காய்கறிச்செலவுகளைக் குறைக்க மனித இறைச்சியை சாப்பிட்டவர்!

 









க்ரோல் ஜோச்சிம்

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வல்லுறவு கொலையாளி. இவரது கொலை  செய்யும் பாணி என்பது, பெண்களை பிடிப்பது, வல்லுறவு செய்து கொல்வது, பிறகு அவர்களின் புட்டம், கைகளில் உள்ள தசையை அறுத்து சென்று சமைத்து தின்பதுதான். காவல்துறையில் பிடிப்பட்டபோது பதினான்கு பேர்கள் என கொலைக்கணக்கு கூறினார். ஆனால் உண்மையில் பதினான்கு ஆண்டுகளாக கொலை செய்து வருவதால் எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்பு அதிகம்.

தான் வாழ்ந்த வீட்டில் ஏராளமான செக்ஸ் பொம்மைகளை வைத்திருந்தார். ஒருவரைக் கொன்றால் அவர்களின் கழுத்தை நெரித்தபடியே சுய இன்பம் அனுபவிக்கும் பழக்கம் உண்டு. வீட்டில் சுய இன்பம் அனுபவித்தாலும் வெளியில் வந்து குற்றம் செய்யும்போது அனைத்தும் லைவ்தான். எனவே, நேரடியாக வல்லுறவு செய்து கொன்றுபோட்டுவிட்டு வருவது வாடிக்கை.

சில கொலைகளில் தசையை அறுத்து வரவில்லை. வல்லுறவு மட்டும் செய்துவிட்டு வந்தார். ஆனால், மனிதர்களை கொன்று சமைத்து தின்று தனது காய்கறி செலவை கட்டுப்படுத்த முயன்றதுதான் மாட்டிக்கொள்ள காரணமாக அமைந்துவிட்டது. கொலை செய்த குழந்தையின் உடல் உறுப்புகளை பாத்திரம் கழுவும் சிங்கில் தள்ளிவிட அது, குழாயில் மாட்டிக்கொண்டுவிட்டது. அதை சுத்தம் செய்த பணியாளர் காவல்துறைக்கு புகார் கொடுத்துவிட்டார். அந்த நேரம் காவல்துறை, காணாமல் போனவர்களைப் பற்றி தேடிக்கொண்டிருந்தது. க்ரோலின் வீட்டில் தேடியபோது, மனித கை கேரட், உருளைக்கிழங்கு ஆகிய காய்கறிகளோடு சமைகப்பட்டுக் கொண்டு இருந்த்தைப் பார்த்தனர். அடுத்து, மனித இறைச்சியை வெட்டி எடுத்து சமைக்க ஏதுவாக ஃபிரிட்ஜில் வைத்திருந்தார். நிறைய பாலிதீன் கவர்களில் மனித இறைச்சி துண்டுகளை காவல்துறை கைப்பற்றியது. பிறகு, க்ரோலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன் வழியாக அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

படம் - பின்டிரெஸ்ட் 

கருத்துகள்