இடுகைகள்

நவம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பள்ளி இடைநின்ற மாணவர்களை மீட்கும் ஆசிரியர்கள்! - தமிழக அரசின் புதிய கல்வித்திட்டம்

படம்
  திருச்சியில் பள்ளியில் இடைநின்ற மாணவர்களை மீட்கும் முயற்சிகளை அரசுபள்ளிகள் தொடங்கியுள்ளன. அங்கு வறுமையால் குடும்பத்திற்கு உழைக்கும் நிலையில் உள்ள மாணவர்களை நேரடியாக சென்று சந்தித்து மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்க வைக்க ஆசிரியர்கள் முயன்று வருகிறார்கள். இந்த வகையில் ஹரிதாஸ் என்ற மாணவர், விபத்தால் படுக்கையில் கிடக்கும் தந்தை காரணமாக கட்டிட வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார். அவரது வயது 17. இப்போது ஆசிரியர்கள் அவரை மீண்டும் பத்தாம் வகுப்பில் சேர்த்துள்ளனர். இவரைப் போலவே உள்ள ஐம்பது மாணவர்களை சோமரசன்பேட்டை  அரசுப்பள்ளியில் மீண்டும் சேர்த்துள்ளனர்.  இப்படி  பள்ளியில் இடைநின்ற மாணவர்கள் சேர்க்கும் திட்டத்தை கல்வி அமைச்சர் அன்பில் பொய்யாமொழி தொடங்கியுள்ளார். கடந்த ஜூன் ஜூலையில் தொடங்கப்பட்ட திட்டத்தில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து வருகின்றனர். இதில் கொரோனா முக்கியமான காரணமாக உள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று மீண்டும் அவர்களை பள்ளிக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்து வருகிறார்கள்.  திருச்சியில் மட்டும் இந்த வகையில் பள்ளியில் இடைநின்ற 3769 மாணவர்கள் பள

தலைமுறைகளை காப்பாற்றும் கலை ஐடியா!- துணிக்கழிவுகளிலிருந்து கலைப்பொருட்கள் தயாரிக்கும் பெண்மணி!

படம்
  2017ஆம் ஆண்டு ஸ்ரீநிதி உமாநாதன் திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்திற்கு சுற்றுப்பயணமாக சென்றார். போகும் வழியில் மேல காலகண்டர் கோட்டை அருகே நிறைய கழிவுகள் கிடப்பதைப் பார்த்தார். அவற்றில் பெரும்பாலானவை துணிக்கழிவுகள்தான்.  அப்போது பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த 23 வயது பெண்தான் அவர். அப்போதே முடிவு செய்துவிட்டார். இனி பேஷன் டிசைனராக மாறினாலும் கூட கழிவுகளை முடிந்தளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என முடிவு செய்துகொண்டார். இப்போதுவரை துணிகளை மறுசுழற்சி செய்வது பற்றியும், சூழலுக்கு ஆபத்தில்லாமல் வாழ்வதும் பற்றியும் பிரசாரம் செய்.து வருகிறார்.  இரண்டாவது ஆண்டு படிப்பின்போது, ரீடெய்லர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அதில் பயன்படுத்திய துணிவகைகளைப் பயன்படுத்தி பைகள், தலையணை உறைகள், ஸ்க்ரீன்கள், சிறு பைகள், கால் மிதியடிகள் என நிறைய பொருட்களை தயாரிக்கத் தொடங்கினார். மாற்றுத்திறனாளியான தனது சகோதரரிடமிருந்து, துணிகளை எப்படி கலைப்பொருளாக மாற்றவேண்டும் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டார். பிறகு இப்படி தயாரித்த பொருட்களை திருச்சியில் உள்ள என்எஸ்பி சாலையில் உள்ள கடைகளில் விற்பனைக்கு

சிறந்த முறையில் செயல்படும் மாநிலம் தமிழ்நாடு- இந்தியா டுடே ஆய்வு!

படம்
  தொழில்துறை வளர்ச்சி, கல்வி ஆகியவற்றில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்துள்ளது. எனவே, அனைத்து இந்திய மாநிலங்களையும் முந்தி ஆல்ரவுண்டர் மாநிலமாக முன்னிலை பெற்றுள்ளது.  உள்மாநில உற்பத்தி மதிப்பு 21.6 லட்சம் கோடியாக உள்ளது. இந்த வகையில் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இதனை இன்னும் மேம்படுத்தி ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற முயன்று வருகிறார்.  மாநிலங்களிலேயே முதல் மாநிலமாக பொருளாதார கௌன்சில் ஒன்றை தமிழக முதல்வர் அமைத்துள்ளார். அதில் உலகின் முக்கியமான பொருளாதார வல்லுநர்கள் உள்ளனர். 28,508  கோடி ரூபாய்க்கான 49 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன்மூலம் வேலைவாய்ப்பு 83 ஆயிரம் பேருக்கு கிடைக்கும்.  மாநில அரசு விவசாயத்திற்கு உதவும் வகையில், தண்ணீரை சேமித்து பயன்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த வகையில் ஆக்கிரமிப்பில் உள்ள ஆறுகள், ஏரிகள், குட்டைகள் ஆகியவை மெல்ல மீட்கப்பட்டு வருகின்றன. அதேநேரம் மாநிலத்தின் நிதிநிலைமை வெளிப்படையாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு கூறப்பட்டுவிட்டது. முந்தைய ஆட்சியை குறை சொல்லி பேசினாலும் இப்போதைய

மத்தியப் பிரதேசத்தில் மட்டும் புலிகளின் இறப்பு அதிகரிப்பது ஏன்? - சுற்றுலா கொடூரம்

படம்
  மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு மட்டும் 39 புலிகள் இறந்துள்ளன. கடந்த ஆண்டில் புலிகளின் இறப்பு 32 ஆக இருந்தது. இப்போது இன்னும் ஒருமாதம் இருக்கும் நிலையில் புலிகளின் இறப்பு கூடியுள்ளது. இப்படியே புலிகள் இறந்துகொண்டிருந்தால் மத்தியப் பிரதேசத்தில் புலிகளின் இருப்பே இனி இருக்காது என சூழலியலாளர்கள் கூறி வருகின்றனர்.  2019ஆம் ஆண்டு புலிகளின் எண்ணிக்கை 526 ஆக இருந்தது. கர்நாடகாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையை விட இதில் இரண்டுதான் கூடுதலாக உள்ளது.  நடப்பு ஆண்டில் கர்நாடகத்தில் பதினைந்து புலிகளின் இறப்பு பதிவாகியுள்ளது. மொத்த இந்தியாவில் 113 புலிகள் இறந்துள்ளன. அதில் மத்திய பிரதேசத்தின் பங்கு 39 ஆகும். அதாவது, 34.5 சதவீத பங்கு.  கடந்த நவ. 22 அன்று காட்டுயிர் செயல்பாட்டாளர் அஜய் துபே நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை பதிவு செய்தார். இதில் புலிகளின் இறப்பு பற்றி அரசிடமும், புலிகளின் பாதுகாப்பு ஆணையத்திடமும் கேள்விகளைக் கேட்டிருந்தார்.  நவம்பர் 17 அன்றுதான் அனைத்திந்திய புலிகள் எண்ணிக்கை ஆய்வு தொடங்கியது. 2023ஆம் ஆண்டு இந்த ஆய்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.  புலிகள் பெரும்பாலும் பாதுகாக

மாணவர்களுக்கு சொந்தக்காசில் சீருடை வாங்கித்தரும் அப்பா ஆசிரியர்! - மாணவர்களின் ஞானத்தந்தை

படம்
பள்ளிக்கு செல்ல பயப்படும் மாணவர்களே இங்கு அதிகம். அடிப்பார்கள், படிக்க சொல்லுவார்கள் என நிறைய காரணங்களை மாணவர்கள் சொல்லுவார்கள். ஆசிரியரை அப்பா என்று பாசமாக அழைக்கும் மாணவர்களும் இருக்கிறார்கள். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபுரந்தன் அரசுப்பள்ளியில் உள்ள கணித ஆசிரியர்தான் அப்படி அழைக்கப்படுகிறார். சி அப்பாவு என்ற இயற்பெயரைக் கொண்டவர், மாணவர்களுக்கு பள்ளி தொடங்கும்போது பள்ளியில் விருந்து சாப்பாடு போடுவதோடு, ஒன்பது முதல் 12 வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி சீருடையை இலவசமாக தனது சொந்த செலவில் வாங்கிக் கொடுக்கிறார். கூடவே அரசு விழாக்களுக்கு மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது அவர்களுக்கு இனிப்புகளையும் தனது பணத்தில் வழங்குகிறார்.  இந்த ஆண்டு 300 மாணவர்களுக்கு பள்ளி சீருடைக்காக மட்டுமே ஒன்றரை லட்சத்திற்கும் மேல் செலவழித்துள்ளார். எதற்கு இப்படி செய்கிறார்? இவரது வாழ்க்கைதான் காரணம். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவர், அப்பாவு. தனியாக இருந்து தனிமையை தேற்றிக்கொண்டு படித்து ஆசிரியராகியிருக்கிறார். பிறகுதான் பள்ளி மாணவர்கள் பலர் சரியான உடைகளின்றி பள்ளிக்கு வருவது தெரியவந்திருக்கிறது. ஒன்றாம் வகுப்ப

சிகரெட் அட்டைப் பெட்டிகளில் புகைப்பிடித்தலுக்கு எதிரான விழிப்புணர்வு- அருப்புக்கோட்டை மாணவியின் புதிய ஐடியா

படம்
  மது எப்படி ஒருவரை குடிநோயாளி ஆக்குகிறதோ, அதேபோல்தான் புகைப்பிடித்தலும். சிலர் எந்த நோக்கமும் இல்லாமல் சிகரெட்டுகளை ஊதி தள்ளிக்கொண்டிருப்பார்கள். வெறுமையைப் போக்க என காரணம் சொல்லுவார்கள். இதனை கைவிடுவது அவர்களது ஆரோக்கியத்திற்கும் நல்லது அவர்களின் அருகே இருப்பவர்களுக்கும் நல்லது.  அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மாணவி அஸ்மா அஹமது, புகைப்பிடித்தலுக்கு எதிராக விழிப்புணர்வு முயற்சிகளை செய்து வருகிறார். இதற்கு தன்னார்வ நிறுவனமான வில் அவார்ட்ஸ் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் விருது வழங்கியுள்ளது. அப்படி என்ன விஷயம் செய்தார்?  மூன்று ஆண்டுகளாக ஆயிரம் சிகரெட் அட்டைகளை பொறுக்கி எடுத்து அதன் பின்பக்கத்தில் புகைப்பிடித்தலுக்கு எதிரான வாசகங்களை எழுதி அதனை கண்காட்சியாக்கியிருக்கிறார். அட்டைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாசகங்களை எழுதியிருக்கிறார். ராமனாதபுரத்தைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனத்தின் மூலம் ஆறாவதிலிருந்து அஸ்மா செய்யும் விழிப்புணர்வு முயற்சிகள் வெளித்தெரிந்துள்ளன. இவரது புகைப்பிடித்தலுக்கு எதிரான கண்காட்சியை அவரது பள்ளியில் உள்ள 1500 மாணவ, மாணவிகள் பார்வையிட்டுள்ளனர். இதன்மூலம் அத்தனை குடும்பங்களி

அரசியல்வாதிகள் எழுதிய நூல்கள்! - காந்தி முதல் சல்மான் குர்ஷித் வரை....

படம்
  சீதாராம் யெச்சூரி தி ஸ்டோரி ஆப் மை எக்ஸ்பரிமென்ட்ஸ் வித் ட்ரூத் 1927 மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஓம் புக்ஸ் 295 சத்திய சோதனை என்றாலே எழுதியது யார் என தொடக்கப்பள்ளி மாணவர் கூட சொல்ல முடியும். தென் ஆப்பிரிக்காவில் வழக்குரைஞராக பணியாற்றியது முதல் இந்தியாவுக்கு வந்து சுதந்திரப்போராட்டத்தில் இணைவது வரையிலான பயணம்தான் நூலின் பேசுபொருள். தனது வாழ்க்கையை பகிரங்கமாக வெளிப்படையாக பேசிய அரசியல்வாதி, போராளி காந்தி மட்டும்தான். இதனால் இன்றுவரையும் இவரை வலதுசாரி மதவாத கும்பல்கள் என்ன முயன்றும் புறக்கணிக்கவே முடியவில்லை.  மை ட்ரூத் 1980 இந்திரா காந்தி விஷன் புக்ஸ் 195 சிறுவயதிலிருந்து இந்திராகாந்தியின் வாழ்க்கையைப் பேசுகிற நூல் இது. கூடவே அரசியலில் உயர்வு, இறக்கம் என சொந்த வாழ்க்கையைப் பேசுவதோடு இந்தியாவின் வரலாற்றையும் உள்ளடக்கிய முக்கியமான நுல்.  ட்வென்டி ஒன் போயம்ஸ் 2001 வாஜ்பாய் பெங்குவின்  299 எண்பத்து எட்டு பக்கங்களை கொண்ட நூல்தான். வன்முறை, அதிகாரம், பாகுபாடு ஆகியவற்றைப் பற்றி பேசுகிற கவிதைகளைக் கொண்டுள்ளது. வெளியுறவு கொள்கை பற்றிய பேச்சுகளையும் கொண்டுள்ள நூல் இது.  கபிதா பிதான் 2020 மம்தா பா

பரிணாமவளர்ச்சி பெறும் ஜோம்பிகளை போட்டுத்தள்ளும் வேட்டைக்குழு! - ஜோம்பிலேண்ட் - டபுள் டேப்

படம்
  #ஜோம்பிலேண்ட் - டபுள் டேப் ஜோம்பிலேண்ட்  டபுள் டேப் கொலம்பியா பிக்சர்ஸ் - சோனி முழு அமெரிக்காவுமே ஜோம்பிகளால் அழிந்துபோகிறது. மிஞ்சிய சிலரில் டெலிகாஸி, மேடிசன், கொலம்பஸ், விசிட்டா, லிட்டில் ராக் என மிகச்சிலரே மிஞ்சுகிறார்கள். இவர்களுக்குள் வரும் ஈகோ, காதல் தகராறுகளும் இன்ன பிற ஜோம்பிகளின் வம்பு தும்புகளும்தான் கதை.  அமெரிக்கா முழுக்கவே புல் பூண்டுகள் முளைத்து நாசமாகி கிடக்கிறது. அங்கு பெருசு டெலிகாசியுடன் இளைஞன் கொலம்பஸ், அவனது பெண் தோழி விசிட்டா, அவளது தங்கை லிட்டில் ராக் ஆகியோர்  மட்டுமே இருக்கிறார்கள். இவர்களும் முதல் காட்சியில் ஒரு டஜன் ஜோம்பிகளை தலையில் சுட்டுக் கொல்கிறார்கள். இதனை  இயக்குநர் கவித்துவமாக ஸ்லோமோஷனில் படமாக்கியிருக்கிறார். ரத்தம் பார்த்தாலே பதறும், மண்டை உடைந்தாலே வாய் அலறும் என்பவர்கள் படத்தைப் பார்க்காமல் இருப்பதே நல்லது.  படம் ரத்தம் தவிர, முறுக்கேறும் உடல் கொண்ட எல்விஸ் ப்ரெஸ்லி பார் பெண், ஃப்ரீசரில் இருந்த மேடிசன் 18 பிளஸ் காட்சிகள் உண்டு என்பதால் வயது வந்தவர்களுக்கு மட்டுமான படம்தான் இது. இதை மனதில் வைத்துக்கொண்டு பாருங்கள். தமிழ் டப்பிங்கில் நம் ஆட்கள் அசத்

மனதிலுள்ள வெறுமையை கடந்து வருவது கடினமாக இருந்தது! - சூஜித் சிர்கார், இந்திப்பட இயக்குநர்

படம்
  சூஜித் சர்க்கார்  சூஜித் சர்க்கார்  இந்தி திரைப்பட இயக்குநர்.  இருபது ஆண்டுகளாக மனதில் நினைத்து வைத்திருந்த படத்தை உருவாக்கி வெளியிட்டு விட்டார். படத்தின் பெயர் சர்தார் உத்தம் சிங். சிலர் பாராட்டியும், சிலர் திட்டியும் விமர்சனங்களை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இப்போது சர்க்கார் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை அவரிடம் பேசி தெரிந்துகொள்வோம்.  படம் நிறைவடைந்த பிறகு உங்கள் மனநிலை எப்படி இருந்தது? இருபது ஆண்டுகளாக இந்த படத்தை உருவாக்க வேண்டுமென நினைத்திருந்தேன். இப்போது அதனை உருவாக்கியபிறகு மனதில் வெறுமையாக இருக்கிறது. படத்தை உருவாக்குவது பட்ஜெட் என்றளவில் அல்லாமல் அதன் கதையே பிரமாண்டமானது. அதனால் இதனை செய்வது தள்ளிப்போய்க் கொண்டிருந்தது. தயாரிப்பாளர் ரோனியிடம் எப்போதும் என்னுடைய பட ஐடியாக்களை பற்றி பேசிக்கொண்டிருப்பேன். ஆனால் இந்த படம் முடிந்தபிறகு எதையும் பேச முடியவில்லை.  எப்படி வெறுமையைக் கடந்து வந்தீர்கள்? நீங்கள் எப்போதும் உங்களை கவனித்து வளர்த்துக்கொள்வது முக்கியம். இந்த வெறுமை என்பது மிக முக்கியமான இடம். இதில்தான் பல்வேறு மக்களும் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள்.  இந்த நேரத்தில்

குறுகிய தேசியவாத நோக்கில் கலை வரலாற்றைப் பார்க்க கூடாது! - பிரதாம் ஆதித்யபால், எழுத்தாளர்

படம்
  பிரதாப் ஆதித்ய பால் பிரதாப் ஆதித்ய பால் கல்வியாளர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ, பிஹெச்டி படித்தவர். 1967ஆம் ஆண்டு போஸ்டனில் உள்ள கலை அருங்காட்சியகத்தை நிர்வகிக்குமாறு பணிக்கப்பட்டார். சிகாகோவில் உள்ள கலை கழகத்திற்கு வருகை தரும் ஆசிரியராக 1995ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அறுபதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவை பெரும்பாலும் கலை தொடர்பானவைதான்.  2009ஆம் ஆண்டு இவருக்கு ஒன்றிய அரசு பத்ம ஸ்ரீ விருதுகொடுத்து கௌரவித்தது.  கலை வரலாறு பற்றிய படிப்பில் ஏன் இந்தியா பின்தங்கியுள்ளது? இந்தியாவில் கலை வரலாறு பற்றி படிப்பது பொருளாதார ரீதியாக பயன் கொடுக்குமாறு இல்லை. வசீகரமானதாகவும், பொருளாதார ரீதியாகவும் கலை வரலாறு சிறப்பாக இருந்திருக்குமானால், அசல் எது, போலி எது என அறிந்து சொல்லக்கூட கலை வல்லுநர்கள் யாரேனும் இருந்திருப்பார்கள். ஆனால் இந்தியாவில் அப்படி யாரும் உருவாகவில்லை. கலை தொடர்பாக பட்டம் பெற்றிருந்தாலும் புத்திசாலியாக இருந்தாலும் கூட கலை தொடர்பான அத்தனை விஷயங்களிலும் திறமை பெற்றவராக சாதித்துவிட முடியாது. இந்தியா மட்டுமல்ல. இங்கு நிறைய வேறுபாடுகள் கொண்ட கலைத்தன்மை வடிவங்கள் இருப்ப

ஆட்டிச குறைபாடு கொண்ட மருத்துவர், அறுவைசிகிச்சை நிபுணராகும் கதை! - எ மிராக்கிள் - துருக்கி டிவி தொடர்

படம்
மிராக்கிள் டாக்டர் - துருக்கி தொடர் குட் டாக்டர் - கொரிய மூல தொடர் எ மிராக்கிள்  துருக்கி டிவி தொடர் மூலம் குட் டாக்டர் - தென்கொரிய டிவி தொடர் எம்எக்ஸ் பிளேயர் தென்கொரிய தொடரை ரீமேக் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். தமிழில் பார்க்க நன்றாக இருந்தாலும் எம்எக்ஸ் பிளேயரில் விளம்பரங்கள் இப்போது அதிகம் என்பதால் செலவிடும் நேரம் அதிகமாகலாம்.  அலி வெபா என்ற ஆட்டிச குறைபாடு கொண்டவர் எப்படி துருக்கியின் பெரும் மருத்துவமனையில் தனது கனவான அறுவை சிகிச்சை மருத்துவர் என்ற இடத்தை அடைந்தார் என்பதுதான் மையக்கதை.  இதைச்சுற்றி ஏராளமான கிளைக்கதைகள் உள்ளன. அவையும் தொடரை 197 எபிசோடுகள் வரை பார்க்க நமக்கு உதவுகின்றன. ஆட்டிச பாதிப்பு கொண்ட மருத்துவர் என்பதால் அவரே முழுக்க புனிதமாகவும் பிறரை குற்றவாளிகளாகவும் காட்டும்  முறையை இயக்குநர் பின்பற்றவில்லை. ஆட்டிச மருத்துவர் என்றாலும் அவரும் உணர்ச்சி வசப்பட்டு சிலதவறுகள் செய்பவர்களாகவும், அவரை மெல்ல ஏற்றுக்கொள்ளும் மருத்துவர்கள் குழுவினர் அவரை சிறந்தவர்களாக்க முயல்வதும் தொடரில் பார்க்க முடிகிறது.  யாரும் முழுக்க நல்லவர்களுமில்லை. முழுக்க கெட்டவர்களுமில்லை என்பதை அலி வெ

சமூகத்தில் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் அதிகம்! - லாரா தத்தா, இந்தி நடிகை

படம்
  லாரா தத்தா ஹைகப்ஸ் அண்ட் ஹூக்கப்ஸ் என்ற வெப் தொடரில் லாரா த த்தா நடிக்கிறார். டிரெய்லரைப் பார்த்தாலே விஷயம் புரிந்துவிடும். கணவரைப் பிரிந்து வாழும் நாற்பது வயதுப்பெண் வசு. இவருக்கு மகள் டீனேஜில் இருக்கிறார். இந்த நேரத்தில் வசு தனக்கான இணையைத் தேடுகிறார். இதனை அவரது மகள் எப்படிபுரிந்துகொள்கிறார் என்பதுதான் கதை. இயக்குநர் குணால் கோலி.  உங்கள் தொடர் பற்றி பேசுங்கள்? இதுபோல முக்கியமான யாரும் பேசத்தயங்கும் விஷயங்கள் தொடராக வருவது அரிதானது. அம்மாவும் மகளும் டேட்டிங் ஆப் மூலம் தங்களுக்கான இணையைக் கண்டுபிடிப்பதுதான் கதை. இருவரின் உணர்வுகளும் எப்படி உள்ளன, அதனை இருவரும் புரிந்துகொண்டார்களா என்பதுதான் கதை.  இதுபோல ஆப் மூலம் பெண்கள் தவறான ஆண்களிடம் சிக்கிக்கொள்வது நிறைய நடக்கிறதே? நாற்பது வயதான பெண்ணுக்கு இந்த விஷயத்தில் நடைமுறை தெரியும். அவர் ஒன்றும் டீனேஜில் இருப்பவர் அல்ல. நீங்கள் கூறுவது உண்மைதான். நாற்பது வயதுக்கு பிறகு வாழ்க்கையை நாமே வழிநடத்திக்கொள்ள முடியும். இப்படி டேட்டிங் ஆப்பில் கிடைக்கும் உறவுகள் சிலசமயம் சரியாக இருக்கும். சில சமயங்களில் மோசமாகவும் அமையும். இப்படி கிடைக்கும் உறவுகள

வேறுபாடுகளை இணைக்கும் இணையம்!

படம்
  உகாண்டாவின் வடக்குப்பகுதி. அங்கு உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்த காலம் கொடுமையானது. அடிக்கடி புரட்சியாளர்கள் அங்கு வந்து சிறுவர்களை கடத்திக்கொண்டு சென்று படைகளில் சேர்ப்பார்கள். டேனியல் கோமாகெச் அப்படி வீரர்கள் வரும்போது தப்பிப் பிழைத்து புதர்களில் மறைந்திருந்தவர்தான். இன்று 34 வயதாகும் அவர், தனது கல்வி தீவிரவாதம் உள்ளிட்ட எந்த விஷயங்களாலும் தடைபடாதபடி பார்த்துக்கொள்ள மெனக்கெட வேண்டியிருந்தது. இப்போது அவர், தனது கிராம மக்களுக்கு பாஸ்கோ எனும் வகையில் இணையத்தை வழங்கி வருகிறார். இணையம் எனது வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று சொல்லுகிறார் இவர்.   பாஸ்கோ எனும் இணைய முறை இப்போது ஆப்பிரிக்காவில் வளர்ந்து வரும் இணையம் மற்றும் போன் நெட்வொர்க் முறையாக வளர்ச்சி பெற்றுள்ளது.  டேனியல் இணையத்தின் வழியில் படிப்புகளை படித்து ஆன்லைனில் வேலையைப் பெற்றுள்ளார். சமையல் ரெசிப்பிகளைக் கூட கற்றுக்கொண்டு பிள்ளைகளுக்கு சமைத்துக்கொடுக்கும் அளவுக்கு அவரது வாழ்க்கை மாற்றம் பெற்றுள்ளது. இணையம் என்பது எனது ஆசிரியர் என்றே சொல்லி வருகிறார்.  மக்களின் இனக்குழுவாக ஒன்றாக சேர்ந்து இணையத்தை  நடத்துவ

பறவைகளுக்கு ஒகே ஆனால் நமக்கு விஷம்! - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பறவையும் பெர்ரியும் பூச்சிகளுக்கு மழை ஈரம் பிடிக்காதா? மானாவாரி பூமிக்கார ர்களுக்கு மழை பெய்வது பிடித்திருந்தாலும் அதில் நனைந்துகொண்டே இருப்பார்களா என்ன? அதேதான் பூச்சிகளும் கூட மழை பெய்யும் போது இலைகளின் அடியில் அல்லது புல்லுக்கு அடியில் சென்றுவிடும். சூரியன் எப்போது வெளியே வருகிறதோ அப்போதுதான் வெளியே வரும். அனைத்து பூச்சிகளுக்கும் இதமான வெப்பம் அவசியம். எனவேதான் சூரிய வெப்பம் இருக்கும்போது தனது இரை தேடுதலை வைத்துக்கொள்கின்றன. இதில் நிலப்பரப்பு சார்ந்த வேறுபாடுகள் உண்டு.  அதிக காலம் தூங்கும் விலங்கு எது? ஆஸ்திரேலியாவை பூர்விகமாக கொண்ட கோலா கரடிதான். யூகலிப்டஸ் மரத்தில் ஏறினால் அதை மொட்டையடித்துவிட்டுத்தான் கீழே இறங்கும். இதில் சத்துகள் குறைவு. நச்சுத்தன்மை அதிகம். இதனை செரிக்கவே கோலாவுக்கு பதினெட்டு மணிநேரம் ஆகிறது. ஆனாலும் அடம்பிடித்து அதையே சாப்பிட்டுவிட்டு தூங்கி மீண்டும் சாப்பிட்டு... என வாழ்கிறது.  பெர்ரிகள் நச்சுத்தன்மை கொண்டவை என்றாலும கூட பறவைகள் அதனை எப்படி சாப்பிடுகின்றன? குறிப்பிட்ட உயிரினம் சாப்பிடுகிறது என்றால் அந்த தாவரம், பழம் நமக்கும் செட் ஆகும் என்று கூற முடியாது. ப

காஷ்மீரில் உருவாகும் தொழில்முனைவோர்கள்!- சுயதொழிலில் ஆர்வம் காட்டும் பெண்கள்!

படம்
  பெண் தொழில்முனைவோர் காஷ்மீரில் தொழிலை நடத்துவது கடினமானது. தீவிரவாதிகள் தொல்லை, அரசின் இணையத்தடை ஆகியவை அங்கு தொழில் நடத்தலாம் என்று நினைத்தவர்களைக் கூட எண்ணத்தை மாற்றும்படி செய்திருக்கிறது. இதில் தப்பி பிழைத்து விடாமுயற்சிய செய்தவர்கள் மட்டுமே இப்போது காஷ்மீரில் வெற்றி பெற்றுள்ளனர்.  சாடியா முஃப்டி அப்படிப்பட்டவர்தான். அறிவியல் பட்டப்படிப்பு படித்தவருக்கு ஸ்ரீநகரில் இரண்டு டிசைனர் பொட்டிக் கடைகள் உள்ளன. இவற்றை உருவாக்குவதற்கு அவர் மிகவும் போராடியிருக்கிறார். இதற்கு ஐந்து ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. ஜெகாங்கீர் சௌக், ஹஸ்ராத்பால் எனும் இரு இடங்களில் ஹேங்கர்ஸ் தி குளோஸெட் என்ற பெயரில் கடைகள் செயல்பட்டு வருகின்றன.  முஃப்டி தான் வெற்றி பெற்றதே போதும் என்று இருக்காமல், ஏராளமான பயிற்சி வகுப்புகளை எடுத்து வருகிறார். இவரை முன்னுதாரணமாக கொண்டு பல்வேறு பெண்கள் இத்தொழிலை செய்வதற்கு தயாராகி வருகின்றனர். பெண்கள் பெரும்பாலும் அரசு வேலைக்கு போகாதநிலையில் ஆடை வடிவமைப்பு தொழில் அவர்களை ஈர்த்து வருகிறது.  கொரோனா கால பொதுமுடக்கம், வேலைவாய்ப்பின்மை, இணைய முடக்கம், அரசியல் பிரச்னைகள் என அங்குள்ள தொழில்

காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமை இருக்கிறது என நானே ஒப்புக்கொள்ள மாட்டேன்! - ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் தலைவர்

படம்
ஜெய்ராம் ரமேஷ்  ஜெய்ராம் ரமேஷ் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு கமிட்டி பற்றிய மசோதாவில் நாடாளுமன்ற கமிட்டியின் செயல்பாடு என்ன? கடந்த இரு ஆண்டுகளாக கமிட்டி செயல்பாட்டில் உள்ளது? நவம்பர் 22 அன்று நாங்கள் இதுபற்றிய அறிக்கையைப் பெற்றோம். கமிட்டி தலைவர், பிபி சௌத்ரி பற்றி எனக்கு நல்ல அபிப்பிராயமே உள்ளது. அவர் சிறந்த ஜனநாயகவாதி. ஆட்சியில் உள்ள மூத்த தலைவர்கள், இதனை எதிர்த்து வந்தார்கள் என்பது எனக்குத் தெரியும்.  காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் கூட அதிகாரத்திற்கான போட்டி நடைபெற்று வருகிறது. இது எப்போது முடிவுக்கு வரும்? நாங்கள் ஜனநாயகப்பூர்வமான வெளிப்படையான கட்சி. எங்கள் கட்சியில் ஒருவர் வெளிப்படையாக கருத்துகளை கூற முடியும். இந்தியாவை அதன் தனித்துவமான தன்மையோடு வெளியே காட்டுகிறோம். காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமை, ஒழுக்கம், சுய கட்டுப்பாடு உள்ளது என நீங்களே கூறினாலும் நான் அதனை ஏற்க மாட்டேன். இதனை காங்கிரஸ் தலைவர் சோனியாவே பலமுறை கூறியுள்ளார். நான் இப்போது இதனை புதிதாக கூறவில்லை. பாஜகவை எதிர்க்கும் ஒரே தேசிய அளவிலான கட்சி காங்கிரஸ் மட்டுமே.  திரிணாமூல் காங்க

நவீன குழந்தைகளுக்கு ஏற்றபடி கதைகளை மாற்றும் காமிக்ஸ் நிறுவனங்கள்! - மாற்றங்கள் ஏன்?

படம்
  அமர்சித்ரகதா மாற்றம் பெறும் காமிக்ஸ் மற்றும் குழந்தைகளின் நூல்கள்! உலகமெங்கும் உள்ள காமிக்ஸ் நூல்களின் மையப் பொருள் மாறுதல் பெறத் தொடங்கியுள்ளன. மாற்றுப்பாலினத்தவர், கருப்பினத்தவர்களையும் மெல்ல முக்கியமான பாத்திரங்களாக மாற்றுவதற்கு கதை எழுத்தாளர்கள் முன்வந்துள்ளனர். இதனை பதிப்பிக்கும் நிறுவனத்தினரும் இதனை ஏற்றுள்ளனர். ஒருவகையில் மாறும் காலத்திற்கேற்ப மாற்றங்கள் வணிகத்திற்கு அவசியம் என்பது உண்மை.  கூடுதலாக வாசகர்களும் தொன்மையான நீதிகளை, விதிகளை பேசும் நூல்களை வேண்டாம் மாற்றம் வேண்டும் என கேட்கத் தொடங்கியுள்ளனர். இதனால் இந்தியாவில் உள்ள அமர்சித்ர கதா, டிங்கிள் காமிக்ஸ், ஃபிளேவே பே போன்ற இதழ்களும் கூட மாற்றங்களுக்கு ஏற்ப கதைகளை எழுதி வெளியிடத் தொடங்கியுள்ளன. இயற்கை சார்ந்த விஷயங்கள் மெல்ல காமிக்ஸ் வடிவத்தை பெற்று வருகின்றன. ரோகன் சக்ரவர்த்தி க்ரீன் ஹியூமர் என்ற பெயரில் தனி வலைத்தளத்தில் தனது இயற்கை சார்ந்த விஷயங்களை எழுதி  வரைந்து வெளியிட்டு வருகிறார். இந்து ஆங்கிலம் தேசிய நாளிதழிலும் இவரது கார்ட்டூன்கள் வெளியிடப்பட்டு வருகிறது.  டிங்கிள் காமிக்ஸ்  விலங்குகள் பேசுவது போல இவரது காமிக்ஸ்க

ஆக்சிஜன் தொழிற்சாலை- அரை ஏக்கர் நிலத்தில் மரக்கன்றுகளை வளர்க்கும் மருத்துவர்

படம்
  விருதுநகரில் சுந்தரபாண்டியம் கிராமம் உள்ளது. இங்கு மருத்துவர் சுப்புராஜ், ஐம்பதிற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார். இதன் மூலம் கார்பனை எளிதாக ஈர்க்க முடியும் என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.  ஹைதராபாத்தைச் சேர்ந்த பேராசிரியர் மருத்துவர் சுப்புராஜ். இவர் புராஜெக்ட் ஆக்சிஜன் ஃபேக்டரி என்ற பெயரில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார். பொதுமுடக்க காலத்தில் இந்த பணியைத் தொடங்கியிருக்கிறார்.இதனால் அவருக்கு நிதானமாக யோசிக்கவும் நேரம் கிடைத்திருக்கிறது. இந்த ஐடியாவை தனது நண்பர்களிடம் சொல்ல, அவர்களும் நிதியுதவி செய்ய தயாராகிவிட்டனர்.  சிறுவயதிலிருந்து விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்டவர் சுப்புராஜ். இந்தியாவின் சுதந்திர தினம் 1997ஆம் ஆண்டு கொண்டாடியபோது, நாங்கள் பள்ளியில் நூறு தேக்கு மரங்களை ஊன்றி வைக்க நினைத்தோம். அப்படி தொடங்கிய முயற்சிதான்  இப்போது ஆக்சிஜன் ஃபேக்டரி செயல்பாடாக மாறியுள்ளது.  நாற்பது ஆண்டுகளாக விவசாயம் செய்யாமல் கிடைந்த அரை ஏக்கர் நிலத்தை மரக்கன்றுகளை நட்டு வைக்க தேர்ந்தெடுத்திருக்கிறார் சுப்பு. முழுக்க கருவேலம் மரங்கள் சூழ்ந்து கிடந்த நி

சிறுவர் காப்பக சிறுவர்களை தொழில்முனைவோர்களாக்கும் மாணிக்க பாரதி! - நமது தோள்கள் அறக்கட்டளையின் அரிய பணி

படம்
  மாணிக்க பாரதி, சமூக செயல்பாட்டாளர். இப்படி ஒற்றை வரியில் ஏதாவது சொன்னால் யாருக்குமே புரியாது அல்லவா? இவர் காப்பகத்தில் தங்கியிருக்கும் குழந்தைகளை தொழில்முனைவோராக்க பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறார். இதற்கு அரசின் சமூக பாதுகாப்புத்துறையின் ஆதரவும் உதவியும் கிடைத்துள்ளது. பேக் அண்ட் சேஞ்ச் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி குழந்தைகளின் எதிர்காலத்தை மாற்றியமைக்க முயன்று வருகிறார்.  தனது பேக்கரியில் உள்ள உணவுவகைகளை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து அவர்களை இத்தொழிலுக்கு வர உதவி வருகிறார். இதில் ஐந்து பேர்களுக்கு தனது நிறுவனத்தில் வேலை கொடுத்துள்ளார். 2017ஆம் ஆண்டு பேக்கரி கல்வித் திட்டத்தை தொடங்கியபோது ஒரு மாணவர்தான் இதில் இணைந்திருந்தார். மாணிக்க பாரதிக்கு, குழந்தைகளுக்கு ஏதேனும் சொல்லித் தரவேண்டும் எப்போது தோன்றியது? அதற்கு சோகமான முன்கதை 2015ஆம் ஆண்டில் அவரது சகோதரி இறந்துபோனார். கடைசி வார்த்தையாக உன்னை உயிர்ப்போடு வைத்திருக்கும் விஷயங்களைச் செய் என்று சொல்லியிருக்கிறார். அதற்குப்பிறகுதான் அரசு அமைப்புகளோடு இணைந்து மக்களுக்கு வாழ்க்கைத்திறன்களை சொல்லிக்கொடுக்கும் பணிகளை செய்யத் தொடங்கிய

மொழிபெயர்ப்பில் ஆன்மா உயிர்ப்புடன் இருப்பது அவசியம்! - டாக்டர் கே. செல்லப்பன், மொழிபெயர்ப்பாளர்

படம்
            டாக்டர் செல்லப்பன் மொழிபெயர்ப்பாளர் அண்மையில் மார்ச் 12 அன்று தாகூரின் கோரா நாவலை தமிழில் மொழிபெயர்த்த பணிக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார் . 2020 க்கான விருது இது . மொழிபெயர்ப்புக்கான விருது என்றாலும் கூட இது தாமதமாகவே இவருக்கு கிடைத்துள்ளது . தாகூரின் நாவல் இன்று கலாசாரம் சார்ந்து ஒருவருக்குள் எழும் பல்வேறு வினாக்களுக்கு பதிலளிக்கும்படி அமைந்துள்ளது . செல்லப்பன் புதுக்கோட்டையில் உள்ள ராஜா கல்லூரியில் தனது ஆசிரியப்பணியைத் தொடங்கினார் . பிறகு தமிழ்நாட்டிலுள்ள ஏராளமான கல்லூரிகளில் ஆசியராக பணியாற்றியுள்ளார் . இவரது கற்பித்தல் முறைகளை மாணவர்களே தன்னார்வமாக பணம் சேகரித்து ஆவணப்படமாக்கியுள்ளனர் . தூங்கும்போது வரும் கனவு அழகாக இருக்கிறது . எழும்போது கண்முன்னே உள்ள வாழ்க்கை அழகாக இருக்கிறது என்று தத்துவமாக பேசுபவர் அப்படியேதான் வாழ்ந்தும் இருக்கிறார் அவரிடம் பேசினோம் . இந்த நேர்காணல் புத்தகத்திலுள்ளதன் சுருக்கமே ஆகும் . தாகூரின் கோராவை மொழிபெயர்ப்புக்காக எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் ? அந்த நூலை மொழிபெயர்க்க வேண்டுமென்பது அகாதெமியின் முடிவு . எனக்