நீ விரும்பி விளையாடும் பொம்மை நான்!

 









காதல் விகடன் கவிதைகள்

 

உன் கோணல் எழுத்துக்கள் போல இல்லை

இந்த நேர்த்தியான எஸ்எம்எஸ்-கள்

ஒரு கடிதம் இடேன்

 

யாரோ ஒருவர்

யாரோ ஒருவரைக்

கைதட்டி அழைத்தபோது

திரும்பிய உன்னை

யாரோ ஒருத்தியாக நினைக்க முடியவில்லை

-ஜா.பிராங்க்ளின் குமார்



ஒரு சில முத்தங்களிலேயே

உதறி விலகினாய்

நாணமா என்றேன்

நாளைக்கும் கொஞ்சம் இருக்கட்டும் என்றாய்.

அடிகள்ளி

நாளைய முத்தங்களை

இன்றுவரையா வைத்திருப்பேன்?

-மா.காளிதாஸ்



திருக்கல்யாணம்

வண்டி கட்டி

வந்து குவிகிறது

ஊர் மொத்தமும்

நம் திருமணத்திற்கு

தேர் கட்டி

வந்து குவிவார்கள்

கடவுள் மொத்தமும்

-பொன்.ரவீந்திரன்


உன் விழி வில்லால்

உயிர் உடைந்திட்ட

ராமன் நான்

 -ப்ரியன்


கனிவானதொரு சொல்லோ

நேசம் துளிர்க்குமொரு பார்வையோ

சில்லறையற்ற பொழுதில்

நீயெடுக்கும் பயணச்சீட்டோ

போதுமானதாயிருக்கிறது

உன்னை நேசிக்க

-யாழினி முனுசாமி


உப்பைக் கொட்டியவர்கள் கூட

அள்ளிக்கொண்டு போகிறார்கள்

ஆனால் நீயோ உன்

உயர்தரப் புன்னகையைக் கொட்டிவிட்டு அள்ளாமலே போகிறாயே

-தபூ சங்கர்



நீ நடந்த தடங்களின் அடியில்தான்

கிடக்கிறது நம் மணல்

மணல் என்றால் மணல்

மனசென்றால் மனசு


நீ விரும்பி விளையாடும் பொம்மை என்பதால்

பத்திரமாய் வைத்திருக்கிறேன் என்னை.

-பா.ராஜாராம்


படம் - பிக்ஸாபே

கவிதைகளுக்கான காப்புரிமை - ஆனந்தவிகடன்

கருத்துகள்