வயிறு கெட்டுப்போனால் என்ன ஆகும் தெரியுமா?

 

 






வயிற்றுக்குள் பாக்டீரியா!


நமது வயிற்றுக்குள் பாக்டீரியா இருக்கிறது என்றால் பலரும் சிரிப்பார்கள். ஆனால் அவைதான் உணவு செரிமானத்திற்கு பெரிய உதவிகளைச் செய்கிறது. மோசமான உணவுகளால் ஏற்படும் தொற்றுகளை தடுப்பதும் அதுதான்.

வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை கட் பாக்டீரியா என்று அழைக்கின்றனர். இதுவே, உணவில் உள்ள மூலக்கூறுகளை சிறியதாக உடைத்து அதனை செரிமானத்திற்கு ஏற்றபடி மாற்றுகிறது. குடல் சுவர்களை பாதிக்கும் நுண்ணுயிரிகளை, புரதங்களை கழிவாக மாற்றுகிறது. இவற்றின் பணியால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகிறது. ஒவ்வாமை உள்ளவர்களுக்கு புரோபயோடிக் பாக்டீரியா நிறைய நன்மைகளை செய்கிறது. ஒவ்வாமை பாதிப்பு ஏற்படும் பொருட்களை முடிந்தளவு செரித்து பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்கிறது.

கேண்டிடா ஈஸ்ட், பூ்ஞ்சை ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்புகளை எளிதாக எதிர்கொள்ள முடிகிறது. கேண்டிடா, கேண்டிடா அல்பிகன்ஸ் என்ற நுண்ணுயிரிகளின் பாதிப்பை ஈஸ்ட் தொற்று என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனால் ஏற்படும் பாதிப்புகளை பட்டியல் போட்டால் அடுத்த அத்தியாயமே வந்துவிடும். சுருக்கமாக முக்கியமான அறிகுறிகளை மட்டும் கூறுகிறேன். ஒவ்வாமை, பதற்றம். மலக்கட்டு, பல் வியாதி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி.


நமது வயிற்றில் இரண்டு வகை பாக்டீரியாக்கள் உள்ளன. இவையும் ஒருவருக்கு வயதாகும்போது மெல்ல குறையத் தொடங்கும். இந்த இடத்தில் மோசமான உணவு, நீர் காரணமாக தீமை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளே சென்று பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவை, குடலில் சுவர்களை துளையிடுகின்றன. இதன் வழியாக, கிருமிகள் ரத்தத்தில் கலக்கின்றன. இப்படித்தான் பெரும்பாலான நோய்கள் ஏற்படுகின்றன. நன்மை செய்யும் இரு பாக்டீரியாக்களின் பெயர்கள், பைஃபிடோபாக்டீரியா, பாக்டீரியாட்ஸ். இப்படி வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும்.

குடல் சுவரிலிருந்து வரும் கிருமிகளை நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு கண்டுபிடித்தவுடனே தாக்குதலைத் தொடங்கும். அறிகுறிகளை குணப்படுத்தினால் நோய் குணமாகாது என்பதற்கு இதுவே உதாரணம். வயிற்று பிரச்னையை சரி செய்தாலே பிற பிரச்னைகள் இல்லாமல் போய்விடும். இப்படி குடல் கசிவு ஏற்பட்டு உடலில் ஏற்படும் நோய்க்கு, லீக்டு கட் சிண்ட்ரோம் என்று பெயர். இதன் காரணமாக, வைட்டமின் பி12, மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம் ஆகிய சத்துகளை உடல் பெற முடியாது. இதன் நேரடி விளைவாக உடல் சோர்வாகும். பலமிழக்கும்.

குறைந்த நார்ச்சத்து கொண்ட உணவு,தேவையான குடிநீரை குடிக்காதது, கழிவை சரியாக வெளியேற்றாதது ஆகிய பிரச்னைகளாலும் உடல் பலவீனமாகும். குடல் கசிவு பிரச்னை தொடங்குவது இப்படியும்தான்.  

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, வேதிப்பொருட்கள் கொண்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

தாவரங்களை அடிப்படையாக கொண்ட யோகர்ட், பாதாம், முந்திரி, தேங்காய் ஆகியவற்றைக் கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிடலாம். புரோபயோடிக் என்ற பெயரில் விற்கும் துணை உணவுப்பொருட்களை எது தேவை என உணர்ந்து வாங்கி சாப்பிடலாம். பெண்கள் கர்ப்பிணியாக இருக்கும்போது புரோபயோடிக் பொருட்களை சாப்பிடலாம். இதனால் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் உருவாகும் அலர்ஜிக் ரினோகன்ஜக்டிக்வ்ஸ் ஏஆர்சி என்ற நோய் உருவாகாமல் தடுக்க முடியும். மூக்கு, கண்களில் ஏற்படும் ஒவ்வாமை சார்ந்த பாதிப்புகளை புரோபயோடிக் சார்ந்த பொருட்கள் மூலம் தடுக்கலாம்.

லாக்டோபாசில் சீசி, லாக்டோபாசிலஸ் பாராசீசி, எல் அசிடோபிலஸ், பைஃபிடோபாக்டீரியம் லாங்கம், சாக்கரோமைசெஸ் செரிவிசியே ஆகிய புரோபயோடிக் பொருட்கள் இருக்கிறதா என பார்த்து உணவுகளை தேர்ந்தெடுங்கள். இதனை உடனே செரிமானத்திற்கு குடிக்கும் ஈனோ போல பயன் கொடுக்கும் என நினைக்கவேண்டாம். பாதிப்புகளை சரி செய்ய நிறைய நாட்கள் தேவைப்படும். புரோபயோட்டிக் பொருட்களை உணவு சாப்பிடுவதற்கு இருபது நிமிடங்கள் முன்னதாக எடுத்துக்கொள்ள வேண்டும். பால் சார்ந்த யோகர்ட் உடலுக்கு நல்லதுதான். ஆனால் உங்களுக்கு ஒவ்வாமை இரு்ந்தால் யோகர்ட் அதிகளவிலான சளியை உடலில் உருவாக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள். இன்று சூப்பர் மார்க்கெட்டுகளில் பாதாம், முந்திரி யோகர்ட்டுகள் கூட கிடைக்கிறது. எனவே இதனை பயன்படுத்தலாம். தவறில்லை.

யோகர்டை சூப்பர் மார்க்கெட்டில் வாங்கும்போது அதில் உள்ள பாக்டீரியாக்களைப் பற்றி படித்துவிட்டு வாங்குங்கள். மேலும் அதில் சேர்க்கப்பட்டுள்ள சர்க்கரை அளவு முக்கியம். பாலில் இயற்கையாகவே சர்க்கரை உண்டு. அதைவிட கூடுதலாக உற்பத்தியாளர் சேர்த்திருந்தால் அதனை தவிர்ப்பது நல்லது.

பிரியாணி பக்கெட் இத்தனை பேருக்கு என ஆர்டர் செய்வது போல இத்தனை பேர் இதனை சாப்பிடலாம் என யோகர்டிலும் குறிப்பிட்டு கலோரி சர்க்கரை அளவை குறிப்பிட்டிருப்பார்கள். அதனையும் மனதில் கொள்ளுங்கள்.

யோகர்டில் பால், பாக்டீரியா என்பதே முக்கியமானது. இதைத்தாண்டி நிறம், மணம், திடம் என சேர்க்கப்படும் பொருட்களை முடிந்தளவு கவனமாக பார்த்து தவிர்க்க வேண்டும். மேலும் பாக்கெட்டில் வெப்பநிலைக்கு உட்படுத்தியது என்று கூறியிருந்தால், அதனை சாப்பிடுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. பார்த்துக்கொள்ளுங்கள்.

கிரீக், பிளெய்ன் யோகர்ட் என இருவகைகள் உள்ளன. இவற்றில் குறைந்தளவு  வேதிப்பொருட்கள் நிறமிகள் மட்டுமே இருக்கும். பசுவின் பாலில் செய்யப்பட்ட யோகர்ட் என்பது பல்வேறு வளர்ச்சி ஹார்மோன்களைக் கொண்டிருக்கும். பல்வேறு ஆன்டிபயாட்டிக் அதாவது முறி மருந்துகளின் எச்சமும் இருக்கும். போவைன்  சோமடோட்ரோபின் என்ற வேதிப்பொருள் பாலில் உள்ளது. இதனை மான்சான்டோ நிறுவனம் தயாரிக்கிறது. இந்த ஹார்மோன் மாடுகளுக்கு பால் உற்பத்திக்காக வழங்கப்படுகிறது. இது உடலை பாதிக்க கூடியது. இந்த ஹார்மோனை ஆர்பிஎஸ்டி என்று அழைக்கிறார்கள்.

இங்கே நான் சொன்ன சமாச்சாரங்களையும் தாண்டி யோகர்ட் சரியாக இருக்க அதனை தயாரிக்கும் முறைகள் முக்கியமானவை. அதில் கோட்டை விட்டால் அதை சாப்பிடுபவர்களை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும். அம்புட்டுத்தான்.


ஒவ்வாமைக்கு என்சைம்தான் எதிரி!

நாடி நரம்பெல்லாம் கொலை வெறி ஊறுனவன்தான் இப்படி அடிக்க முடியும். அடிச்ச அடியில் அத்தனை எலும்பும் பொல பொலன்னு சலவைத்தூளு மாதிரி ஆயிருச்சு என வசனம் எழுதுவார்களே அதுபோலத்தான். ஆம் என்சைம்கள் பல்வேறு செல்களில் வேதிவினை காரணமாக உருவாகி உடலில் செயல்பாடுகளை நிறுத்தாமல் ஊக்கமுடன் செய்ய உதவுகின்றன. இவை இல்லாமல் போனால் நமது உடலின் செயல்பாடு பங்க்சராகிவிடும்.

எலும்பு, தசை, செல் என அனைத்தும் சேர்ந்ததுதான் உடல். அதிலும் முக்கியமானது இவற்றுக்குள் நடைபெறும் வேதிவினைகள். இப்படிப்பட்ட உயிரிவேதி வினைகளில்தான் என்சைம்கள் உருவாகின்றன.

ovvamai book excerpts...

pinterest












 









 

கருத்துகள்