நவீன இந்தியாவின் சிற்பி நேரு! - கடிதங்கள்







இந்தியாவின் நவீன சிற்பி நேரு


 அன்புத்தோழர் இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?

பேஸ்புக்கில் நேரு 171 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பக்ராநங்கல்  அணையைக் கட்டியதைப் பகிர்ந்திருந்தீர்கள். படிக்கவே ஆச்சரியமாக இருந்தது. நவீனத்துவ இந்தியாவின் அடிப்படை தேவையை நேரு அன்றே உணர்ந்திருந்தார். அதனால்தான் முக்கியமான கல்வி மற்றும் அறிவியல் அமைப்புகளை கட்டியமைக்க முடிந்தது. நேருவின் சொற்பொழிவுகளை படிக்கும்போது இந்தியாவின் பல்வேறு பிரச்னைகளின் மீது எப்படி கவனம் செலுத்தினார் என்பதை உணர முடிகிறது. 

நேருவின் போராட்டக்கால சிந்தனைகள் நூலை சென்னையில் விட்டுவிட்டு வந்துவிட்டேன். பிரச்னையில் தனது பார்வைக் கோணத்தை தவறு என்றால் மாற்றிக்கொள்ளக்கூடிய நெகிழ்வுத்தன்மை நேருவுக்கு இருந்தது. இந்த அம்சம் இன்று, ஆட்சித்தலைவர்களுக்கு இல்லை. டொமினிக் ஜீவாவின் அனுபவப் பயணம் என்ற நூலை படித்தேன். மல்லிகை என்ற இதழை நாற்பது ஆண்டுகளாக நடத்தி வந்த எழுத்தாளரின் சுயசரிதை இது. மதுரை புராஜெக்ட் வலைத்தளத்தில் தரவிறக்கினேன். நூலகம் என்ற வலைத்தளத்தில் சில நூல்களை படிக்க தரவிறக்கியுள்ளேன். படித்துவிட்டு பகிர்வேன். 

நன்றி!

ச.அன்பரசு

11.4.2021


கருத்துகள்