சுற்றுலாப்பயணிகளால் ஏராளமான பறவைகள் அழிந்துள்ளன! - சூழலியலாளர் பாரா இஷ்தியாக்

 





சூழலியலாளர் பாரா இஷ்தியாக்


பறவைகளை அழித்ததே தொற்றுநோய்கள்தான்! 

கடந்த இருபது ஆண்டுகளாக பறவைகளுக்கு பரவும் தொற்றுநோய்கள் பற்றி ஆய்வு செய்து வருகிறார் ஃபரா இஷ்தியாக். 49 வயதாகும் ஃபரா , பறவைகளுக்கு ஏற்படும் மலேரியா பற்றி தனித்த கவனத்துடன் ஆராய்ச்சி செய்கிறார். அமெரிக்காவில் உள்ள ஸ்மித்சோனியன் மரபணு பாதுகாப்பு மையத்தில் முனைவர் படிப்பிற்கான வாய்ப்பு கிடைத்தது. அதன் வழியாக ஹவாயிலுள்ள   பறவைகளுக்கு ஏற்படும் மலேரியா பற்றி ஆய்வுகளை செய்தார். 

”ஹவாயைச் சேர்ந்த 90 சதவீத பறவைகளை அழிவின் விளிம்பிற்கு தள்ளியதே மலேரியாவும், அம்மை நோயும்தான் ” என்றார் ஃபரா. ஐரோப்பிய கடல் பயணிகளின் வருகையால் பறவைகளுக்கு மலேரியா, அம்மை நோய் பாதிப்பு தொற்றியது. இவற்றுக்கு இயல்பாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடையாது. எனவே, எளிதாக நோய்தாக்கி பலியாகிவிடுகின்றன என்பதைக் கண்டுபிடித்தார். 

கடந்த பத்தாண்டுகளாக இமாலயப் பகுதியில் உள்ள பறவைகளைப் பற்றி ஃபரா ஆராய்ந்து வருகிறார். தனது ஆய்வின் வழியாக மலேரியா ஒட்டுண்ணிகள் எப்படி பரவுகின்றன, அதற்கு உதவும் சூழல் ஆகியவற்றை அடையாளம் கண்டார். பறவைகளைப் பிடித்து ஆய்வுத்தரவுகளை எடுக்க 4 மணிநேரம் மலையில் பயணித்துள்ள அனுபவமும் ஃபராவுக்கு உண்டு. 





தற்போது பெங்களூருவிலுள்ள டாடா மரபணு மற்றும் சமூக கழகத்தில் அறிவியலாளராக பணிபுரிகிறார். இங்கு கோவிட் -19 பரவுவதை முன்னதாகவே தடுக்க கழிவுநீரை சோதித்து வருகிறார்.  நோய்த்தாக்குதல் தொடங்குவதை 15 நாட்களுக்கு முன்னதாகவே அறியும் வகையில் ஆராய்ச்சியை முடுக்கிவிட்டுள்ளார். ”நோய் பரவும் சூழலை அறிந்துகொள்வது முக்கியம். அப்போதுதான் மனிதர்களும், வன உயிரினங்களும் ஒன்றாக இணைந்துள்ள பல்லுயிர்ச்சூழலை காக்க முடியும்” என்றார் சூழலியலாளர் ஃபரா இஷ்தியாக். 

தகவல்

Training a hawk eye on bird diseases

farah ishtiaq

HT



கருத்துகள்