பள்ளி இடைநின்ற மாணவர்களை மீட்கும் ஆசிரியர்கள்! - தமிழக அரசின் புதிய கல்வித்திட்டம்

திருச்சியில் பள்ளியில் இடைநின்ற மாணவர்களை மீட்கும் முயற்சிகளை அரசுபள்ளிகள் தொடங்கியுள்ளன. அங்கு வறுமையால் குடும்பத்திற்கு உழைக்கும் நிலையில் உள்ள மாணவர்களை நேரடியாக சென்று சந்தித்து மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்க வைக்க ஆசிரியர்கள் முயன்று வருகிறார்கள். இந்த வகையில் ஹரிதாஸ் என்ற மாணவர், விபத்தால் படுக்கையில் கிடக்கும் தந்தை காரணமாக கட்டிட வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார். அவரது வயது 17. இப்போது ஆசிரியர்கள் அவரை மீண்டும் பத்தாம் வகுப்பில் சேர்த்துள்ளனர். இவரைப் போலவே உள்ள ஐம்பது மாணவர்களை சோமரசன்பேட்டை அரசுப்பள்ளியில் மீண்டும் சேர்த்துள்ளனர். இப்படி பள்ளியில் இடைநின்ற மாணவர்கள் சேர்க்கும் திட்டத்தை கல்வி அமைச்சர் அன்பில் பொய்யாமொழி தொடங்கியுள்ளார். கடந்த ஜூன் ஜூலையில் தொடங்கப்பட்ட திட்டத்தில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து வருகின்றனர். இதில் கொரோனா முக்கியமான காரணமாக உள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று மீண்டும் அவர்களை பள்ளிக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்து வருகிறார்கள். திருச்சியில் மட்டும் இந்த வகையில் பள்ளியில் இடைநின்ற 3769 மாணவர்கள் பள