இறந்தவர்களோடு உறவு கொள்ளும் கொடூரமான பழக்கம்!

 

 

 

 

 

Bit of everything: Necrophilia

 

 

கன்னபாலிசம்


நரமாமிசம் உண்பது என்று இதனைக் கூறலாம். இது மனிதர்களின் வம்சாவளிக் கிளையில் கூட இதே பழக்கம் உள்ளது. மனிதக்குரங்குகள் தங்கள் இரையாக பிடிக்கும் தங்கள் இனக்குரங்குகளை கூட கொன்று தின்னும் பழக்கமுடையவைதான். ஆப்பிரிக்க முதல் நியூசிலாந்து வரையிலுள்ள பழங்குடி மக்களில் பலரும் நரமாமிசம் சாப்பிடுபவரகள்தான். ஆனால் இதனை சமூகத்தில் குற்றவாளி ஒருவர் செய்யும்போது, அதனை பலராலும் பொறுத்துக்கொள்ள முடியாது போகிறது. ரத்தம் குடிப்பது எப்படி பாலியல் ரீதியான மகிழ்ச்சியை ஒருவருக்கு தருகிறதோ அதேபோல்தான் ஒருவரின் தசையை சாப்பிடுவதும் மகிழ்ச்சியைத் தருகிறது. பழங்குடி மக்களைப் பொறுத்தவரை தங்கள் பகுதிக்குள் அத்துமீறுபவர்களை கொன்று தின்கிறா்ர்கள். அடுத்து இறந்தவர்களின் உடலில் சிறிதை வெட்டி தின்பது அவர்மீதான அன்பு, மரியாதைக்காக செய்கிறார்கள். எதிரிகளை வீழ்த்தினால் அவர்களது வெற்றியின் அடையாளமாக ஒருவரின் உடலில் தசையை வெட்டிக்கொண்டு வருவதும் கூட உண்டு. காமிக்ஸில் மண்டைத் தொலியை உறிப்பது என கூறுகிறார்களே அதே வகைதான்.


முதலில் நான் அவளின் உடலிலிருந்து ஆடைகளை அகற்றினேன். அதற்குள் அவள் என்னைக் கடித்தால், உதைத்தாள், நகங்களால் கூட கீறினாள். அவளது கழுத்தை நெரித்து கொன்றேன். பிறகு அவளது உடல் பாகங்களை சிறிய துண்டுகளாக அரிந்தேன். அவளது புட்டப்பகுதியை ஓவனில் வறுத்தேன். அது சாப்பிட எவ்வளவு சுவையாக இருந்தது தெரியுமா? அவளது முழு உடலையும் சாப்பிட எனக்கு ஒன்பது நாட்கள் தேவைப்பட்டன என ஆல்பிரட் பிஷ் கூறினார்.


பனிரெண்டு வயது சிறுமியைக் கடத்திக் கொண்டு வந்து தின்றவர், அதை சாப்பிடும்போது சுய இன்பம் அனுபவித்தார். இவர் மட்டுமல்ல ஜெப்ரி டாமரும் கூட தான் கொலை செய்த மனிதர்களை சுவைத்தவர்தான். அவர்களைக் கொன்று தின்றது பாலியல் ரீதியாக என்னை ஊக்கப்படுத்தியது. அவர்கள் இப்போது என்னுடைய பகுதியாக இருக்கிறார்கள் என்று கூறினார். ரஷ்யாவைச் சேர்ந்த ஆண்ட்ரேய் சிக்காடிலோ, பிடிப்ட்டவர்களை அடித்து வெறும் கையாலேயே உடலை பிளந்து அவர்களின் மார்பகங்கள், நாக்கு, பாலுறவு உறுப்புகளை சாப்பிடும் பழக்கம் கொண்டவர்.


முதல் உலகப்போருக்குப்பிறகு ஜெர்மனியில் ஏராளமான நரமாமிச கொலைகாரர்கள் உருவானார்கள். பிரிட்ஸ் ஹார்மன் என்ற கொலைகாரர், ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆண்களைக் கொன்று, கருப்பு சந்தையில் மாட்டுக்கறி என அவர்களின் இறைச்சியை விற்றார். ஜார்ஜ் கிராஸ்மேன் என்பவர், விலைமாதுக்களை கொன்று கருப்புச் சந்தையில் பன்றிக்கறி என்று சொல்லி விற்றார். கார்ல் டென்கே என்ற விடுதி நடத்தி வந்தவரும், முப்பதுக்கும் மேற்பட்ட ஆட்களைக் கொன்று தின்று தீர்த்தவர்தான்.


ஆண்ட்ரேய் சிக்காடிலோ


வெளியே பார்த்தால் துறவியின் அமைதி, உள்ளே பார்த்தால் ஓநாயின் வேட்டை வெறி என வாழ்ந்தவர்தான் சிக்காடிலோ. அவரோடு இருபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்த மனைவிக்கே அவரது மன மாற்றங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. மென்மையாக பேசுபவர், கூச்ச சுபாவம் கொண்டவர் என விசாரணையில் கூறினார். சிக்காடிலோ இரண்டு பணிகளை செய்தார். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். மற்றொன்று வயதான தாத்தா. இலக்கியமும், பொறியியலும் படித்து பட்டம் பெற்றவர் பத்தாண்டுகளாக ஏராளமான குழந்தைகளை கொன்று குவித்தார் என்பது யாராலும் நம்ப முடியாத சங்கதி. 1992ஆம் ஆண்டு விசாரணையி்ல நான் இயற்கையில் இப்படி வினோதமாக பிறந்துவிட்டேன். நான் பைத்தியக்கார விலங்கு என மனப்பூர்வமாக அவரே ஒப்புக்கொண்டார்.


1936இல் உக்ரைன் நாட்டில் பிறந்தார். சிக்காடிலோ. ஸ்டாலினின் ஆட்சியில் நிலங்களை அரசு கையகப்படுத்தியதால் நாட்டில் வறுமை நிலை நிலவியது. வறுமை, போராட்டம் நிலவிய சூழல் அவரது மனநிலையை பெரிதும் பாதித்தது. இவரது மூத்த அண்ணன் விவசாயிகளால் கொல்லப்பட்டதும் மனநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிகம் பேசாதவராகவும் கூச்ச சுபாவம் கொண்டவராகவும் இருந்த காரணத்தால் பள்ளியிலும் கேலி, கிண்டல்களை சந்தித்தார். பள்ளிப்பருவம் முழுக்க குழப்பம் நிறைந்த தாழ்வுணர்ச்சி கொண்டதாகவே இருந்தது. இளம்பருவத்தில் பெண் ஒருவரிடம் பாலுறவு கொள்ள முயன்று தோற்றுப்போக தன்னால் முழுமையாக பாலுறவை அனுபவிக்க முடியாது. அதற்கான திறன் கிடையாது என முழுமையான நம்பினார். 1963ஆம்ஆண்டு திருமணமாகியும் கூட மனதில் இருந்த தாழ்மையான எண்ணம் மாறவில்லை. கல்லூரியில் படித்துக்கொண்டு டெலிபோன் பொறியாளராக பணியாற்றி வந்தார். பிறகு பள்ளி ஆசிரியராகவும் பத்து ஆண்டுகள் வேலை செய்தார். இது உண்மையில் அவரது சுபாவத்திற்கு பொருந்தாத வேதனை தரும் அனுபவமாக மாறியது. இந்த வேலையின்போதுதான் குழந்தைகள் மீதான ஈர்ப்பு அவருக்கு ஏற்பட்டது.


நாற்பத்தி இரண்டு வயதில்தான் தனது குற்றச்செயல்களை தொடங்கினார். அப்போது லெனா என்ற ஒன்பது வயது சிறுமியை சூயிங்கம் வாங்கித்தருகிறேன் என்று கூட்டிச்சென்று வல்லுறவு செல்ல முயன்றார். முயற்சி தோற்றுப்போக கத்தியால் குத்தி சிறுமியைக் கொன்று ஆற்றில் எறிந்துவிட்டார். அப்போதே காவல்துறை சிக்காடிலோ மீது ஆதாரங்களை வைத்து நடவடிக்கை எடுத்திருக்கலாம். வலுவான ஆதாரங்கள் வேண்டும் என்று வழகைக கைவிட்டது. பிறகு தனது ஆசிரியர் வேலையைக் கைவிட்டு ரோஸ்டோவ் எனும் தொழிற்பேட்டைக்கு இடம்பெயர்ந்து கிளார்க் வேலை ஒன்றைத் தேடிக்கொண்டார். அ்ங்குள்ள பேருந்து நிறுத்தத்திற்கு சென்று குழந்தைகள், சிறுவர்கள், இளம்பெண்களை வளைப்பார். உணவு, பொருட்கள், காரில் பயணம் என்று ஆசைகாட்டி அவர்களை மரங்கள் நிறைந்த பகுதிக்கு அழைத்துச்சென்று கொல்வார். கொல்வதற்கு முன்னர் அவர்களைக் கயிற்றால் கட்டி வாய், கைகள், வயிறு ஆகியவற்றை கத்தியால் கிழிப்பார். நாக்கு, மார்பகம், மூக்கு, பாலுறுப்புகள் ஆகியவற்றை கு்ழந்தைகள் குற்றுயிராக உயிருக்கு போராடும்போது தின்பார். இவர் செய்த பல்வேறு கொலைகளை சோவியத் அரசு கண்டுகொள்ளவே இல்லை. எதற்கு இப்படி அலட்சியமாக இருந்தார்கள் என்று தெரியவில்லை. இதனால் ஐம்பதிற்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகிவிட்டனர்.


நீதிமன்ற விசாரணையில் கூண்டில் அடைத்து இவரை கொண்டு வந்தனர். இவரால் பலியானவர்களின் உறவினர்கள் அங்கே வந்து ஆவேசத்தில் கூச்சலிட, தன்னை மனநோயாளி போல காட்டிக்கொள்ள முயன்றார். ஆனால் அவரின் முயற்சி பலிக்கவில்லை. அவரது கொலைகள் நிரூபிக்கப்பட்டதால், 1994ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவுப்படி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


நெக்ரோபிலியா


இதற்கு இறந்தவர்களை பார்ப்பது, முகருவது, உணருவது என்று அர்த்தம். இப்படி இறந்தவர்களை விரும்புவது பாலியல் ரீதியான இன்பத்தை கொலைகார ர்களுக்கு வழங்குகிறது. குற்றவியல் விவகாரங்களை ஆவணப்படுத்திய மருத்துவரும் கூட இதனை விவரிக்கும்போது கொடூரம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். அதீதமான அன்பு இறந்துபோனாலும் விடாது என்று கூறுகிறார்கள். இதற்கு எடுத்துக்கா்ட்டாக கார்ல் வான் காசல் என்பவரின் விவகாரத்தைப் பார்ப்போம். இவர் வேலை பார்த்த மருத்துவமனையில் இருபத்தி இரண்டு வயது பெண் மரியா, காசநோயால் இறந்துபோனார். மத்திய வயதில் இருந்த கார்லால் அந்த இறப்பைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் மரியாவை விரும்பியிருந்தா்ர. எனவே இறந்துபோய் புதைக்கப்பட்ட மரியாவை யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு கொண்டு வந்தார். இறந்துபோனால் உடல் கெடத் தொடங்குமே, அதற்கும் ஏராளமான ஏற்பாடுகளை செய்தார். உடலில் பார்மால்டிஹைடு திரவத்தை செலுத்தினார். உடலில் கண்களுக்கு பதில் கண்ணாடி கண்களைப் பொருத்தினார். பிறகு தோலைப் பாதுகாக்க அதன் மீது மெழுகைப் பூசினார். மரியாவின் வஜினாவைப் போல இயங்க ட்யூப் ஒன்றைப் பொருத்தி நினைத்தபோதெல்லாம் உறவு கொண்டார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கார்லின் விவகாரம் வெளியுலகிற்கு தெரிய வந்தது. இவர் ஒரு பெண்ணுடன் நிறுத்திக்கொண்டார். வரலாற்றில் இன்னும் மோசமான சிக்கலான உளவியல் பிரச்னைகள் கொண்ட ஆட்கள் உள்ளனர்.


பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பெர்ட்ராண்ட் என்பவர், புதிதாக புதைக்கப்பட்ட பிணங்களை குறிப்பாக இளம்பெண்களை எடுத்து வந்து பாலுறவு கொள்வது வழக்கம். அவர்களது உடல் உறுப்புகளை பான்கேக் போல சாப்பிடுவார். இறந்துபோனவர்களுடன் அனுபவிக்கும் இன்பம், உயிருடன் இருப்பவர்களுடன் கிடைக்காது என்றே கூறினார். இதில் எட் கெய்ன் சிறிது மாறுபட்டவர். இவர் தனது அம்மா இறந்தபிறகு அந்த இடத்தை நிரப்ப பிணங்களை நம்பினார். பிணங்களைக் கொண்டு வந்தவர் அவர்களின் உடலில் பிறப்புறுப்புகளை அகற்றி பாதுகாத்தார்.இவர் சாடிஸ்ட் அல்ல. பிணங்களைக் கொண்டு சூப் வைக்கு்ம பௌல், கலைப்பொருட்கள் என பல்வேறு விஷயங்களைச் செய்தார். இதற்கு பெண்களுடன் வாழ முடியாது என்று மனதில் கொண்டிருந்த நம்பிக்கைதான் முக்கியமான காரணம். பெண்களை தலையில் சுட்டு கொன்றுவிட்டுத்தான் கையில் தொடுவார்.


டென்னிஸ் நீல்சன்


இவர்தான் ஓரினச்சேர்க்கை ஆர்வம் கொண்டு கொலை செய்பவர்களுக்கான ரோல் மாடல். இவரை போலீஸ் பிடித்தபிறகு, எதற்கு இப்படி கொலை செய்தீர்கள் என்று கேட்டபோது, சந்தோஷமாக இருப்பதற்கு காரணம் தேட வேண்டுமா என்று எளிதாக சொன்னார். இவரது குற்றங்களின் பின்னணியில்தான் கில்லிங் பார் கம்பெனி என்ற நூல் வெளியானது. இதற்கு நீல்சனே எழுத்தாளருடன் ஒத்துழைப்பு கொடுத்தார்.


நீல்சனின் சிறுவயதில் அவரோடு பழகிக் கொண்டிருந்த தாத்தா திடீரென இறந்துபோனதும், அவரை கல்லறையில் புதைத்ததும் தாங்கமுடியாத காயமாக மாறியது. பலரும் அவரின் அறிகுறிகளைக் கண்டுகொள்ளவில்லை. 1961இல் ராணுவத்தில் சேர்ந்தி நீல்சன் கறியை எப்படி சன்னமாக வெட்டுவது என்பதில் விரைவில் நிபுணரானார். கூடவே கண்ணாடியில் தன்னுடலை தானே பார்த்து சுய இன்பம் அனுபவிப்பதும் அவருக்கு பிடித்தமானது. காவல்துறையில் பணிபுரிந்தவருக்கு மார்ச்சுவரியை சென்று பார்வையிடுவது பிடித்தமானது. அவருக்கு அது வேலையே இல்லை என்றாலும் கூட பிணங்களை பார்க்கும் மகிழ்ச்சிக்காக சென்றார். எனக்கு நண்பர்களே வேண்டாம். அவர்களின் உருவாக்கிக்கொள்ளவே வேண்டாம் என்றவரை தனிமை வாட்டியது. இதனால் இரண்டு ஆண்டுகள் ஆண் நண்பரோடு ஒன்றாக வாழ்ந்தார். தனது முப்பத்து மூன்று வயதில் இளைஞர் ஒருவரை ப ப்பில் பார்த்தார். பாலுறவுக்காக அவரை வீட்டுக்கு கூட்டி வந்தவர், அவரை நீரில் முக்கிக் கொன்றார். பிறகு அவரது உடலை எட்டு மாதங்கள் வீட்டிலே வைத்துக்கொண்டிருந்தார். நினைத்தபோதெல்லாம் சுய இன்பம் அனுபவித்தார். பிணத்தை சோபாவில் வைத்து கூடவே உட்கார்ந்து டிவி பார்த்தார். பிறகு வீட்டிற்கு பின்னர் உடலை தீவைத்து கொழுத்திவிட்டார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இப்படி பதினான்கு பேர்களை தனக்கு துணையாக கொன்று பொம்மை போல வைத்துக்கொண்டார். ஆனால் இந்த நிலை அப்படியே நீடிக்கவில்லை.


பிளாட் ஒன்றைத் தேடிப்பிடித்தும் பழைய மாதிரி வாழ நினைத்தார். பிணங்களை எப்படி வெட்டி தூக்கிப்போடுவது என நினைத்தவர் அதற்காக கழிவறையைப் பயன்படுத்தினார். எலும்புகளும் சதைகளும் குழாயில் மாட்டிக்கொள்ள, பிளம்பர் வந்து அதனை சரிபார்க்கும்போது நீல்சன் மாட்டிக்கொண்டார்.


பெடோபிலியா


குழந்தைகளை மட்டுமே சித்திரவதை செய்து அவர்களை வல்லுறவுக்குள்ளாக்கி கொல்வது. அதுதான் பெடோபிலியாவுக்கு அர்த்தம். இந்த வகையில் நிறைய பேர்கள் உண்டு. ஆல்பெர்ட் பிஷ் இதில் குறிப்பிடத்தக்கவர். இவர் அன்று அரசுக்கு இருந்த இனவெறியைப் பயன்படுத்திக்கொண்டு ஆப்பிரிக்க அமெரிக்கர்களை வேட்டையாடினார். தொடர் கொலைகாரர்களுக்கு வயதாகும்போது குரூரம் குறையும் என கூறுவார்கள். ஆனால் தனது அறுபது வயதில்தான் இவர் சிறுமியை வெட்டிக்கொன்று உறுப்புகளை சமைத்து சாப்பிட்டார். மிட்டாய், பணம் கொடுக்கிறேன் என தனது வீட்டின் கீழ்த்தளத்திற்கு கூட்டி வந்து அவர்களை கட்டிவைத்து வல்லுறவு செய்து சித்திரவதை செய்து கொல்வது ஆல்பர்டின் பாணி. பெரும்பாலும் சிறுவர்களையே அவர் தேர்ந்தெடுத்தார். ஆப்பிரிக்க அமெரிக்க சிறுவர்களை காணோம் என்றால் காவல்துறை முனைப்பாக தேடாத து அவருக்கு சாதகமாக இருந்தது.


வெஸ்லி ஆலன் டாட்


குழந்தைகளைக் கொலை செய்வது உற்சமாக இருக்கிறது என தனது கொலைகளுக்கு தானே காம்ப்ளிமென்ட் கொடுத்துக் கொண்டவர் வெஸ்லி. தனது பதிமூன்று வயதிலேயே குழந்தைகளை சிறுவர்களை வல்லுறவு செய்வதற்கான ஆசையுடன் இருந்தார். தனது சொந்தக்கார குழந்தைகளுடன் இதுதொடர்பான விளையாட்டுகளை விளையாடினார். தனது வாழ்க்கையில் மூன்று சிறுவர்களை்க் கொன்றவர் ஏராளமான பாலியல் முறைகேடுகளை செய்துள்ளார். சிறுவர்களின் கோடைகால முகாமிற்கு ஆலோசகராக சென்று தனது இஷ்டம்போல சீண்டல்களை செய்தார். 1987இல் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதற்கு முன்னர் எட்டுவயது சிறுவனை சின்னாபின்னமாக்க முயற்சித்துத்தான் கைதாகி மருத்துவமனை சிகிச்சைக்கு வந்தார். சிகிச்சைக்குப் பிறகு அவரை சரியாகிவிட்டார் என வெளியே விட்டுவிட்டார்கள். அதற்குப்பிறகுதான் மூன்று சிறுவர்களை கொலை செய்து கொன்்றவர் அதனை பார்த்து மகிழ போலராயடு போட்டோக்களாக எடுத்து வைத்திருந்தார். காவல்துறை வெஸ்லியைப் பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த, குற்றங்களுக்கு மரணதண்டனை வழங்கியது. குழந்தைகள் உயிரோடு இருக்கும்போது அவர்களது பாலுறுப்பை கடித்து தின்ன வேண்டும் என்பது அவர் நேரடியாக காவல்துறையில் கூறிய செய்தி.


vincent kabo




கருத்துகள்