இடுகைகள்

லண்டன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காந்தியின் அடிப்படை சிந்தனைகளை உருவாக்கிய நகரம்!

படம்
  காந்தி படிக்கச்சென்ற இங்கிலாந்தின் லண்டன் நகரம் . அந்த நகரம்தான் ஆங்கில தேசத்தின் சட்டங்களோடு அவரின் மனவலிமையையும் திடமாக உருவாக்கிய இடம் . இங்கு அவர் படித்த மத ரீதியான நன்னெறி நூல்களும் , சந்தித்த நூல்களும் காந்தி என்ற அடையாளத்தை வலிமையாக்கின . அதைப்பற்றி விரிவாகப் பார்ப்போம் . வைஷ்ணவ குலத்தில் பிறந்த காந்தி இந்து , சமணம் ஆகிய மதத்தினரின் பல்வேறு சடங்குகளை அறிந்துகொள்ள அவரது அம்மாவே காரணம் . லண்டன் நகரில் வழக்குரைஞர் படிப்பிற்காக தங்கியிருந்த காலகட்டம் அவரை சிந்தனையாளராக மாற்றியது . வாழ்க்கை முழுமைக்குமான லட்சியவாத கருத்துகளை அவர் லண்டனில்தான் பெற்றார் . 1888-1891 ஆண்டில் லண்டனில் சட்டம் படிக்க வழக்குரைஞராக காந்தி சென்றார் . பிறகு , 1906-1931 காலகட்டத்தில் , அரசியல் காரணங்களுக்காகவும் பணிக்காகவும் நான்கு முறை காந்தி பயணித்தார் . இந்தியா காலனி தேசமாக இருந்தது . இ்ங்கிலாந்து அதனை ஆண்டு வந்த பேரரசு . இதனால் லண்டன் நகரம் பல்வேறு முக்கியமான தலைவர்கள் வந்து செல்லும் இடமாக புகழ் பெற்றிருந்தது . காந்தி முதல்முறையாக லண்டனுக்கு வந்தபோது தன்னோடு டைரி ஒன்றை வைத்திருந்தார் . அதில் பல்வேறு குறிப்

சமையல் கலைஞனை இயக்கும் சிறுவயதுத் தோழி! தீனி

படம்
      தீனி             தீனி தமிழ் டப் அசோக் செல்வன், நித்யா, ரிது ஏ.எஸ் சசி லண்டனில் உள்ள அமரா என்ற ஹோட்டலுக்கு தேவ் என்ற இளைஞன் வேலைக்கு வருகிறான். அவனுக்கு உடல் எடை அதிகம். தசை தொடர்பான நோய் இருப்பதாக கூறுகிறான். நிறைய நேரங்களில் திடீரென வினோதமாக நடந்துகொள்கிறான். பாத்திரங்களை தட்டி விடுகிறான். பிறர் மீது மோதுகிறான். யாரோ இழுத்தது போல வேறு திசைக்கு செல்கிறான். ஆனால் இந்த குறைபாடுகளைத் தாண்டி அவனுக்கு நல்ல மனம் உள்ளது. பிறரின் பிரச்னைகளை அவனால் கவனிக்கமுடியும்.  அவன் வேலை செய்யும் ஹோட்டல் தலைமை சமையல்காரர் நாசர் மிக கண்டிப்பானவர். அவர்  பதினைந்து ஆண்டுகளாக சமைக்காமல் இருக்கிறார். அதற்கு அவர் தனது ஆசை மகளை பிரிந்ததுதான் காரணம். இதனால் தினசரி தற்கொலை செய்துகொள்ளலாமா என்ற அளவிற்கு மன அழுத்தத்திற்கு சென்று திரும்புகிறார். இந்த நேரத்தில் தேவின் வருகை அவரசது செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இறுக்கமாக இருக்கும் அந்த சமையல் அறையின் சூழலை கலகலப்பாக மாற்றுகிறான் தேவ். அவன் சமையல் காரன் என்றாலும் கூட அவனை உடனே சமைக்க விடவில்லை. பாத்திரங்களை கழுவ வைக்கிறார்கள். இதற்கெல்லாம் அவன் கவலைப்பட