ஒவ்வாமையை கட்டுப்படுத்துவது எப்படி? சில வழிமுறைகளை அறிவோம் - ஒவ்வாமை நூலிலிருந்து...

 

 

 

 

 

 

 

 

ஒவ்வாமைக்கு காப்பு!


என்னதான் அதிநவீன பூட்டு என்றாலும் அதனை உடைக்கும் நுட்பமான புத்தி கொண்ட திருடனும் இருப்பான்தானே? நோய்க்கும் இது பொருந்தும். என்னதான் ஒவ்வாமை நிறைய பிரச்னைகளை ஏற்படுத்தினாலும் மருந்தை விட உணவு மூலமே நிறைய மாற்றங்களை செய்யலாம்., சில உணவுகளை சாப்பிடாமல் தவிர்த்தாலே உடல் நலமாகி தேறும். இப்போது உடல்நலம் காக்கும் சில சத்துகள், மருந்துகளைப் பார்ப்போம்.

கால்சியம் மெக்னீசியம் ஆகிய சத்துகள் உடலுக்கு முக்கியம். இவை தசைகளில் சேருவது அவசியம். தசைகளின் இறுக்கம், நெகிழ்வு ஆகிய இரண்டுக்கும் இந்த சத்துக்கள் தேவை. ஆஸ்துமா பாதிப்பு கொண்டவர்கள் இந்த சத்துகள் கொண்ட பொருட்களை சாப்பிடலாம். அப்படியல்லாதபோது 250 கிராம் கால்சியம், மெக்னீசியம் ஆகிய இரண்டையும் நான்கு முறை தினசரி எடுத்துக்கொண்டால் உடல் நலமாகும். இதில் ஆண்கள், பெண்களுக்கு சாப்பிடும் அளவு மாறும். எனவே மருத்துவரின் பரிந்துரை அவசியம் தேவை.

ஆப்பிள், வெங்காயத்தில் உள்ள குயிர்செடின் என்ற வேதிப்பொருள்  உடலுக்கு முக்கியமானது. இது ஆன்டி ஆக்சிடன்டாக உடலில் ஒவ்வாமை பாதிப்பை கட்டுப்படுத்துகிறது. இதனை பைடோநியூட்ரியன்ட் என்று அழைக்கிறார்கள். இந்த வேதிப்பொருள் உடலில் சரியான அளவில் இருந்தால் இதய நோய்களைக் குறைக்கிறது மேற்குலக நாடுகளின் ஆய்வுகளில் தகவல் தெரிவிக்கிறார்கள்.

க்ரீன் டீயையும் குடிக்கலாம். வெறுமனே குடிக்க சிரமமாக இருந்தால் எலுமிச்சை சாற்றை சேர்த்து குடியுங்கள். கொஞ்சமே கொஞ்சமாக சர்க்கரையை சேர்த்துக்கொள்ளுங்கள். இதில் ஆன்டி ஆக்சிடன்டுகள் உள்ளதால் இதனை தேர்வு செய்யலாம். மேலும் இதில் பிற டீ தூள்களை விட காபீன் அளவு குறைவு.

என் அசிட்டைல் சிஸ்டைன் என்ற சத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீ்ர்களா? இது மூச்சுக்குழலில் சளி படிந்தால் கூட அதனை திரவமாக்கிவிடுகிறது. இதனால் உங்களுக்கு இந்த சத்து இருந்தால் உடல்நிலை ஆஸ்துமா பாதிப்பிலிருந்து விடுதலை கிடைத்துவிடும். இதற்கான சிகிச்சையில் சத்தை அதிக டோஸில் மருத்துவர் ஏற்றுவார். இதற்கு லோடிங் டோஸ் என்று பெயர். இப்போது நாம் உடலை சற்றே ஆரோக்கியமாக்கி நுரையீரலை மேம்படுத்தும் சில மூலிகைகளைப் பார்ப்போம். இவற்றின் பூ, இலை, வேர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி நுரையீரலை வலுப்படுத்தலாம்.

கோல்ட்ஃபூட், எலிகேம்பென், எப்ஹெட்ரா, ஹோர்ஹவுண்ட், லோபெலியா, லைகோரைஸ் ரூட், லங்வோர்ட், மார்ஸ்மாலோ, முல்லெய்ன் இந்த மூலிகைகளைப் பயன்படுத்துங்கள். கூடவே துணை உணவாக மீன் எண்ணெய் மாத்திரைகள், டிஹெச்ஏ, ஈபிஏ ஆகிய சத்துகள் உள்ள உணவுகளைப் பயன்படுத்துங்கள்.

அக்குபிரஷர்

இதில் ஜாக்கிசான் வில் ஸ்மித் மகனுக்கு கராத்தே கிட்டில் ஊசி, பாட்டில் வைப்பாரே அதுபோல கிடையாது. கைகளால் மெல்ல உடலின் முக்கியமான புள்ளிகளை அழுத்துவதுதான், அக்குபிரஷர். இதனால் ஒவ்வாமை பாதிப்பு குறைகின்றது என்பது நிரூபண உண்மை. ஆனால் இந்த சிகிச்சையில் அவசரம் கூடாது. நிதானமாகவே செய்யவேண்டும். அக்குபிரஷர் செய்வதற்கு எந்த எண்ணெய், லோஷன் இன்ன பிற வஸ்தாதுக்கள் தேவையில்லை. வெறும் கையில் குறிப்பிட்ட புள்ளிகளை தடவி விட்டாலே போதுமானது.

எண்ணெய் ஊற்றி தடவினால் உடல் தசைகள் வழுக்கத் தொடங்கிவிடும் என்பதற்காகவே அதனை வேண்டாம் என்று கூறுகிறேன். பெரும்பாலான இடங்களை நீங்களை சுயம்புவாக தடவி விட்டே நலம் பெற முடியும். அக்குபிரஷர் பற்றிய நூல்கள், பயிற்சியாளரிடம் முழுமையாக தெரிந்துகொண்டுவிட்டு பயிற்சியைத் தொடங்குங்கள். ஒருநாளுக்கு மூன்றுமுறை என்பது தோராயமான கணக்கு.

அரோமா தெரபி

தமிழ்மொழிபெயர்ப்பில் வாசனை வைத்தியம் என்றே சொல்லலாம். கிரீஸ், ரோம், எகிப்து ஆகிய நாடுகளில் அரோமா தெரபி புகழ்பெற்றிருந்தது. தாவரம், இலை, பூ, மரம், பருப்பு, கொட்டை ஆகியவற்றிலிருந்து எண்ணெய் எடுத்து அதனை சிகிச்சைக்கு பயன்படுத்தி வந்தனர். ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்த அரோமா தெரபி இருந்திருக்கிறது.

நோய் அல்லது விபத்தினால் பாதிக்கப்பட்டவருக்கு தூக்கம் அவசியம். எனவே, அவர்களை இப்படி எண்ணெய்களை எடுத்து தூங்கும் அறையில் எரித்து புகைய செய்வார்கள். இந்த புகை மூக்கு வழியாக முகரும்போது அவர்களுக்கு எளிதாக தூக்கம் வரும். சிகிச்சையாகவும் பயன்படுத்தியுள்ளனர். எண்ணெய் எரியும்போது வரும் புகை, உடலையும் மனதையும் அமைதிபடுத்தும் தன்மை கொண்டது.

தெரபி பயன்பாடுகளுக்கு என லேபிள் அடித்து எண்ணெய்களை சிலர் விற்கிறார்கள். சிலர் அசாத்திய துணிச்சலோடு நூறு சதவீதம் தூய்மை, இயற்கை என அச்சிட்டே பொருட்களை விற்கிறார்கள். இதெல்லாம் எந்தளவு உண்மையென கம்பெனி ஓனருக்கு கூட தெரியாது. ப்ளூ டான்சி, யூகலிப்டஸ், கேல்லா, பெப்பர்மின்ட், டாராகான், தைம் ஆகிய எண்ணெய் வகைகளை அரோமாதெரபிக்காக பயன்படுத்தலாம். இங்கு எழுதியிருப்பதால் அனைத்தையும் காக்டெய்லாக கலக்கி பயன்படுத்தலாம் என ஸ்மார்ட்டாக நினைக்காதீர்கள். இதில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள். இந்த எண்ணெய் அடர்த்தி அதிகம் என்பதால் சற்று நீர்த்துப்போகச்செய்துதான் பயன்படுத்த வேண்டும். எனவே, இதற்கு அரோமா தெரபி செய்பவர்களிடம் ஆலோசனை பெறுவது முக்கியம்.

இன்று நாம் வாழும் வீடு, ஆபீஸ் என அனைத்து இடங்களிலும் ஏன் கழிவறையிலும் வாஷ்பேஷின் அருகிலும் கூட ஏர்ஃபிரெஷ்னர்களைப் பார்க்கலாம். தோராயமாக 65 ரூபாயில் குட் ஹோம், குட் மார்னிங் என இன்ன பிற பெயர்களிலும் இருக்கும். இந்த பொருட்களில் உள்ள வேதிப்பொருட்கள் முறையான சோதனை செய்து தயாரிக்கப்படுவதில்லை. ஒருவருக்கு ஏற்படும் ஒவ்வாமை சிக்கல்களுக்கு் இந்த பொருட்களும் முக்கியமான காரணங்களாக இருக்கலாம். அதற்கும் வாய்ப்புள்ளது. எனவே முடிந்தளவு இந்த வேதிப்பொருட்களை பயன்படுத்தி வந்தால், இவற்றை கைவிடுங்கள். கூடவே ஸ்ப்ரேயில் அடிக்கும் சுகந்த வாசனை பொருட்களையும் உங்கள் அருகில் அடிக்க வேண்டாம் என்று சொல்லுங்கள். இவை உடலுக்குள் நுழைந்து நுரையீரலையும் சுவாசப் பகுதிகளையும் கடுமையாக பாதிக்கும்.

ஏர் ஃப்ரெஷ்னர்களில் தாலேட் என்ற வேதிப்பொருள் உள்ளது. பெரும்பாலும் இதனைப் பற்றி கலந்துள்ள பகுதிப்பொருட்களில் போட்டிருக்க மாட்டார்கள். கம்பெனி ரகசியமாச்சே? பிளாஸ்டிக் பொருட்களான பொம்மைகள், வாகன உதிரிபாகங்கள், உரங்கள், அழகு சாதனப் பொருட்கள், வாசனை திரவியங்களில் இதனை பயன்படுத்துகிறார்கள். இதனை ஒருவர் உடலுக்குள் நுழைய விட்டால் அவருடைய உடலில் ஹார்மோன் சுரப்பு தடுமாறத் தொடங்கும். குறிப்பாக ஆண்களுக்கு டெஸ்டோஸ்ட்ரோன், இசிஜி போல ஏறி இறங்கி மூச்சு வாங்கும். ஆண்மைத்தன்மை போயே போயிந்தி தான். அப்புறம் என்ன உங்கள் படுக்கையில் நீங்கள் மட்டும் தனியாக தூங்க வேண்டி வரும். ப்யூடைல் தாலேட், டை தாலேட் ஆகியவை ஆராய்ச்சியில் பல்வேறு ஏர் ஃப்ரெஷ்னரில் இருப்பதாக கூறப்பட்டது.



ஒவ்வாமை நூலிலிலிருந்து சில பகுதிகள்.....

pinterest
















 

கருத்துகள்