தமிழ்நாட்டில் ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகரிக்கிறது!

 

 

 

 Free photos of Poverty

 

 ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகரிக்கிறது!


இந்தியாவில் தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலம், சுதந்திரமடைந்த காலம் தொட்டு தமிழ்நாடு மத்திய அரசுக்கு ஈட்டித்தரும் வரி வருவாய் அதிகம். மக்கள்நலத்திட்டங்களால் மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சி கிடைத்துள்ளது. ஆனால் குழந்தைகள், பெண்களின் ஆரோக்கியம் பற்றிய விவகாரத்தில் இன்னும் பின்தங்கியே உள்ளது.

அண்மையில் ஐசிடிஎஸ் - தமிழ்நாடு அரசு இணைந்து செய்த மருத்துவ ஆய்வில் தமிழ்நாட்டில் மதுரை மாநகரம் குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றாக்குறையில் முதலிடத்தில் உள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளில் 2.5 சதவீதம் பேர் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் பாடிமாஸ் இன்டெக்ஸ் என்ற அளவுகோல் மூலம் அங்கன்வாடிகளில் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகம் உள்ள நகரங்களாக மதுரை - 3,322, திருவண்ணாமலை - 2,369, சேலம் - 2,175, கடலூர் - 2,128, திண்டுக்கல் - 1,917 அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஊட்டச்சத்து பற்றாக்குறை குறைவாக உள்ள மாநிலங்கள்

தூத்துக்குடி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருப்பத்தூர்

கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து அங்கு குழந்தை பெற்றுக்கொண்டால் அவர்களுக்கு அரசின் முத்துலட்சுமி ரெட்டி பெயரிலான நிவாரண உதவிகள் கிடைக்கும். மேலும் பிள்ளைப் பேறுக்கு பிறகு தேவையான சத்துமாவு, மருந்துகளை அங்கன்வாடி பணியாளர் வீடு தேடிவந்து வழங்குவார். இதுதான் தமிழகத்தில் உள்ள நடைமுறை விதி. இந்த வகையில் பார்த்தால், மதுரையில் அதிகம் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நாடோடிக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் தொழில் வாழ்க்கை காரணமாக ஒரே இடத்தில் தங்கி மருத்துவசிகிச்சை பெறுவது சாத்தியம் இல்லை. எனவே, குழந்தைக்கு தேவையான அரசின் மானியம், உணவு உதவிகள் கிடைப்பதில்லை. நாடோடி குடும்பத்தலைவர்களும் போதுமான அளவு வருமானம் ஈட்டமுடியாதபோது, குழந்தைகளும் பட்டினி கிடக்க நேரிடுகிறது. இதனால் அவர்களின் தொடக்க கால உடல் மன வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

இதற்கான தீர்வாக மருத்துவர்களின் பரிந்துரை

பெண்கள் இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுதல், மன அழுத்தம் இன்றி வாழ்தல், ஆறுமாத தாய்ப்பாலூட்டுதலுக்குப் பிறகு மசித்த பருப்பு, காய்கறிகள், நெய், சோறு ஆகியவற்றை குழந்தைக்கு பழக்கப்படுத்துதல், குழந்தைகளின் வயிற்றில் புழு உருவாவதை தடுக்க மாத்திரைகள் உண்ணுதல்,

இவற்றையெல்லாம் தாண்டி நாடோடிக் குடும்பங்களின் இனக்குழுக்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு பற்றி விழிப்புணர்வு செய்வது அவசியம். கணவன், மனைவிக்கே மூன்று வேளை முழுமையான சத்துகொண்ட உணவு கிடைக்காதபோது நான்கு பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு எப்படி வளர்க்க முடியும்? அவர்களுக்கான அடிப்படை விஷயங்களையே தரமுடியாது அல்லவா? டைம்ஸ் ஆப் இந்தியா கட்டுரையில் இந்த பார்வைக்கோணம் இல்லை. இதை நான் என்னுடைய கருத்தாக இங்கே முன்வைத்துள்ளேன்.

டைம்ஸ் ஆப் இந்தியா ஆக.25.2022
தீபக் சதீஷ்

ஆங்கில மூலக்கட்டுரையை தழுவிய மொழிபெயர்ப்பு....




கருத்துகள்