வாசனையாக மாறியவளை முகரும் நாசி!

 










பேருந்தில் ஏறும்போதே

வாசனையின் தாழியில்

வழிதவறி விழுந்தேன்

மெல்ல மெல்ல நாசிகளில்

நிரம்பிய வாசனை

ஒரு பெண்ணின் உடலிலிருந்து

என தோன்றியபோது..

நறுமணத்தில் மூழ்கத் தொடங்கியிருந்தேன்.

 

தீராத வாசனை

திசையெங்கும் அலைக்கழித்தது

திடீரென வாசனை வற்றிப்போனது

மெதுவாக குறைந்த வாசனை

நாசியைக் கூட அறியாமல் கடந்து போயிருந்தது

அதிர்ச்சியுற்றவனாக கடந்த வாசனையின் வழிதேடி

ஓடத் தொடங்கினேன்.

கூந்தல் அலைபாய ஒருத்தி மட்டும்

முன்னே போய்க்கொண்டிருந்தாள்.

தீரா வாசனை அவளுடனே

சென்று கொண்டிருந்தது

முழுமையாக வாசனையாகவே மாறியிருந்தாள்

நான் நாசியாக…


 கவிதை- குமார் சண்முகம்

படம்  - பிக்ஸாபே

கருத்துகள்