இடுகைகள்

சமூகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாணவர்களை படுகொலை செய்த காவல்துறையை ஆதரித்துப் பேசிய அமெரிக்க மக்கள்!

படம்
  சில மனிதர்கள் இயல்பாகவே இருப்பார்கள். ஆனால் சில சூழ்நிலைகளில் ஏன் அப்படி நடந்துகொண்டார்கள் என்றே நம்ப முடியாது. அந்த வகையில் பீதியூட்டும்படி நடந்துகொள்வார்கள். நமக்கு மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ளவர்களும் கூட அவன் என்ன பைத்தியமா என கூறும்படி நடவடிக்கை இருக்கும். இதுபற்றி ஆராய்ச்சி செய்தவர் உளவியலாளர் எலியட் ஆரோன்சன்.  இப்படி நடந்துகொண்டவர்களை பைத்தியம் என பிறர் நினைக்கலாம். ஆனால் அப்படி உடனே முடிவுக்கு வரவேண்டியதில்லை என்று ஆரோன்சன் கூறுகிறார். சிலர், வன்முறை, குரூரம் அல்லது முன்முடிவுகளின்படி செயல்படுவது உண்டு. நல்ல மனநிலையில் உள்ளவர்கள் கூட சில சந்தர்ப்பங்களில் நினைத்துப்பார்க்க முடியாத வகையில் செயல்படுகிறார்கள் என ஆரோன்சன் கருதினார்.  இதற்கு ஆதாரமாக ஆரோன்சன் காட்டும் எடுத்துக்காட்டைப் பார்ப்போம். 1970ஆம் ஆண்டு, ஓஹியோவில் உள்ள கென்ட் மாகாண பல்கலைக்கழகம். இங்கு, அமெரிக்க அரசு, கம்போடியாவுக்குள் நுழையக்கூடாது என மாணவர்கள் போராட்டம் செய்து வந்தனர். அப்போது தேசிய காவலர் ஒருவர், மாணவர்களுடன் வாக்குவாதம் முற்றி துப்பாக்கியை அவர்கள் புறம் திருப்பினார். விளைவாக, நான்கு மாணவர்கள் கொல்லப்பட

தனிநபர்கள் சமூகத்தை எப்படி புரிந்துகொள்கிறார்கள் என்பதைப் பற்றிய உளவியல் ஆய்வு - செர்ஜ் மாஸ்கோவிசி

படம்
  உளவியல் ஆராய்ச்சி செய்வதெல்லாம் சரிதான். ஆனால் இதில் பொதுமக்களின் கருத்துகள் பற்றிய அக்கறையே இல்லையே என அங்கலாய்த்த உளவியலாளர்கள் உண்டு. அவர்கள் என்ன கூற நினைத்தார்கள் என்பதைப் பார்ப்போம்.  ஒரு விஷயத்தைப் பற்றி பிறர் கூற அல்லது இணையத்தின் வழியாக கேள்விப்படுகிறோம். உடனே அதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள நினைக்கிறோம். அப்படி தெரிந்துகொண்ட விஷயங்களை ஏற்கெனவே தெரிந்தவற்றோடு அல்லது அனுபவத்தோடு இணைக்கிறோம். இப்படி தெரிந்துகொண்ட அனுபவங்களை ஒருவர் உரையாடல் வழியாக பிறருக்கு கடத்துகிறார். பகிர்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம். இதற்கு நட்பு, உறவுகள், சமூக வலைத்தளங்கள், மக்கள் பங்கேற்கும் டிவி நிகழ்ச்சிகள் உதவுகின்றன. நிறைய மக்கள் ஒன்றாக அமர்ந்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்போது, அங்கு கற்பதும், பெறுவதும் நடக்கிறது. இதன்வழியாக சமூகத்தின் மதிப்புகள், ஈடுபாடு தெரிய வருகிறது. மக்கள் உரையாடுவதன் வழியாக ஒருவர் மிகுந்த மேம்பாடு கொண்ட அறிவை அடைகிறார்கள் என்று கூற முடியாது. அது உரையாடலின் லட்சியமும் அல்ல. கலந்துரையாடலின் வழியாக சமூகம் தனக்கான தொலைநோக்கு பார்வையை, பாதிக்கும் விஷயங்களை எப்படி கையாள்வத

எல்இடி பல்பு போல மனநலன் ஒளிர என்ன செய்யலாம்?

படம்
  மனநலனைக் காத்துக்கொள்ள என்ன செய்யலாம்? மனிதர்களோடு பழகுவதை கைவிட வேண்டும் என பகடையாட்டம் லும்பா பாத்திரம் போல முடிவெடுக்கலாம்தான். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. குறைந்தபட்சம் சில குறிப்புகளை பின்பற்றலாம், மனதிற்கு ஏற்படும் சேதாரத்தை குறைக்க முயலலாம்.  சமூகவலைத்தள போதை வக்கிரம் பிடித்த, மனநல பிரச்னை உள்ளவர்கள், மூளை அழுகிப்போனவர்கள்  உள்ள இடமாக சமூக வலைத்தளங்கள் மாறிவருகின்றன. வேலைக்கு இடையே ஓய்வுக்காக பதினைந்து நிமிடங்கள் செலவழிப்பது தவறில்லை. மற்றபடி ஒருநாளுக்கு அதற்கு மிஞ்சி அதிகமாக செல்லக்கூடாது. அப்படி சலிப்பு ஏற்பட்டால் கூட சமூக வலைத்தளங்களுக்கு செல்லாமல் இருக்க வைராக்கியமாக முடிவு செய்யுங்கள். நேரத்தை வீணாக்கும் ஆப்கள் இருந்தால் அதை அன்இன்ஸ்டால் செய்து மகிழ்ச்சியாக இருங்கள்.  உண்மையான நண்பன்  சமூக வலைத்தள கணக்குகளுக்கு நேர வரையறை முக்கியம். அடுத்து, உங்களோடு தொடர்பு கொண்டிருந்த பழைய நண்பர்கள் இருக்கிறார்களா என கண்டறியலாம். பேசலாம். பழைய நண்பர்களில் யாரேனும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவராக இருந்தால் கவனம். போட்டித்தேர்வு எழுதி வென்று அரசு அதிகாரியானவர்களாக  இருந்தால் அவர்களோடு ந

அநீதிக்கு எதிரான குரலாக ஒலிக்கும் ஆக்ரோஷ இசை!

படம்
  மெட்டல் மியூசிக்  நிக்கோல் ஹார்னிங் 104 பக்கங்கள் ஹெவி மெட்டல் இசை இன்று தமிழ் சினிமாவுக்கும் வந்துவிட்டது. பிராந்திய மொழி சினிமாவுக்கு வருவதற்கு வேண்டுமானால் தாமதமாகி இருக்கலாம். ஆனால், எழுபது எண்பதுகளில் அந்த இசையை ரசிக்கும் பலர் உலகமெங்கும் உருவாகிவிட்டார்கள்.   இசைவிழாக்களுக்கு செல்பவர்கள் பிறருக்கு அதைப்பற்றி சொல்வது குறைவு. சொன்னாலும் புரிந்துகொள்ளவேண்டுமே? இங்குள்ள இசைஞானிகளுக்கு ஹெவி மெட்டல் என்பது இரைச்சல் என்பதாகவே மாறாத கருத்துண்டு. கிணற்றுத் தவளைகளுக்கு அகங்காரம் எப்போதுமே அதிகம்தான்.  ஹெவி மெட்டல் இசை எதற்கு உருவானது, அதன் பின்னணி, அதில் பிரபலான இசைக்குழுக்கள், அவர்களின் புகழ், வீழ்ச்சி, பெற்ற வெற்றிகள், எதிர்கொண்ட விமர்சனங்கள், சமூகம் வேறுபட்ட இசையை எப்படி புரிந்துகொண்டது, உள்வாங்கியது என்பதைப் பற்றி நிக்கோல் ஹார்னிங் விரிவாக விளக்கியுள்ளார்.  சமூக அமைப்பில் உள்ள பிரச்னைகளை எதிர்க்க நினைப்பவர்கள், அதில் பொருந்திபோக முடியாதவர்கள் மெட்டல் இசையை உருவாக்குகிறார்கள். அதைக் கேட்பவர்களும் இப்படியான கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இல்லையென்றாலும் பரவாயில்லை. தலையை மேலும்

மனிதர்கள் தங்களை எப்படி வெளியுலகத்தில் வெளிப்படுத்திக்கொள்கிறார்கள்?

படம்
  கல்யாணம் என்றால் உற்சாகமான புன்னகை, சிரிப்பு இருக்கும். ஒருவர் இறந்துவிட்டார், அவரின் ஈமச்சடங்களில் வருத்தம், துயரம் இருக்கும். அங்கு போய் இறந்தவருக்கு மனமார்ந்த மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூற முடியாது. இதெல்லாம் ஒருவர் அனுபவப்போக்கில் கற்றுக்கொள்வதுதான். கற்றபிறகு ஆக்சன் சொல்லாமலேயே நடிக்க வேண்டியதுதான்.  பிடிக்காது என்றாலும் கூட வாழ்க்கையில் நிறைய இடங்களில் டோண்ட் கொஷின் தி எமோஷன் என மனதிற்குள்  சொல்லிக்கொண்டு சில நாடக தருணங்களை செய்யவேண்டியிருக்கும். அதை தவிர்க்க முடியாது. சென்னையில் உள்ள ஜவுளிக்கடைகளில் வாடிக்கையாளர்களை வரவேற்பதற்கென யூனிஃபார்ம் ஆடைகளை அணிந்த பெண்கள், ஆண்கள் இருப்பார்கள். இவர்கள் அணிந்துள்ள ஆடை, நகை, இவர்களை சுற்றியுள்ள பொருட்கள் அனைத்துமே கலை இயக்குநர் தோட்டாதரணி போடும் செட் போலவே இருக்கும். குறையே சொல்ல முடியாது. நட்சத்திர ஹோட்டல்களில் குறிப்பிட்ட பிரபல செஃப் வரும் தினங்களில் இதுபோல வரவேற்பும், மரியாதையும் இருக்கும். எதற்கு இதெல்லாம், இதெல்லாம் உண்மையா என்றால் கிடையாது. ஒருவரின் பாக்கெட்டில் உள்ள பணம் இன்னொருவரின் கையில் வரவேண்டும். அதற்காகத்தான்

தனிநபர் சுதந்திரத்திற்கு மதிப்பளித்த உளவியலாளர் சாலமன் ஆச்!

படம்
  தனிநபர் சுதந்திரம்  வெளிநாடுகளில் தனிநபர் சுதந்திரத்திற்கு அதிக மதிப்புண்டு பிற மூன்றாம் உலக நாடுகளை விட அங்கு கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பு அளிக்கிறார்கள். ஆனால் அதேசமயம் மறைமுகமாக கண்காணிப்பும் களையெடுத்தலும் உண்டு. இன்று வலதுசாரிகளின் தலையெடுப்பால் கண்காணிப்புச் சட்டங்களும், சர்வாதிகார நிர்வாக முறைகளும் என நிலைமை வெகுவாக மாறிவருகிறது.  அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் கருத்து சுதந்திரம் சார்ந்த பாதைக்கு வந்து சேர பலநூறு ஆண்டுகள் பிடித்தன இந்த நாடுகளில் குழுக்களை விட தனிநபர்களுக்கே அதிக மதிப்புண்டு. ஜப்பான், ஆப்பிரிக்கா, ஃபிஜூ ஆகிய நாடுகளில் குழுக்களுக்கும் அவர்களின் கருத்துகளுக்கும் மதிப்புண்டு.  தொடக்க கால அமெரிக்காவில், கம்யூனிசம் பேசினால் அவர்களை கைது செய்து சிறையில் வைத்து சித்திரவதை செய்வது வழக்கம். சொந்தகருத்துகளை பேசியவர்களை, மனித உரிமைக்கு குரல் கொடுத்தவர்களை தேசதுரோகி என்று கூறிவிடுவார்கள். இப்படி மனதிலுள்ள கருத்துகளை வெளிப்படையாக பேசும் தனிநபர்களை குறிப்பாக கம்யூனிஸ்டுகளை கைது செய்யும் வழக்கத்தை தொடங்கியவர், அமெரிக்க சட்டமன்ற உறுப்பினரான ஜோசப் மெக்கார்த்தி. இவரது ச

தனிநபர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக செல்வாக்கும், அழுத்தங்களும்!

படம்
  மக்கள் கருத்தே நமது கருத்து இயக்குநர் ஷங்கர் கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்தவர். இதனால் அவரது படங்களில் பிராமணர்கள் விதியை மீறாத அப்பாவிகளாக நல்லவர்களாக வருவார்கள். ஆனால் கருப்பாக இருப்பவர்கள் சேரியில் இருப்பவர்கள் தவறான செயல்களை செய்பவர்கள் என காட்சிரீதியாக வலுவாக மக்களது மனதில் பதிய வைக்க முயல்வார். கூடவே ஊழல் என்றால் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்கள் லஞ்சம் வாங்குபவர்களாக, நேர்மை இல்லாதவர்களாக காட்டப்படுவார்கள். மிக மேலோட்டமான அரசியல் பார்வை கொண்ட படங்கள் அவை. மக்கள் கருத்துகளின்படி அரசு இயங்குவதாக காட்டுவார்கள். இதன் பின்னணி பற்றிய உளவியல் ஆய்வைப் பார்க்கலாம்.  பொதுவாக ஒருவரின் செயல்பாடு என்பது காலத்தை கடந்ததாக இருந்தால், அதை அடையாளம் கண்டு அங்கீகரிப்பவர்கள் மிக குறைவானவர்கள்தான். தொலைநோக்காக யோசித்து புதுமை செய்பவர்களை சமூகம் எப்போதும் கேலியும் கிண்டலும் அவமரியாதையும் செய்து வந்திருக்கிறது. புதிய செயலை செய்கிறோம் என்றால், அதை செய்யும்போது அதில் ஈடுபட்டுள்ள மனிதர்களின் தனிப்பட்ட கருத்து, அதைப்பற்றிய மக்களின் பொதுக்கருத்து  என நிறைய விஷயங்கள் உள்ளே வரும். முன்னர் சினிமாவைப் பார்த்தோ

சமூகத்தை புரிந்துகொள்ள வேண்டுமா? அதை மாற்ற முயலுங்கள் போதும்!

படம்
  கர்ட் லெவின்  ஜெர்மனிய - அமெரிக்க உளவியலாளர். 1890ஆம் ஆண்டு போலந்தில் உள்ள மொகில்னோ என்ற நகரில் மத்தியதரவர்க்க யூத குடும்பத்தில் பிறந்தார். 1905ஆம் ஆண்டு குடும்பம், பெர்லினுக்கு இடம்பெயர்ந்தது. ஃப்ரெய்ட்பர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தார். பிறகு, முனிச் பல்கலைக்கழகத்தில் உயிரியல் படித்தார். முதல் உலகப்போரில் ஜெர்மனி ராணுவத்தில் இணைந்து சேவை செய்தார். ஆனால் காயம்பட்டதால் நாடு திரும்பியவர், முனைவர் படிப்பை முடித்தார். பெர்லினில் உள்ள உளவியல் மையத்தில் மூன்று ஆண்டுகள் வேலை செய்தார். யூதர் என்பதால் வேலையை விட்டு விலகுமாறு அச்சுறுத்தப்பட்டார். எனவே, ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவிற்கு வந்து சேர்ந்தார். முதலில் கார்னல் பல்கலைக்கழகத்தி்ல் வேலை செய்துவிட்டு பிறகு ஐவோவா பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். எம்ஐடிக்கு சொந்தமான குரூப் டைனமிக்ஸ் அமைப்பின் தலைவராக இருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இதயபாதிப்பு ஏற்பட்டு காலமானார்.  முக்கிய படைப்புகள் 1935 எ டைனமிக் தியரி ஆஃப் பர்சனாலிட்டி 1948 ரிசால்விங் சோசியல் கான்ஃபிலிக்ட்ஸ் 1951 ஃபீல்ட் தியரி இன் சோசியல் allaboutpsychology.com

சமூக உளவியலின் தந்தை கர்ட் லெவின்!

படம்
  ஒருவரின் குணநலன்களுக்கு அடிப்படையானது என்ன? அவரின் தனிப்பட்ட இயல்பா, அல்லது அவரைச் சுற்றியுள்ள அல்லது அவர் வாழும் சூழலா? இந்த கேள்வி பலருக்கும் இருக்கும். தொடக்கத்தில் சூழல் மட்டும்தான் என சூழலியலாளர்கள் நம்பினர். ஆனால் 1920ஆம் ஆண்டு, கர்ட் லெவின் வெறும் சூழல் மட்டுமல்ல தனிநபரும் கூடத்தான் அவரின் ஆளுமை மாற்றத்திற்கு காரணம் என்று கூறினார்.  இரண்டு எதிரெதிரான விசைகள் மனிதரை அவரது இலக்கு நோக்கி அழைத்துச்செல்ல உதவுகிறது என கர்ட் லெவின் கூறினார். இவர் கூறிய கருத்துகள், அன்றைய உளவியல் உலகிற்கு சற்று புரட்சிகரமானவை.  தன்னைத்தானே மாற்றியமைப்பது கடினமான ஒன்று. ஒருவர் அதுவரை சேமித்து வைத்த கொள்கைகளை தூக்கிப்போட்டுவிட்டு அனைத்தையும் மாற்றியமைத்து இலக்கை நிர்ணயித்து பயணம் செய்வது கடினம். அதுவே அமைப்பு ஒன்றை இதுபோல மாற்றினால் அதில் ஏராளமானவர்களின் பார்வை, அறிவு, தலையீடு என அனைத்துமே இருக்கும். இதையெல்லாம் உள்ளீடாக பெற்று அமைப்பு தன்னை மாற்றிக்கொள்கிறது. அப்படித்தான் காலத்திற்கேற்ப சவால்களை சமாளித்து வெல்ல முயல்கிறது.  ஒரு அமைப்பை மாற்ற முயலும்போதுதான் அதை முழுமையாக புரிந்துகொள்ளவே முடியும் என்று

மனிதர்களைப் பற்றிய கருத்துகளை வலிந்து உருவாக்கும் சமூகம்!

படம்
  பள்ளி, கல்லூரி, சமூகம், குடும்பம், இணையம் என பார்த்தால் ஒருவரின் மனதிலுள்ள கருத்தை எந்த அம்சம் உருவாக்குகிறது என கண்டுபிடித்துவிடலாம். இன்றைய காலத்தில் இணையம் குறிப்பிட்ட கருத்துகளை வலிந்து உருவாக்குகிறது. அதை வைத்து சமூகத்தில் உள்ள ஒருவரை எளிதாக அவதூறு செய்து கீழிறக்கமுடியும். குடும்பம், அலுவலகம், இணையம் ஆகிய இடங்களில் இதுபோல நச்சை உருவாக்குகிற இயல்பு கொண்ட மனிதர்களை ஒருவர் எளிதாக சந்திக்கலாம். இந்த மனிதர்கள் தனக்கு அங்கீகாரமும் , அதிகாரமும் வேண்டும் என பேராசை கொண்டிருப்பார்கள். அதை அடைய பல்வேறு சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் செய்வார்கள். தன்னை மட்டுமே மையப்படுத்திய சிந்தனை கொண்டவர்கள், நடைமுறை பிரச்னையில் தீர்வு கண்டுபிடிக்க முடியாமல் நச்சு பிரசாரங்களை செய்வார்கள். தங்களின் தகுதியின்மை, திறனின்மையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  அவர்களும் மனதளவில் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள்.  வரலாற்றில் மிக மோசமான நேரத்தில் பணவீக்கம் வருகிறது, வருமானம் போதவில்லை எனும்போது ஒருவர் பொன்னியின் செல்வன் நூலை எடுத்து வைத்து படித்து கனவில் ஆழ்வதைப் போன்ற குணம் மனிதர்களுக்கு உண்டு. அன்றைய காலத்தை நினைத்து

கார்ல் ஜங்கின் தனித்துவமான உளவியல் ஆய்வுகள்!

படம்
  கார்ல் ஜங் ஃப்ராய்டின் மனப்பகுப்பாய்வு கொள்கைகளை உலகம் முழுக்க கொண்டு சென்றவர். ஸ்விட்சர்லாந்து நாட்டில் கல்விக்கு புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்தார். அம்மாவுக்கு நெருக்கமான பிள்ளை, அம்மா, மன அழுத்தத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு அதனால் பிரச்னைகளுக்கு ஆளாகியிருந்தார். ஐரோப்பிய மொழிகளை கற்றவர் தொன்மையான சமஸ்கிருதம் கூட கற்றுக்கொண்ட திறமைசாலி. எம்மா ராசென்பாக் என்ற பெண்மணியை மணந்தவருக்கு ஐந்து பிள்ளைகள் பிறந்தனர்.  உளவியலில் பயிற்சி பெற்று வந்தவர், 1907ஆம் ஆண்டு உளவியலாளர் சிக்மண்ட் ஃப்ராய்டை சந்தித்தார். பிறகு அவருடன் இணைந்து மனப்பகுப்பாய்வு கொள்கைகளில் ஆய்வு செய்து வந்தார். பின்னாளில் அவரின் கொள்கைகளில் வேறுபாடு தோன்ற, பிறகு இருவரும் சந்தித்துக்கொள்ளவே இல்லை. ஆப்பிரிக்கா, அமெரிக்கா, இந்தியா என பல்வேறு நாடுகளில் சுற்றி அந்நாட்டின் தொல்குடிகளோடு உரையாடினர். அந்த காலகட்டத்தில் மானுடவியல், அகழாய்வு ஆகியவற்றில் அதீத ஆர்வம் கொண்டு இயங்கினார். 1935இல் ஜூரிச் பல்கலையில் பேராசிரியராக இருந்தவர், பின்னர் ஆராய்ச்சி செய்வதற்காக வேலையை விட்டு விலகினார்.  கார்ல் ஜங், உளவியல், மானுடவியல்,ஆன்மிகம் என

முன்கோபம் கொண்ட நீதியைக் காக்கும் இளைஞன் ராபின்ஹூட்டாக மாறி அநீதியை எதிர்க்கும் கதை!

படம்
  தர்மா  விஜயகாந்த், ப்ரீத்தா விஜயகுமார், தலைவாசல் விஜய், ஜெய்சங்கர் பணக்காரர்களைக் கொள்ளையடித்து அவர்களின் பணத்தை சேரி மக்களுக்கு பிரித்து கொடுக்கும் ராபின்ஹூட் கதை. அடிப்படைக் கதை இதுதான். இதை விரிவாக கூறவில்லை. குடும்ப பாசம், குடும்ப உறுப்பினர்களுக்கான முரண்பாடு, சண்டை என காட்டிவிட்டு படம் நகர்ந்துவிடுகிறது.  தர்மா, சாலை போடும் ஒப்பந்ததாரரிடம் சூப்பர்வைசராக வேலை செய்கிறார். வேலை பார்ட்டைம்தான். முக்கியமான வேலை சேரி மக்களுக்கு உதவி செய்வது. அங்கு காவல்நிலையத்தில் வல்லுறவு செய்த பெண்ணுக்காக இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொல்கிறார். இப்படித்தான் தர்மா நீதிமன்றம் செயல்படுகிறது. ஏழை மக்கள் தர்மாவை ஆதரிக்கிறார்கள். முஸ்லீம் பெண்மணி தர்மாவிற்காக பேசுகிறார். அவர் கண்பார்வையற்றவர். அவரின் பேத்தி, தர்மாவை ஒருதலையாக காதலிக்கிறாள். இவருக்கான காதல் காட்சி சற்று 18 பிளஸாக இருக்கும். அதனாலென்ன பார்த்து மகிழுங்கள். காதலை புரட்சிக்கலைஞர், கேப்டன் மறுத்துவிடுவார். ஆனால் அதைக் காரணமாக வைத்து இரண்டு, மூன்று பாடல்கள் வந்துவிடுகின்றன. கேப்டன் படம் என்றால் லியாகத் அலிகானின் பொறி பறக்கும் வசனங்களும், கோர்ட்டில் நின

மனநலன் பிரச்னையை, குறைபாட்டை அடையாளம் காட்டி குற்றத்திலிருந்து தப்பிக்கும் குற்றவாளிகள்!

படம்
            பாலியல் தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள் , வல்லுறவு செய்பவர்கள் சமூகத்தில உயர்ந்த அடுக்கில் இருந்தால் அவர்களுக்காக நீதி வளையும் . ஒடுங்கி காலில் விழுந்து பணியும் . நீதிமன்றத்தில் இதுபோன்ற வழக்குகள் வரும்போது , குற்றவாளிகள் செய்த குற்றத்திற்கு வருந்தும் இயல்பில் இருக்கிறார்களா என நீதிமன்றம் கவனிக்கிறது . மனித தன்மையே இல்லாத நிலையில் உள்ளவர்களை தண்டித்து எந்த பிரயோஜனமும் இல்லை . ஒருவேளை தான் என்ன மனநிலையில் இருந்தேன் , எப்படி கொலை செய்தேன் என்று தெரியவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டவர் கூறினால் , மருத்துவசோதனை செய்து , மனநிலை குறைபாடு உடையவர் என நிரூபித்தால் அவருக்கு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்படும் . பதிலாக மனநல மையத்தில் ஒரு படுக்கை உறுதி செய்யப்படும் . சிறையில் இருப்பதை விட மனநல மருத்துவமனையில் இருப்பது பாதுகாப்பானது என பலரும் நம்புகிறார்கள் . ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த தண்டனை ஏமாற்றமளிக்கும் . ஆனால் சட்டம் இதை அனுமதிக்கிறது . ஒருவரின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அவராக வெளிப்படுத்துவது உண்டு . அதற்கு அவரின் செயல்களை கவனிக்க வேண்டும் . தன்னைப் பற்றி

தொல் வரலாற்றுப் பெண்களின் பங்களிப்பை, மேற்குலகின் ஆய்வாளர்கள் ஏற்க மறுக்கிறார்கள்! - எழுத்தாளர் ஏஞ்சலான சைனி

படம்
  எழுத்தாளர் ஏஞ்சலா சைனி ஆண்களின் மேலாதிக்கம் எப்போது தொடங்கியிருக்கும்?   விவசாயம் செய்யத் தொடங்கியபோதா அல்லது தனிச்சொத்துடைமை உருவானபோதா, புதிய மாகாணங்கள் உருவானபோதா, அடிமை முறை தொடங்கியபோதா இப்படி நிறைய கேள்விகளை மானுடவியலாளர்கள் தங்களுக்குள் கேட்டுக்கொண்டு அதற்கான பதில்களை தேடுகிறார்கள். தேடலை விளக்கி ஏராளமான நூல்களையும் எழுதியிருக்கிறார்கள். அந்த வகையில் ஆய்வாளர் ஏஞ்சலா சைனி, 'தி பேட்ரியாச் – ஹவ் மேன் கேன் டூ ரூல்' என்ற நூலை எழுதியிருக்கிறார். பாலின பாகுபாடு, ஆண் மேலாதிக்கம் ஆகியவற்றைப் பற்றிய கருத்துகளை முன்வைத்திருக்கிறார். மேலும், மரபணு, தொல்பொருளாய்வு ஆகியவை தொடர்பாக எழுந்த யூகங்களுக்கும் பதில் கூறியுள்ளார். மேலாதிக்கம் பற்றி ஆராய்ச்சி செய்யத் தூண்டிய காரணங்கள் என்ன? கடந்த நாற்பது ஆண்டுகளாக மேலாதிக்கம் கொண்ட சமூகம் பற்றி மிக குறைவாகவே எழுதியிருக்கிறார்கள். இது எனக்குஆச்சரியமான தகவலாக இருந்தது. பெண்ணிய இலக்கியங்களில், தொடர்ந்து ஆண் மேலாதிக்கம் பற்றிய அழுத்தங்களை பதிவுசெய்திருந்தனர். இதைப் பற்றிய வேறுபாடுகளை யோசித்தேன்.    எனவே, நான் மேலாதிக்கம் பற்றிய முழுமையான

மனதில் கிளர்ந்தெழும் ஆவேச உள்ளுணர்வு

படம்
  உளவியல் ரீதியான கோட்பாடுகள், ஒருவரின் ஆக்ரோஷமான குலைந்த மனநிலையை வேண்டுமானால் விளக்கலாம். ஆனால் அவரின் குற்றங்களை விளக்காது. இந்த வகையில் உளவியல் கோட்பாடுகளுக்கு வரம்புகள் உண்டு. குற்றம் செய்தவர்கள் அனைரையும் மனநிலை பிறழ்ந்தவர்கள், குறைபாடு கொண்டுவர்கள் என கூறிவிட முடியாது என உளவியலாளர் சீகல் கூறினார். இவரது கருத்து உண்மையா என்றால் உண்மைதான். துறை   சார்ந்து ஆராய்ச்சிகள் அதிகரிக்கும்போது வரம்புகள் உடையலாம். ஒருவர் தனியாக அமர்ந்து உளவியல் கோட்பாடுகளை உருவாக்கி அதன் நடைமுறை சாத்தியங்களை ஆராய்ந்துகொண்டிருந்தால், அதில் குற்றவியல் சார்ந்த அம்சங்கள் குறைவாகவே இருக்கும். இதற்காக உளவியல் கோட்பாடுகளை ஒருவர் மேலும் துல்லியமாக்க மெனக்கெடலாம். குற்றம் நடைபெறுகிறது என்றால் அதற்கான உயிரியல், சூழல், உளவியல் காரணங்களை கண்டுபிடிக்க முடிந்தால் உளவியலின் பங்கு குற்றவியலில் உள்ளது என நம்பலாம். சூழல் சார்ந்த அம்சங்கள் என்றால் குற்றம் பற்றிய பொதுமக்களின் கருத்து, நீதிமன்றத்தின் தீர்ப்பு, வழக்குரைஞர்களின் வாதம் ஆகியவற்றைக் கூறலாம். இந்த வகையில் குற்றத்தைப் பற்றி தெளிவாக விளங்கிக்கொள்ள உளவியல் விசாரணை பயன