வயிற்றில் என்சைம்கள் சரியாக இயங்கவில்லையெனில்?......

 

 

 

 

 

 

 

 

 

 


என்சைம்கள் இயங்கவில்லையே ப்ரோ?

என்சைம்கள் இயங்கினால் என்ன இயங்காவிட்டால் என்ன என்று சிலர் தில்லாக பதில் சொல்லுவார்கள். ஆனால் என்சைம்கள் இயங்காதபோது தீர்க்கமுடியாத நோய்கள் பலவும் ஏற்படும். ஒவ்வாமை, முழங்கால் வலி, இளம் வயதில் வயதானதுபோல தோற்றம், புற்றுநோய், உடல் பருமன், இதய நோய்கள் ஆகியவை ஏற்படும்.

என்சைம்கள்தான் ஒருவருக்கு ஏற்படும் உடல் பாதிப்புகளை தீர்க்க உதவுகிறது. திசுக்களை புதிதாக உருவாக்க உதவுவதும் என்சைம்கள்தான். நமது உடலில் உள்ள சிலவகை என்சைம்களைப் பார்ப்போம். மெட்டபாலிக் என்சைம், டைஜெஸ்டிவ் என்சைம், உணவு என்சைம்.

மெட்டபாலிக் என்சைம் - இவற்றை உடல் உருவாக்குகிறது. வள்ர்சிதை மாற்ற என்சைம்களான இவைதான் உடல் தனது அடிப்படை விஷயங்களை செய்ய உதவுகிறது. இந்த என்சைம்கள் பற்றாக்குறையாக இருந்தால், பல்வேறு பிரச்னைகளை உடல் சந்திப்பதோடு நோய்களும் ஏற்படும்.

டைஜெஸ்டிவ் என்சைம் - இதைப் படித்தவுடனே உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்த என்சைம்கள் பார்ட்டைம் மட்டுமல்ல முழு நேரமுமே உணவுகளை உடைத்து அதனை செரிக்க ஏற்றவையாக மாற்றுவதுதான் வேலை. இதனை பான்கிரியாட்டிக் என்சைம் என்று கூட சொல்லலாம். இவற்றை கணையம்தான் சுரக்கிறது. இருபதுக்கும் மேற்பட்ட என்சைம்கள் உற்பத்தியாகின்றன. இவைதான் புரதம்,மாவுச்சத்து, கொழுப்பு ஆகியவற்றை செரிமானம் செய்ய வைக்கிறது.

உணவு என்சைம்கள்

இவற்றை தாவர என்சைம்கள் என்று சொல்லலாம். இதனை பழங்கள், காய்கறிகள், மருத்துவ தாவரங்கள் ஆகியவற்றில் காணலாம். இந்த உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஆற்றலும் கிடைக்கும். செல்களை குணப்படுத்தும் என்சைம்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எனவே, ஆரோக்கியமான என்சைம்கள் உள்ள உணவுப்பொருட்களை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

இறைச்சி, சர்க்கரை, கொழுப்பு ஆகிய பொருட்களை ஒருவர் சாப்பிடும்போது, அதனை செரிக்க அதிகளவு உடலே உற்பத்தி செய்யும் என்சைம்கள் தேவைப்படுகின்றன.

முடிந்தளவு உணவு வகைகளை நன்றாக மென்று சாப்பிடுவது அவசியம். அப்போதுதான் உமிழ்நீர் சேர்ந்து உணவு எளிதாக செரிக்கும். சாப்பிடும்போது தண்ணீர் குடிக்காதீர்கள். அது உணவு செரிமானத்தைப் பாதிக்கும்.

உருளைக்கிழங்கு, கறிக்குழம்பு, கேக், ஐஸ்க்ரீம் என செரிக்க கடினமான உணவுகளை முடிந்தளவு சாப்பிடாதீர்கள். எளிமையான உணவுகளைக் கொண்டதாக உணவுத்திட்டத்தை வடிவமையுங்கள். அதுதான் உடலை சோர்வாக்காமல் இருக்கும்.

மன அழுத்தம் இருக்கும் போது சாப்பிடாதீர்கள். சிலர் அந்த நேரத்தில் நிறைய சாப்பிடுவார்கள். அது உடல்நலனைக் கெடுத்துவிடும். இரவு 7.30க்குள் இரவு உணவை சாப்பிட்டுவிட்டால் படுக்கும்போது உணவு செரிமானம் பாதி முடிந்திருக்கும். படுப்பதற்கு மூன்று மணிநேரத்திற்கு முன்னர் சாப்பிடுவது முக்கியம். பருப்புகள், பழங்கள், பருப்புகள், விதைகள் ஆகியவற்றை சாப்பிடுங்கள்.

அத்தனை உணவு பொருட்களையும் வேக வைக்காமல் சாப்பிடலாம் என நினைக்காதீர்கள். அப்புறம் தலையில் கொம்பு முளைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. முடிந்தளவுக்கு என புரிந்துகொள்ளுங்கள்.

தினசரி இலைகளைக் கொண்ட காய்கறிகளில் ஒன்றையாவது சாப்பிடவேண்டும். உப்பிடாத பருப்புகளை சாப்பிடுங்கள்.பாலில் தயாரிக்கப்படாத யோகர்டை சாப்பிடலாம்.

வயிற்றில் செரிமானத்திற்கு உதவும் சில என்சைம்களைப் பார்ப்போம். அமைலேஸ், புரோம்லெய்ன், செல்லுலேஸ், சைமோடைப்சின், மியூகோலேஸ், பாபெய்ன் என செரிமானத்திற்கு உதவும் என்சைம்களின் பட்டியல் நீளும்.

அசாம் டீ என்று வாங்கினாலும் அதில் தேயிலை இல்லாத டீபேக் இருந்தால் என்ன பிரயோஜனம்? அதேபோல்தான் வைட்டமின்கள் இல்லாத உடலும்... ஏராளமான நோய்களைத்தான் சந்திக்கவேண்டியிருக்கும். உடலிலுள்ள ஒவ்வொரு செல்களுக்குமே வைட்டமின்கள் தேவை. எனவே உணவை அதற்கேற்ப வடிவமைத்து சாப்பிடுவது முக்கியம். ஒரு்வரின் உடலிலுள்ள வைட்டமின் அளவு என்பது தனித்துவமானது. அதனை பிறரோடு ஒப்பிட முடியாது.

வைட்டமின் சி சார்ந்த பிரச்னை இருந்தால் உப்புகொண்ட உணவுகளை சாப்பிட நினைப்பீர்கள். ஆஸ்துமா, மன அழுத்தம், காய்ச்சல், தோல் பிரச்னைகள், தும்மல் ஆகிய சிக்கல்கள் ஏற்படும். பொதுவாக ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்களுக்கு அட்ரினல் சுரப்பி சுரப்பதிலும் தடுமாற்றம் இருக்கும். இந்த அட்ரினல் பகுதி சிறுநீரகத்திற்கு மேற்புறமாக உள்ளது.

ஒருவருக்கு சொந்த வாழ்க்கை அல்லது அலுலவக கபடி என எதில் பிரச்னை ஏற்பட்டாலும் மன அழுத்தம் சோர்வு உறுதியாக ஏற்படும். இதனை சரி செய்ய வைட்டமின் சி தேவை. மன அழுத்தம் காரணமாக தோல் பிரச்னை பெரிதாக உருவாக வாய்ப்புள்ளது. இதைக் கட்டுப்படுத்த ஒருமுறைக்கு 2 ஆயிரம் மி.கி. அளவு என 10 ஆயிரம் மி.கி. அளவுக்கு ஊசியைப் பயன்படுத்தலாம். இதற்கும் மருத்துவரின் பரிந்துரை அவசியம். இதன்மூலம் தீவிரமான தோல் பிரச்னையை கட்டுப்படுத்தலாம்.

எம்எ்ஸ்ஜி உள்ள பொருட்களை சாப்பிட்டுக்கொண்டே இருந்தால், உடல் முழுக்க நச்சு பரவும். இதனை நீக்கியபிறகு நல்லுணவை சாப்பிட்டால் மட்டுமே உடல் தோய்களின்றி இருக்கும். எனவே, துரித உணவுகளை தவிருங்கள்.

மூக்கிலேயே குத்தலாம் என்று தோன்றும் மேலாளர்களைக் கூட ஆழமாக மூச்சை இழுத்து விட்டுப் பார்த்தால் கோமாளிகளாக தோன்ற வைக்கும் மனநிலை உருவாகும். எனவே, முடிந்தவரை சிறிது நேரம் நடந்துகொண்டே  மூச்சை இழுத்து விடுங்கள்.

காபீன் பானங்களை குறைவாக அருந்துங்கள். தொடக்கத்தில் அட்ரினலை தூண்டிவிடும் பிறகு, அதன் செயல்பாட்டைக் குலைக்கும். பழங்கள் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள். தினசரி குறிப்பிட்ட நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். இடுப்பை மட்டுமே ஆட்டி செய்யும் உடற்பயிற்சி கலோரியைக் குறைக்கலாம். ஆனால் மன அழுத்தத்தைக் குறைக்காதே...

யோக ஆசனங்களில் விபரீத கரணி என்று ஒரு பயிற்சி உள்ளது. இதனை யூடியூபில் பார்த்துவிட்டு மெல்ல செய்து பழகுங்கள்.

ஆயுர்வேத மருத்துவத்தில் அஸ்வகந்தா டானிக் உள்ளது இதை குறிப்பிட்ட நேரம் குடித்தால், உடலிலுள்ள பிரச்னைகள் பலவும் தீரும்.


pinterest
















 


கருத்துகள்