தனது தொழிற்சாலை சகாக்களுக்கு காபியில் விஷம் கலந்த சைக்கோ கொலைகாரர் - கிரகாம் யங்

 

 

 

 

 

 

 

 


கோடரிக் கொலைகள்!


பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெரும்பாலான அமெரிக்கர்கள், பண்ணை வீட்டில் வசித்தனர். அவர்கள் அங்கு கத்தி, கோடரி, கடப்பாரை என பல்வேறு கருவிகளை வைத்துக்கொண்டு வேலைகளை செய்துகொண்டிருந்தனர். இதனால் அங்கு நடைபெறும் அனைத்து குற்ற சம்பவங்களிலும் கோடரி, கத்தி ஆகியவை முக்கியமான கொலை பொருட்களாக இருந்தன. இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? இப்போதும் கூட கோபம் வரும்போது கையில் கிடைப்பதை எடுத்து பிறரை அடிப்பவர்கள் இருக்கிறார்கள்தானே? 1836ஆம் ஆண்டு ரிச்சர்ட் ராபின்சன் என்ற செல்வச் செழிப்பான குடும்பத்தில் வளர்ந்தவர், கொலையாளியாக மாறினார். அப்போது நியூயார்க்கில் புகழ்பெற்றிருந்த விலைமாது ஹெலன் என்பவரை கோடரி மூலம் மண்டையை பிளந்து கொன்றார். இதனால்தான் ரிச்சர்ட் அந்த நகரில் பிரபலமானார்.


முதல் உலகப்போர் காலகட்டத்தில் பெல்லா குன்னஸ் என்ற பெண்மணி, ஒரு டஜன்பேர்களுக்கு மேல் கோடரியால் வெட்டி கொன்றார். அப்படிதான் இந்த கொலைகள் வெளியானபோது ஊடகங்கள் பேசிக்கொண்டன. 1940களில் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜாக் பேர்ட் என்பவர், கோடரியால் ஏராளமான வெள்ளை இனப் பெண்களை கொன்றதும் தெரிய வந்தது. தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த எலிஃபாசி1950களில் பதினைந்துக்கும் மேற்பட்ட சிறுவர்களை வெட்டிக் கொ்ன்றார்.

விஷம்


பெண் கொலைகாரர்கள் இந்த முறையை அதிகம் பயன்படுத்தினர். இதில் ரத்தம், சத்தம் என ஏதும் கிடையாது. அமைதியாக விஷத்தை உணவு, குளிர்பானம் அல்லது ஊசி வழியாக செலுத்திவிட்டால் போதும். அமைதியாக ஒருவர் எப்படி இறக்கிறார் எனபதைக் கண்குளிர பார்த்துக்கொண்டே இருக்கலாம். இந்த விவகாரங்களில் விஷத்தைக் கொடுப்பவர்கள் பெரும்பாலும் கொலை செய்யப்படுபவர்களுக்கு தெரிந்தவர்களாகவே இருப்பார்கள் நண்பர்கள், மனைவி, மருத்துவர்கள், செவிலியர்கள் என இருப்பவர்களே யாருக்கும் தெரியாதபடி விஷத்தைக் கொடுத்து ஆட்களை கொல்வார்கள்.


விக்டோரியா காலகட்டத்தில் ஆர்சனிக் விஷம்தான் புழக்கத்தில் இருந்தது. இதனை உரம் முதல் அழகுசாதனப் பொருட்கள் வரை பயன்படுத்தி வந்தனர். இதனை உணவில் கலந்துகொல்வது அங்குமிங்கும் நடக்கத் தொடங்கியது. இந்த விஷம் கொடுக்கப்பட்டவர்களுக்கு இறப்பே வரமாக தெரியும் அளவுக்கு மோசமான அறிகுறிகள் இருக்கும். வயிற்றில் அமிலம் அதிகமாக சுரப்பது போல் தோன்றும். தொண்டை இறுக்கமாகும். பிறகு மெல்ல வாந்தி தொடங்கும். வயிற்றிலுள்ள உணவு மொத்தமும் வெளிவந்தபிறகு ரத்துமும் வெளியாகும். இந்த சமயத்தில் அதிகமாக அப்போது அவசரப்பட்டு நீரைக் குடித்துவிட்டால் முடிந்தது. கதை. வாந்தி வருவது இன்னும் வேகமாகும். இதே சமயத்தில் வயிற்றுப்போக்கும் தொடங்கும். அதிலும் ரத்தம் வெளியாகும். வயிற்றுவலி தொடங்கி கண்கள் செருகும். தசைகள் வலுவிழக்கம். தோலின் நிறம் நீலமாக மாறி அதில் துர்நாற்றம் வீசத் தொடங்கினால் மோட்சம் நிச்சயம். அப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி படிக்கப் போகிறோம். இங்கிலாந்தைச் சேர்ந்தவர் மேரி ஆன் காட்டன். இவர், மொத்தம் இருபத்து மூன்று பேர்களை கொன்றுகுவித்தார். இதில் மேரியின் மூன்று கணவர்கள், பத்து குழந்தைகள், ஐந்து பேரப்பிள்ளைகளும் அடக்கம். உலகப்போருக்குப் பிறகான காலகட்டத்தில் ஹங்கேரி கிராமத்தைச் சேர்ந்த நூறு பேர்களை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஜூலியா என்ற பெண் போட்டுத்தள்ளினார். ஆர்சனிக் விஷம் கொடுத்து அனைவரையும் கல்லறையில் தள்ளினார்.


விஷம் கொடுத்து தனது போட்டியாளர்கள், தொல்லை தந்த சுமையாக இருந்த குழந்தைகள், கடன் கொடுத்தவர்கள் என அனைவரையும கொன்ற மருத்துவரின் பெயர் வில்லியம் பால்மர். அடுத்து மருத்துவர் ஜார்ஜ் சாப்மன், தனது காதலிகளுக்கு விஷம் கொடுத்து கல்யாண சிக்கல்களை சுலபமாக முடித்தார். அடுத்து விலைமாதுக்களை மட்டும் குறிவைத்து கொன்று இவர்தான் ஜாக் தி ரிப்பர் என பலரது சந்தேகத்தையும் தூண்டினார் மருத்துவர் தாமஸ் நீல் க்ரீம். தனது உறவினர்களை சயனைடு கொடுத்து மரியாதையாக பரலோகம் அனுப்பி வைத்தார்.


மைக்கேல் ஸ்வாங்கோ என்பவர், சயனைடு உட்பட பல்வேறு விஷங்களை தயாரிக்க தனி ஆ்ய்கதத்தை வைத்திருந்தார். இவர் அறுபது பேர்களை அமைதியான முறையில் சத்தம்போடாமல் விஷம் கொடுத்து தீர்த்து கட்டினார். 1984ஆம் ஆண்டு ஓஹியோ மாநில பல்லலைக்கழக மருத்துவமனையில் பணியாற்றிவிட்டு வெளியே வந்தார். அப்போதே இவரது மீது சந்தேகம் இருந்தாலும் யாராலும் இவரை குற்றம் சொல்ல முடியவில்லை. பிறகு இலினாய்ஸ் திரும்பியவர், ஆம்புலன்ஸில் மருத்துவராக வேலை செய்தார். தனது சக மருத்துவர்களுக்கு கொடுக்கும் குளிர்பானங்களில் எறும்புகளுக்கு பயன்படும் விஷத்தைக் கலந்து கொடுத்து வந்தார். பிறகு காவல்துறை மூலம் மைக்கேல் பிடிபட்டார்.


கிரகாம் யங்



விஷத்தைக் கொடுத்து கொலை செய்வதை பெரும்பாலும் பெண்கள்தான் கையில் எடுத்து சாதித்து வந்தனர். இங்கிலாந்தில் இப்படி விஷத்தைப் பயன்படுத்தி கொலை செய்யும் ஆண்கள் நிறைய பேர் இருந்தனர். மருத்துவர் தாமஸ் நீல் க்ரீம், வில்லியம் பால்மர் ஆகியோருக்கப் பிறகு இதேபோன்ற தன்மையுடன் பிறந்து பலரையும் பீதியில் தள்ளிய மனிதர்தான் கிரகாம் யங் என்பவர்.


1947ஆம் ஆண்டு யங் பிறந்த மூன்று மாதங்களில் அவரது அம்மா இறந்துபோனார். பிறகு யங் அவரது அத்தையிடம் வளர்ந்தார். இரண்டு வயதில் மறுமணம் செய்துகொண்ட அப்பாவிடம் சென்று வளரத்தொடங்கினார். குழந்தைக்கு தாய் தேவைப்படும் நிலையில் அவர் இறந்துபோனதால் யங்கின் மூளையில் மனிதர்களின் உணர்ச்சி வளரும் இடம் பாதிக்கப்பட்டு விட்டது என பின்னாளில் உளவியலாளர்கள் கூறினர்.


பள்ளியில் சேர்க்கப்பட்ட யங்கிற்கு அன்றைய பாப், திரைப்பட ஆளுமைகள் பிடிக்கவில்லை. அவருக்கு அடால்ப் ஹிட்லர், விஷம் கொடுத்து கொல்வதில் புகழ்பெற்றவர்களான பால்மர், ஹாலி கிரிப்பன், மருத்துவர் எட்வர்ட் பிரிட்சார்ட் ஆகியோரை பிடித்திருந்தது. இவர்களிடமிருந்துதான் யங் ஆற்றல் பெற்றார். ஈர்க்கப்பட்டார். பள்ளியில் அறிவியல் புராஜெக்ட் ஒன்றை செய்வதற்காக அருகிலுருந்த மருந்தகம் ஒன்றுக்கு சென்றார். அங்கிருந்த மருந்துகளைப் பார்த்த்தும் அதன் மேல் ஈர்ப்பு கொண்டார். எப்போதும் அங்கேயே சுற்றிக்கொண்டே இருக்கத் தொடங்கினார்.


முதலில் கிடைத்த விஷங்களை எடுத்து தனது பள்ளி நண்பர்களுக்கு உணவில் கலந்துகொடுக்கத் தொடங்கினார். அவர்களின் சாண்ட்விட்சில் கலந்துகொடுக்கத் தொடங்கியவர், அவர்களை நோயில் தள்ளினார். பிறகு தன் வீட்டிலிருந்து அக்காவுக்கு விஷத்தின் டோஸ்களை மாற்றிக்கொடுத்து சோதித்தார். இதனால் இவரது நண்பர்கள் வாந்தி எடுப்பது, வயிற்றுப்போக்கு என பிரச்னைகளை சந்திக்கத் தொடங்கினர். 1962இல் இவரது சித்தி, விஷத்தின் விளைவாக இறந்துபோனார். வகுப்பில் யங்கின் மேஜை டிராயரை ஒருமுறை யதேச்சையாக அவரது ஆசிரியர் பார்வையிட யங் மாட்டி்க்கொண்டார். அங்கு ஏராளமான விஷ பாட்டில்களை வைத்திருந்தார். தனது குடும்ப உறுப்பினர்களுக்கு விஷம் கொடுத்ததாக உண்மையைச் சொன்னார். சிறையில் இருக்கும்போது ஒருமுறை தற்கொலைக்கு முயன்றார். பிறகு இவரை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஒன்பது ஆண்டுகள் அங்கேயே சிகிச்சை பெற்றபடி இருந்தார். யங்கி்ற்கு எந்த பிரச்னையுமில்லை என உளவியலாளர ்அறிக்கை கொடுக்க விடுவிக்கப்பட்டார். கண்ணாடிகளை விற்கும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். தனது சித்தி இறந்துபோனதால் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக நிறுவனத்தில் கூறினார்.  

அங்கு பணியாற்றும் பணியாளர்களுடன் பழகி வேலை செய்து வந்தார். சில மாதங்களுக்கு பிறகு அங்குள்ள அனைத்து பணியாளர்களுக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு, குமட்டல், முதுகு வலி ஏற்படத்தொடங்கியது. எழுபதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இப்படி பாதிக்கப்பட்டனர். பிறகு இவர்களில் இருவர் இறந்தும் போனார்கள். காபியில் கலக்கப்பட்ட தாலியம் விஷமே இதற்கு காரணம் என பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான விசாரணையில் தனக்கு வேதிப்பொருட்களைப் பற்றிய அறிவு உண்டு என்பதை யங் மறைக்கவில்லை. இவர், அனைத்து பணியாளர்களுக்கும் விஷத்தை எத்தனை டோஸ் தினசரி கொடுக்கவேண்டும், அதன் விளைவுகள் என்ன என்பதை டைரியில் எழுதி வைத்திருந்தார்

 காவல்துறை இதுபற்றி கேட்டபோது, நாவல் எழுதுவதற்கான விவரங்கள் என்று சமாளித்து பின்னர் விஷம் கொடுத்ததை ஒப்புக்கொண்டார். மேலும் யங்கின் பின்புலம் பற்றியும் தகவல்களை சேகரித்தனர். அவர் தங்கிய வீட்டிற்கு சென்று சோதித்ததில் தாலியம், அகோனிடைன் ஆகிய விஷ பாட்டில்களை வைத்திருந்ததை கைப்பற்றினர். விசாரணையில் நான் எனது ஆழ்மன விருப்பத்தின்படி அவர்களை கொன்றிருக்கவேண்டும். ஆனால் அவர்களை வாழ விட்டுவிட்டேன் என்றார். 1972ஆம் ஆண்டு நடந்த நீதிமன்ற விசாரணையில் அவருக்கு வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும்படி ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது. தனது நாற்பத்தி இரண்டு வயதில் மாரடைப்பால் தனது அறையில் இறந்துகிடந்தார் யங்.


துப்பாக்கிச்சூடு

 


பெரும்பாலான தொடர் கொலைகார ர்கள்ந, சைக்கோ கொலைகார ர்கள் தங்களிடம் மாட்டிக்கொள்பவர்களை கைகளால் கொல்வதையே விரும்புவார்கள். கத்தி, கோடரி. இரும்பு கழி என ஆயுதங்கள் இப்படித்தான் அமையும். இவை மட்டும்தான் உடலை கோரமாக சிதைத்து அவர்களுக்கு பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தின. ஆனால் இவர்களை விட ஸ்மார்டாக துப்பாக்கி மூலம் நிறைய பேர்களை போட்டுத்தள்ளி சென்றுகொண்டே இருந்தவர்களும் உண்டு. துப்பாக்கிகளை கையில் வைத்து தெருவில் உள்ள சிலரை குறிவைத்துக்கொள்வது அவர்கள் மனதில் மறைத்து வைத்துள்ள பாலியல் மீதான ஆசைதான் என்று கூறினார்.


பெர்கோவிட்ஸ் துப்பாக்கியை கையில் எடுத்து காரில் உட்கார்ந்து பேசும் காதலர்களை தாக்கும்போது தனக்கு பெரிய அதிகாரம் கிடைப்பதாக உணர்ந்தார் என்று கூறினார். ஜோடியாக் கில்லர் என்பவர் தன்னால் கொல்லப்படுபவர்கள் இறப்பிற்கு பிறகு தனக்கு அடிமையாக மாறுவார்கள் என்பதை கடிதமாக எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பி வந்தார். கேரி, தாடியஸ் லெவிங்டன் என்ற சகோதரர்கள். துப்பாக்கியால் தங்களுக்கு கண்ணில் பட்டவர்களை கொலை செய்து புகழ்பெற்றவர்கள். முகத்தில் ஐந்து அல்லது ஆறு குண்டுகளை செலுத்தும் குரூர குணம் கொண்டவர்கள் இவர்கள் இப்படி தாங்கள் கொலை செய்தவரின் கிரடிட் கார்டை சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பயன்படுத்தி காவல்துறையில் மாட்டினர். குற்றங்களை உடனே ஒப்புக்கொண்டவர்களுக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது.



டில்லியன் என்பவர் வேட்டையாடுவதில் ஆர்வம் கொண்டவர். இவர், அப்பா இல்லாமல் வெறுப்பு கொண்ட அம்மாவால் வளர்க்கப்பட்டார். தொடர் கொலைகா ர்களுக்கான அத்தனை அறிகுறிகளும் இளம் வயதில் தெரிந்தது. கண்ணில் படும் விலங்குகளை சுட்டுக்கொன்று அதனை பதப்படுத்தி வீட்டில் மா்ட்டி வைப்பது டில்லியனுக்கு பிடிக்கும். மேலும் இப்படி துப்பாக்கியால் சுடுவது அதீதமாக மனிதர்களை வேட்டையாடத் தொடங்கினார். காவல்துறையில் மாட்டியபோது, பிறரை சுட்டுக்கொல்வது எனக்குப் பிடிக்கும். அதனால்தான் மனிதர்களைக் கொன்றேன் என்று சொன்னார். இவரது விவகாரத்தில் முக்கியமானது, கொலைசெய்யப்பட்டவரின் தாய் பகிரங்கமாக டில்லியனுக்கு கடிதம் எழுதி பிரசுரித்ததுதான். தான் எதற்கு கொலை செய்தேன் என்பதை டில்லியனும் கடிதமாக எழுதி பத்திரிகையில் பிரசுரித்தார்.


கொலைகளின் விரிவாக்கம்

கொலை செய்பவர்கள் முதலில் தங்களால் தாக்கப்பட்டு இறப்பவர்களை மகிழ்ச்சியோடு பார்க்கிறார்கள். ஆனால் அடுத்தடுத்து ஒன்றுபோலவே கொலைகளை செய்வது அவர்களுக்கு சலிப்பைத் தருகிறது. அவர்களின் உள்ளே உறுமும் மிருகத்திற்கு இன்னும் கொடூரம் தேவைப்படுகிறது. எனவேதான் உறுப்புகளை சிதைப்பது, உடல் உறுப்புகளை சமைத்து உண்பது, இறந்து உடல்களுடன் உடலுறவு கொள்வது ஆகியவை நடக்கிறது. உளவியலில் இதனை தங்கள் கட்டுப்பாட்டை கொலைகார ர்கள் இழந்துவிடுகிறார்கள் என்று கூறுகின்றனர். மாதங்களுக்கு ஒருவர் என்று கொல்லப்பட்டவர்கள் மெல்ல தினசரி ஒருவர் என அதிகரிப்பது இதன் காரணமாகத்தான். போதைப்பொருளான ஹெராயின், கோகைனுக்கு எப்படி அடிமையானவர்கள் நடந்துகொள்வார்களோ அதைப்போலவே தொடர் கொலைகார ர்களும் நடந்துகொள்ளத் தொடங்குகிறார்கள்.


கொலைசெய்யும் வேகமும் குரூரமும் தொடர் கொலைகார ர்களை அழிவுக்குத் தள்ளுகிறது. ஒருவகையில் இதனை தொடங்கிவிட்டால் அதன் முடிவு என்பது அவர்களுக்கே தெரிந்திருக்கும். இதனால் காவல்துறையில் மாட்டிக்கொள்வதை பெரிதாக அவர்கள் எடுத்துக்கொள்வதில்லை. மேலும் விசாரணையில் முரண்டுபாடு செய்யாமல குற்றங்களை ஒப்புக்கொள்கிறார்கள். சிறையும், தண்டனையும் அவர்களது மோசமான மனநிலையை தீர்க்கும் என நினைக்கிறார்கள். இதனால் மரணதண்டனையை கொடுங்கள் என சிலர் கேட்பது கூட நடக்கிறது.

vincent

pictures - devianart


கருத்துகள்