கடிதம் எழுதி நீண்டநாட்களாகின்றன - வே.பாபு- குமார் சண்முகம் - கடிதங்கள்

 















கடிதம் எழுதி நீண்ட நாட்களாகின்றன…

குமார்-

எப்படி இருக்கிறாய்?

வனாந்தரத்தில் காணாமல் போன குயில் குரல் போல இருக்கிறது உன் பதிலின்மை…

என்னவாயிற்று?

ஏதாவது படித்தாயா?

வேலைபளு அதிகமா?

நான்  எதுவும் படிக்கவோ, எழுதவோ இல்லை. தக்கை நண்பர்கள் அனைவரும் நலம்.

தக்கையில் குறிப்பிடும்படியாக எதுவுமில்லை.

வீட்டில் அனைவரும் நலமா?

சிவராஜ் அவ்வப்போது தொடர்புகொண்டு பேசுகிறார்.

தொகுப்பு கூடிய விரைவில் கொண்டு

வரலாமென்று இருக்கிறேன்.

கடிதம் எழுதி நீண்ட நாட்களாகின்றன.

                                                                                        வே.பாபு

சேலம்

25.03.2006

படம் - பின்டிரெஸ்ட்

கருத்துகள்