம் இக்கதையில் வரும் பசுபதி, மிஸஸ் பசுபதி, விசுவம், செல்லப்பா, பத்ரி, கணேசன், தாரா, பத்மினி என யாரை வேண்டுமானாலும் காகித மலர்கள் என்று  வைத்துக்கொள்ளலாம். ஆசிரியர் இதனை வேரற்ற என்று கூட சொல்லலாம் என்கிறார். அத்தனை வாய்ப்புகளும் இதில் உள்ளன. ஆனால், கதையில் இக்கதாபாத்திரங்களை மிக இயல்பாக சித்தரித்தது கதையை இன்னும் ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் படிக்கலாம் என்று சொல்ல வைக்கிறது. அரசு பணியில்