இடுகைகள்

சமூகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காதல் மீட்டர் - திருமண உறவைக் காப்பாற்ற என்ன செய்வது?

படம்
  காதல் மீட்டர்  4 பொதுவான திருமணங்களில் நிச்சயம் செய்வது முக்கியமான சடங்கு. இவரை இன்னாரை திருமணம் செய்துகொள்வதாக உறுதி செய்துகொள்வது. உறுதி செய்துகொண்டவரைத்தான் ஒருவர் திருமணம் செய்வார் என்று நிச்சயமில்லை. காலம் மாறிவிட்டது. கிராமங்களில் பெரும்பாலும் கொடுத்த வாக்குறுதியை யாரும் காப்பாற்றாமல் விடுவதில்லை. ஏனெனில் ஒருவரின் நம்பிக்கை தொலைந்துவிட்டால் அவர் பேசுவதை யார் கேட்பார்கள்.?  இந்த நிச்சய காலத்தில் இணையர்கள் உரையாடலாம். இன்று ஸ்மார்ட்போன் உள்ளது. போன் உயிரோடு இருந்தே ஆகவேண்டும். அதன் வழியாக பேசலாம். நிறைய விஷயங்களைப் பகிரலாம். பொதுவாக கல்யாணம் செய்துகொள்ளப்போகும் ஆட்கள் வெட்டி அரட்டைதானே அடிப்பார்கள். அதுவும் எதிர்கால உறவைப் பற்றி அறிவதற்கான வழிதான்.  ஜோதிடம், திருமண பொருத்தம் என்பதை பொதுவான பலரும் நம்புகிறார்கள். குறிப்பாக திருமணம் எனும்போது... ஆனால் இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் என்னுடைய நேரத்தை நானே உருவாக்குவேன் என இருப்பவர்கள் தங்களுக்கு பிடித்த ஒருவரை மணந்துகொள்ளலாம். நிச்சயத்திலும் மோதிரத்தை போடுவதுண்டு. இது ஒரு ஒப்பந்தம் போல செயல்படுகிறதாக கொள்ளலாம். இன்...

காதல் மீட்டர் - சமூக தகுதிகள் திருமணத்தை தீர்மானிப்பதில் தோற்றுப்போவது ஏன்?

படம்
  காதல் மீட்டர் 3 ஒருவரை மணம் செய்து வைக்க இந்துமதம் சார்ந்து நிறைய தகுதிகள் பார்க்கிறார்கள், பிற மதங்களிலும் இதுபோன்ற தகுதிகள் பொருந்தும்.  அவையெல்லாம் பொதுவானவைதான். அடிப்படையாக மனப்பொருத்தம் தவிர அனைத்தையும் பார்க்கிறார்கள். உடல் தோற்றம், சமூக அந்தஸ்து, புத்திசாலித்தனம், பொருளாதார தகுதி. இதுதான் சமூக தகுதிகள். இந்த நான்கு விஷயங்களை சமூகம் கவனிக்கிறது. இதன் அடிப்படையில்தான் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்கள் நடைபெறுகின்றன.  பெரும்பாலான திருமணங்கள், விவாகரத்தில் வந்து நிற்கும்போதுதான் பொதுவான சமூக தகுதிகள் வேலைக்கு ஆகவில்லை என பெற்றோருக்கு உறைக்கும். சில சமயங்களில் திருமணங்கள் காசு பறிக்கும் செயலாக மாற, மணமகனோ, மணமகளோ தற்கொலை செய்துகொள்வது அல்லது சித்திரவதை செய்து கொல்லப்படுவது கூட நடைபெறுகிறது. அரசியல் வணிக திருமணங்களில் புகார்கள் எழுவதில்லை. அவர்களே சமாதானம் பேசிக்கொண்டுவிடுகிறார்கள். யார் தரப்பு அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் வலிமையாக இருக்கிறதோ, அவர்கள் நடைபெற்ற தவறுக்கு காரணகர்த்தா.  இன்று எழுச்சி பெற்றுள்ள பார்ப்பன பாசிச மதவாத அமைப்புகள், அதிகாரத்தை குறிவ...

காதல் என்பது கலையா?

 காதல் என்பது கலையா? காதல் என்பது கலையா, அல்லது வெறும் மகிழ்ச்சிகரமான உணர்வா? கலை என்றால் அதைக் கற்க அறிவு, முயற்சி, செயல்பாடு என பலவும் தேவை. மகிழ்ச்சிகரமான உணர்வு என்றால், அப்படியான மகிழ்ச்சியை ஏற்படுத்துகிற அனுபவங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.  காதலை, நாம் விரும்பவில்லை என்று கூறமுடியாது. காதல் திரைப்படங்கள், காதலை மையப்படுத்திய தொடர்கள் இன்றுமே பல கோடி மக்களால் பார்க்கப்படுகிறது. காதலை நாம் பார்க்கும் கோணம் மாறிவிட்டிருக்கிறது. திரைப்படமோ, தொடரோ அதில் காட்சிகள் சுவாரசியமான வகையில் தொகுக்கப்பட்டிருக்கவேண்டும். அப்படியல்லாதபோது மக்கள் என்ன செய்வார்கள்? ஆங்கிலப்பட இயக்குநர் குவான்டின் டரன்டினோ, எடுக்கும் திரைப்படங்களைப் போன்றவற்றின் மலினமான நகல்களைப் பார்த்து ஆறுதல் அடைய வேண்டியதுதான். இன்றும் பேருந்துகளில் காதல் பாடல்கள், மஜாவுக்கு அழைக்கும் பாடல்கள் என பலவும் மக்களால் கேட்கப்பட்டு வருகிறது. இசை பேரரசரின் காப்புரிமை பிரச்னை இருந்தாலும் மனதிற்குள்ளேயே அதை பாடிக்கொண்டு தனது சோகத்தை மறந்து காதல் உணர்வில் திளைக்கும் மக்களைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். ஆனாலும் கூட இப்படி ...

பணம் ஒருவரின் இயல்பை பாதிக்கிறதா?

 பணம் ஒருவரின் இயல்பை பாதிக்கிறதா? பணம் அல்டிமேட்டான் விஷயம். அதை வைத்துத்தான் பொன், பெண், நிலம் ஆகியவற்றை சொந்தமாக்கிக்கொள்ள முடியும். நல்ல உணவை உண்ண முடியும். பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ளலாம். பணமில்லாத நிலையில் காதலைக் காப்பாற்ற முடியாது. திருமணம் நடக்காது. அனைத்திற்கும் பெரும் போராட்டமாக இருக்கும். இந்தியா போன்ற மதவாத நாட்டில், சிறுபான்மையினர் கஷ்டப்பட்டு சம்பாதித்து பணம் சம்பாதிக்கவிட்டால் எளிதாக அவர்களை பெரும்பான்மையினர் அழித்துவிடுவார்கள். உங்களிடமுள்ள பணம் உடலில் தெரியவேண்டும். அப்போதுதான் ஊர், உலகம் சற்று விலகி தள்ளி நிற்கும். கதவைத் திறந்துவிடும். அனைத்து கதவுகளும் காசு என்றால் திறக்கும். திறக்காத கதவுகளும் கூட. இப்போது அமெரிக்கா பிற நாடுகளை நீ அதை செய்யக்கூடாது இதைச் செய்யக்கூடாது என மிரட்டுகிறது என்றால் அதற்கு என்ன காரணம். அதன் நாணயம்தான் பல்வேறு வியாபாரங்களில் பயன்படுத்தப்படுகிறது. வருமானம் ஏகத்துக்கும் வருகிறது. அதை வைத்து ஆயுதங்களை வாங்கி குவித்துள்ளது. அந்த நாடு சொல்வதை மூன்றாம் உலக நாடான, அடிமை புத்தி கொண்ட இந்தியா கேட்காவிட்டால் பொருளாதாரம் திட்டமிட்டு வீழ்த்...

ஓராண்டில் நாம் எளிதாக புரிந்துகொள்ள முடியும் உளவியல் சமாச்சாரங்கள்!

 365 டேஸ் சைக்காலஜி உளவியல் கட்டுரைகள் ஆங்கிலம் இந்த நூல் தலைப்புக்கு ஏற்ப முழு ஆண்டுக்கான ஏராளமான கட்டுரைகளைக் கொண்டுள்ளது. அவை அனைத்துமே ஒற்றைப் பக்கங்களாக எழுதப்பட்டுள்ளன. இதன் வடிவமே இதை எளிமையான நூலாக மாற்றுகிறது. கூறியுள்ள விஷயங்கள் அனைத்துமே முக்கியமான உளவியல் விவகாரங்கள். இவற்றை தினசரி ஒன்று என படித்தால் கூட ஓரளவுக்கு உளவியல் பற்றிய அறிவைப் பெற்றுவிட முடியும்.  நூலில் ஒருவரின் சிந்தனை எப்படியானது. கும்பலாக இருப்பவர்களின் சிந்தனை எப்படியானது என்பதை விளக்கியுள்ளது சிறப்பானது. கும்பலாக இயங்குபவர்களின் செயல்பாடு காரணமாக, தனிப்பட்ட சிந்தனைக்கு எதிரான மனநிலை எப்படி உருவாகிறது என்பதை விளக்கி கூறியுள்ளார் ஆசிரியர். இந்தியா போன்ற மதவாத நாட்டில் நாம் கவனிக்கவேண்டிய உளவியல் அணுகுமுறை இது.  நூலில் நிறைய வேறுபட்ட உளவியல் சோதனைகளை நடத்திய அறிவியலாளர்களின் பெயர்கள், சிந்தனைகள், செய்த சோதனைகள் ஏற்படுத்திய சமூக மாற்றங்களைப் பற்றியும் கூறியுள்ளனர். குறிப்பாக உளவியல் சோதனைகள் மூலம் கல்வி கற்பிப்பது கூட மாற்றங்களை சந்தித்துள்ளது. ஆசிரியரை மையமாக கொண்ட அணுகுமுறை, மாணவர்களை மையமாக கொண்...

பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை, பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தையின் அறிகுறிகள்

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி பாலியல் ரீதியான வன்முறை என்றால் என்ன? சிறுவன், சிறுமியை ஒருவர் பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்துவதை பாலியல் வன்முறை, சுரண்டல் என்று கூறலாம். முறையாக திருமணம் செய்யும் அல்லது வாக்களிக்கும் வயதை எட்டாதவர்கள். இவர்களை இளையோர் என்று கூறலாம். பாலியல் ரீதியான வன்முறையை சிறுவன், சிறுமிக்கு அறிமுகமானவர்கள் தொடங்கி அறிமுகமில்லாத வழிப்போக்கர்கள் வரை வாய்ப்பு கிடைத்தால் செய்கிறார்கள். பொதுவாக பலவீனமானவர்களைக்  கண்டால் அவர்களை மேலாதிக்கம் செய்து சுரண்டுவது மனிதர்களுக்கு பிடித்தமானது. உடல் ரீதியாக, உள்ள ரீதியாகவும் ஒருவரை பாலியல் வன்முறை பாதிக்கிறது.  பாலியல் சுரண்டல் என்பது வன்முறையை அடிப்படையாக கொண்டதா? அப்படி இருக்க வேண்டியதில்லை. இன்றைக்கு ஆபாச வலைத்தளங்களில் பெண்ணை உறவு கொள்வதாக காட்டும்போது கூட அவளின் கழுத்தை நெரித்தபடியே உறவு கொள்கிறார்கள். அது படப்பிடிப்பு, நடிகர்களை வைத்து ஆபாச படம் எடுக்கப்படுகிறது ஆனால் உண்மையில் ஒருவர் இதை முயன்றால் என்னாகும்? சம்பவ இடத்திலேயே ஒருவர் மூச்சு திணறி இறந்துவிடுவார். பாலியல் ரீதியான சுரண்டல் பல்வேறு திசை ...

சீனாவின் கல்வி சீர்திருத்தங்கள் - உயர்கல்வியை வளர்த்தெடுத்த தனியார் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள்!

படம்
    சீனாவில், 1998 -2007 காலகட்டத்தில் மட்டும் 1022லிருந்து, 1912 கல்வி நிறுவனங்கள் என உயர்கல்விக்காக தொடங்கப்பட்டுள்ளன. வளர்ச்சி 2சதவீதம். பெய்ஜிங், தியான்ஜிங், கிழக்கு கடற்புற பகுதியான ஜியாங்சு ஆகியவற்றில் உயர்கல்வி பாராட்டும்விதமாக வளர்ந்துள்ளது. சீன அரசின் நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகிறது. சீன நகரங்களில் கல்வியில் ஒட்டுமொத்தமாக முன்னிலை பெறும் நகரமாக பெய்ஜிங் உள்ளது. குறைந்த வளர்ச்சி கொண்ட மாகாணங்களைப் பார்ப்போம். ஷெஜியாங், குவாங்டாங் ஃப்யூஜியன், சான்டாங், ஹெனான், நிங்ஷியா ஆகியவை கல்வி வளர்ச்சியில் கீழே உள்ளன. பெய்ஜிங், சாங்காய், ஜியாங்சு ஆகிய மாகாணங்களில் ஒருவர் உயர்கல்வி கற்கும் வாய்ப்பு அதிகம். ஆனால், அதுவே ஹெனான், ஷெஜியாங், சான்டாங், குவாங்டாங் ஆகிய மாகாண மாணவர்களில் ஒருவர் கல்வி கற்க நினைத்தாலும் வாய்ப்பை பெறுவதற்கு ஏராளமான பிரயத்தனங்களை செய்யவேண்டியிருக்கும். வாய்ப்பே கிடையாது என்றல்ல. கடினம் என்று கூறவேண்டும். சீனாவில் உயர்கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட்டதே தொழில்மயமாக்கலை ஊக்குவிக்கவேண்டும் என சீன அரசு முடிவெடுத்ததால்தான். ஐம்பது எழுபதுகளில் தைவானில் உள்ள கு...

உபசாந்தம் - மின்னூல் வெளியீடு - தரவிறக்கி வாசியுங்கள்.

      உபசாந்தம் (Upashantham)  இராம பாரதி https://books2read.com/u/mBdpnN

சமூகப் புரட்சியில் அறிவுஜீவிகளுக்கு உள்ள பங்கு!

படம்
  அரசியல் ரீதியான புரட்சிக்கும் சமூகத்தை அடிப்படையாக மாற்றும் புரட்சிக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அரசியல் புரட்சியை ஒருவகையில் ரகசியமாக ஏகபோகமாக கூட நடத்திக் காட்டிவிட முடியும். தொழிற்சாலை தொழிலாளர்கள், வேளாண்மைத் தொழிலாளர்கள் என இருதரப்பும் ஒன்றாக இணைந்து செயல்படவேண்டும். பொருளாதாரம், வாழ்க்கை என்ற இரண்டு அம்சங்களிலும் கூட இருபிரிவைச் சேர்ந்த தொழிலாளர்களும் முக்கியம். இவர்கள் இல்லாமல் எந்த சமூக மாற்றங்களும் நடைபெறாது. இணையம் வந்தபிறகு போராட்டங்களை ஒருங்கிணைப்பு வேறு ஒரு தளத்திற்கு மாறியுள்ளது. ஆனால், சமூக வலைதளங்களை நிர்வகிப்பவர்கள், போராட்டங்களை எளிதாக தடுத்து நீக்க முடியும். எனவே, அவை இல்லாமலும் மக்கள் ஒன்றாக இணைந்து களத்தில் செயல்பட முயலவேண்டும். முதலாளிகளைப் பொறுத்தவரை லாபம் வந்தால்தான் ஒரு பொருளை நிர்வாகம் செய்வார். அரசு எதிர்த்தால், தொழில் இழப்பை சந்தித்தால், அதை எதிர்கொள்ளும்படி நிறைய கட்டுப்பாடுகள், விதிகளை உருவாக்கிக்கொள்வார். அரசுகளின் கருத்தியலுக்கு ஏற்றபடி அல்காரிதங்களை கூட தொழில்நுட்ப நிறுவனங்கள் மாற்றியமைப்பதை இதற்கு உதாரணமாக கூறலாம். உடல் உழைப்பு, மூளை உழைப்பு என...

சமூக மாற்றங்களை அடிப்படையாக கொண்ட புரட்சி போராட்டம்!

      மக்கள் அதிகார தத்துவத்தில் கம்யூனிசத்தில் ஆர்வம் கொண்டவர்களும் உண்டு. அதில் நம்பிக்கை இல்லாதவர்களும் உண்டு. இதை நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டும். சமூகத்தில் உள்ள செல்வம், விடுதலை, நீதி, நலவாழ்வு அனைத்து மக்களுக்கும் புறக்கணிப்பின்றி கிடைக்கவேண்டுமென கம்யூனிச தத்துவம் வலியுறுத்துகிறது. இதில் நம்பிக்கை இல்லாதவர்களை தனித்துவவாதிகள் என்று கூறலாம். அனைத்து மக்கள் அதிகார தத்துவவாதிகளும் அரசு என்பது ஆக்கிரமிப்பு உணர்வு கொண்டது. மக்களை அழுத்தி நசுக்குவது, அநீதியை அடிப்படையாக கொண்டது என ஒப்புக்கொள்வர். தனிமனித வளர்ச்சியை அரசு அழித்தொழிக்கிறது. ஒரு சமூகத்தில் மனிதர்கள் மீது எந்த வித அழுத்தமும் உந்துதலும் இருக்கக்கூடாது. எனவே, அடிப்படையாக அனைத்து மக்கள் அதிகார தத்துவவாதிகளும் அரசை ஒழிப்பது என்ற கருத்தில் ஒன்றுபடுகிறார்கள். மியூசுவலிஸ்ட் என்ற பிரிவினர், மக்கள் அதிகாரத்தில் உள்ளனர். இவர்கள், அரசு என்ற அமைப்பை அடியோடு அறவே ஒழிக்க நினைப்பவர்கள். பிரெஞ்சு தத்துவவாதி ப்ரவுட்தோன் என்பவரை பின்பற்றுகிறார்கள். அரசு இல்லாத அமைப்பில் லாபநோக்கு இருக்காது என்பவர்கள். வட்டி இல்லாத கடன்...

ரோனி சிந்தனைகள் - மீண்டும் மீண்டும் திருட்டு

படம்
      ரோனி சிந்தனைகள் விருது கொடுக்க என்னையும் அழைத்திருக்கலாம் என மூத்த வீரர் ஆதங்கப்பட்டிருக்கிறார். விருதின் பெயருக்கு பரவாயில்லை. ஆனால் விருது கொடுக்க எங்கள் நாட்டின் மூத்த வீரரே போதும் என நிர்வாகம் கூறிவிட்டது. கேட்டுப்பெறுவது உரிமையாக இருந்த காலம் இருந்தது. இப்போது அப்படியல்ல. இரத்தலாக மாறிவிட்டது. அரசு விற்கும் மூன்றாந்தர தேயிலைக்கு ஒரே பலம், அதன் பாலிதீன் பாக்கெட்தான். ஆம், அதை வைத்துத்தான் அதை தேயிலைத்தூள் என காலை, மாலை என இருவேளைகளில் மனதில் உருவேற்றிக்கொண்டு கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து அருந்த வேண்டும். அதிலும் தேயிலை என குறிப்பிடாதபோது, நீங்கள் அதை அருந்துவதையே மறந்துவிடுவீர்கள். மறுக்கவும் வாய்ப்புள்ளது. சகோதரரிடம் அவரது நெருங்கிய நணபர் எனது கண்முன்னே உரையாடினார். பிறகு, இயல்பான தொனியில் குரலை மாற்றிக்கொண்டு அப்புறம் அண்ணனோட கடை எப்படி போகுது என்றார். அதை போனிலேயே கேட்டிருக்கலாமே என கேட்டதற்கு சினம் கொண்டுவிட்டார். இயல்பான கேள்விகளுக்கு நீங்கள் காரண ரீதியாக பதில் அளிக்க கூடாது. அது எப்போதும் தர்ம சங்கடத்திலேயே பகையிலேயே முடியும். காயம்பட்ட வீரனுக்கு கர்ப்...

இளைஞன் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு திருமணம் செய்ய பெண் தேடினால்....

படம்
      மேரேஜ் வைப்ஸ் சபரீஷ், மகிமா director - harish வைரலி தமிழ் யூட்யூப் சேனல் ஒரு மணி நேரத்தில் பார்த்துவிடக்கூடிய சிறிய வெப் படம். முதல் காட்சியில் சபரி, தன்னுடைய நிறுவனத்தின் உரிமையாளரிடம் வேலையை விட்டு நின்றுகொள்வதாக கடிதம் கொடுக்கிறான். அந்த நேரத்தில் அவனுக்கு பெண் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வீட்டில் அம்மா மட்டும்தான் இருக்கிறார். அவருக்கு மகன் மீது பிரியம். சபரிக்கு பள்ளி, கல்லூரி, அலுவலகம் என சக்கரம் போல சுற்றும் கடிகார வாழ்க்கை போரடிக்கிறது. எனவே, அதில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்கிறான். பெண் பார்க்கும் சடங்கு எல்லா இடத்திலும் ஒன்றுபோல்தான். பையனது வேலை, சம்பளம், சொத்து என அனைத்தையும் கேட்கிறார்கள். இதில் சபரிக்கு வேலை இல்லை என்றதும் பெண் பார்க்கும் தரகர்கள் அனைவரும் போனை உடனே துண்டிக்கிறார்கள். அந்த நேரத்தில் ஒரு பெண் மட்டுமே அவனை சந்திக்க வருகிறாள். அவள்தான் மகிமா. உண்மையில் அவள் ஏன் சபரியை சந்திக்க விரும்பினாள் என்பதுதான் இறுதிக்காட்சி. தமடா மீடியாவின் யூட்யூப் சேனல்களில் ஒன்றுதான் வைரலி தமிழ். நடித்துள்ள நடிகர்கள் சபரி, மகிமா என இருவருமே சிறப்பாக நடித்த...

இந்தியச் சமூகத்தில் அதிகரித்து வரும் குழந்தைத் திருமணங்கள் - கர்நாடக மாநிலம் முதலிடம்

      குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு - கர்நாடகம் முதலிடம் இப்படி தலைப்பு வைப்பது பெருமைக்குரியது அல்ல. ஆனால் குழந்தை திருமணங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவது ஆபத்தான திசையை நோக்கி சமூகம் பயணிப்பதைக் காட்டுகிறது. அண்மையில் என்சிபிசிஆர் என்ற குழந்தைகளின் உரிமைக்கான அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் 2022ஆம் ஆண்டில் 215 குழந்தைத் திருமணங்கள் கர்நாடகத்தில் நடந்துள்ளதாக வழக்கு பதிவாகியுள்ளது. இதற்கடுத்து அசாம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், ஹரியாணா, ஆந்திரம், உபி, பீகார், ஜம்மு காஷ்மீர், டெல்லி ஆகிய மாநிலங்கள் வருகின்றன. இந்தியாவில் பதினெட்டு வயதுக்கு கீழுள்ள 1.5 மில்லியன் சிறுமிகள் குழந்தை திருமணம் செய்யப்படுவதாக ஆய்வுகள் தகவல் தெரிவிக்கின்றன. பதினைந்து வயது முதல் பத்தொன்பது வயது வரையிலான இளையோர் பிரிவில் பதினாறு சதவீதம் பேர் குழந்தை திருமணத்தில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுகின்றனர். குழந்தைகளுக்கு திருமணம் செய்விப்படுவது, சமூகத்தில் உள்ள பாலின பேதங்களை அடிப்படையாக கொண்டது. இந்த செயல்பாடு வழியாக அவர்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுகின்றன...

அத்தை மகளை மணம் செய்ய கேபிள் டிவி கம்பெனியைத் தொடங்கும் நாயகனின் கனவு!

படம்
                காஞ்சன மாலா கேபிள் டிவி நெட்வொர்க் ஶ்ரீகாந்த், லட்சுமி ராய்,தேஜ், சுனில், கிருஷ்ண பகவான் வசதியான பணக்கார குடும்பம். பல்லாண்டுகளுக்கு முன்னர், அவர்களின் ஒரே பெண் பிள்ளை காணாமல் தொலைந்து போய்விடுகிறாள். அவள் பெயர்தான் காஞ்சன மாலா. அந்தப்பெண்ணை நேசிக்கும் தாய் மாமன், அவளது பெயரில் கேபிள் டிவி சர்வீஸ் கொடுப்பதைத் தொடங்கி ரூபர்ட் முர்டோக் லெவலுக்கு வளர நினைக்கிறான். இந்த நிலையில் காணாமல் போன அத்தைப் பெண் திரும்ப கிராமத்திற்கு வருகிறாள். நாயகனுக்கும் அவளுக்கும் காதல் தீ பற்றியதா, தொழில் வளர்ந்ததா என்பதே கதை. முழுக்க கிராமத்தில் எடுத்திருக்கிறார்கள். படத்தில் நாயகனும், அவனது குழுவும், கிராமத்தினரும் மட்டுமே படத்திற்கு பொருத்தமாக தெரிகிறார்கள். மற்றவர்கள் அனைவருமே குறிப்பாக நாயகி, அவளது தோழி, அவர்களது ஆடைகள், இறுதியாக வரும் மோசடி வில்லன் என அனைவருமே செயற்கையாக தெரிகிறார்கள். படத்தில் வில்லன் கிருஷ்ண பகவான். அவரது பாத்திரம் பொம்பளை சோக்கு பேர்வழி. இதனாலோ என்னமோ, அவரது ஒன்லைன் கவுன்டர்களில் உள்ள சுவாரசியம் பாத்திரத்தின் தன்மையில் இல்லை. டிவி...

வெற்றிக்கு உழைப்பு வேண்டாம், செல்வாக்கானவர்களின் தொடர்புகளைக் கொண்டிருந்தால் போதும்!

படம்
            வெற்றிக்கு காரணம், தொடர்புகள் மட்டுமே! சீனாவைச்சேர்ந்த தொன்மையான தத்துவவாதிகள், சமூகத்தை பிளவுபடுத்தும் விஷயங்களை அறிந்து மக்களை எச்சரித்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது, சமநிலையற்ற பாகுபாடு. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்ஃபூசியஸ், ஆட்சியாளர்கள் போதாமையைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், சமமில்லாத தன்மையைப் பற்றி கவலைப்படவேண்டும் என்று கூறியிருக்கிறார். மாவோவின் மொழியைப் பின்பற்றும் ஷி ச்சின்பிங், மேற்கு நாடுகளுக்கு எதிராக அனைவருக்குமான வளம் என்ற சொல்லைப் பொதுவெளியில் பேசும்போது பயன்படுத்துகிறார். அதெல்லாம் வெற்றுப்பேச்சோ என்று தோன்றும்படி உள்நாட்டு நிலைமை மாறிவருகிறது. சீனாவில் தொண்ணூறுகளிலேயே பணக்காரர்களுக்கும், ஏழை மக்களுக்குமான வேறுபாடு பெரியளவில் அதிகரித்து வந்தது. இதுதொடர்பான ஆய்வை அமெரிக்கர்களான ஸ்காட் ரோசெல், மார்ட்டின் வொயிட் ஆகிய இருவரும் செய்தனர். தொடக்கத்தில் தங்கள் வாழ்க்கை மாறிவிடும் என நம்பிக்கையோடு இருந்தவர்கள், சமநிலையற்ற பாகுபாடு அதிகரிக்க பொருளாதார முறை மீது புகார்களை அடுக்கத் தொடங்கியுள்ளனர். ஆய்வை ஷி ஆட்சிக்கு வருவ...

தன்னை முன்னேற்றிக்கொண்டு சமூகத்திற்கும் பங்களிக்க கல்வி அவசியம்!

படம்
நீண்ட கால நோக்கில் நாட்டின் மேம்பாட்டிற்கு கல்வியே அடித்தளமானது. இதன் வழியாக நமது கலாசாரம், அறிவை மனித குலத்திற்கு கொண்டு சென்று சேர்க்கலாம். புதிய தலைமுறையை சிறப்பாக வளர்த்து, அவர்களுக்கு நல்ல வாழ்க்கை முறையை உருவாக்கித் தரவேண்டும். ஐ.நா சபை, முன்னெடுத்துள்ள கல்வித் திட்டத்தை சீனா தொடர்ந்து ஆதரிக்கும். 260 மில்லியன் மாணவர்கள், 15 மில்லியன் ஆசிரியர்கள் உள்ள சீனாவில் கல்வியை மேம்படுத்துவது என்பது பெரும் சவாலான பணி. நாட்டை அறிவியல், கல்வி வழியாக புத்துயிர்ப்பு செய்ய முடிவெடுத்து இயங்கி வருகிறது. அரசு, கல்விக்கு எப்போதும் முன்னுரிமை கொடுத்து இயங்கி வந்துள்ளது. கல்விக்கு முதலீடு செய்வதோடு, சர்வதேச தரம் கொண்ட, வாழ்க்கை முழுமைக்குமான கல்வியை வழங்குவதில் ஆர்வம் கொண்டுள்ளது. இதன் விளைவாக கல்வியில், கற்பதில் ஆர்வம் கொண்ட அறிவுசார்ந்த சமூகத்தை உருவாக்க முயன்று வருகிறது. நாட்டிலுள்ள ஒவ்வொரு வீட்டிலுமுள்ள சிறுவர், சிறுமிகள் பள்ளிக்கு செல்லும் வாய்ப்பை அரசு ஏற்படுத்தி தர கடுமையாக உழைத்து வருகிறது. 1.3 பில்லியன் மக்களுக்கு சிறப்பான கல்வியை வழங்கி, அவர்கள் தம்மை தாமே மேம்படுத்திக்கொள்...

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சம்பள பாகுபாடு

படம்
  ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பொருளாதார பாகுபாடு ஆண் ஒரு டாலர் சம்பாதிக்கிறான் என்றால் பெண் எழுபத்தேழு சென்டுகள் சம்பாதிக்கிறாள் என உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு தகவல் தெரிவித்துள்ளது. சர்வதேச தொழிலாளர் சங்கம், சம்பளத்தில் உள்ள பாகுபாடு என்பதே, ஆணும் பெண்ணும் சமமாக நடத்தப்படவில்லை என்பதற்கான ஆதாரம் என கூறியுள்ளது.  மாதம், வாரம், நாள் என பல்வேறுவிதமாக ஒருவர வேலை செய்து சம்பளம் வாங்கலாம். ஆனால், ஒருவரின் பாலினம் சார்ந்து ஆண் என்பதற்காகவே பாரபட்சமாக பார்த்து பெண்ணுக்கு சம்பளவெட்டு செய்வது நேர்மையான செயல் அல்ல. ஆணும், பெண்ணும் ஒரே விதமாக வேலை செய்தாலும் கூட பெண்களை சற்று இளப்பமாக பார்த்து சம்பளக்குறைவு செய்வது உலகநாடுகளில் இயல்பாக உள்ளது.  ஒரே கல்வித்தகுதி, அனுபவம் இருக்கும் ஆண், பெண்ணுக்கு ஒரேவிதமாக சம்பளத்தை வழங்குவதே நேர்மையான செயல்பாடு. அப்படியில்லாமல் பாகுபாடு காட்டுவது சமூகநீதிக்கு புறம்பானது. 2022ஆம் ஆண்டு ப்யூ நிறுவனம் செய்த ஆராய்ச்சியில் ஆண்கள் சம்பாதிக்கும் ஒரு டாலரில் எண்பது சென்டுகள் பெண்களுக்கு செல்கிறது என அளவிட்டு கூறியுள்ளனர். அதாவது, ஆண்களுக்கு ஒரு டாலர...

மாணவர்களை படுகொலை செய்த காவல்துறையை ஆதரித்துப் பேசிய அமெரிக்க மக்கள்!

படம்
  சில மனிதர்கள் இயல்பாகவே இருப்பார்கள். ஆனால் சில சூழ்நிலைகளில் ஏன் அப்படி நடந்துகொண்டார்கள் என்றே நம்ப முடியாது. அந்த வகையில் பீதியூட்டும்படி நடந்துகொள்வார்கள். நமக்கு மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ளவர்களும் கூட அவன் என்ன பைத்தியமா என கூறும்படி நடவடிக்கை இருக்கும். இதுபற்றி ஆராய்ச்சி செய்தவர் உளவியலாளர் எலியட் ஆரோன்சன்.  இப்படி நடந்துகொண்டவர்களை பைத்தியம் என பிறர் நினைக்கலாம். ஆனால் அப்படி உடனே முடிவுக்கு வரவேண்டியதில்லை என்று ஆரோன்சன் கூறுகிறார். சிலர், வன்முறை, குரூரம் அல்லது முன்முடிவுகளின்படி செயல்படுவது உண்டு. நல்ல மனநிலையில் உள்ளவர்கள் கூட சில சந்தர்ப்பங்களில் நினைத்துப்பார்க்க முடியாத வகையில் செயல்படுகிறார்கள் என ஆரோன்சன் கருதினார்.  இதற்கு ஆதாரமாக ஆரோன்சன் காட்டும் எடுத்துக்காட்டைப் பார்ப்போம். 1970ஆம் ஆண்டு, ஓஹியோவில் உள்ள கென்ட் மாகாண பல்கலைக்கழகம். இங்கு, அமெரிக்க அரசு, கம்போடியாவுக்குள் நுழையக்கூடாது என மாணவர்கள் போராட்டம் செய்து வந்தனர். அப்போது தேசிய காவலர் ஒருவர், மாணவர்களுடன் வாக்குவாதம் முற்றி துப்பாக்கியை அவர்கள் புறம் திருப்பினார். விளைவாக, நான்கு மாணவர...