இடுகைகள்

நவீனச்சிற்பி நேரு! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நேரு இந்தியாவுக்கு செய்தது என்ன?

படம்
இந்தியாவில் நிகழ்ந்த அனைத்து துரதிர்ஷ் நிகழ்வுகளுக்கும் நேரு காரணம் என பாஜக கட்சி குறைகூறிவருகிறது. அப்படி எடுத்துக்கொண்டால் பிற பிரதமர்கள் எந்த செயல்பாட்டையும் மேற்கொள்ளவில்லையோ என எண்ணத்தோன்றுகிறது. நேரு, ஐரோப்பிய சிந்தனைகளால் தாக்கம் பெற்றாலும் அதனை இந்தியாவில் எப்படி செயல்படுத்துவது என கவனம் கொண்டிருந்நதவர். அதேசமயம் நாட்டு மக்கள் வேறுபாடுகளின்றி ஒற்றுமையாக இருக்கவும் மெனக்கெட்டார். வல்லரசுகளின் வளர்ச்சியை இந்தியாவில் செயல்படுத்த முயற்சித்தார். பதவியிலிருந்து பதினைந்து ஆண்டுகாலம் ரஷ்யா, அமெரிக்காவின் உதவிகளைப் பெற்று மின்நிலையங்கள், அணு ஆராய்ச்சி, இரும்பு தொழிற்சாலைகள் என பலவற்றையும் உருவாக்கினார்.  சர்தார் படேல் கட்சி தொண்டர்களுக்கு அடையாளம் தெரிந்தாலும் மக்களுக்கு அறிமுகமானவர் அல்ல. மேலும் மக்களிடையே திட்டங்களை விளக்கிப் பேசவும் நேரு சரியானவர் என காந்தி நினைத்தார். படேல் ஒருவகையில் கட்சியை கவனிக்க நேரு நாட்டை பார்த்துக்கொண்டார். தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை பற்றி மாநில முதல்வர்களுக்கு தொடர்ச்சியாக கடிதங்கள் எழுதி தொடர்பிலேயே இருந்த பிரதமர் இன்றுவர

நவீனச்சிற்பி நேருவின் சாதனைகள்!

படம்
நவீன இந்திய சிற்பி நேரு! 1963 ஆம் ஆண்டு சத்தீஸ்கரிலுள்ள பிலாஸ் இரும்புத்தொழிற்சாலையை பார்வையிட்டார் நேரு. சோவியத் ரஷ்யாவின் உதவிபெற்று உருவாக்கப்பட்ட முக்கியமான தொழிற்சாலை இது.  1952 ஆம் ஆண்டு முனீர்பாத்திலுள்ள துங்கபத்ரா அணை கட்டுமான பணியை பார்வையிட்டார் நேரு.  1947 ஆம் ஆண்டு ஆக.15 அன்று சுதந்திர இந்தியாவில் செங்கோட்டையில் நின்று சுதந்திரக்கொடியை ஏற்றி மக்களிடையே உரையாற்றினார் நேரு. 1955 ஆம் ஆண்டு சோவியத்தின் ஸ்டாலின் கிரேட்டில் மின்நிலைய கட்டுமானத்தை பார்வையிட்டவர், பதினைந்து நாட்கள் தங்கியிருந்து பிலாய், பொகாரோ இரும்பு ஆலைக்கான ரஷ்ய உதவியை பெற்றுவந்தார்.  1959 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கப்பணியில் கட்டிட வடிவமைப்பை விளக்குகிறார் மருத்துவமனை இயக்குநர்.  நன்றி: ஃப்ரன்ட்லைன் மாத இதழ் நூல்: ஆசிரியர் கோபண்ணா விலை ரூ. 3, 000