இடுகைகள்

ஏப்ரல், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் இளைஞர்களை வளைக்க முயலும் காவிக்கட்சி! - ரூட்டு புதுசு

படம்
  இன்ஸ்டாகிராம் இளைஞர்களை குறிவைத்து வளைக்கும் பாஜக இன்று சாதாரணமாக பாய் விற்கும் வியாபாரி கூட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்துக்கொண்டு   மகிழ்ச்சியுடன் தனது பயண நேரத்தை செலவிடுகிறார். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூட்யூப் ஷார்ட்ஸ், ஃபேஸ்புக் ஆகியவை மூலம் இளைஞர்களின் வாழ்க்கை அதிவேகத்தில் பயணித்து வருகிறது. ஒரு நிமிட வீடியோ போதும் ஒருவரை பிரபலமாக்க.. இதில் எதையும் யோசிக்க வேண்டியதில்லை. டிவி பார்ப்பது போல... ரீல்ஸை  விரல்களால் தள்ளிவிட்டு பார்த்துக்கொண்டே போகலாம்.  அரசியல் கட்சிகளில் 2024ஆம் ஆண்டு தேர்தலுக்கான ஏற்பாட்டை பாஜக ஏற்கெனவே தொடங்கிவிட்டது.   சமூக வலைத்தளங்களில் மோடியின் அனைத்து செயல்பாடுகளும் ரீல்ஸ் வடிவில் உருவாக்கப்பட்டு பகிரப்படுகிறது. ஓராண்டுக்கு முன்னர், இந்திய பிரதமர் மோடி பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றார். இந்த பயணத்தில் இருபத்தைந்து சந்திப்புகள் நடந்தன. இவை அனைத்துமே பாஜகவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிடப்பட்டு ரீல்ஸ் வடிவில் வெளியாகின. இதை அப்போதே 2.4 மில்லியன் பேர் பின்தொடர்ந்தார்கள். 40 ஆயிரம் பேர் லைக் போட்டு விரும்புவத

பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வெளியில் நேரும் உயிரிழப்புகளை தடுத்து புலிகளை காக்க முயல்கிறோம் - வீரேந்திர திவாரி

படம்
  வீரேந்திர திவாரி வீரேந்திர திவாரி தலைவர், வைல்ட்லைஃப் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா திவாரி, மகாராஷ்டிராவில் பணியாற்றி வருகிறார். காடுகளின் பாதுகாப்பு, அதில் வாழும் புலிகளின் அழிவு, அதை தடுக்க அமைப்பு செய்யும் முயற்சிகள் பற்றி பேசினோம். உங்கள் அமைப்பின் பங்களிப்பு பற்றி கூறுங்கள். நாட்டின் காடுகளிலுள்ள புலிகளைப் பாதுகாப்பது, அதன் எண்ணிக்கை பற்றிய ஆய்வுகளை செய்வது. இதன் அடிப்படையில் பல்வேறு கொள்கைகளை வகுப்பது ஆகியவற்றை வைல்ட் லைஃப் ஆஃப் இந்தியா அமைப்பு செய்கிறது. அடுத்து, புலிகள் வாழும் நிலப்பரப்பு, அதன் வரைபடம், அழிந்த புலிகளை மீட்பது, அதன் மரபணு சார்ந்த அடையாளம், தேவையான வனத்துறை ஊழியர்களை நியமிப்பது ஆகியவற்றையும் செய்து வருகிறோம். உங்களது பார்வையில் இந்திய மாநிலங்களில் எவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன? கடந்த 50 ஆண்டுகளாக, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, உத்தராகண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் புலிகளைக் காப்பது தொடர்பாக பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுத்திருக்கிறார்கள். புலிகளைக் காப்பதில் உள்ள சவால்கள் என்னென்ன?   சட்டவிரோத வேட்டை, மின்சார வேலி, பாதுகாப்ப

பொருட்களை வாங்கும்போது சுதாரிப்பாக இருக்கிறோமா, இல்லையா?

படம்
  பெப்சி தனது லோகோவை மாற்றியுள்ளதை அறிந்திருப்பீர்கள். ஏறத்தாழ பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு லோகோ மாற்றம் பெற்றுள்ளது. இதனால், அந்த நிறுவனத்திற்கு லாபம் கிடைக்குமா இல்லையா என்பதெல்லாம் ஆராய்ச்சியாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். கொக்க்கோலா, பெப்சி என இரண்டில் சந்தையில் முதலிடம் பிடித்துள்ளது, கொக்ககோலாதான். இதற்கு அடுத்த இடத்தில்தான் பெப்சி உள்ளது. இப்போதும் இரு பன்னாட்டு நிறுவனங்களின் பிராண்டுகளுக்கு இடையில் போட்டி நடைபெற்று வருகிறது. கோலா நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி பல்லாண்டுகளாக நடைபெற்று வருகிறது. 1980ஆம் ஆண்டு கொக்க்கோலா தனது சந்தை லாபம், பெப்சியிடம்   செல்வதை உணர்ந்து, புதிய ஃபார்முலா ஒன்றை உருவாக்கியது. இனிப்பு சற்று கூடுதல். இதற்கான நான்கு மில்லியன் டாலர்களை அள்ளி இறைத்தது. மார்க்கெட்டில் ஏழு சதவீத விற்பனை உயர்வு கிடைக்கும் என திட்டம் போட்டது. ஆனால் சந்தைக்கு சென்றபிறகு, மக்கள் புதிய கொக்ககோலாவை ப்பருகினர். ஆனால் அதை தொடரவில்லை. அவர்களுக்கு பழைய கோலா போல சுவை இல்லை என்று தோன்றியது. எங்களுக்கு புதிய கோலா பிடிக்கவில்லை. பழைய கோலாவின் சுவை வேண்டும் என்று கருத்துகளை சொல்லத் தொட

சாளுக்கிய இளவரசன் கீர்த்திவர்மனிடமிருந்து ரத்தம் சிந்தாமல் காஞ்சியை மீட்கும் நந்திவர்மன்! - சமுத்திரகோஷம் - உதயணன்

படம்
  எழுத்தாளர் உதயணன் சமுத்திர கோஷம் உதயணன் வைதேகி பதிப்பகம் விலை ரூ.110 பல்லவ மல்லன் நந்திவர்மன், பாண்டியர்களோடு எல்லையில் போரிடும்போது ஜென்ம எதிரியான சாளுக்கிய அரசு, பின்புறமாக வந்து மன்னன் இல்லாத காஞ்சி கோட்டையை சூழ்ச்சியாக கைப்பற்றுகிறது. பாண்டியர்களை வென்ற நந்திவர்மன், திரும்பி வந்து தனது பல்லவ நாட்டின் தலைநகரான காஞ்சியை எப்படி கைப்பற்றுகிறான் என்பதே கதை. இந்த சரித்திர நாவலில் கல்வெட்டுகளின் சான்றுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிலுள்ள தகவல்படி, நந்திவர்மன் இல்லாத காலகட்டத்தில் சாளுக்கியர்கள் காஞ்சியை தங்கள் வசமாக்குகிறார்கள். பிறிதொரு காலகட்டத்தில் சாளுக்கியர்களிடமிருந்து அதை நந்திவர்மன் மீட்கிறான். இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை.   அந்த இடத்தை பயன்படுத்தி நாவலை எழுத்தாளர் உதயணன் எழுதியிருக்கிறார். நாவலில் பராக்கிரம யுத்தங்கள், ஒற்றைக்கு ஒற்றை என சண்டைகள் ஏதும் கிடையாது. அனைத்துமே சூழ்ச்சி, தந்திரம் என மூளை விளையாட்டுகள்தான் நிறைந்திருக்கின்றன. நந்திவர்மன் கதையில் வரவே அதிக பக்கங்களை நீங்கள் தாண்டவேண்டும். நந்திவர்மனை பிழையில்லாத வீரனாக எழுத்தாளர் உத

திரைப்படமாக்க தகுதியுள்ள படைப்புகளை எழுத்தாளர்களே கூறுகிறார்கள்- இமையம், சு வேணுகோபால், பவா, முருகேச பாண்டியன்

படம்
  எழுத்தாளர் இமையம் எழுத்தாளர் சு வேணுகோபால் எழுத்தாளர் பவா செல்லத்துரை எழுத்தாளர் முருகேச பாண்டியன் ஆங்கில திரைப்பட உலகில் நிறைய நாவல்களை அடிப்படையாக வைத்து படம் எடுத்து வருகின்றனர். இதனால் நாவலும், அதை அடிப்படையாக கொண்டு கதை, திரைக்கதை   எழுதி எடுக்கப்பட்ட படம் என இரண்டுமே கவனிக்கப்படுகிறது.   தமிழைப் பொறுத்தவரை பல்வேறு எழுத்தாளர்களின் எழுத்துகளை திருட்டுத்தனமாக எடுத்து பயன்படுத்துவது, தலைப்புகளை திருடுவது என வினோதமாக விளையாட்டுகளை திரைப்பட இயக்குநர்கள் செய்து வருகிறார்கள். திருட்டு வெளிப்பட்டாலும் கூட நவசக்தி விநாயகர் சத்தியமாக எனக்கு இப்படி ஒரு படைப்பு, தலைப்பு இருப்பது தெரியாது என கற்பூரம் அணைக்க தயாராக இருக்கிறார்கள்.  இயக்குநர்கள் ஒரு நாவலை படமாக இருப்பது இருக்கட்டும். படைப்பை உருவாக்கும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பை திரைப்படமாக்க தகுதி உள்ளது என நினைக்கிறார்களா என கேட்டுப் பார்ப்போம். எழுத்தாளர் இமையம் ‘’ஒரு நாவலின் எழுத்தாளர், தனது நாவலின் அடிப்படை வடிவத்தில் திரைப்படம் எடுக்கப்படவில்லை என்று குறைகூற முடியாது. நாவலின் வடிவமும், இலக்கணமும், சினிமாவின் கட்டமைப்பும் வேறுப

பச்சை குத்துதல், டாட்டூ வரைதலை நவீனமாக செய்யும் பழங்குடி மக்கள்!

படம்
  கோண்ட் பழங்குடிகள் கலைஞர் மங்களா பாய் ஒரு தொன்மை மொழி உள்ளது. அதை பேசும் மக்களில் ஒருவர் மிஞ்சினாலும் கூட அம்மொழி உயிரோடு இருக்கிறது என்றுதான் அர்த்தம். அப்படித்தான் பச்சை குத்துதலை நரிக்குறவர்கள் பல்லாண்டுகளாக செய்து வருகிறார்கள். முதலில் சைக்கிள் கம்பிகளை பச்சு குத்துவதற்கு ஏற்ப மாற்றியமைத்தவர்கள், இப்போது அதற்கென தனி கருவிகளை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள. இதற்கான மை தனித்துவமானது, பல்வேறு மூலிகைகளை கலந்து இதைச் செய்கிறார்கள். பழங்குடி மக்கள் இயற்கையான மையை பயன்படுத்துகிறார்கள். நகரங்களில் உள்ள டாட்டூ கலைஞர்கள் பெங்களூரு, கோவா ஆகிய பகுதிகளில் பச்சை குத்துவதற்கான செயற்கை மையை வாங்குகிறார்கள். இந்த மையை ஒருவர் பயன்படுத்தும்போது வரையப்படும் உருவங்கள் பச்சை நிறமாக மாறாது. தொன்மைக் காலத்தில் பச்சை குத்தியவர்களுக்கு, அந்த இடம் பச்சையாக மாறியது, மூலிகைகள் காரணமாகத்தான். பச்சை குத்துவதில் சுகாதாரம் முக்கியம். இதில் எளிதாக நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ளது.   நாகலாந்து பழங்குடிகள் பச்சை குத்துவதற்கு புகழ்பெற்றவர்கள். இவர்கள், இயற்கை சார்ந்த விஷயங்களை கவிதை போல சொல்வதற்கு புகழ்பெற்றவர்கள்

சூழல் பதற்றத்திற்குள்ளாகும் இளைஞர்கள் என்ன செய்கிறார்கள்?

படம்
  உலகம் அழியப்போகிறது என்ற செய்தியை பெரும்பாலான நாளிதழ்கள், ஊடகங்கள் பல்லாண்டுகளாக கூறி வருகின்றன. குறிப்பாக, இயற்கை பேரிடர்கள் நினைத்துப் பார்க்க முடியாத இழப்பை ஏற்படுத்தும்போதும், நோய்த்தொற்று காரணமாக மக்கள் லட்சக்கணக்கில் இறக்கும்போதும் சமூக விஞ்ஞானிகள் இத்தகைய கருத்துகளை முன்வைத்து பேசுவார்கள். இன்று டிஜிட்டல் ஊடகம் அனைத்து மக்களின் கையிலும் உள்ளது. தான் சொல்ல விரும்பும் கருத்தை ஒருவர் சமூக வலைத்தளங்கள், யூட்யூப், விமியோ என்ற தளங்களில் வழியாக எளிதாக உலகிற்கு சொல்லலாம். மக்கள் தங்கள் சூழல் பயத்தை, விரக்தியை பிறருக்கு எளிதாக கடத்தி வருகிறார்கள்.   2012ஆம் ஆண்டு இப்படித்தான் மாயன் காலண்டரில் உலகம் அழியப்போகிறது என சிலர் கூறி பயமுறுத்தினார்கள். இதனால் பீதிக்குள்ளான மாணவர்கள், இளைஞர்கள் தங்கள் பிரியத்திற்கு உள்ளானவர்களை கட்டிப்பிடித்து அழுத்து பிரியாவிடை கொடுத்த காட்சிகள் அரங்கேறின. 5,126 ஆண்டுகளைக் கொண்ட மாயன் காலண்டர் சொன்ன குறியீடுகள், மர்மங்களை வைத்து நிறைய கதைகள் உள்ளன.   உலகம் அழிகிறது, அழியவில்லை என்பதை விடுங்கள். ஒருவேளை, உலகம் அப்படி அழிகிற சூழ்நிலை ஏற்பட்டால் நாம் என்ன செய

அம்மாவைப் பற்றிய உண்மையை அறிய தற்காப்புக் கலை கற்கும் மகனின் கதை! டோலுவா கான்டினென்ட் -

படம்
  டோலுவா கான்டினென்ட் - சீன டிவி தொடர் டோலுவா கான்டினெனட் - சீன டிவி தொடர் டோலுவா கான்டினென்ட் சீன டிவி தொடர்  ஷியாபோ ஷான் - டாங் சென் கிராமத்தில் காட்டிற்குள் இரும்பு பொருட்களை செய்யும் கொல்லர் தனது ஒரே மகனுடன் வாழ்ந்து வருகிறார்.   அவரது மகனுக்கு சில முக்கியமான தற்காப்பு கலைகளை சொல்லிக்கொடுத்து வளர்க்கிறார். ஆனால், அவனது அம்மா பற்றி ஏதும் சொல்வதில்லை. மகனுக்கு அம்மா பற்றி தெரிந்துகொள்ள ஆசை என்றாலும் கூட அப்பாவின் கடுங்கோபம் அறிந்து அமைதியாக இருக்கிறான். அப்பாவுக்கு கொல்லர் வேலை செய்வதற்கான விறகுகளை வெட்டி வந்து கொடுப்பது, சமையல் செய்வது மகன் டாங் சென்னின் வேலை. மற்றபடி கிடைத்த ஓய்வு நேரத்தில் சில தற்காப்பு கலைகளை பயிற்சி செய்கிறான்.. இந்த நேரத்தில் ஸ்பிரிட் ஹால் எனும் தற்காப்புக் கலை அகாடமியைச் சேர்ந்தவர், டாங் சென்னை ஆபத்து ஒன்றிலிருந்து காத்து அவனை ஒரு தற்காப்புக் கலை ஆன்ம ஆற்றல் சோதனைக்கு வரச்சொல்கிறார். ஆனால் டாங் சென்னின் அப்பாவோ,   நீ சோதனைக்கு எல்லாம் போக வேண்டாம். தனியாக அகாடமியில் படித்து நீ என்ன செய்யப்போகிறாய் என மறுக்கிறார். ஆனால் டாங்சென் சோதனைக்குப் போகிறான். அவ

நவீன உலகில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தனிநபர்களே காரணம் - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி ஜே கிருஷ்ணமூர்த்தி உலகில் மோசமான நெருக்கடி நிலை, ஏதேனும் சில செயல்பாடுகளால், வாய்ப்பால் ஏற்படுவதில்லை. அதை உருவாக்குவது மக்கள் கூட்டத்தில் உள்ள தனிநபர்களான ஓவ்வொருவரும்தான். பொறாமை, வேட்கை, பேராசை, அதிகார ஆசை, பிறரைக் கட்டுப்படுத்துதல், போட்டி,, இரக்கமில்லாத தன்மை, உடனடியாக பலன்கள் கிடைக்கவேண்டுமென நினைத்தல் ஆகியவற்றை தினசரி வாழ்க்கையில் நாம் செய்கிறோம். உலகில் உருவாகும் அபாயத்திற்கும் குழப்பத்திற்கும் வேறு யாரோ காரணமல்ல. நாம்தான் காரணம்.   அதாவது நீங்களும், நானும்தான்.   ஒன்றை ஆழமாக கவனிக்காமல், சிந்திக்காமல், ஏதேனும் பேராசையை நோக்கி ஓடுவது, உணர்வுகளின் தேவையை மட்டுமே தீர்மானிப்பது, காரணமாக ஆழமான பேரழிவு நேருகிறது.   இந்த மோசமான நிலைக்கு நெருக்கடிக்கு நீங்கள்தான் பொறுப்பு. வேறு எந்த குழுவோ, தனிநபரோ காரணமல்ல. நீங்கள் மட்டுமே காரணம். Madras The cpllected works vol .5october 1947 the collected works 4 நவீன உலகம் என்றால் என்ன? பல்வேறு நுட்பங்களாலும், பெரிய நிறுவனங்களின் திறனாலும் உலகம் உருவாகியுள்ளது. இங்கு, தொழில்நுட்ப மேம்பாட்டுடன் மனிதர்களின் தேவையை பற்றா

காலநிலை மாற்ற விளைவுகளை எதிர்கொள்வது எப்படி?

படம்
  சூரிய வெப்பம் அதிகரித்து வரும் மாதம் இது. அதிகரிக்கும் வெப்பம் எதிர்காலத்தில் குறைய வாய்ப்பில்லை. அந்தளவு உலகம் முழுக்க மாசுபாட்டை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் பெருகிவிட்டன. மாசுபாட்டைக் குறைப்பதாக பேசினாலும், அதன் பின்னணியில் மாசுபாட்டை ஏற்படுத்தும் தொழில்நிறுவனங்களை பாதுகாக்கும் முயற்சியே நடைபெற்று வருகிறது. இந்தியா மட்டுமல்ல, மேற்கு நாடுகளிலும் இதுதான் நிலைமை. 2021ஆம் ஆண்டு ஐ.நாவில் கார்பன் மாசுபாட்டை குறைக்கும் திட்டத்தில் 193 நாடுகளில்   24 நாடுகள் மட்டுமே தெளிவான மாசு கட்டுப்பாட்டுத் திட்டத்தை சமர்ப்பித்தன. இப்படி திட்டங்களை கூறிய நாடுகள் அதை சரியாக செயல்படுத்துமா, இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், இதுபற்றிய எண்ணமே இல்லாமல் உள்ள நாடுகள்தான் கவலையை அதிகரிக்கின்றன. காலநிலை மாற்றத்தின் காரணமாக வெப்ப அலை, மழைப்பொழிவு குறைதல் ஆகியவற்றை பிற நாடுகளை விட இந்தியா அதிகம் சந்திக்கப்போவதாக தட்பவெப்பநிலை ஆய்வாளர்கள் தகவல் கூறுகிறார்கள். அரசு, இதுதொடர்பாக செய்யும் விஷயங்களை விட தனியார் நிறுவனங்கள் பரவாயில்லை ரகத்தில் இயங்கி வருகிறார்கள்.   ரீநியூ என்ற மறுசுழற்சி நிறுவனம்   இந்தியாவில் ப

யாவரும் ஏமாளி - புதிய மின்னூல் வெளியீடு - அமேஸான் வலைத்தளம்

படம்
  ஒரு வாரத்தில் எத்தனை முறை உங்கள் பர்சைத் திறக்கிறீர்கள் என யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? எதனால் ஒரு பொருளை தேர்ந்தெடுக்கிறீர்கள், எதனால் ஒரு பொருளை வாங்கவேண்டுமென தோன்றுகிறது ஆகிய கேள்விகளுக்கு பின்னால் உள்ள உளவியல் விஷயங்களை நூல் பேசுகிறது. எப்படி பெருநிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள் மக்களின் உளவியலைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப பொருட்களை தயாரித்து விளம்பரப்படுத்தி விற்கிறார்கள். மக்களை பெருமளவு செலவு செய்ய வைக்க என்னென்ன உத்திகளை கையாள்கிறார்கள் என்பதை யாவரும் ஏமாளி நூல் வெளிப்படுத்துகிறது.  நூலை கீழுள்ள முகவரியில் தரவிறக்கி வாசிக்கலாம். நன்றி! https://www.amazon.com/dp/B0C3CBVYNP

முற்பிறப்பில் துரோகம் செய்த ஐந்து பேரரசர்களுக்கு எதிராக போராடும் வேட்டைக்காரன்! - டார்க் ஹன்டர்

படம்
  தி ஹன்டர் (or dark hunter) மங்கா காமிக்ஸ் சீனா ரீட்எம்.ஆர்க் 292----- ஐந்து பேரரசர்களால் துரோகம் செய்யப்பட்ட வீரன் ஒருவன் நெஞ்சில் வாள் பாய்ச்சி கொல்லப்படுகிறான். அவன் மறுபிறவியில் தாழ்ந்த குலத்தில் பிறந்து சமூகத்தின் வேறுபாடுகளையும் கடந்து தனது தற்காப்புக் கலை மூலம் தன்னைக் கொன்றவர்களை பழிவாங்குவதுதான் கதை. கதை இன்னும் முடியவில்லை தொடர்கிறது. படித்தவரையில் உள்ள கதையைப் பார்ப்போம். சென் பெய்மிங்கிற்கு நினைவு திரும்பும்போது, அருகில் அவனது தங்கை சூயி இருக்கிறாள். அவள்தான் அவனை எழுப்பிக்கொண்டிருக்கிறாள். வீட்டில் கடன் கொடுத்தவர்கள் சுற்றி நிற்கிறார்கள். எழும் சென் பெய்மிங்கிற்கு தான் யார், எப்படி இங்கு வந்தோம் என அனைத்துமே நினைவிருக்கிறது.துரோகத்தால் பறிபோன அவனது உயிர், சில நாட்களுக்குப் பிறகு   வேறு ஒரு உடலில் புகுந்திருக்கிறது. அதுதான், அந்த ஊரில் ஆதரவற்று வாழும் சென் குடும்பம். அதில் உள்ள உறுப்பினர்கள் அண்ணன் சென், தங்கை சூயி, பிறகு சென்னை ஆதரிக்கும் எப்போது அவனோடு இருக்கும் நண்பன் லேஸி பக். கதையின் தொடக்கத்தில் சென் பெய்மிங், அவனுக்கு இருக்கும் மூன்று மில்லியன் டாலர்