தந்தையும் மகனும் சேர்ந்து கொலைகார இணையராக மாறிய வினோதம்!

 






ஜோசப், மைக்கேல்

அமெரிக்காவின் பிலடெல்பியாவைச் சேர்ந்தவர். 1936இல் பிறந்தார். சிறுவயதில் ஆஸ்திரிய அகதிகளான ஸ்டீபன், அன்னா கலிங்கர் ஆகியோருக்கு  தத்து கொடுக்கப்பட்டார். பெற்றோரால் கடுமையாக அடித்து துவைக்கப்பட்ட பால்யத்தைக் கொண்டவர். 1944ஆம் ஆண்டுமூத்த சிறுவர்களால் கத்தி முனையில் வல்லுறவு செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தின் விளைவாக கையில் கத்தி வைத்துக்கொண்டு சுய இன்பம் அனுபவித்து கைத்தொழில் மன்னனாக மாறினார்.

பதினேழு வயதில் திருமணம் செய்துகொண்டார். இந்த உறவுமூலம் பத்து குழந்தைகள் பிறந்தன.பிறகு, ஜோசப்பின் மனைவி இன்னொருவரோடு இணைந்து வாழச் சென்றுவிட்டார். இதற்குப் பிறகுதான் ஜோசப்பிற்கு விபத்து ஏற்பட்டது. அதில், தலையில் அடிக்கடி வலி ஏற்பட்டு சோதனை செய்து பார்த்து, சைக்கலாஜிகல் நெர்வஸ்  டிசார்டர் என்ற பிரச்னையைக் கண்டுபிடித்தனர்.  தனது பிரச்னைகள் ஒருபுறம் இருந்தாலும் அடுத்த திருமணம் பற்றி கவலைப்பட்டவர், திருமணத்தை செய்வோம் ஆண்டவன் அனுகிரகிப்பான் என மணம் செய்துகொண்டார்.

தான் வாழ்ந்த வீட்டையோ என்ன காரணத்தாலோ தீ வைத்தார். அதற்கு காப்பீடாக 1,600 டாலர்கள் கிடைத்தது.மனநல பிரச்னைகளால், மாகாண மருத்துவமனைஇல் ஜோசப்ப் ஒருமுறை சேர்க்கப்பட்டட்டார். அந்த நேரம் தற்கொலைக்கு முயன்றார். பின்னாட்களில்  தனக்கு சொந்தமான சொத்துகளை ஒருமுறையேனும் தீவைத்து எரிக்க முயன்றிருக்கிறார். 

1972ஆம் ஆண்டு ஜோசப்பிற்கு, ஆறு பிள்ளைகள் இருந்தனர். இதில் இருவர் முதல்மனைவிக்கு பிறந்தவர்கள். இதில் மூத்த பெண், தான் சொன்னதைக் கேட்கவில்லையென அயர்ன் பாக்ஸை சூடு செய்து காலில் வைத்து தேய்த்தார் ஜோசப். மனநல சிகிச்சை, சிறைதண்டனை என இரண்டுமே ஜோசப்புக்கு கிடைத்தது.

ஜோசப் தனது கொலைகளுக்கு மகன் மைக்கேலை கூட்டாளியாக சேர்த்துக்கொண்டார். கடவுள் சொன்ன ஆணைப்படி கொலைகளை செய்கிறேன் என்றார். இவரது ஆணைப்படி, மைக்கேல்  ஜோஸ் என்பவரை பிடித்து சித்திரவதை செய்து, அவரின் ஆணுறுப்பை அறுத்து கொன்றனர். பிறகு, தனது மகனான ஜோசப்பை(ஜூனியர்) திட்டம் போட்டு கொன்றார். இந்த விவகாரத்தில் ஜோசப் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆதாரம் உறுதியாக இல்லை என்பதால்தான்.

 அப்பா, மகன் இருவருமே சேர்ந்து வீடு புகுந்து திருடுவது, வீட்டில் உள்ளவர்களை கட்டி வைத்து அடிப்பது, பாலுறுப்புகளை கத்தியால் வெட்டுவது, பிறர் மூலம் ஒருவரின் பாலுறுப்பை கடிக்க வைப்பது என எல்லாவித ஈனச்செயல்களையும் செய்தனர். செவிலியர் வீட்டில் செய்த கவனக்குறைவால் ரத்தக்கறை படிந்த சட்டையை வைத்து காவல்துறை ஜோசப், மைக்கேல் இணையைப் பிடித்துவிட்டது. ஜோசப்பிற்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது. ஆனாலும் மனிதர் சும்மாயிருக்கவில்லை.’’ எனக்கு வாய்ப்பு கிடைத்தால் உலகில் உள்ள அத்தனை மனிதர்களையும் போட்டு பிளப்பேன். பிறகு தற்கொலை செய்துகொண்டு இறந்து கடவுளாக மாறுவேன்’’ என்று பகிரங்க எச்சரிக்கையாகவே சொன்னார்.

சிறையில் உள்ள கைதியுடன் சண்டை போட்டு,அவரின் தொண்டையை அறுத்தார். முடிந்தவரை பிறரிடம் சண்டைபோட்டார். வாய்ப்பு கிடைத்தவர்களை வாரிப்போட்டு குத்தி உமியாய் ஊதித்தள்ளினார். பென்சில்வேனியாவில் உள்ள சிறை  ஒன்றுக்கு மாற்றப்பட்டவர், அங்கு உணாணாவிரதப் போராட்டம் செய்தார். தற்கொலை செய்துகொள்ள முயன்றார். 1996ஆம் ஆண்டு, தற்கொலை திட்டம் வெற்றி பெற வாந்தியெடுத்து அதன் மீதே நிலைகுலைந்து விழுந்து  இறந்தார்.

படம் - பின்டிரெஸ்ட் 

கருத்துகள்