சாடிஸம் பற்றிய ஆய்வுகளால் உலகையே அதிர வைத்த ஜெர்மன் மருத்துவர்!

 

 

 

 

 



அமெரிக்காவில் மட்டும்தான் தொடர் கொலைகாரர்கள் உருவாகிறார்களா என பலரும் நினைக்கலாம். இந்தியாவில் ராமன் ராகவ் ரக கொலைகார ர்கள் இருப்பதைப் போல அனைத்து நாடுகளிலும் உண்டு. இவர்களைப் பற்றிய முழுமையான ஆவணம் கிடைப்பதில்லை என்பதுதான் அவர்களைப் பற்றி பேச முடியாததற்கு காரணம்.


ரெக் கிறிஸ்டி


இவரைத்தான் இங்கிலாந்தின் ரிலிங்டன் பிளேசின் ராட்சசன் என்று அழைக்கின்றனர். 1953ஆம் ஆண்டு இங்கிருந்த வீட்டை வாங்கியவர்கள் அதனை புதுப்பிக்க நினைத்தனர். சமையல் அறையில் இருந்த வால்பேப்பர்களை அகற்றியதும்தான் உள்ளே இருந்த விபரீதம் புரிந்தது. அங்கிருந்த கப்போர்டில் மூன்று பெண்களின் பிணம் பிளாஸ்டிக் உறையில் மடித்து வைக்கப்பட்டிருந்தது. சாப்பிடும் அறையின் கீழும் ஒரு பெண்ணின் பிணம் கிடைத்தது. தோட்டத்தில் மூன்றுக்கும் அதிகமான பிணங்கள் இருந்தன. ஏன் இந்த ரத்த வெறியாட்டம். அத்தனைக்கும் காரணம், கண்ணாடி போட்ட ரெக் கிறி்ஸ்டி என்பவர்தான்.


வேலை செய்தால்தான் சாப்பாடு என்ற நிலையில் வேலையை முக்கியமாக கருதும் குடும்பத்தில் பிறந்தவர், பின்னாளில் அனைவரின் பொருட்களையும் திருடும் மனிதராக மாறினார். அதோடு குரோனிக் ஹபோகாண்ட்ரியா பாதிப்பும் அவருக்கு இருந்தது. தனது மனைவி ஈதலுடன் 1938ஆம் ஆண்டு ரிலிங்டனுக்கு வந்தார் கிறிஸ்டி. தனது நாற்பத்து இரண்டாம் வயதில் பெண்களை கொலை செய்யத் தொடங்கினார். மனைவி உறவினர்களை சந்திக்க போகும் சமயங்களில் ஏதாவது காரணம் சொல்லி பெண்களை அழைத்து வந்து கழுத்தை நெரித்துக்கொன்றுவிட்டு அவர்களை வல்லுறவு செய்வது வாடிக்கை. இப்படித்தான் அருகிலுள்ள கர்ப்பிணிப் பெண்ணான டிமோத்தி என்ற பெண்ணை கழுத்தை நெரித்து வல்லுறவு செய்து கொன்றார் கொலைப்பழியை கணவர் மீதே திருப்ப, அவரை பற்றி முழுமையாக காவல்துறை விசாரிக்காத தால் அவர் செய்யாத தவறுக்கு தூக்கில் தொங்கினார். கொலைகளை சிறப்பாக திட்டமிட்டு மூன்று ஆண்டுகள் இடைவெளி விட்டு செய்தார். இதனால் பல வழக்குகளை காவல்துறையால் சரியாக இணைக்கமுடியவில்லை.


செக்ஸூம் கொலைகளும்


தொடர் கொலைகளை செய்பவர்களுக்கு இயல்பான பாலுறவு தூண்டுதல் இருக்காது. அவர்களுக்கு ஒருவரை வேதனை ஏற்படுத்துவது, அடிப்பது, உதைப்பது, கை, கால்களை வெட்டுவது, கழுத்தை நெரிப்பது என செய்யும்போது கிடைக்கும் மகிழ்ச்சி பாலுறவு இன்பத்தையும் தாண்டியது. ஓஷோ கூறுவது போல காமத்தில்தான் ஒருவன் தன்னை மறக்கிறான். அந்த இன்பத்தை வேண்டியே மீண்டும் மீண்டும் உடலுறவில் ஈடுபடுகிறான் என்பது தொடர் கொலைகாரர்களுக்கும் பொருந்தும். இவர்கள் கொலைகளை செய்து அதில் எந்தளவு குரூரமான விஷயங்களை இணைக்க முடிகிறதோ அந்தளவு மகிழ்ச்சி பெறுகிறார்கள். குறிப்பாக உயிருக்குப் போராடுபவர்களின் அலறல், பதற்றம் ஆகியவற்றை எந்தளவு அதிகரிக்கிறதோ அந்தளவு மகிழ்ச்சியடைகிறார்கள். அடுத்தடுத்த கொலைகளுக்கும் இதுவே தூண்டுதலாகிறது.


பாரபிலியா


வினோதமான காதலை தொடர் கொலைகார ர்கள் விரும்புகிறார்கள். வலியை விரும்பி ஏற்கும் பெண்களாக இருந்தாலும் இவர்களிடம் தாக்குப்பிடிக்க முடியாது. அந்தளவு கொடூரமாக இவர்களின் காதல் வெளிப்படும். காதலிக்கு பயன்படுத்தி உள்ளாடைகளை வாங்கிக் கொடுப்பது, யோனியில் உள்ள ரோமங்களை வெட்டி பாதுகாப்பது, கொலை செய்த பெண்களின் யோனிகளின் அறுத்து பதப்படுத்தி பாதுகாப்பது, நாயுடு ஹால் சமாச்சாரங்களை இணையத்தில் ஆர்டர் செய்து பரிசாக வழங்குவது என செல்லும். வில்லியன் ஹெய்ரென்ஸ் என்ற கொலைகாரர் வீட்டை உடைத்து உள்ளே சென்று பெண்கள் இருக்கும் அறைக்கு செல்வார். அங்கு அந்தப்பெண்ணை மிரட்டி வாழைப்பழத் தோல் போல உடைகளை அவிழ்ப்பார். அவள் உள்ளாடையை அவிழ்ப்பதுதான் அவருக்கு கிளைமேக்ஸ். உடனே அந்தப்பெண்ணைக் கொன்று உடல் உறுப்புகளை சேதப்படுத்துவார். இதுதான் அவருடைய பாணி.


அடுத்த வீட்டை வேடிக்கை பார்ப்பது என்பது உலகமெங்கும் உள்ள பழக்கம்தான். அதையே தொடர் கொலைகார ர்கள் கொஞ்சம் வித்தியாசமாக தன்னுடைய கூட்டாளியை விட்டு பெண்களை வல்லுறவு செய்ய வைத்து அதனை நேரலையில் பார்த்து சுய இன்பம் அனுபவிப்பார். வரலாற்றில் இடம்பெறுவதற்கான அதனை வீடியோவாக பதிவு செய்வதும் உண்டு. சார்லஸ் என்ஜி, லியோனார்டு லேக் ஆகியோர் இந்த வகையில் தாங்கள் செய்யும் வல்லுறவு சித்திரவதைகளை வீடியோக்களாக பதிவு செய்தனர். பார்க்கும்போதெல்லாம் உல்லாசம் தேவை அல்லவா? இதில் இன்னும் ஆழமாக இறங்கினால் கன்னபாலிசம் வாம்பையரிசம், நெக்ரோபிலியா ஆகிய அம்சங்களும் உண்டு.



சாடிஸம்


இதுபற்றி டிஎஸ்எம் நூலில் இருவகையாக கூறப்படுகிறது. ஒன்று பிறரை வேதனைப்படுத்தி அதில் இன்பம் பெறுவது. இந்தவகையில் நம்மைச்சுற்றிக்க கூட நிறைய மனிதர்கள் இருக்கிறார்களே என கூறாதீர்கள். குறைந்த அறிகுறிகள் இருப்பது அவர்களை மோசமான மனிதர்களாக மாற்றாது. இதனை சாடிஸ்டிக் பர்சனாலிட்டி டிஸார்டர் என்று கூறலாம். பெரும்பாலான தொடர் கொலைகாரர்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்துவிடுவார்கள்.


அடுத்து செக்ஸூவல் சாடிஸம். இந்த வகையில் பெண்களை வலியும், இன்பமும் பெறுமாறு சித்திரவதை செய்வார்கள். எவ்வளவு வலி ஏற்படுகிறதோ அந்தளவுக்கு ஆனந்தம். இதற்கு எடுத்துக்காட்டாக வேய்ன் கேசி, ஜேக் தி ரிப்பர் வரை எடுத்துக்காட்டுகள் உள்ளன. இதில் அனைத்து தொடர் கொலைகார ர்களும் இதே போன்ற குணங்களைக் கொண்டிருப்பார்கள் என்று கூறமுடியாது. இதனை யார் கண்டுபிடித்தார்கள் என்று திட்டமிட்டு கூறமுடியாது. மனிதர்களின் இயல்பிலேயே இந்த குரூரத்தின் மீதான நாட்டம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். வரலாற்றிலும் இப்படிப்பட்ட சித்திரவதைகளை செய்யும் ஆட்களும். இதற்கெனவே உருவாக்கப்பட்ட ஆயுதங்களும் நிறைய உள்ளன. 1897ஆம் ஆண்டில் சாடிஸம் என்ற சொல் ஆக்ஸ்போர்டு அகராதியின் பக்கங்களில் ஏறியது. அதற்கு முன்னர் சித்திரவதை செய்யும் குணத்தை எப்படி வகைப்படுத்துவது என பலருக்கும் தெரியாது. இதற்கு அர்த்தம் கொடுத்தவர் என மார்க்விஸ் டி சாடே என்பவரைக் கூறலாம். இவர் வினோதமான காமவெறியைக் கொண்டிருந்தார். விலைமாதுக்களின் புண்களின் மீது மெழுகை காய்ச்சி ஊற்றி அதைப் பார்த்தபடி சுய இன்பம் அனுபவிப்பது இவருக்கு பிடித்தமானது. பல்வேறு மோசமான செயல்பாடுகள் காரணமாக இவரை சிறையில் அடைத்தனர். அங்கும் சென்றவரின் மூளை சும்மா இருக்கவில்லை. பல்வேறு பாலியல் கனவுகளைக் கண்டுஜஸ்டின், பிலாசபி ஆப் தி பௌடைர், தி 120 டேஸ் ஆப் சோடோம் என்ற நூல்களை எழுதி உலகிற்கு உதவினார். இளம்பெண்களின் வாய், மலப்புழை ஆகியவற்றை பாலுறவுக்காக பயன்படுத்த நினைத்தார் மார்க்வஸ். பிறகு இளம்பெண்களிம் இதயத்தை அகற்றிவிட்டு அந்த இடத்தில் ஆணுறுப்பை பெருகும் ரத்தத்தில் நனைத்தபடி உறவு கொள்ளும் தனது ஆசையை நூலில் பீதியூட்டும்படி விவரிப்புகளுடன் எழுதியிருந்தார்.


சாடிஸ குணங்களை மிக அருகே பார்த்து அதனை ஆவணப்படுத்தியவர் என ஜெர்மன் மருத்துவர் ரிச்சர்ட் வான் கிராப்ட் எபிங்கை சொல்லலாம். இவர் தனது சைக்கோபாதியா செக்ஸூவலிஸ் எனும் நூலின் மூலம் உளவியல் துறைக்கு முக்கியமான பங்காற்றினார். இந்த நூலில் பல்வேறு சாடிஸ சமாச்சாரங்கள் படங்கள் வரைந்து பாகங்களை குறிக்கும் வண்ணம் துல்லியமாக இருந்தன. நூலை எழுதியபோது எபிங்கிற்கு நிறைய அச்சுறுத்தல்கள் ஏற்பட்டன. அவரை பிரிட்டிஷ் உளவியலாளர்கள் சங்கத்திலிருந்து வெளியேற்றலாமா என்று கூட ஆலோசித்தனர். இதற்கு காரணம், அந்த நூல் படிக்க பெரும் அதிர்ச்சியாகவும் உண்மையாகவும் இருந்ததுதான். தொடர் கொலைகார ர்களைப் பற்றியது என்றாலும் அதில் புதிய தகவல்கள் ஏதும் கூறப்படவில்லை.



எபிங்கின் காலத்தில் தொடர் கொலைகாரர் என்ற சொல் கூட புழக்கத்தில் இல்லை. அதற்கு பதிலாக காமக் கொலைகாரன் என்ற சொல்லை அவர் பயன்படுத்தினார். கொலையுண்டவர்களை உடல் பாகங்களை சிதைத்து பாலுறவு மகிழ்ச்சியை அனுபவிப்பவன் என்று கூற அந்த சொல்லைப் பயன்படுத்தினார். நூலை மேம்படுத்தி அடுத்த பதிப்பை கொண்டு வரும்போது தனது காம கொலைகாரன் என்ற சொல்லுக்கு ஜேக் தி ரிப்பர் எப்படி பொருந்தி வருகிறார் என்பதை விளக்கியிருந்தார். பெண்ணின் யோனி வழியாக குடலை, சிறுநீரகத்தை கிழித்த குருயோ, சிறுமியைக் கொன்ற கணக்காளர் பிரடெரிக் பேக்கர், சிறுமியைக் கொன்று பிறப்புறுப்பை சிதைத்து அவளின் இதயத்தை தின்ற பிரெஞ்சுக்கார ர் லாகர், வயதான பெண்ணின் மார்பை, யோனியை அறுத்து சமைத்து தின்ற ஹங்கேரி மனிதர் டிர்ச் என பல்வேறு மனிதர்களின் உளவியல் நூலில் ஆராயப்பட்டிருந்தது.


வெர்ஸெனி


இத்தாலியைச் சேர்ந்தவரான வெர்ஸெனி 1849இல் பிறந்தவர். சிறுவயது முதலே கோழிகளை கழுத்தை நெரித்து கொல்வதில் சந்தோஷம் கொண்டார். அது அப்படியே தொடர ஏராளமான கோழிகளை அடித்து கொன்று மகிழ்ந்தார். இதனை இவர்தான் செய்தார் என்பது யாருக்கும் தெரியாது. பின்னர், சிறுவனாக இருக்கும்போது இவரது கவனம் இளம்பெண்கள் மீது திரும்பியது. தனக்கு தெரிந்த பெண்களை எல்லாம் தாக்கத் தொடங்கினார். அப்போது செய்தது கொலை முயற்சிதான் என்றாலும் அது நிறைவேறவில்லை. பிறகு, பதினேழு வயது பெண் ஜோகன்னா என்ற பெண்ணை காலையில் பின்தொடர்ந்து சென்று தாக்கினார். கழுத்தை நெரித்து கொன்றவர், வயிற்றிலுள்ள குடல்களை உருவினார். உடலை முழு நிர்வாணப்படுத்தியவர், காலிலுள்ள தசைகளை கடித்து ரத்தத்தை உறிஞ்சிக் குடித்தார். அதில் ஒரு பகுதியை சமைக்க எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். இப்படியே இன்னொரு பெண்ணையும் கொன்றார். அடுத்து சொந்தக்கார பெண்ணை கொல்லும் முயற்சியில் அவள் கெஞ்சியதால் உயிரோடு விட்டார். அதனால் காவல்துறை வெர்ஸெனியை கைது செய்தது. குற்றங்களை செய்தாயா என்றதும் ஆமாம் என ஒப்புக்கொண்டார். குடல், த்தசைகளை எதற்கு எடுத்து சொன்றா்ய் என்று நீதிபதிகள் கேட்டதற்கு, கொலைக்கான நினைவாக எடுத்து சென்றேன் அதனை தொட்டுப்பார்த்தால் எனக்கு மகிழ்ச்சி கிடைத்தது. கொலையானவர்களின் வாய்க்குள் கைவிடுவதும் கூட சுய இன்பம் அனுபவிப்பது போன்ற இன்பத்தைக் கொடுத்தது என சொன்னார். கொலைக்குற்ற தண்டனையாக வாழ்நாள் முழுக்க சிறையில் அடைக்கப்பட்டார் வெர்ஸெனி. தொடர் கொலைகாரர்களின் உளவியல் பற்றி அறிய வில்லியம் ஸ்டேகல் என்பவர் எழுதிய சாடிஸம் அண்ட் மாசோசிசம் என்று நூல் முக்கியமான ஆவணம். இதில் கொலைகாரர்கள் தங்களது பாலியல் சார்ந்த கற்பனைகளை அப்படியே மருத்துவர் எழுதியிருக்கிறார். இதனை படிக்கும்போது பலருக்கும் எச்சில் கூட தொண்டையை விட்டு கீழே இறங்காது. அந்த அளவு எது எப்படியோ அப்படியே எழுதப்பட்டிருக்கிறது.




கருத்துகள்