இடுகைகள்

சந்தனக்கூடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆறுதலின் பேராறு - ரூஹ் - நாவல் - ல.ச.கு

படம்
  லஷ்மி சரவணக்குமார் ல.ச.கு - ரூஹ் நாவல் ரூஹ் லஷ்மி சரவணக்குமார் முஸ்லீம்களின் வாழ்க்கை, அவர்களுக்கு கிடைக்கும் ஆன்மிக தரிசனம், அதை நோக்கிய பயணம் என பல்வேறு விஷயங்களை மனமுருகும் மொழியில் பேசுகிற நாவல் ரூஹ். கொமோரா என்ற நாவல் முழுக்க உள்ள கோபம், வன்மம், வன்முறை குதப்புணர்ச்சி என ஒரு வித வெறுப்பின் சூடு குறையாமல் இருக்கும். அதன் ஒருபகுதியாக இருக்கவேண்டிய நூல் இது. ஆனால், ஆசிரியரின் முடிவால் தனி நாவலாக மாறியிருக்கிறது.   ரூஹ் நாவலில் ஒப்பீட்டளவில் வன்முறை சற்று குறைவு. ஆனால்   இதிலும் பால்ய கால கேலி கிண்டல், அவமானத்திற்கு பழகுதல், காயப்படுதல், பலவந்த ஓரினப் புணர்ச்சி, தடவுவதல், கைவேலை ஆகியவை உண்டு. ஆனால் இதெல்லாம் நாவலின் சிறுபகுதிதான். இதையெல்லாம் கடந்த தன்மை,விருப்புவெறுப்பற்ற இயல்பை நோக்கி நாவல்   செல்கிறது. நீதி, அநீதி, நியாயம், அநியாயம், நல்லது , கெட்டது என்ற நிலையைக் கடந்து உடல், மனம் என அனைத்தையும் ஒருவன் ஒடுக்கி அதன் வழியாக இறைவனைச் சென்றடைவது, அந்த நிலையிலிருந்து பிறரின் வாழ்வுக்காக இறைவனிடம் யாசிப்பது, பிரார்த்திப்பது என மாறும் வாழ்க்கை பற்றிய விவரணைகள் மனதை பித்தாக்குகி