இடுகைகள்

உடல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நடைபயிற்சி செய்வது உடலின் ஆரோக்கியத்திற்கான அடிப்படைப் பயிற்சி!

படம்
  தற்காப்புக்கலையைக் கற்கும்போது அடிப்படையான பயிற்சியாக குதிரைபோல நிற்கும் நிலையைக் குறிப்பிடுவார்கள். உடலை அடிப்படையாக பலப்படுத்தினால்தான் தற்காப்புக்கலைகளை உறுதியாக பயன்படுத்தமுடியும். மண்ணில் வேர்பிடித்தது போல ஒருவர் நின்றால் மட்டுமே போரில் வெல்ல முடியும். அந்த வகையில் சாலையில் நடைபயிற்சி செய்வது உடலின் ஆரோக்கியத்திற்கான அடிப்படைப் பயிற்சி. இதற்குப் பிறகுதான் எடைப் பயிற்சிகள், கார்டியோ ஆகியவை இடம்பெறுகின்றன. எளிமையாக கூறவேண்டுமெனில் பிரமிடு போல உள்ள உடற்பயிற்சிகளின் கீழே உள்ள அடிப்படைப் பயிற்சி, நடைப்பயிற்சிதான்.  உட்கார்ந்துகொண்டே செய்யும் வேலையில் இடையிடையே பத்து நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது கூட மாற்றத்தை ஏற்படுத்த போதுமானது. பிற உடற்பயிற்சிகளைப் போல உடலை பெரிதாக கஷ்டப்படுத்தவேண்டியதில்லை. எனவே, நடைப்பயிற்சி என்பது செய்வதற்கு எளிதானது. இதை தினசரி பயிற்சியாக்கும்போது, ஒருவருக்கு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது.  அதிக ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, நீரிழிவு ஆகியவற்றின் பாதிப்பை நடைப்பயிற்சி பெருமளவு குறைக்கிறது. ஓட்டப்பயிற்சியைப் போலவே பயன்களை அளிக்கிறது. 80 ஆயிரம் பெண்கள

ஊழுறு தீங்கனி - புதிய இ-நூல் வெளியீடு - அமேஸானில் வாசிக்கலாம்.

படம்
  ஊழுறு தீங்கனி, டாமினன்ட் / சப்மிஸிவ் உறவு, அதில் ஒருவர் எப்படி செயல்படுவது, கடைபிடிக்கவேண்டிய விதிகள், பயன்படுத்தும் பொருட்கள், வாழ்க்கை முறை பற்றிய அறியாத பல்வேறு தகவல்களை விளக்குகிறது. வெகுஜன மக்களுக்கு இந்த வாழ்க்கைமுறை புதிதாக இருக்கலாம். ஆனால், இப்படியான வாழ்க்கை முறையில் ஏராளமான மக்கள் உலகம் முழுக்க வாழ்ந்து வருகிறார்கள். இந்நூலை ஒருவர் வாசிப்பதன் வழியாக டாமினன்ட் / சப்மிஸிவ் பற்றி தெளிவாக அறிந்துகொள்வதோடு, அந்த முறையில் வாழ விரும்பினால் கூட முதல் அடியை எடுத்துவைக்க முடியும். இதுபற்றிய மேற்கோள் நூல்களும், வலைத்தளங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. நூலை வாசிக்க.... https://www.amazon.com/dp/B0CSJRKMPW

தன்னை, உலகத்தை மறந்து செயலைசெய்பவன் அனுபவிக்கும் பேரின்பம்!

படம்
  ஏ ஆர் இசையமைப்பதில் தன்னை மறப்பார். மணிரத்னம், கதைகளை படமாக்குவதில் தன்னை மறந்து வேலை செய்வார். இவர்கள் மட்டுமல்ல, நாம் அனைவருமே நமக்கு பிடித்த ஏதோ ஒரு செயலில் உலகை மறந்து நம்மை மறந்து ஈடுபட்டிருப்போம்.  அப்படியான மனநிலையை ஃப்ளோ என உளவியலில் குறிப்பிடுகிறார்கள். இதை லயம், சீரான ஓட்டம் என புரிந்துகொள்ளலாம். இதை மிகாலாய் என்ற உளவியலாளர் உருவாக்கினார். தொண்ணூறுகளில் தனது கருத்தை தொகுத்து ஃப்ளோ - தி சைக்காலஜி ஆஃப் ஆப்டிமல் எக்ஸ்பீரியன்ஸ் என்ற நூலை எழுதினார்.  உளவியலாளர் மிகலாய், மருத்துவர்கள், இசைக்கலைஞர்கள், பல்வேறு வேலைகளைச் செய்யும் தொழிலாளர்களை நேர்காணல் செய்தார். இதில் அவர்களது தொழில், பொழுதுபோக்கு ஆகியவற்றைப் பற்றிய கேள்விகளைக் கேட்டு அனுபவங்களை அறிந்தார். இதன்படி, ஒருவர் தொழில் அல்லது ஓய்வு நேர பொழுதுபோக்கிலோ தன்னை மறந்து ஈடுபாடு கொள்வது தெரிந்தது. அதாவது, தன்னை முழுக்க செய்யும் செயலில் கரைத்து திருப்தி காண்கிறார். பொதுவாக விளையாட்டில் வெல்வது மட்டுமல்ல பங்கேற்பதற்கும் கூட ஒருமித்த கவனம் தேவை. முழு கவனத்துடன் விளையாட்டை அனுபவித்து விளையாடுபவர்களுக்கு காலநேரமே தெரியாது. இதை உளவியலா

காஸனோவா, ஒரு பெண் மீது கொள்ளும் காதல் வழியாக உறவுகளின் மதிப்பை அறிந்துகொள்ளும் கதை!

படம்
                கிரேக்க வீருடு நாகார்ஜூனா , நயன்தாரா பெண்கள் என்றாலே உடல் இன்பத்திற்கு மட்டும்தான் என நம்பும் ஒருவர் சூழல்களால் மனம்மாறி குடும்பத்தை நேசிப்பதோடு , காதலித்த பெண்ணை திருமணம் செய்வதுதான் கதை . வெளிநாட்டு தொழிலதிபர் நாகார்ஜூனா . அவரும் , உறவு முறையில் மாமாவும் , நெருங்கிய நண்பன் என இணைந்து நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்கள் . தனது செல்வாக்கு , அழகு ஆகியவற்றைப் பயன்படுத்தி ஏறத்தாழ 99 பெண்களை படுக்கையில் வீழ்த்துகிறார் கிங் நாகார்ஜூனா . பெண்களை போகப்பொருளாக பார்க்கிறார் . நெருக்கமான உறவை அவர் விரும்புவதில்லை . இதனால் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் . இந்த நேரத்தில் அவரால் செக்சுக்காக பயன்படுத்தப்பட்ட பெண் ஒருத்தி , அவருடைய சிஎஸ்ஆர் திட்டம் ஒன்றை வன்மத்தோடு உருக்குலைக்கிறாள் . இதனால் , அந்த பணியை ஒப்படைத்த நிறுவனம் நாகார்ஜூனா மீது வழக்கு போட்டு வெல்கிறார்கள் . அதிக அளவு தொகையில் அபராதம் கட்ட வேண்டும் என்பதே பெரிய பிரச்னை . இந்த நேரத்தில் கிங்கிற்கு இந்தியாவில் பூர்விகமான தாத்தாவிடமிருந்து போன் வருகிறது . அவர் , மகன் வயிற்று பேரனான கிங்க

உடற்பயிற்சி சார்ந்த அக்கறை கூடியிருக்கிறது - ஜோ ரூட், கிரிக்கெட் வீரர்

படம்
  ஜோ ரூட் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜிம்மில் நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன? நான் ஜிம்மில் அதிக நேரம் செலவழித்தது கிடையாது. வேகம், ஆற்றல் என இரண்டு விஷயங்களுக்காக அங்கு நாற்பது நிமிடங்களை செலவழிப்பேன். அவ்வளவுதான். அதிக நேரத்தை ஜிம்மிலேயே செலவழிப்பது எனக்கு பிடிக்காது. இளம் வயதில் முதுகில் சில பிரச்னைகள் இருந்ததால், எடைகளை தூக்குவதில் சில தடுமாற்றங்கள் இருந்தன. குறைவான எடைகளை தூக்கி மெதுவாகவே எனது உடலை மெல்ல மேம்படுத்த தொடங்கினேன். நான் கடைபிடித்த நுட்பங்கள் போதுமான நம்பிக்கை தந்தது என்று கூற முடியாது. போதுமான அளவுக்கு ஊட்டச்சத்துகளை எடுத்துக்கொண்டு பயிற்சிகளை செய்தீர்களா? முதலில் ஊட்டச்சத்து பற்றியெல்லாம் நான் அக்கறைப்ப்படவில்லை. கிரிக்கெட் என்பது திறன் சார்ந்த விளையாட்டு. அங்கு அதிக ரன்கள் அடிக்க வேண்டும். விக்கெட்டுகளை எடுக்கவேண்டும். அவ்வளவுதான். இப்படித்தான் தொடர்களில் அதிக ரன்களை எடுத்தேன். ஆனால் இடையில் திடீரென ரன்களை அடிக்க முடியாமல் போய்விடும். பிறகுதான் பயிற்சியோடு ஊட்டச்சத்துகள் பற்றியும் அக்கறை செலுத்த தொடங்கினேன். அந்த வகையில் எங்கள் அணியில் உள்ள ஊட்டச்சத

நாய் எழுப்பும் ஒலிக்கு என்ன அர்த்தம்?

படம்
  நாய் எழுப்பும் குரைப்பொலி பற்றிய விளக்கங்கள் இதோ….. தொந்தரவு செய்யாதே வீட்டுக்கு முன் செல்பவர், காலிங்பெல்லை அழுத்துபவர், சைக்கிளில் செல்பவர் என யார் சென்றாலும் ஒலி, ஒளி தென்பட்டாலும் நாய் உடனே குரைக்கத் தொடங்கும். குரைக்கும் தொனி, எதிராளி வீட்டின் கதவுக்கு அண்மையில் இருக்கிறாரா, தூரத்தில் இருக்கிறாரா என்பதைப் பொறுத்து மாறுபடும். கதவை ஒருவர் தட்டி திறக்க முயல்கிறார் என்றால் நாயின் குரைப்பொலி கடுமையாக மாறும். உரிமையாளரை தீர்க்கமாக எச்சரிக்கும் ஒலி இதுவே. வேட்டை மன்னன் தபால்காரர் வீட்டுக்கு வருகிறார் அல்லது நாயின் சக நாயினங்கள் ஒன்றாக இணைந்து மகிழ்ந்து ஒலி எழுப்புகின்றன என்றால் நாய் , இவ்வகையிலான ஒலியை எழுப்புகிறது. குரைப்புக்கும்,, ஊளைக்கும் இடையில் அமைந்த ஒலி. முனகல் ஒலி அப்பப்பா என முனகிக்கொண்டே வயதானவர்கள் கீழே உட்காருகிறார்கள் அல்லவா? அதுபோலவே அமைந்த முனகல் ஒலி. வயதான நாய், ஏதாவது இடத்திற்கு சென்றுவிட்டு வந்து சோபாவில் ஏறி உட்காரும்போது இப்படி முனகும். நீங்கள் நாய் தள்ளிவிட்ட பந்தை எடுக்காமல் கணினியைப் பார்க்கும்போது அல்லது அதற்கு போதிய கவனம் கொடுக்காதபோது சற்று வேறு

கிம் கதர்ஷியன் - உடலையே பிராண்டாக்கி ஸ்கிம்ஸ் ஆடை நிறுவனத்தை தொடங்கிய துணிச்சல்காரி

படம்
  ஸ்கிம்ஸ் - ஆடைகள் கிம் கதர்ஷியன் கிம் கதர்ஷியன் - ஸ்கிம்ஸ் கிம் கதர்ஷியன் உங்களுக்கு இந்த பெயர் தெரியாமல் இருக்காது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என பல்வேறு இடங்களில் கிம்மைப் பார்த்திருப்பீர்கள். கிம், ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று தனது உடல் அமைப்பு மூலம் பிறருக்கு அறிமுகமானவர். மார்பகங்கள், புட்டங்கள் என தன்னை அலங்காரப்படுத்திக்கொண்டு கூடுதல் பெண் தன்மையோடு இருப்பவரை இன்ஸ்டாகிராமில் ஏராளமான மக்கள் பின்தொடர்கிறார்கள். கிம், தனது பிரபலம் அப்படியே காலத்திற்கும் இருக்கும் என நம்புகிற முட்டாள் அல்ல. எனவே, அந்த பிரபலத்தை வணிகத்திற்கு திருப்பிவிட முடிவெடுத்தார். அதன்படி தோழி, தோழியின் கணவர் ஆகியோருடன் சேர்ந்து ஸ்கிம்ஸ் என்ற ஆடை நிறுவனத்தை தொடங்கினார். தொந்தி இருக்கும் பெண்கள் அணியும் ஷேப் வேர் எனும் உடைகளை இந்த   நிறுவனம் தயாரித்து விற்கிறது. பெரும்பாலும் இணையத்தில் உள்ள வலைத்தளம் மூலமாக அதிக ஆர்டர்கள் வருகின்றன. கிம், ஏற்கெனவே நகைகள், வாசனை திரவியங்கள் ஆகியவற்றை தயாரித்து விற்று வருகிறார். இதற்கென தனி நிறுவனங்களை நடத்துகிறார். ஆனால், வெற்றிகரமானவை என்று கூற முடியாது. ஸ்கிம்ஸ் நிறுவனத்தில

நீருக்கு மாற்றாக பழச்சாறுகளை குடிக்கலாமா?

படம்
  தண்ணீர் குடிப்பது சலிப்பை ஏற்படுத்துகிறதா? நீரைப் பொறுத்தவரை ஆற்றுத்தண்ணீர், ஆழ்குழாய் தண்ணீர் என வேறுபட்ட சுவை கொண்ட நீரை குடித்திருப்பீர்கள். பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும் அக்வாஃபினா, கைஃண்ட்லி ஆகியவற்றை குடித்தாலும் அதன் பயன் ஒன்றுதான். நீங்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் மயங்கி விழாமல் இருப்பீர்கள். உடலின் வளர்சிதைமாற்ற செயலுக்கு நீர் அவசியம். இதில் உள்ள கணக்கு பற்றி அறிந்திருப்பீர்கள். தினசரி எந்தளவு நீரை குடிப்பது? எட்டு கிளாஸ் குடியுங்கள், மூன்று அல்லது ஐந்து லிட்டர் குடியுங்கள் என்று பலர் வாய்க்கு வந்ததைக் கூறுவார்கள். உண்மையில் உடலுக்கு எந்தளவு நீர் தேவை என்பதை உடல்தான் தீர்மானிக்கும். தேவைப்படும்போது நீர் குடிக்கலாம்.. தவறில்லை. சில மருத்துவ இதழ்கள் சினிமா பிரபலங்களின் டயட் முறைகளை எழுதி மக்களை நிர்பந்தப்படுத்துகிறார்கள். உண்மையில் எது உண்மை, எதைப் பின்பற்றுவது? உடலுக்கு நீர்த்தேவை குறைவாக இருந்தால் தலைவலிக்கும்.,அடுத்து, செரிமான பிரச்னை வரும். உடலின் ரத்த அழுத்தம் குறைந்து   கண்கள் இருண்டு கீழே விழுந்துவிடுவீர்கள். மேற்சொன்னது உடனே நடக்கும் விளைவுகள். நீண்டகால அடிப

அமெரிக்கர்களுக்கு ஏற்படும் உடல் பருமன் பாதிப்பு!

படம்
  உடல் பருமன் நேரடியாக சுற்றி வளைக்காமல் உண்மையைச் சொல்லவேண்டுமெனில், அமெரிக்காவில் உடல் பருமன் என்பது கட்டுப்பாட்டை மீறி சென்றுகொண்டிருக்கிறது. 2017-2020 காலகட்டத்தில் உடல் பருமன் அளவு 12 சதவீதமாக அதிகரித்துள்ளது என அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும்   கட்டுப்பாட்டு அமைப்பு தகவல் தருகிறது. வயது வந்தோருக்கு ஏற்படும் உடல் பருமன் அளவு 4.5 சதவீத அளவாக உள்ளது. வெறும் கலோரிகளை மட்டும் அடையாளம் கண்டு அவற்றை எரிப்பது எனபது உடல் எடையைக் குறைப்பதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. உணவுமுறை, உடற்பயிற்சி என இரண்டுக்கும் இடையில் அதிக இடைவெளி இருந்தது. இதனால், உடல் எடையை ஒருவர் குறைக்க முயன்றாலும் எதிர்பார்த்த அளவில் உடனே பயன் கிடைக்கவில்லை. உடலில் மூளையுடன் தகவல்தொடர்பு கொள்ளும் ஏராளமான உயிரியல் பொருட்கள் உள்ளன. உணவுமுறை மாறி, எடை குறைப்பிற்கு ஒருவர் தயாராகும்போது அவை பல்வேறு தாறுமாறான சமிக்ஞைகளை மூளைக்கு கொடுக்கின்றன. இதனால் ஒருவரின் உடல் செயல்பாடுகள் மாறுகின்றன. எடை குறைப்பிற்கு பல்வேறு உடற்பயிற்சிகளை ஒருவர் செய்தாலும் கூட, அவை பயனில்லாமல் போவது இப்படித்தான். உடலில் கொழுப்பை பல்வேறு இடங்க

எடை குறைப்பிற்காக சாப்பிடும் உணவைக் குறைக்கவேண்டுமா? - மிஸ்டர் ரோனி

படம்
  எடை குறைப்பு கேள்விகள் எடை குறைப்புக்காக குறைந்தளவு உணவை சாப்பிட்டாலும் போதுமா? ஒருவரின் உடல் அமைப்பு, அவர் செய்யும் வேலை பொறுத்து சாப்பிடும் உணவின் அளவு மாறுபடும். வேலையைப் பொறுத்து ஒருவர் தனது   சாப்பிடும் இடைவேளையை அமைத்துக்கொள்ளலாம். மூன்று வேளை உணவு என்பது கட்டாயமல்ல. பசித்தபிறகு சாப்பிடுவது நல்லது. உடலுக்கு உணவு என்பது அடிப்படையானது. எனவே, உடலின் பசித் தேவையைப் பொறுத்து உணவை சாப்பிடுவது நல்லது. ஊட்டச்சத்தான முறையில் உணவை அமைத்துக்கொள்வது சிறந்தது. பல்வேறு வகை சத்துகளை கொண்டதாக உணவை அமைத்துக்கொண்டால் வயிறு நிறைந்துவிட்ட உணவு ஏற்படும். உடல் எடை குறைப்பதில், உடல் உறுப்புகளுக்கான அவசிய சத்துகள் கிடைப்பதை மறந்துவிடக்கூடாது.   கவலை, மகிழ்ச்சி ஆகிய உணர்வுகள் மேலோங்கும்போது, உணவு சாப்பிடுவதை முடிந்தளவு குறைத்துக்கொள்வது முக்கியம். இவையே உடல் பருமனை ஊக்குவிக்கிறது. எடை குறைவை உறுதிப்படுத்துவது எப்படி? தினசரி காலையில் எடை மெஷின் மீது ஏறி நின்று எடை குறைந்ததா என்று பார்க்க அவசியமில்லை. வாரத்திற்கு ஒருமுறை எடையை சோதித்தால் போதுமானது. தினசரி செய்யும் உடற்பயிற்சி, நீர், எடுத்துக்

குற்றவுணர்ச்சியால் கொலைகளை ஒப்புக்கொண்டவர் - எட்வர்ட்ஸ்

படம்
  எட்வர்ட்ஸ், மேக் ரே 1919ஆம் ஆண்டு அமெரிக்காவின் அர்கான்சாவில் பிறந்தவர். 1941ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு இடம்பெயர்ந்தார். கனரக வாகனங்களை இயக்கும் தொழிலாளி. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உருவாக்கிய சாலைப் பணிகளை செய்த தொழிலாளர்களில் இவரும் ஒருவர். திருமணமாகி இரு குழந்தைகள் உண்டு. எட்வர்டுக்கு பதினாறு ஆண்டுகள் குற்ற வரலாறு உண்டு.இதை உலகம் பின்னாளில்தான் அறிந்தது.   22 உடல்களைக் கண்டெடுத்த காவல்துறையிடம் ‘’நான் செய்த கொலைகள் ஆறு மட்டும்தான்’’ என சாதித்தவர். நீதிபதியிடம் மின்சார நாற்காலியில் அமர வைக்கவேண்டும்   என்று கோரினார். கேட்டதை கொடுப்பதற்காக நீதிமன்றம் உள்ளது? சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது, எட்வர்ட்ஸ் தற்கொலை செய்துகொண்டார். 1970ஆம் ஆண்டு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் புறநகரப் பகுதியில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. அதில் கொள்ளைக்காரர்கள் கொள்ளைப் பொருட்களோடு இரு சிறுமிகளையும் கடத்திக்கொண்டு வந்தனர். அதில் இரு சிறுமிகள், தங்களை கடத்தியவர்களிடமிருந்து தப்பித்தனர். ஆனால், ஒரு சிறுமியைக் காணவில்லை. அங்குதான் எட்வர்ட் வருகிறார். காவல்நிலையத்திற்கு வந்த எட்வர்ட், தான்தான் அந்த இன்னொரு சிற

பிடிஎஸ்எம் முறையில் உள்ள வகைகள்!

படம்
  பிடிஎஸ்எம் என்று கூகுளில் தேடினால் உங்களுக்கு நிறைய ஆபாச தளங்கள் கிடைக்கும் கூடவே விக்கிப்பீடியா குழுவினர், படாதபாடு பட்டு பிடிஎஸ்எம் வரலாற்றை முன்வைப்பார்கள். பிடிஎஸ்எம் என்பதற்கு நிறைய விளக்கங்கள் உண்டு. நாம் பார்க்கப்போவது பாண்டேஜ், டிசிப்பிளின், சாடிசம், மாசோசிசம் ஆகியவற்றைத்தான். இதில் மூன்று முறைகளை சுருக்கமாக குறிப்பிடுவார்கள். பாண்டேஜ் / டிசிப்ளின், டாமினன்ஸ் / சப்மிசிவ், சாடிசம் / மாசோசிசம். (dominance submissive, Sadism, masochism) பிடிஎஸ்எம் முறையை சிலர் மனநல குறைபாடு என்றெல்லாம் கூட சொல்லுவார்கள். உண்மையில் இது தம்பதிகள் இருவரும் கலந்துபேசி நடந்துகொள்ள வேண்டிய நெருக்கமான உறவுமுறை. இதில், அதிகாரம் ஒருவருக்கு கிடைக்கும். இன்னொருவர் அதற்கேற்ப நடப்பது ஆகியவை உண்டு. எடுத்துக்காட்டு, டாமினன்ட்(எஜமான்), சம்மிசிவ் (அடிமை) முறையில் எஜமானுக்கு அடிமையை எப்படி வேண்டுமானாலும் நடத்தும் உரிமை உண்டு. இதில் தம்பதிகள் தான் எந்த மாதிரி இருக்கவேண்டுமென தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பாண்டேஜ் (Bondage) கைவிலங்கு, கயிறு, வெல்க்ரோ போன்ற பொருட்களைப் பயன்படுத்தி அடிமையின் கைகளை கால்களைக் கட்

முடிஞ்சா என்னைப் புடி என சவால் விட்ட ஜாக் - ரத்தசாட்சி - அசுரகுலம் 3

படம்
  முடிந்தால் என்னைப் பிடி இப்போது |ஜாக்கின் கதைக்கு வருவோம். மேற்சொன்ன கதைகள் எல்லாம் காவல்துறையினர் யாரேனும் புகார் மூலம் கண்டுபிடித்தவைதான். ஆனால் ஜாக்கைப் பொறுத்தவரை அவர் கொலை சம்பவங்களை சுவாரசியமாக செய்ததை உலகத்திலுள்ள 300 பத்திரிகைகள் பிரசுரித்தன. உண்மையில் இப்படி உலகம் முழுக்க தன்னைப் பற்றி விஷயங்கள் தெரியவேண்டுமென ஜாக் நினைத்திருக்கலாம். லண்டன் நகரத்தின் கிழக்கு புறத்தில் உள்ளது ஒயின்சேப்பல் பகுதி. இங்கு வெள்ளிக்கிழமை ஆக.31, 1888 அதிகாலை ஒரு மணி இருக்கலாம். பாலி நிக்கோலஸ் என்ற விலைமாதுப் பெண் ஜாக்கால் கொலை செய்யப்பட்டார். பாலியின் தொண்டை அறுக்கப்பட்டிருந்தது. அணிந்திருந்த ஸ்கர்ட் கலைந்திருக்க, கால்கள் விரிக்கப்பட்டிருந்தன. வயிறு கத்தியால் கிழிக்கப்பட்டு இருந்தது. பெண் குறியில் கீறல்கள் இருந்தன. விலைமாது என்பதால் கொலை பெரிதாக யாரையும் ஈர்க்கவில்லை. அடுத்த கொலை ஒரு வாரத்திற்கு பிறகு காலையில் நடைபெற்றது. கொலையானவர் பெயர், அன்னி சாப்மேன். இவரது வயிறு கத்தியால் அறுக்கப்பட்டு குடல் இடது தோள் மேல் விழுந்து கிடந்தது. வயிறு, தலை ஆகிய இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. பிறப்புறுப்பில

ஆழமான துயர் தரும் வலி - கடிதங்கள் - கதிரவன்

படம்
  ஆழமான துயர் தரும் வலி ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? உங்கள் உடல் , மனம் மேம்பட இறைவனை வேண்டுகிறேன் . மறைமலை அடிகள் எழுதிய கடித நூலொன்றைத் தரவிறக்கி வாசித்தேன் . தமிழ் , ஆங்கிலம் என இரண்டிலும் தேர்ந்து விளங்கிய ஆளுமை . தனித்தமிழில் எழுதுவது , சைவத்தைப் பரப்புவது என வாழ்ந்து வந்திருக்கிறார் . தமிழக அரசு இணைய மின் நூலகத்தில் நிறைய அரிய நூல்கள் கிடைக்கின்றன . இந்த நூலை அங்கிருந்தே தரவிறக்கி வாசித்தேன் . இன்று சன் மோகன்ராஜ் அண்ணா அறைக்குச் சென்றேன் . அவர் தனது மனைவி , குழந்தை ஆகியோரை சென்னைக்கு கூட்டி வர உபாயம் யோசித்து வந்தார் . வருமான வாய்ப்பை தேடிக்கொண்டிருக்கிறார் . மின்னல் முரளி மலையாளப் படம் பார்த்தேன் . கிராமத்து சூப்பர் ஹீரோ கதை . நன்றாக திட்டமிட்டு எடுத்திருக்கிறார்கள் . படத்தில் நம்மை யோசிக்க வைக்கும் எதிர்மறை நாயகன் பாத்திரம் ஷிபு தான் . அதாவது , நாடக கலைஞரான குரு சோமசுந்தரம் . இவர் , தனது அம்மா , காதலி என இருவரையும் வெவ்வேறு காலகட்டங்களில் சுற்றியுள்ளவர்கள் காரணமாகவே இழக்கிறார் . பூமியில் வாழ்வதற்கான பொருளை அவர் இழக்கும்போது கடுமையாக கோபமுறுகிறார் . அதில் ஏதும்