இடுகைகள்

இரங்கல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எழுத்தும் வாழ்வும் ஒன்றிணைந்து வாழ்ந்த ஒற்றைப்புள்ளி

எழுத்தும் வாழ்வும் ஒன்றிணைந்து வாழ்ந்த ஒற்றைப்புள்ளி (ஆகஸ்ட் 22, 2014 அன்று மறைந்த எழுத்தாளர் யூ. ஆர் அனந்தமூர்த்தி பற்றிய இரங்கல் குறிப்பு) ·         அன்பரசு சண்முகம்      எழுத்தும், அதை எழுதுகிறவரின் வாழ்வும் ஒன்றாக இருக்கவேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் கவிஞர் கண்ணதாசன் எழுதியவனைவிட எழுத்தை பின்பற்று என்று தன் வாழ்வை மற்ற மனிதர்களுக்கு மிக விசாலமாக திறந்து தன் தவறுகளை மிக வெளிப்படையாக சுட்டிக் காட்டியவர் என்று கூறலாம். மோகன்தாஸ் காந்தியையும் இதில் நிச்சயமாக சேர்த்துக்கொள்ளலாம். உடுப்பி ராஜகோபாலாச்சாரிய அனந்த மூர்த்தி எனும் யூ.ஆர்அனந்தமூர்த்தி தன் வாழ்வினையும் எழுத்தினையும் வேறு வேறாக பாகுபாடு செய்துகொண்டவரில்லை.      எழுத்தாளன் என்பவன் தன் நாட்டின் அரசியலையோ, சமூகத்தைக்குறித்தோ கருத்துக்களை வெளிப்படுத்தாமல் இருக்க முடியாது. அனந்தமூர்த்தி தன் மனம் ஏற்றுக்கொண்ட கருத்துக்களை எந்த இடத்திலும் முன்வைக்க தயங்கியதில்லை.      யூ. ஆர் அனந்தமூர்த்தி தன் அனைத்து படைப்புகளையும் கன்னடமொழியில்தான் எழுதினார். அவரது குறிப்பிடத்தக்க அனைத்து படைப்புகளுமே மொழிபெயர்ப்பு பேறு பெற்ற

சிறகசைத்து ஓய்ந்த நீலகண்டப் பறவை

சிறகசைத்து ஓய்ந்த நீலகண்டப் பறவை (செப். 7, 2014 அன்று மறைந்த மொழிபெயர்ப்பாளர் மற்றும் எழுத்தாளர் சு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மறைவுக்கான இரங்கல் குறிப்பு)                                      அன்பரசு சண்முகம் கிளை நூலகத்தில் வேகமாக செய்தித்தாளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த போது ஒரே ஒரு நாளிதழில் சு.கிருஷ்ணமூர்த்தி காலமான செய்தி கண்டு சிறிது நேரம் எனக்கு தலையில் எந்த சிந்தனைகளும் ஓடாமல் சூனியமானது போல் இருந்தது. அவரைப் பற்றிய எந்த செய்திகளும் என்னால் படிக்க முடியவில்லை. அவரது புகைப்படத்தைப் பார்த்தவாறே இருந்தேன். அவரின் முகவரி நான் படித்த அவரது பெரும்பான்மை புத்தகங்களில் இருந்தது இல்லை. அவருக்கு நான் கடிதம் ஒன்றினை எழுதியிருப்பதாக ஒரு நினைவு மிச்சமிருந்தது. சென்னையில் மயிலாப்பூரில் சகோதரருடன் அறையில் தங்கி வேலை தேடி பத்திரிகைகளுக்கு அலைந்து கொண்டிருந்த போது, எழுத்தாளர் ஸ்ரீராம் அவர்களிடம் படிக்க புத்தகங்கள் கோருவேன். அவரிடமிருந்துதான் சு.கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்ப்பில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட கமலாதாஸ் எனும் (புத்தகத்தின் பெயர் தவறாக இருக்கக்கூடும்) பெண்ணின் வா