எழுத்தும் வாழ்வும் ஒன்றிணைந்து வாழ்ந்த ஒற்றைப்புள்ளி
எழுத்தும் வாழ்வும் ஒன்றிணைந்து வாழ்ந்த ஒற்றைப்புள்ளி (ஆகஸ்ட் 22, 2014 அன்று மறைந்த எழுத்தாளர் யூ. ஆர் அனந்தமூர்த்தி பற்றிய இரங்கல் குறிப்பு) · அன்பரசு சண்முகம் எழுத்தும், அதை எழுதுகிறவரின் வாழ்வும் ஒன்றாக இருக்கவேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் கவிஞர் கண்ணதாசன் எழுதியவனைவிட எழுத்தை பின்பற்று என்று தன் வாழ்வை மற்ற மனிதர்களுக்கு மிக விசாலமாக திறந்து தன் தவறுகளை மிக வெளிப்படையாக சுட்டிக் காட்டியவர் என்று கூறலாம். மோகன்தாஸ் காந்தியையும் இதில் நிச்சயமாக சேர்த்துக்கொள்ளலாம். உடுப்பி ராஜகோபாலாச்சாரிய அனந்த மூர்த்தி எனும் யூ.ஆர்அனந்தமூர்த்தி தன் வாழ்வினையும் எழுத்தினையும் வேறு வேறாக பாகுபாடு செய்துகொண்டவரில்லை. எழுத்தாளன் என்பவன் தன் நாட்டின் அரசியலையோ, சமூகத்தைக்குறித்தோ கருத்துக்களை வெளிப்படுத்தாமல் இருக்க முடியாது. அனந்தமூர்த்தி தன் மனம் ஏற்றுக்கொண்ட கருத்துக்களை எந்த இடத்திலும் முன்வைக்க தயங்கியதில்லை. யூ. ஆர் அனந்தமூர்த்தி தன் அனைத்து படைப்புகளையும் கன்னடமொழியில்தான் எழுதினார். அவரது குறிப்பிடத்தக்க அனைத்து படைப்புகளுமே மொழிபெயர்ப்பு பேறு பெற்ற