நேரு இந்தியாவுக்கு செய்தது என்ன?
இந்தியாவில் நிகழ்ந்த அனைத்து துரதிர்ஷ் நிகழ்வுகளுக்கும் நேரு காரணம் என பாஜக கட்சி குறைகூறிவருகிறது. அப்படி எடுத்துக்கொண்டால் பிற பிரதமர்கள் எந்த செயல்பாட்டையும் மேற்கொள்ளவில்லையோ என எண்ணத்தோன்றுகிறது. நேரு, ஐரோப்பிய சிந்தனைகளால் தாக்கம் பெற்றாலும் அதனை இந்தியாவில் எப்படி செயல்படுத்துவது என கவனம் கொண்டிருந்நதவர். அதேசமயம் நாட்டு மக்கள் வேறுபாடுகளின்றி ஒற்றுமையாக இருக்கவும் மெனக்கெட்டார். வல்லரசுகளின் வளர்ச்சியை இந்தியாவில் செயல்படுத்த முயற்சித்தார். பதவியிலிருந்து பதினைந்து ஆண்டுகாலம் ரஷ்யா, அமெரிக்காவின் உதவிகளைப் பெற்று மின்நிலையங்கள், அணு ஆராய்ச்சி, இரும்பு தொழிற்சாலைகள் என பலவற்றையும் உருவாக்கினார். சர்தார் படேல் கட்சி தொண்டர்களுக்கு அடையாளம் தெரிந்தாலும் மக்களுக்கு அறிமுகமானவர் அல்ல. மேலும் மக்களிடையே திட்டங்களை விளக்கிப் பேசவும் நேரு சரியானவர் என காந்தி நினைத்தார். படேல் ஒருவகையில் கட்சியை கவனிக்க நேரு நாட்டை பார்த்துக்கொண்டார். தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை பற்றி மாநில முதல்வர்களுக்கு தொடர்ச்சியாக கடிதங்கள் எழுதி தொடர்பிலேயே இருந்த பிரதமர் இன்றுவர