அரிய ரத்தவகை எது?

 


 அறிவியல் கேள்வி பதில்கள்
மிஸ்டர் ரோனி

ஒருவரின் தலைமுடியை வைத்து என்னென்ன விஷயங்களைக் கண்டுபிடிக்க முடியும்?

ஒருவரின் பாலினம், வயது. என்ன மருந்துகளை சாப்பிட்டார் என்பதை கண்டுபிடிக்கலாம். பிள்ளைகளை அறிய டிஎன்ஏ பரிசோதனையும் செய்யலாம்.

இதயத்தின் வேலை என்ன?

ஒரு நிமிடத்திற்கு எழுபத்தைந்து முறை துடிக்கிறது. ஒரு துடிப்பிற்கு 71 கிராம் ரத்தத்தை பல்வேறு உறுப்புகளுக்கு அனுப்புகிறது. இந்த வகையில் நாளுக்கு 9,450 லிட்டர் ரத்தத்தை உடலெங்கும் அனுப்புகிறது. இதயம் சிறியதாக இருந்தால், அதன் துடிப்பு அதிகமாக இருக்கும். பெண்களுக்கு நிமிடத்திற்கு ஆறு முதல் எட்டு துடிப்புகளாக உள்ளது. இது ஆண்களின் இதயத்துடிப்பை விட அதிகம். பிறந்த குழந்தைக்கு ஒரு நிமிடத்திற்கு 130 முறை இதயம் துடிக்கிறது.

தூங்கும்போது இதயம் நின்றுவிடுகிறதா?

இதயம் துடிக்கும் வேகம் மட்டுப்படுகிறது. அதனால் இதயம் வேலை செய்யவில்லையா என வதந்திகளை சிலர் பரப்புகிறார்கள். அது உ்ணமையல்ல. இதயம் எப்போதும் துடிப்பதை நிறுத்துவதில்லை.

ஒருவரின் ரத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு இருப்பது உண்மையா?

ஒரு லிட்டரில் 19-50 மில்லிமீட்டர் அளவு கார்பன் டை ஆக்சைடு இருக்கும்.

ரத்தம் தடிமனமாக இருப்பதற்கு காரணம் என்ன?

அதிலுள்ள சிவப்பு ரத்த செல்களே காரணம். அவற்றின் உற்பத்தி குறைந்தால் ரத்தத்தின் அடர்த்தி குறைந்துவிடும்.

ரத்தவகைகளை கண்டுபிடித்தவர் யார்?

1909ஆம் ஆண்டு ஆஸ்திரியாவைச் சேர்ந்த மருத்துவர் கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் ஏபிஓ ரத்த வகைகளைக் கண்டுபிடித்தார்.

ரத்தம் தானம் செய்வது பற்றி கூறுங்கள்.

ஐம்பது கிலோ எடை கொண்டவர், 56 நாட்களுக்கு ஒருமுறை ரத்தம் தானம் செய்யலாம். பிளாஸ்மாவை இருபத்தெட்டு நாட்களுக்கு ஒருமுறை என ஆண்டுக்கு பதிமூன்று முறை தானம் செய்யலாம்.

அரிய ரத்தவகை எது?
பாம்பே ரத்தவகை. 1961ஆம் ஆண்டு பாம்பே ரத்தவகையை செக் நாட்டைச் சேர்ந்த செவிலியர் கண்டுபிடித்தார்.

இடதுமூளை, வலதுமூளை வேறு வேறு வேலைகளை செய்வதை கண்டுபிடித்தவர் யார்?

1950ஆம் ஆண்டு , ரோஜர் ஸ்பெர்ரி என்பவர் இடது, வலது மூளை வேறுபாடுகளைக் கண்டுபிடித்தார். இதற்காக ஸ்பெர்ரிக்கு 1981ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!